Friday, November 12, 2010

கண்திருஷ்டி


1. கண்திருஷ்டி என்றால் என்ன?
தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி அல்லது கண்ணேறு என்று கூறுவார்கள்.நபி (ஸல்) அவர்கள், 'கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: புஹாரி 5740, 5944,)
'ஆந்தையினால் ஏதும் இல்லை, (ஆந்தை அலறுவதால் ஏதும் இல்லை) கண்ணேறு உண்மையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாபிஸ் அத்தைமீமி (ரலி), நூல்: திர்மிதி 2140)

2. கண்திருஷ்டி எவ்வாறு ஏற்படுகிறது?
கண்திருஷ்டி கெட்டவர்களினால் ஏற்படுகிறது, அதற்கு நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.
கண்ணேறு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'அது ஷைத்தானின் வேலையாகும்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூது 3859)


3. கண்திருஷ்டியின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும்?
கண்ணேறு முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரையை உண்டாக்கும். அதற்கான ஆதாரம்.
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில் இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5739)


கண்திருஷ்டியினால் வியாதிகள், சுகவீனம் உண்டாகும் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.
விதியை மாற்றுவதை மாற்றும் வலிமை வாய்ந்தது. அதற்கான ஆதாரம்.
'அல்லாஹ்வின் தூதரே! ஜஃபரின் குழந்தைகளுக்கு அடிக்கடி கண்பட்டு விடுகிறது. அவர்களுக்காக நான் மந்திரிக்கலாமா? என்று அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! விதியை வென்று விடக்கூடிய ஒன்று இருக்குமானால் கண்ணேறு அதை வென்றுவிடும்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைத் பின் ரிபாஆ அஸ்ஸுரகீ (ரலி), நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா 3510, திர்மிதி 2136)

விதியை எதுவும் மாற்றாது, மாற்ற முடியாது. அப்படி ஏதாவது ஒன்று இருந்திருந்தால் அதை (அந்த ஒன்றை) இந்தக் கண்ணேறு மாற்றும், விதியை மாற்றாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.


4. கண்திருஷ்டியிலிருந்து மீள்வது எப்படி?
எளிமையான ஒரே வழி ஃபலக், நாஸ் என்ற அல்குர்ஆனின் கடைசி இரண்டு அத்தியாங்களை ஓதுவது தான்.
'ஃபலக், நாஸ் அத்தியாயங்கள் இறங்கும் வரை கண்ணேறு, ஷைத்தான் ஆகியவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்விரு வசனங்களும் இறங்கிய பின் அதை எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டு விட்டார்கள்' என்று அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா 3511, திர்மிதி 2135)
மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவதே கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்க வழியுமாகும்.


5. ஓதிப்பார்த்தல்
:
கண்திருஷ்டியிலிருந்து மீள்வதற்கு ஓதிப்பார்க்க அனுமதி உண்டு. அதற்குரிய ஆதாரங்கள்.
'விஷகடி, கண்ணேறு, சிரங்கு ஆகியவற்றுக்காக மந்திரிக்க நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்' என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 2132)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீய விளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள் அல்லது எனக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5738)
'சிரங்கு, கண்ணேறு ஆகியவற்றுக்குத் தவிர மந்திரித்தல் கிடையாது' நபிமொழி. (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: திர்மிதி 2134)

மந்திரித்தல் ஓதிப்பார்த்தல் இரண்டும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த முறையில் ஓதிப்பார்ப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். அதுவல்லாத முறையில் ஓதிப்பார்ப்பது தடுக்கப்பட்டதாகும். அதற்குரிய ஆதாரங்கள்.
'யார் சூடுபோட்டுக் கொள்கிறாரோ அல்லது மந்திரிக்கிறாரோ அவர் தவக்குலில் (உறுதியான நம்பிக்கையில்) இருந்து நீங்கி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி), நூல்கள்: அஹ்மது, நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம், திர்மிதி 2131)


நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கண்திருஷ்டியை கழிப்பதற்காக கட்டப்பட்ட கயிற்றை அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். மிருகங்களுக்கு கூட கறுப்புக் கயிறு கட்ட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க வில்லை. மனிதர்களுக்கு எப்படி அதை கட்ட முடியும்.
நான் அல்;லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன கண் திருஷ்டி கழிவதற்காக கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று கருப்பை விரட்டுவதற்காக கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும் என்று (பொது மக்களிடையே) அறிவிப்புச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள் என்று அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன் என்று கூறுகிறார்கள். (நூல்: புஹாரி 3005)

'எந்த வித விசாரணையும் இன்றி சொர்க்கம் செல்லும் எழுபதினாயிரம் பேர் ஓதிப் பார்க்காது, இறைவனையே சார்ந்திருப்பவர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5705)
இங்கே ஓதிப்பார்ப்பது என்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அமையாததை குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் தனக்குத் தானே ஓதிப்பார்த்திருக்கிறார்கள் என்பதிலிருந்தும் அனுமதிக்கப்பட்ட முறையில் ஓதிப்பார்க்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


6. ஓதிப்பார்க்கும் முறை:
நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வொரு இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல்ஹுவல்லாஹுஅஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின் னாஸ் ஆகிய (112,113,114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம் பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), நூல்: புஹாரி 5017)

7. நடை முறை:
நடை முறையில் கண்திருஷ்டியை கழிக்க 'தலைசுற்றிப் போடுதல்' என்ற முறை உள்ளது. இது மாற்றுமத சமூகத்திலிருந்து முஸ்லிம் சமுதாயத்தில் நுழைந்து விட்ட வழக்கமாகும். பட்ட மிளகாய், உப்பு, முச்சந்தி மண், வீட்டுக் கூறையின் ஓலை இவை போன்றவற்றை கண்திருஷ்டி பட்டவரின் தலையை மூன்று முறை சுற்றி நெருப்பில் போட்டு விடுவார்கள். இன்னும் இது போன்ற வழக்கங்களும் நடைமுறையில் உள்ளன.
இம்முறைகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டிய மூடப்பழக்கமாகும். இதனால் கண்திருஷ்டி குணமாகாது

பலஸ்தீனர்களின் பொழுதுகள் எவ்வாறு கழிகின்றன?

*பலஸ்தீன் எனும் புனித பூமியை நாம் அனைவரும் மறந்து விட்டோமா? அதை யூத
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டிய கடமை முஸ்லிம்களாகிய நமக்கு முன்
நிற்கிறது என்பது நமக்கு நினைவு உள்ளதா? *

ஒரு பலஸ்தீன் சகோதரனின், ஒரு பலஸ்தீன் பெண்மணியின், ஒரு பலஸ்தீன்
குழந்தையின் ஒரு நாள் பொழுது எப்படிக் கழிகிறது தெரியுமா? நாம் கழிக்கும் ஒரு
சாதாரண நாள் போலவா அது கழிகிறது?
*இல்லவே இல்லை!
**அவர்களின் ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பு நிமிஷங்கள்... போராட்ட கணங்கள்...
இந்தப் படங்களைப் பாருங்கள் புரியும்...*

Friday, November 5, 2010

மத்திய அரசு வழங்கும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை அறிவிப்பு




மத்திய அரசு வழங்கும் கல்லூரி  மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான அறிவிப்பை அரசு தேர்வுகள்  துறை நேற்று(4.11.10) அறிவித்தது.இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள  செய்தி,

கல்லூரி பல்கலைகழக மாணவர்களுக்கான படிப்பு உதவி திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. 2010-2011 ம் கல்வி ஆண்டில் அரசால் அங்கீகரிகப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள பட்டப்படிப்பு, தொழிற்கல்வி மாணவ- மாணவிகள் உதவி தொகை பெற விண்ணபிக்கலாம்.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய்1000/- மும் முதுகலை படிப்பு படிக்கும் போது  மாதம் ரூபாய் 2000/- மும் வழங்கப்படும்.  மருத்துவம் மற்றும் எஞ்சினியரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பாக இருந்தால் முதல்மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 1000/-மும், எஞ்சிய ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய்-2000/-மும் பெறலாம் . ஒரு கல்வி ஆண்டில் பத்து(10) மாதங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும்.
மாநில பள்ளி தேர்வு வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 4883 ஆகும். இதில் 50% மாணவர்களுக்கும், 50% மாணவிகளுக்கும் ஒதுக்கப்படும். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட +2 தேர்வில் குறைந்தபட்சம் 80% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப  ஆண்டு வருமானம் 4,50,000 குள் இருக்க வேண்டும் .
+2 தேர்வு எண்ணை  தேர்வுத்துறை இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதி மதிப்பெண் பெற்றவர்கள்  மட்டுமே விண்ணப்பதை டவுன்லோட் செய்ய முடியும். விண்ணப்பதை தேதி முதல் தேதி வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் கீழ்காணும் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் இம்மாதம் 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இணை இயக்குனர்(மேல்நிலை)
அரசு தேர்வுகள் இயக்கம்
டி.பி.ஐ வளாகம்
டி.பி.ஐ கல்லூரி சாலை,
சென்னை-600 006
அவ்வாறு அனுப்பும் தபாலின் மேல் ” கல்லூரி -பல்கலைகழக மாணவர்களுக்கான படிப்பு உதவி திட்டம் -” என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். தபால் துறை  மூலம் மட்டுமே விண்ணப்பங்களை  சமர்பிக்க வேண்டும்.
குறிப்பு: கல்வி உதவித்தொகை   பெறுவதற்கான விண்ணப்பம் நமது இணையத்தளத்தில் வருகின்ற திங்கட்கிழமை(08-11-2010) வெளியிடப்படும்
நன்றி:TNTJ

Thursday, November 4, 2010

மேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா? - கடைசி தேதி நவம்பர் 9


 தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இது இரண்டு பிரிவில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியும்.  ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள். இதில் பட்டதாரிகள் தங்களை வாக்காளராக பதிவு செய்ய கடைசி தேதி நவம்பர் 9 ஆகும்.  முஸ்லீம் பட்டதாரிகளே! ஓட்டுக்காக அரசியல் நடத்தும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் உரிமைகளை பெற இந்த வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர வேண்டும். வாக்காளர் பட்டியலில் கணிசமான அளவு முஸ்லீம்கள் இருந்தால்தான் ஆட்சியாளர்கள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்கள். குறைந்த சதவீத்தில் இருந்தால் முஸ்லீம்கள் மீது ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரித்துவிடும். வாக்காளர் பட்டியலில் சேர்பதை ஒரு வேலையாக நினைத்து விட்டுவிடவேண்டாம். நம் சமுதாயாத்தில் பட்டதாரிகளே குறைவு, அதிலும் சமூக அக்கரை உள்ள பட்டதாரிகள் மிக குறைவு, எனவே இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சமுதாய நலன் கருதியாவது பட்டதாரி வாக்காளர் பட்டியலில் சேருங்கள். அன்பிற்கினிய சகோதர்களே! உங்களுக்கு தெரிந்த முஸ்லீம் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இதன் அவசியத்தை விளக்கி இந்த மேல்சபை வாக்காளர்பட்டியலில் சேர சொல்லுங்கள்.
யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்
எங்கு விண்ணப்பிப்பது?

மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்
பிற ப்குதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்
எப்படி விண்ணப்பிப்பது? 
விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download)  செய்யலாம் http://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.
உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்
 கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.
1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. மதிப்பெண் சான்றிதழ்,
3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்
3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.
 மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம்.  சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.
மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.html  தெரிந்துகொள்ளலாம்.

 

நன்றி:TNTJ மாணவர் அணி

Wednesday, November 3, 2010

பயங்கரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸக்கு தொடர்பு: காங்கிரஸ்

புதுதில்லி, நவ. 2: பயங்கரவாதச் செயல்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் இணை அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன என்று அகில இந்திய காங்கிரஸ் பேரவைக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.


÷கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, "அண்மையில் நடந்த சில பயங்கரவாதச் சம்பவங்கள் குறித்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அதன் துணை அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு அம்பலமாகி உள்ளது' என்று கூறினார்.


சோனியா காந்தி பேசும்போது, "மதத்தை அரசியல் நோக்கத்துக்காக யார் பயன்படுத்தினாலும் அதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்' என்று கூறினார்.


மேலும் "ராமஜென்ம பூமி வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களை மன்னித்துவிட்டதாக கருதிவிட முடியாது' என்று கூறினார்.




÷அகில இந்திய காங்கிரஸ் பேரவை அறிக்கையிலும் பயங்கரவாதச் செயல்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உள்ள தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வகுப்புவாத சக்தியாக இருந்தாலும் பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும் நமது நாட்டை அழிக்க திட்டமிடும் சக்திகள் என்னை விலைகொடுத்தாயினும் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி:தினமனி  

பயங்கரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸக்கு தொடர்பு: காங்கிரஸ்

புதுதில்லி, நவ. 2: பயங்கரவாதச் செயல்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் இணை அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன என்று அகில இந்திய காங்கிரஸ் பேரவைக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.


÷கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, "அண்மையில் நடந்த சில பயங்கரவாதச் சம்பவங்கள் குறித்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அதன் துணை அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு அம்பலமாகி உள்ளது' என்று கூறினார்.


சோனியா காந்தி பேசும்போது, "மதத்தை அரசியல் நோக்கத்துக்காக யார் பயன்படுத்தினாலும் அதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்' என்று கூறினார்.


மேலும் "ராமஜென்ம பூமி வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களை மன்னித்துவிட்டதாக கருதிவிட முடியாது' என்று கூறினார்.




÷அகில இந்திய காங்கிரஸ் பேரவை அறிக்கையிலும் பயங்கரவாதச் செயல்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உள்ள தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வகுப்புவாத சக்தியாக இருந்தாலும் பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும் நமது நாட்டை அழிக்க திட்டமிடும் சக்திகள் என்னை விலைகொடுத்தாயினும் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி:தினமனி  

Tuesday, November 2, 2010

ஒபாமா வருகை: முழு அடைப்புக்கு மாவோயிஸ்ட் அழைப்பு


கொல்கத்தா, நவ.2- அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும்போது நாடு தழுவிய முழு அடைப்புக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நவம்பர் 8-ம் தேதி ஒபாமா வரும் தினத்தில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக மாவோயிஸ்ட் மத்திய குழுவின் உறுப்பினர் கிஷன்ஜி கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் தொலைபேசி மூலம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

கிஷன்ஜி கூறியதாவது:


அமெரிக்க ஏகாதிபத்திய அரசிடம் நாட்டை விற்கும் முயற்சியில் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ஈடுபட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கையில் ஒரு முயற்சி தான் ஒபாமாவின் இந்தியப் பயணம்.
ஒபாமா வருகையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள போராட்டங்கள் வெறும் நாடகமே.
மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கம்யூனிஸ்ட் அமைப்புகளும் மக்களை வதைப்பதற்காக முதலாளித்துவ கலாசாரத்தில் நுழைந்துள்ளன.
இவ்வாறு கிஷன்ஜி கூறியுள்ளார்.



நன்றி:தினமனி 

Monday, November 1, 2010

குஜராத்தைவிட்டு வெளியேறினார் தீவிரவாதி (M.P) அமித்ஷா


மும்பை, அக்.31: குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை குஜராத்திலிருந்து வெளியேறிவிட்டார். அவரை நவம்பர் 15-ம் தேதிவரை குஜராத்தைவிட்டு வேறு இடத்தில் இருக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 குஜராத்தில் உள்துறை அமைச்சராக இவர் இருந்தபோது ஷொராபுதீன் என்கவுண்டர் நடந்தது. அந்த வழக்கில் இவரையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். இந்நிலையில் இவர் ஜாமீன் கேட்டிருந்தார்.

 சாட்சியை கலைத்துவிடுவார் என்று கூறி அதை சிபிஐ வக்கீல் ஆட்சேபித்தார். இதையடுத்து இவரை நவம்பர் 15-ம் தேதிவரை குஜராத்தில் இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஞாயிற்றுககிழமை காலையிலேயோ குஜராத்திலிருந்து கிளம்பிவிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 எனவே, அவர் காலை விமானத்தில் மும்பைக்கு புறப்பட்டுவிட்டார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தினமணி  
காவி தீவிரவாதம் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள Click Here

காவிகள் அட்டுழியம்

பிரபல எழுத்தாளர் அருந்ததிராயின் வீட்டை காவி தீவிரவாதிகள் அடித்து நொறுக்கினர்.காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு அதரவாக  பேசியதால் ஆத்திரம் அடைந்த  காவி தீவிரவாதிகள் நேற்று அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.ஆர்பாட்டம் முடிந்ததும் அவரது வீட்டை அடித்து நொறுக்கினர்.

மேலும் விவரங்களுக்கு Click Here