Wednesday, December 15, 2010

அசாஞ்சேவுக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் ஜாமீன்

லண்டன், டிச. 14: விக்கி லீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.


 அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் திரை மறைவு வேலைகளை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் ஸ்வீடனில் தங்கி இருந்தபோது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக லண்டன் போலீஸôர் சில தினங்களுக்கு முன் அவரை கைது செய்தனர்.

 இந்நிலையில் அவருக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து 48 மணி நேரத்துக்குள் அசாஞ்சே விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஸ்வீடன் வழக்கறிஞர்கள் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.


செய்தி:தினமணி 

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.96 உயர்ந்தது

புது தில்லி, டிச.14: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.96 உயர்த்தப்பட்டது. இது செவ்வாய்க்கிழமை நள்ளிரவே அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 90 அமெரிக்க டாலர்களாக விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலையை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (ஐஓசி) மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:


பெட்ரோல் விலையை நேற்றே (திங்கள்கிழமை) உயர்த்தியிருக்கவேண்டும். ரூ. 1.90 முதல் ரூ. 1.95 வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை முடிந்தவுடன் பெட்ரோல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அது ரத்தானது. மேலும் 2 நாள்கள் காத்திருக்குமாறு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் கூறிவிட்டது.

கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து விட்டதால் ஐஓசி, பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ஆகிய நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ. 4.17 என்ற அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.


இந்த நஷ்டத்தை சமாளிக்க பெட்ரோல் விலையை உயர்த்தியே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு டிசம்பர் 22-ம் தேதி தீர்மானிக்கும்.

கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய்க்கு 89.94 அமெரிக்க டாலராக திங்கள்கிழமை விற்பனையானது.
டிசம்பர் மாதத்தில் சராசரியாக பீப்பாய்க்கு 88.47 அமெரிக்க டாலர் என்ற விலையில் கச்சா எண்ணெயின் விலை இருந்தது.

இதற்கு முன்பு கடந்த மாதம் 9-ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. லிட்டருக்கு 32 காசுகள்என்ற அளவில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது என்றார் அவர்.


இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 என உயர்த்தியுள்ளதாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55.87 ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஐஓஎல், எச்பிசிஎல் நிறுவனங்களும் விலை உயர்வை ஓரிரு நாள்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்தி:தினமணி 

Tuesday, December 14, 2010

அப்சல்குரு விவகாரம்; பி.ஜே.பிக்கு மந்த புத்தியா..? சிதம்பரம் தாக்கு!


மதவாத பாரதீய ஜனதாகட்சி தனது தேசபக்தியை  காட்ட அவ்வப்போது கிளப்பும் விவகாரம் அப்சல்குரு சம்மந்தப்பட்டதாகும். அப்சல்குருவை ஏன் தூக்கில் போடவில்லை என்று கேட்டு தங்களின் தேசபக்தியை[?] அவ்வப்போது புதுப்பித்துக்  கொள்வார்கள். நாடாளுமன்றத்  தாக்குதல் விசயத்தில் அப்சல்குருவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதும், அவர் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்திருப்பதும், அது பற்றி ஜனாதிபதிதான் முடிவெடுக்கவேண்டும் என்பதும் சிறுபிள்ளையும் அறிந்த விஷயம்.

ஆனால் இதையெல்லாம் மறைத்து, காங்கிரஸ் அரசுதான் அப்சல்குருவை காப்பாற்றி வருவது போன்று நாடகமாடி  மக்கள் குழப்புகிறது பாஜக.
இந்நிலையில் நாடாளுமன்றத் தாக்குதல் நடந்த 9 வது ஆண்டு தினமான நேற்று, [13 -12 -2010 ]பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற மக்களவையில், இந்த நிகழ்ச்சியின்போது பா.ஜனதாவுக்கும் அரசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அப்சல் குருவுக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாமல் மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன்? என்று, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், உணர்வுபூர்வமான இந்த தியாகிகள் நினைவு தினத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை என்று கூறி, அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாததற்கான காரணங்களை விளக்கினார். அவர் கூறியதாவது;

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்புகிறார்கள். பா.ஜனதா கூட்டணி ஆட்சியின்போது இதுபோன்று அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களில் இதுவரை ஒன்றில் கூட முடிவு எடுக்கப்படவில்லை.

அதன்பின் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது எனக்கு முன்பு உள்துறை மந்திரி பொறுப்பு வகித்த சிவராஜ்பட்டீல், அந்த 14 மனுக்களுடன் மேலும் 14 கருணை மனுக்களை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். அவைகளில் இரண்டு மனுக்கள் மீது முடிவு எடுக்கப்பட்டு உள்ளன.

அதன்பின் பொறுப்பு ஏற்ற நான் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அனைத்து மனுக்களும் ஜனாதிபதியால் மறு ஆய்வு செய்யப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. 5 அல்லது 6 மனுக்களில் ஜனாதிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். மற்ற மனுக்களுக்கு அவருடைய முடிவுக்காக காத்து இருக்கிறேன்.
இதுபற்றி பலமுறை நான் விளக்கம் அளித்துவிட்டேன். அப்படி இருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் (பா.ஜனதா) கேள்வி எழுப்பி வருகிறார்கள். எனவே, அவர்கள் மந்த புத்தி உள்ளவர்களா? அல்லது வேண்டுமென்றே காது கேட்காதது போல் நடிக்கிறார்களா? என்று புரியவில்லை.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

இனியேனும் பாஜக, அப்சல் விஷயத்தில் நாவடக்கம் பேணி, தன்னைக் காத்துக்கொள்ளுமா என்று பார்ப்போம்.


-- 

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து தீவிரவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் அபினவ் பாரத் இந்து அமைப்பைச் சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் சர்மா ஆகியோர் மீது ஹைதராபாத் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த இருவரும் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



ஹைதராபாத் மெக்கா மசூதியில், 2007ம் ஆண்டு மே 18ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்தது. மசூதி வளாகத்திற்குள் வெடித்த இந்த குண்டில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வழக்கில் அபினவ் பாரத் என்ற வலதுசாரி இந்து தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் சர்மா, குப்தா உள்ளிட்ட 6 பேர் சேர்க்கப்பட்டனர்.



இவர்களில் சர்மா, குப்தா ஆஜ்மீர் வழக்கில் சிக்கி கைதாகியிருந்தனர். அவர்களை ஹைதராபாத்துக்குக் கொண்டு வந்து விசாரித்த சிபிஐ, பின்னர் இருவரையும் ஹைதராபாத் சிறையில் அடைத்தது. வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்தீப் சாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா என்கிற ராம்ஜி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இன்னொரு குற்றவாளியான சுவாமி அஸ்னிமானந்த் சிபிஐயின் விசாரணை வளையத்தில் உள்ளார். இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷி என்பவர் 2007ம் ஆண்டிலேயே கொல்லப்பட்டு விட்டார்.

இந்த வழக்கில் நேற்று 14வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ. 80 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் அபினவ் பாரத் அமைப்புதான் இந்த செயலுக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது

என் மகன் நிரபராதி: அசாஞ்சே தாயார்

மெல்போர்ன்,டிச.12: ஜூலியன் அசாஞ்சே பாலியல் பலாத்காரம் செய்தான் என்ற குற்றச்சாட்டை என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது என்று அவரது தாயார் கிறிஸ்டினே அசாஞ்சே தெரிவித்தார்.


ஜூலியன் அசாஞ்சே ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மீது அக்கறையும், பொறுப்பும் கொண்ட உயரிய மனிதன். அப்படிப்பட்டவன் யாரையும் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்க நூறுசதவீதம் வாய்ப்பில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை கைப்பற்றி, உலக நாடுகளுடன் நல்லுறவு வைத்துள்ளதுபோல் நாடகமாடிவந்த அந்நாட்டின் போலித்தனத்தை வீதிக்கு கொண்டுவந்துள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்கி லீக்ஸ் இணையதளத்தின் தலைவர் ஜூலியன் அசாஞ்சே (39). அசாஞ்சே வெளியிட்ட தகவல்களால் உலக நாடுகள் அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் உள்ளன. அந்நாட்டுடன் இனிமேலும் உறவு தேவையா என்றுகூட சில நாடுகள் யோசிக்கத் தொடங்கியுள்ளன.


 இதனால் அசாஞ்சே மீது அமெரிக்கா கடும் கோபம் அடைந்துள்ளது. அவருக்கு பல்வேறு விதத்தில் மிரட்டல் விடுத்து அவரை பழிவாங்கத் துடிக்கிறது.


இதுபோன்ற நிலையில் ஸ்வீடனுக்கு சென்றபோது ஜூலியன் அசாஞ்சே பாலியல் பலாத்காரம் செய்ததாக திடீரென குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி அந்நாடு கைது வாரண்டையும் பிறப்பித்தது.


இதையடுத்து லண்டனில் தங்கியிருந்த அசாஞ்சேயை ஸ்காட்லாந்து போலீஸôர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். அவரை ஸ்வீடனுக்கு கொண்டுவந்து விசாரிக்க அந்நாட்டு போலீஸôர் முயற்சித்து வருகின்றனர்.


இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள அசாஞ்சேயின் தாயார் கிறிஸ்டினேவை செய்தியாளர்கள் சந்தித்து அசாஞ்சே மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அசாஞ்சே மீதான புகாரை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.



அசாஞ்சே சில நாடுகளின் திரைமறைவு சதி செயல்களை அம்பலப்படுத்தி வருகிறான். இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சட்டப்படி அவனை எதிர்கொள்வதற்குப் பதிலாக குறுக்கு வழியில் அவனுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுகின்றனர். இதை நினைக்கையில் கவலை அளிக்கிறது. அசாஞ்சேக்கு எதிராக சதித் தீட்டப்படுவது குறித்து பத்திரிகைகளில் வெளிவரும் செய்தியை படிக்கும் போது அவனுக்கு ஏதாவது விபரீதம் நேர்ந்திடுமோ என்று பயமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. தாய்மை உணர்வில் பிற தாய்களைப் போலத்தான் நானும் என்றார் கிறிஸ்டினே.

 அசாஞ்சே எனது மகன் என்பதில் பெருமை அடைகிறேன். அவன் துணிச்சலானவன். அவனது துணிச்சலையும், சமூகப் பொறுப்பையும் நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.


அசாஞ்சேவின் துணிச்சலைப் பாராட்டி உலகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்தும் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறதே என்று கேட்டதற்கு, இது எனக்கும், அசாஞ்சேவுக்கும் ஆறுதல் தரக்கூடிய விஷயம்தான். உலகத்தின் கடைக்கோடியில் வாழும் பாமரர்கள்கூட எனது மகனுக்கு ஆதரவு தருவதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

 அசாஞ்சே ஒரு ஆஸ்திரேலிய குடிமகன். அவனை காப்பாற்றுவது ஆஸ்திரேலிய அரசின் தலையாயக் கடமை. ஆனால் ஆஸ்திரேலிய அரசு கடமை தவறிவிட்டது. பிரதமர் ஜூலியா கில்லார்டு அசாஞ்சேயை கிரிமினல் குற்றவாளி என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி:தினமணி 

மீரா சங்கரைத் தொடர்ந்து மேலும் ஒரு இந்தியத் தூதருக்கு அமெரிக்காவில் அவமரியாதை

டெக்ஸாஸ்: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரை உடல் முழுவதும் சோதனை நடத்திய அவமானப்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு இந்தியத் தூதரை டர்பனை கழற்றுமாறு கூறி அவமானப்படுத்தியுள்ளது அமெரிக்கா.

தற்போது அமெரிக்க அதிகாரிகளால் அவமரியாதைக்கு உள்ளாகியுள்ள தூதர் ஹர்தீப் பூரி. சீக்கியரான இவர் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக உள்ளார்.



டெக்ஸாஸின், ஆஸ்டின் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். டர்பனை கழற்றச் சொல்லி கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிங், தான் ஒரு தூதர் என்று கூறியுள்ளார். இருந்தாலும் டர்பனை கழற்றியே ஆக வேண்டும் என பாதுகாவலர்கள் கூறியுள்ளனர். ஆனால் முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார் சிங்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் கட்டாயப்படுத்தி டர்பனை கழற்றும் சூழல் உருவானது. இதையடுத்து உள்ளூர் போலீஸார் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினர். அதன் பின்னரே சிங் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து இந்திய அரசு, அமெரி்ககாவிடம் முறைப்படி புகார் தெரிவித்துள்ளது.

Monday, December 13, 2010

இந்தியாவில் பாதி பேர் லஞ்சம் கொடுக்கின்றனர்: ஆய்வில் தகவல்

புதுதில்லி, டிச.13: இந்தியாவில் 54 சதவீதம் பேர் கடந்த ஓராண்டில் தங்களது வேலைகளை முடிப்பதற்கு லஞ்சம் கொடுத்ததாக "டிரான்ஸபரன்ஸி இன்டர்நேஷனல்" என்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.


உலக நாடுகளில் ஊழல் தொடர்பான ஆய்வை இந்த அமைப்பு நடத்தியது. கல்வி, நீதி, மருத்துவம், காவல், பத்திரப் பதிவு உள்ளிட்ட 9 துறைகளில் கடந்த 12 மாதங்களில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்தீர்களா என்ற கேள்வி மக்களிடம் கேட்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் தந்த பதில்களின் அடிப்படையில் ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஊழல் எதிர்ப்பு தினமான கடந்த 9-ம் தேதி இந்தப் பட்டியலைக் கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.



86 நாடுகளைக் கொண்ட பட்டியலில் லஞ்சம் கொடுத்ததாக இந்தியாவில் 54 சதவீதம் பேர் பதிலளித்திருந்தனர். இராக்கில் 56 % பேரும், ஆப்கனில் 65% பேரும் லஞ்சம் கொடுத்திருக்கின்றனர். கம்போடியாவில் அதிகபட்சமாக 84 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்திருப்பதாக இந்த ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.


அரசியல் கட்சிகளே அதிக ஊழல் செய்வதாகவும் கடந்த 3 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும் 74 சதவீதம் இந்தியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

உலக அளவில் இந்த ஆய்வுக்காக 91 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் ஆயிரம் பேர் இந்தியர்கள்.\


கர்கரேவுடன் பேசினேன்: திக்விஜய் சிங் திட்டவட்டம்

குவாஹட்டி, டிச.13: படுகொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கரேவுக்கு வலதுசாரிகளால் அச்சுறுத்தல் இருந்ததாக தெரிவித்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், மும்பை தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவருடன் தான் பேசியதாக உறுதிபடத் தெரிவித்தார்.



கர்கரேவுடன் நான் பேசவில்லை எனக் கூறுவது தவறு என்பதை நிரூபிக்க ஆவணங்களைப் பெற முயற்சித்து வருவதாக திக்விஜய் சிங் தெரிவித்தார்.

அந்த காலகட்டத்தில் கர்கரேவின் செல்போனுக்கு திக்விஜய் சிங்கிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரவில்லை என்பதை அவரின் செல்போன் பதிவுகள் தெரிவிப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.


இதையடுத்து திஜ்விஜய் சிங் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். முன்னர் கூறியவாறு கர்கரேவுடன் நான் பேசியிருந்தேன். இது முற்றிலும் உறுதி என அவர் தெரிவித்தார்.

விக்கிலீக்ஸ் அதிபர் கைதுக்கு எதிர்ப்பு-ஸ்பெயினில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

மாட்ரிட்: அமெரிக்காவின் முகத்திரையை கிழித்து வரும் விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஜூலியன் அசான்ஜே இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது.

அங்குள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது. 



மாட்ரிட் தவிர பார்சிலானோ, வெலன்சியா, செவில்லி ஆகிய நகரங்களிலும் போராட்டம் நடந்தது.

அசான்ஜேவை விடுதலை செய், பேச்சுச் சுதந்திரத்தை நசுக்காதே என்று கோஷங்கள் முழங்கப்பட்டன.

இதேபோன்ற போராட்டங்கள் நெதர்லாந்து, கொலம்பியா, அர்ஜென்டினா, மெக்சிகோ, பெரு, பிரேசில் ஆகிய நாடுகளிலும் நடத்தப்படவுள்ளதாம்.

ஸ்வீடனில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாகவே தற்போது அசான்ஜே கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் விரைவில் அவரை ஸ்வீடனுக்கு நாடு கடத்தவுள்ளது இங்கிலாந்து. இதுதொடர்பான மனு நாளை விசாரிக்கப்படவுள்ளது.
விக்கி லீக்ஸ்  பற்றி மேலும் பல செய்திகளை தெரிந்துகொள்ள click Here

ராணுவ ரகசியங்கள் சீனாவுக்கு கடத்தல்: நாகாலாந்து பிரிவினைவாத தலைவர் வாக்குமூலம்

தில்லி, டிச. 12: நாகாலாந்து பிரிவினைவாத இயக்கம் மூலம் இந்திய ராணுவ ரகசியங்கள் சீனாவுக்கு கடத்தப்படும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் கைது செய்யப்பட்ட "நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து' பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் அந்தோனி சிம்ரேவிடம் (50) நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.


அக்னி ஏவுகணைத் தளங்கள், சுகோய் விமானத் தளங்கள், அதிநவீன ராடார்கள் நிறுவப்பட்டுள்ள இடங்களின் வரைபடங்கள் சீனாவுக்கு தொடர்ந்து கடத்தப்பட்டுள்ளன.

இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய 110 பக்க ஆவணங்கள் அந்தோனி சிம்ரேவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 45 பக்கங்கள் முக்கியமான ராணுவ ரகசியங்களாகும்.
   
வடகிழக்கில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம்கள், ராணுவ தளவாடக் கிடங்குகள் குறித்த துல்லியமான வரைபடங்களும் அந்தோனி சிம்ரே கைவசம் உள்ளன.
  
இந்த ரகசிய ஆவணங்கள் அவருக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து "ரா' உள்ளிட்ட உளவு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

ஆயுதங்கள் விநியோகம்: நாகாலாந்து பிரிவினைவாத இயக்கங்களுக்கு சீனா ஆயுதங்களை விநியோகம் செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடிக்கடி பெய்ஜிங் சென்றுள்ள அந்தோனி சிம்ரே, மத்திய சீனாவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்து வந்துள்ளார்.
சீனாவில் இருந்து கப்பல் மூலம் அனுப்பப்படும் ஆயுதங்கள் வங்கதேசம், மியான்மர் வழியாக பயங்கரவாதிகளுக்கு கைமாறுவதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

தங்கள் இயக்கத்துக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய கடந்த ஏப்ரலில் தாய்லாந்து நிறுவனம் மூலம் முன்பணம் அளிக்கப்பட்டதாகவும், விரைவில் அவை கப்பல் மூலம் வந்து சேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு மிகக் குறைந்த விலையில் சீனா ஆயுதங்களை வழங்கி வருவதாகவும் சிம்ரே தெரிவித்துள்ளார்.

 மத்திய அரசுடன் அமைதிப் பேச்சில் ஈடுபட்டுள்ள "நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து' அமைப்பு, மறுபுறம் ஓசையில்லாமல் ஆயுதங்களைக் கொள்முதல் செய்து வருவது மத்திய உள்துறை அமைச்சகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய ராணுவ ரகசியங்களைக் காப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம், அதே சமயம் சீனாவுடனான உறவை மறுபரிசீலனை செய்வதும் காலத்தின் கட்டாயம் என்று உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பெண் தீவிரவாதி பிரக்யாவை சிறையில் சந்தித்தது ஏன்?

புது தில்லி, டிச. 12: மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  பெண் தீவிரவாதி பிரக்யாவை பாஜக மூத்த தலைவர்கள் அத்வானியும், ராஜ்நாத் சிங்கும் சிறையில் சந்தித்துப் பேசியது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:


 பெண் தீவிரவாதி பிரக்யா சிறையில் அடைக்கப்பட்டவுடன் அது தொடர்பாக பேச பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக தலைவர்கள் சந்தித்தது ஏன்?

மும்பை தாக்குதல் சம்பவத்தில் இந்து பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருப்பதாக நான் கூறவில்லை. போலீஸ் அதிகாரி கர்கரே, இந்து தீவிரவாதிகளால் மிரட்டப்பட்டார் என்று மட்டுமே கூறினேன். அது நூறு சதவீத உண்மை. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சி தொடர்புடையது அல்ல என்று அவர் கூறினார்.


பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மும்பை தாக்குதலில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி கர்கரேவின் தியாகத்தை திக்விஜய் சிங் கொச்சைப் படுத்தி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். அவராக கட்சியில் இருந்து விலக மாட்டார். காங்கிரஸ் தலைமை அவரை வெளியேற்ற வேண்டும் என்றார்.

Sunday, December 12, 2010

போங்கய்யா...நீங்களும் உங்க பத்திரிகை தர்மமும்! எழுதியவர் மாதவராஜ்

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அந்த வீடியோக்களை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு எதிரான ஆத்திரமும், அபிப்பிராயங்களும் பரவிக்கொண்டு இருக்கின்றன.

உலகமே துடிதுடித்துப் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிற அமெரிக்காவின் அந்த அராஜகங்கள் எதுவும் நமது அருமையான பத்திரிகைகளுக்கு முக்கியமாகத் தெரியவில்லை போலும். எதுவுமே நடக்காதது போல மலை விழுங்கி மகாதேவன்களாக, வேறு செய்திகளை வாசித்துக்கொண்டு இருக்கின்றன.



“ஆத்தூரில் மான் வேட்டை : 2 பேர் கைது”, “வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை தப்பியோடியது” போன்றவை கூட தினமலரின் முக்கியச் செய்திகள். இளவரசர் சார்லஸின் கார் விபத்து உலகச் செய்தியாகிறது. விஜயகுமார், அவரது மகள் விவாகரங்கள் உள்ளூர் செய்திகளாகின்றன. அதே வேலையில், “ஐரோப்பிய யூனியனுடன் பொருளாதார ஒத்துழைப்பு: மன்மோகன் சிங்” மற்றும் “நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் பங்கேற்பு” போன்ற செய்திகளைப் போட்டு தங்கள் பிறவிப்பயனை அடைந்து இருக்கின்றனர்.

தேடிப்பார்த்தால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியொன்றை தினகரன் கடைசிப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. "பேச்சு சுதந்திரம் பற்றி அந்த மனிதர் பேசிய பேச்சில் மயங்கினார் அந்த 27 வயதுப் பெண்” என்று ஆரம்பித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச்சை ஒரு பெண் பித்தராக சித்தரித்து இருக்கிறது. இதுதான் அவர்களின் தரமும், தர்மமும் போலும்.


அமெரிக்காவின் மீது இந்த பத்திரிகை முதலாளிகளுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா? ஊடக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது.

ஆறுதலும், ஆதரவும் இணையவெளிதான். கருத்துரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் அவர்களே குரல் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். மாற்று ஊடகமாகவும், மக்களின் ஊடகமாகவும் இந்த வலைப்பக்கங்கள் பரிணமிக்கட்டும்.

இன்று மகாகவி பாரதியின் பிறந்த நாள். அவரது எழுத்தில் இந்த வெகுஜனப் பத்திரிகைகளுக்கு ஒரு செய்தி.
மாறுபட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய்   போ போ போ!
சேறுபட்ட நாற்றமும் - தூறுஞ் சேர்
சிறியவீடு கட்டுவாய்   போ போ போ!
உண்மைகளைத் தயங்காமல், உலகுக்கு எடுத்து வைக்கும் இணையவெளிக்கும் ஒரு செய்தி மகாகவியிடம் இருக்கிறது.
தெளிவுபெற்ற மதியினாய்
சிறுமை கண்டு பொங்குவாய்  வா வா வா!
எளிமைகண்டு இரங்குவாய்
ஏறுபோல் நடையினாய் வா வா வா!


நன்றி : www.madhavaraj.com

இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது ?

கோழிக்கோடு,டிச.12:குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகும் குஜராத் முஸ்லிம் சமூகம் சாதாரண நிலையை இதுவரை அடையவில்லை என பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது. துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கோ, இழப்பீடுகளை வழங்குவதற்கோ அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை.

அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையில் குஜராத் அரசிற்கும் பங்கிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சமுதாயமாக மாறியுள்ளனர். பல வழக்குகளும் நீதிமன்றத்தை அடையவில்லை. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற சோதனைதான் குஜராத் இனப்படுகொலையும். ஆனால், இதற்கெதிராக மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் உறுதியாக நின்று போராடியதன் காரணமாக சில வழக்குகளிலாவது வெற்றிக் கிடைத்துள்ளது.

காங்கிரசும், பா.ஜ.கவும் ஆதிக்கம் செலுத்தும் குஜராத்தில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வாக்கு பதிவு குறைவதும், ஏகாதிபத்திய முறையில் தேர்தல் நடப்பதாலும் மோடியால் வெற்றி பெறமுடிகிறது.
 

தி.மு.க. அணியில் பா.ம.க.




மேட்டூர், டிச. 11:  பாமகவினர் பங்கேற்ற அரசு விழாவில் பேசிய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், "கூடப்போகிறவர்கள் கூடி' இருக்கிறோம் என்றார். இதன் மூலம் திமுக அணியில் பாமக இடம் பெறும் என்பதை அவர் சூசகமாக தெரிவித்தார்.
மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், ஜலகண்டபுரம் பகுதிகளில் கலைஞர் கான்கிரீட் வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ஜி.கே. மணி, தாரமங்கலம் எம்எல்ஏ கண்ணன் உள்ளிட்ட அக்கட்சியினரின் உள்ளாட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ரகசிய ஆலோசனை:  முன்னதாக பாமகவினர், வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து திடீர் ஆலோனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில், அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, காவேரி, கண்ணையன், சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சண்முகம் ஆகியோர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் ரகசிய ஆலோசனை நடத்தினர்.

"அமைச்சரை சந்தித்ததில் அரசியல் எதுவும் இல்லை. கூட்டணி குறித்து முடிவு செய்யப்படவில்லை. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் வீணாகும் தண்ணீரை சேலம் மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் திருப்பி விட நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தோம்' என்றார்ஜி.கே.மணி.

தமிழக காவல்துறையும் & ஹிந்துதுவாவும் : ஒரு சமூக பார்வை..


திண்டுக்கல்,டிச.11:தீவிரவாதிகள் திடீரென தாக்கினால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பதுக் குறித்த பாதுகாப்பு ஒத்திகை கடந்த 9-06-2010 அன்று திண்டுக்கல்லில் போலீசாரால் நடத்தப்பட்டது.nதீவிரவாதிகளாக வேடமிட்டு ஒத்திகையில் கலந்துக் கொண்டவர்களின் முகத்தில் தாடி ஒட்டப்பட்டு முஸ்லிம்கள் போல் காணப்பட்டன.

இச்செய்தி பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியானது. ஒவ்வொரு மதத்தினருக்கும் வெவ்வேறான மத அடையாளங்கள் உள்ளன. முஸ்லிம் ஆண்கள் மார்க்க கடமையாக கருதி தாடியை வளர்க்கின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் என்றாலே அவர்களை முஸ்லிம்கள் தான் என்று தீர்மானிப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனமின்றி வேறென்ன? பகுத்து அறியும் ஆற்றலைப் பெற்ற கலைஞரின் ஆட்சியில் அவரது கட்டுப்பாட்டிலிலுள்ள போலீஸ் துறைதான் இந்த கோமாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் ஏன் தமிழகத்தின் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தங்களது தலைமையகத்திற்கு தாங்களே குண்டை வைத்து விட்டு முஸ்லிம்களின் பழியைப்போட தீட்டவும் செய்தனர்.

கிறிஸ்தவ ஆலயங்களை இடித்தும், முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்ற கொடூர பாவிகள். குஜராத் கலவரத்தில் முஸ்லிம் பெண்களை கூட்டமாக சுற்றி நின்று கற்பழித்து அதை விடியோ எடுத்து ரசித்தவர்கள். குஜராத் பேஸ்ட் பேக்கரியில் அதன் உரிமையாளர் மற்றும் வேலை செய்தவர்கள் எல்லாரையும் அப்படியே தீயிட்டு கொளுத்தியவர்கள். குஜராத்தின் காங்கிரஸ் முன்னாள் MP யையும் அவர் வீட்டில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் எல்லோரையும் வெட்டி கொன்று தீயிட்டு கொளுத்தினர்.

ஆஸ்திரேலிய கிறஸ்தவ பாதரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் காரோடு வைத்து தீவைத்து கொளுத்திய கொடும் பாவிகள். குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்றார்கள். இவர்கள் போல் உள்ள ஒரு கொடியவர்களை வரலாறுகளில் பார்க்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கமுடயுமா? இவர்கள் மனிதர்களா? இல்லை மிருகங்களா? இவர்கள் மனம்தான் என்ன இரும்பினால் செய்யபட்டதா? இப்படி பட்ட ரெத்த வெறி பிடித்த கயவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மிருகங்கள். இந்நிலையில் தீவிரவாதிகளாக ஏன்? இவர்கள் போல் வேடம் இட்டு ஒத்திகை பார்க்கவேண்டியது தானே.
இதில் இருந்து தமிழக காவல் துறையில் ஹிந்துதுவாவின் தாக்கத்தை உணரமுடிகிறது.

தொடர்ந்து தமிழக காவல் துறை முஸ்லிம் விரோத போக்கோடு செயல்பட்டு வருகிறது. கோவையில் செல்வராஜ் என்ற ட்ராபிக் கான்ஸ்டபில் கொல்லப்பட்டபோது சம்மந்த பட்டவர்கள் மீது வழக்கு தொடராமல். 19 முஸ்லிம்களை சுட்டு கொன்ற கயவர்கள் ஆச்சே இவர்கள்.. ஜனநாயக முறையில் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களை தீவிரவாதமாக சித்தரிப்பது, அவர்கள் மீது திட்ட மிட்டு பொய் வழக்குகள் போடுவது, இப்படி தமிழக காவல்துறை ஹிந்துதுவாவின் மறு உருவமாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரியான நடவடிக்கைகளை கலைஞரின் போலீஸ் துறை மேற்கொள்வது அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சமூக நல்லிணத்தை சீரழிக்கவே உதவும். தமிழக காவல்துறையின் இத்தகைய செயலுக்கு அனைத்து மக்களும் தங்களது கண்டனத்தை பதிவுச்செய்ய வேண்டும்.

Saturday, December 11, 2010

மலேகாவ்ன் குண்டு வெடிப்பு: 'உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சினார் ஹேமந்த் கர்கரே'-திக்விஜய் சிங்!

டெல்லி: மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் பெண் சாமியார் பிரக்யா உள்பட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்படுவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு முன், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கர்கரே இவ்வாறு கூறியதாக திக்விஜய் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த கர்கரே மாலேகாவ்ன் நகரில் நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து அதில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் பிரசாத் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தார்.

இந்த வழக்குக்குத் தேவையான பல முக்கிய ஆதாரங்களை கர்கரே தலைமையிலான குழு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தேடி சேகரித்து வழக்கை உறுதிப்படுத்தியது. ஆனால், வழக்கு மிக முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில் மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் கர்கரே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மறைவுக்குப் பின் இந்த வழக்கில் தொய்வு ஏற்படத் தொடங்கியது. தற்போது கைது செய்யப்பட்ட அத்தனை பேரும் சாதாரண குற்றவாளிகள் நிலைக்கு மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக திக்விஜய் சிங் இப்போது தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இரவு 7 மணிக்கு கர்கரே என்னை எனது மொபைல் போனில் தொடர்பு கொண்டு கவலையுடன் பேசினார். அப்போது பேசிய கர்கரே, மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே எனக்கும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. நானும் என் குடும்பத்தினரும் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் உள்ளோம். மலேகாவ்ன் வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்க்கும் தரப்பினரிடமிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது என்றார்.

மேலும் இந்த வழக்கில் அவரது விசாரணை குறித்தும் நேர்மை குறித்தும் பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியதால் கர்கரே மிகவும மணம் புண்பட்டுப் போயிருந்தார். இதை அவரது குரலை வைத்தே என்னால் உணர முடிந்தது.

அவ்வாறு பேசிய அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மும்பை தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டுவிட்டார்.

இவ்வாறு திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர் என்ற தகவல் வந்தவுடன் இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்கரே, அப்படியே அதை விட்டுவிட்டு ஸ்பாட்டுக்கு ஓடினார். காமா மருத்துவமனைப் பகுதியில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தீவிரவாதிகளை எதிர்கொள்ள உள்ளே புகுந்த அவரது நெஞ்சில் தீவிரவாதிகளின் குண்டுகள் பாயந்தன. அதில் அந்த இடத்திலேயே அவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்துலேவைத் தொடர்ந்து திக்விஜய்:

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட விதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் உண்மையிலேயே தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரா அல்லது அவரது மரணத்துக்கு வேறு ஏதும் காரணமா என்று எனக்குத் தெரியவில்லை என்றும், இந்த விஷயத்தில் உண்மை மறைக்கப்படுவதாக நான் உணர்கிறேன் என்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த ஏ.ஆர்.அந்துலே சந்தேகம் எழுப்பியதும், அதற்க பாஜக உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததும் நினைவுகூறத்தக்கது.

அந்துலேவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் பதவி விலக நேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
 
 

காங்கிரûஸ தொடர்ந்து எதிர்ப்பேன்: இயக்குநர் சீமான் பேச்சு;

வேலூர், டிச. 10: காங்கிரஸ் கட்சியை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். அதுதான்
எங்கள் கொள்கை என்று வேலூர் மத்திய சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை  விடுதலையான திரைப்பட இயக்குநர் சீமான் கூறினார்.
   வேலூர் மத்திய சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த சீமான் வெள்ளிக்கிழமை பிற்பகல் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் சிறைக்கு வெளியில் திரண்டிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.


   அதைத் தொடர்ந்து அவர் பேசியது:

   5 மாதங்கள் நான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் எனது தொழில் மற்றும் அரசியல் கட்சிக்கு
இழப்பு ஏற்பட்டது. அடக்குமுறை ஒழியும் வரை ஓயமாட்டேன், தொடர்ந்து பேசுவேன். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

   1.76 லட்சம் கோடி ஊழல் புரிந்த ஆ. ராசாவுக்கு பரிந்து பேசுகிற கருணாநிதி ஜனநாயகத்தைப் பற்றி பேச அருகதையற்றவர். 2 முறை தவறாக என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். தவறு என்று தெரிந்தும் என்னை சிறையில் அடைத்த தமிழக அரசு மீது வழக்கு  தொடருவேன். சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சர்வாதிகார போக்கில் அரசு நடந்து கொள்கிறது.    காமராஜர் ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் அமைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன், ஹசன் அலி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார்கள்.


   காங்கிரஸ் நான் தொடர்ந்து எதிர்ப்பேன். நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் எங்கு சென்றாலும் எதிர்ப்பேன். அதுதான் எங்களது கொள்கை.   கருணாநிதியும், மகன்கள் ஸ்டாலின், அழகிரி, மகள் கனிமொழி ஆகியோர் நாட்டு மக்களுக்கு உழைத்தது போதும். அவர்கள் ஓய்வு பெறட்டும். ஊழலற்ற உண்மையான ஜனநாயகம் விரைவில் மலரும் என்றார் அவர்.  கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் பாலா, மதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன், வேலூர் நகரச் செயலாளர் பழனி, நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

உடல் உறுப்புகளை திருடுவதற்காக ஃபலஸ்தீனர்களை கடத்தும் இஸ்ரேல் ராணுவம்!!!

காஸ்ஸா : குற்றவாளிகள் என்று குற்றச்சாட்டைக் கூறி இஸ்ரேல் ராணுவம் கைதுச்செய்யப்படும் ஃபலஸ்தீன் இளைஞர்களை கடத்திச்சென்று அவர்களின் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளை திருடி விட்டு உடலை வழியில் எறிந்துவிட்டுச் செல்லுகின்றனர் என்ற அதிர்ச்சி செய்தியை ஸ்வீடன் நாட்டிலிருந்து வெளிவரும் நாளிதழான ஆஃப்டன்ப்ளேடட்(Aftonbladet) என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.



உடல் உறுப்புகளை திருடவும் அவற்றை சர்வதேச சந்தையில் விற்பதற்கும் மாஃபியா கும்பலுடன் இஸ்ரேல் ராணுவத்தினருக்கு தொடர்பு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. மேற்குகரையிலிருந்தும், காஸ்ஸா முனையிலிருந்தும் கைதுச்செய்யப்படும் ஏராளமான ஃபலஸ்தீனர்களிடமிருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டது ஆய்வில் உறுதிச்செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் டொனால்ட் போஸ்ட்ரம் கூறுகிறார்
.




நப்லஸிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தினரால் பிடித்துச்செல்லப்பட்ட ஃஹாலித் என்ற இளைஞனின் இறந்துப்போன உடல்தான் அவரது குடும்பத்தினருக்கு கிடைத்தது. ஜனாஸாவை குளிப்பாட்டும்போது உடலில் காணப்பட்ட வெட்டுக்காயங்களை பரிசோதித்தபொழுதுதான் உடல் உறுப்புகள் திருடப்பட்டது தெரியவந்தது. பல குடும்பங்களும் இத்தகைய சூழல் தங்களுக்கும் நேர்ந்ததை தன்னிடம் விவரித்ததாக ஆஃப்டன்ப்ளேட்டின் செய்தியாளர் கூறுகின்றார். பிலால் என்ற இளைஞரை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச்சென்று நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக்கொலைச்செய்தது. 5 நாள்கள் கழித்துதான் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் நடந்த உடல் பரிசோதனையில் அவருடைய வயிறு கிழிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கிய உறுப்புகளெல்லாம் திருடப்பட்டிருந்தது.
1992 ஆம் ஆண்டிலேயே இஸ்ரேல் ராணுவத்திற்கெதிராக உடல் உறுப்புகளை திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதுபற்றிய தெளிவான விசாரணை அறிக்கை வெளிவரவில்லை. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாஃபியா கும்பலுடன் இஸ்ரேல் ராணுவத்திற்கு தொடர்பிருப்பதாகவும் அப்பத்திரிகை குற்றஞ்சாட்டுகிறது.




இப்பத்திரிகைச் செய்தியைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்தால் கடத்திச்செல்லப்பட்டு கொலைச்செய்யப்படும் ஃபலஸ்தீனர்களின் உடலை பரிசோதனைச்செய்யப்போவதாக ஃபலஸ்தீனர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.


News: Thejas

குஜராத் கொலைகளுக்கு அனுமதி அளித்தது நரந்திர மோடி" : DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.


கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்றக் கலவரங்களின்போது முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதில் மோடிக்குத் தொடர்பில்லை" என்று சிறப்புப் புலனாய்வுக்குழு (Special Investigation Team - SIT) வெளியிட்டுள்ள அண்டப்புளுகு வெள்ளை அறிக்கைக்கு எதிராக, குஜராத் முதலமைச்சர் மோடியின்கீழ் காவல் துறையில் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர் குரலெழுப்பியுள்ளார்.

குஜராத்தில் இனப்படுகொலைகளை நடத்திய சங்பரிவார குண்டர்களே "மோடிதான் கொல்லச் சொன்னார்" என்று வெளிப்படையாகவும் பெருமையாகவும் ஒப்புக் கொண்ட பின்னரும் அம்புகளான அந்த குண்டர்கள் மீதும் எய்தவரான குஜராத் முதல்வர் மோடியின் மீதும் நடவடிக்கை எடுக்க வக்கற்றுப்போய் "மோடி ஓர் அப்பாவி" என்று அறிக்கை வெளியிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினரை என்னவென்பது?

சிறப்புப் புலனாய்வுக் குழுவினரின் அறிக்கையை எதிர்த்து ஒருகுரல் எழுந்து உரத்து ஒலிக்கிறது.கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குஜராத் காவல் துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் (DGP-புலனாய்வுப் பிரிவு) ஜெனரல் ஸ்ரீகுமார் கடந்த திங்களன்று (6.12.2010) திருவனந்தபுரத்தில் நடந்தேறிய ஒரு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, "மோடியை அப்பாவியாக அடையாளப் படுத்துவதற்கு, குஜராத்தில் இயங்கும் ஒரு பெரிய தொழில் நிறுவனம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, SITஇன் தலைவர் ஆர் கே ராகவனை வளைத்துப் போட்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

பாரதீய ஜனதா கட்சித் தலைவருக்கு எதிராகவும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தி, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் பட்டியலிட்டு எழுதிய முப்பது பக்கக் கோரிக்கை மனுவையும் இக்கூட்டத்தில் அவர் வெளியிட்டார். "முஸ்லிம்கள் கொத்து-கொத்துகளாகக் கொல்லப்பட்டு, அழித்தொழிப்பு நிறைவேறும்வரை கைகட்டி வேடிக்கை பார்க்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டவர் மோடிதான்" என்ற உண்மையை இப்போது போட்டு உடைத்திருக்கிறார் முன்னாள் DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.

அரசியல் சாசனத்துக்கு எதிரான மோடி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் கட்டளைகளின்படி செயல்பட மறுப்புத் தெரிவித்ததால் ஸ்ரீகுமாருக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு மறுக்கப் பட்டது. இவர் டிஜிபி ஆகப் பதவி உயர்வு பெற்றதே தனிக்கதை.கோத்ரா கலவரத்தை விசாரித்துக் கொண்டிருந்த நாநாவதி கமிஷன்முன் ஆஜராகி, குஜராத் அரசுக்கு எதிராகப் பல தகவல்களை ஆகஸ்ட் 2004இல் ஸ்ரீகுமார் அளித்தார். அதனால், 2005இல் அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை குஜராத் அரசு கொடுக்கவில்லை.

அதை எதிர்த்து மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மூன்றாண்டு விசாரணைக்குப் பின்னர், கடந்த 2008 மே மாதம் 2ஆம் தேதியன்று - அதாவது ஸ்ரீகுமார் ஓய்வு பெற்ற பின்னர் - டிஜிபி ஆகப் பதவி உயர்வு அளிக்கப் பட்டார்.

ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல் மோடிக்கு ஏற்ற தலைமைச் செயலராக இருந்த ஜி.எஸ்.சுப்பாராவ் என்பவர், "மாநிலத்தில் காவல்துறை வலுவாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டுமெனில், அடிக்கடி போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று தனக்கு அறிவுரை கூறியதாகவும் அதற்கு, "அப்பாவிகளைச் சுட்டுக் கொல்வது இந்தியக் குற்றவியல் சட்டம் 120-பி பிரிவின்படி குற்றமாகும்" என்று தான் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசும்போது ஸ்ரீகுமார் கூறினார்.

குஜராத் கலவரம் குறித்துப் புலனாய்வுத்துறையினர் (IB) விசாரித்தால் இன்ன இன்ன மாதிரிதான் சொல்ல வேண்டும் என்று ஸ்ரீகுமாரின் உயரதிகாரி பீ.ஸீ. பாண்டே வற்புறுத்தியுள்ளார். அதை ஸ்ரீகுமார் பதிவு செய்து வைத்துள்ளார். தன்னை அடிபணிய வைப்பதற்காகவே தனக்கு வரவேண்டிய பதவி உயர்வுக்கு, தன் ஜூனியரான அஹமதாபாத் காவல்துறை ஆணையர் கே.ஆர் கௌசிக்கை குஜராத் அரசு தேர்வு செய்து நியமித்தது என்று ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

குஜராத் காவல்துறையில் 1972இல் சேர்ந்த ஸ்ரீகுமார், 2002ஆம் ஆண்டின் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் துவங்கிய, 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலை நடைபெற்றுத் தொடர்ந்து கொண்டிந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2002வரை குஜராத் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கூடுதல் இயக்குனராகப் பணியாற்றினார்.

குஜராத்தில் புலனாய்வுத்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றியபோது குறிப்பெடுத்து வைத்திருந்த பல முக்கிய அம்சங்கள் அடங்கிய, 620 பக்கங்களுக்கும் அதிகமான வாக்குமூலப் பிரமாணங்களை, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் சமர்ப்பித்ததாகவும் அவற்றை (SIT) கண்டு கொள்ளாமல் முற்றாகப் புறக்கணித்து, வேண்டுமென்றே வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார் ஸ்ரீகுமார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, "எதிர்கட்சி தலைவர்கள் சங்கர் சிங் வாகேலா மற்றும் ஓராண்டுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட கேபினட் மந்திரி ஹரேன் பாண்டியா போன்றவர்களின் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்யும்படி மோடி எனக்குக் கட்டளையிட்டார்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.

"இங்கு இதை நான் மீண்டும் மேலெழுப்புவதற்குக் காரணம் யாதெனில் மோடியைப் புனிதப் படுத்த முயலும் SITஇன் இந்த அறிக்கை, இந்திய அரசியலமைப்பின் இறையாண்மைக்கும் தனித்துவத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த அறிக்கை, நமது ஜனநாயகத்தின் அடித்தளங்களை ஆட்டிப் பார்ப்பதாக உள்ளது என்பதாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விளைவுகளை உருவாக்கும் என்பதாலும்தான்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.

மேலும், "குஜராத் கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு கொடூரமான வன்முறைத் தாக்குதல்களுக்கு வழிவகுத்தன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால், அவற்றைப்போல் மேலும் பல கொடுமையான நிகழ்வுகளுக்கு உந்துதலாக அமைந்து விடும்" என்றும் அவர் எச்சரித்தார்.


மதக் கலவரங்களின்போது நடந்த குற்றங்களை மறுவிசாரணை செய்ய மார்ச் 2008இல் உச்சநீதி மன்றத்தின் உத்தரவு மூலம் இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அமைக்கப்பட்டது. குஜராத் கலவரத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுஸைன் ஜாஃப்ரியின் மனைவி ஸகிய்யா நஸீம் ஜாஃப்ரியின் புகார் மனுவை ஆய்வு செய்திட, கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம், சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்கு ஆணையிட்டது.

ஸ்ரீகுமார் தமது வாக்குமூலப் பிரமாணத்தில், அரசாங்க அதிகாரிகள் அந்தக் கலவரத்தில் பங்கு வகித்து, பொதுமக்களுள் 100-130 பேரை நரோதபடியா எனும் இடத்திலுள்ள காவல் நிலையத் தலைமையகத்தின் எதிரில் வைத்துக் கொன்றொழித்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைப் பற்றி மேலும் விளக்கம் கேட்டோ விசாரிக்கவோ அவர் அழைக்கப்படவில்லை. மோடி உட்பட குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வாதங்களை சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அப்படியே ஏற்றுக் கொண்டு, உண்மைகளை மூடிமறைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

தான் வழங்கிய ஆதாரங்கள் இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவை, ஜாஃப்ரி விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையின் 87 பாராக்களில் 36 பாராக்கள் தனது வாக்குப்பிரமாணத்தின் மூலப் பகுதிகள்தாம் என்றும் ஸ்ரீகுமார் கூறினார் "திருமதி ஜாஃப்ரியின் புகார் மனுவில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எனது ஆதாரங்களைப் பொய்யாக்கும் சதித் திட்டத்துடன் இந்த நீதிமன்ற விசாரணையின் துவக்கம் முதலே முயன்று வருகின்றனர்" என்றும் "உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் நியமிக்கப்பட்ட இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT), மோடியின் குஜராத் காவல் துறையின்கீழ் இயங்கும் ஒரு துணைக் குழுவாகவே செயல் பட்டு வந்தது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

குஜராத் கலவரத்துக்கு முன்னர், 1990 மற்றும் 1998 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பதற்காக மத்திய அரசாங்க விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்டவர் ஸ்ரீகுமார். "இந்துத்துவ இயக்கச் செயல்வீரர்கள் சட்ட விரோதமான செயல்பாடு எதிலும் ஈடுபடவில்லை; நீங்கள் சந்தேகத்திற்குரிய முஸ்லிம் போராளிகள்மீது கவனம் செலுத்தினால் போதும்" என்று மோடி தன்னிடம் கூறியதாகவும் ஸ்ரீகுமார் குறிப்பிட்டுள்ளார். தான் பிறப்பால் ஒரு ஹிந்து என்றும் சனாதன தர்மமான ஹிந்துத்துவத்தைப் பின்பற்றுவதாகவும் அதன் போதனைகள்தாம் தனக்கு இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராகப் போராட உந்துதலாக உள்ளது என்றும் ஸ்ரீகுமார் கூறுகிறார்.

சரித்திரத்தில் முதுநிலை பட்டம் படித்துள்ள ஸ்ரீகுமார், இந்தியக் காவல் சேவை(Indian Police Service - IPS)யில் இணைவதற்கு முன்னர் காந்தியச் சிந்தனைகளையும் படித்துள்ளார். "உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும்வரை எந்த ஒரு விசாரணைக்கும் முற்றுப் புள்ளியில்லை" என்று தான் நம்புவதாகவும் "உண்மை குற்றவாளிகள் ஒருநாள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

"மிகவும் கீழ்த்தரமான இரண்டு நிகழ்வுகள், நடந்தேறிய பாவகாரச் செயல்கள் ஆகியன தன்மானமுள்ள எந்தவோர் உண்மையான ஹிந்துவுக்கும் மிகப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தும். ஒன்று தகர்க்கப்பட்ட வழிபாட்டுத் தலமாகிய பாப்ரி மஸ்ஜித் நிகழ்வு. இரண்டாவது சிறுபான்மை சமுதாயத்திற்கெதிரான இனப்படுகொலை. இவ்விரண்டு சாத்தானியச் செயல்களும் பீஜேபி எனும் கட்சியின் தீவிரவாத குண்டர்களால் அதன் தலைவர்கள் என அறியப்பட்டவர்கள் முன்னிலையில் நிகழ்ந்தது" என்று அவர் கூறினார்.

உண்மையைப் புதைக்க முயலும் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிட சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை செய்து வருவதாக ஸ்ரீகுமார் கூறினார். "ஏனெனில், இக்குற்றவாளிகள் சட்டமுறைப்படி தண்டிக்கப் படவில்லையென்றால் நடுவுநிலை முஸ்லிம்களின் நிலமை விரக்தியாலும் கவலையாலும் இன்னும் மோசமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் அது, தீவிரவாத சிந்தனைக்கும் செயல்களுக்கும் வழிவகுத்திடும்" எனக்கூறி முடித்தார் ஸ்ரீகுமார்
 
நன்றி: புதிய  தென்றல்