Saturday, January 29, 2011

புனிதப் போராளியின் பயணம்

அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ்
பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும்*.* இவரது திறமையைக் கண்டு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கைய்யா தேவர், தனது நண்பர்களிடமெல்லாம் அஹமது
அலியை அறிமுகப்படுத்தி வைக்கும்போது, அவரது பெயரைச் சொல்லாமல் மரியாதையுடன்
"பாபா" என்று அறிமுகப்படுத்துவார். *அதுபோலவே அஹமது அலி பொதுக்கூட்டங்களில்
கலந்து கொள்ளும்போது தனது ஊர் பற்றி குறிப்பிடும்போதும் அங்குள்ளவர்கள்
கேட்கும்போதும், பழனிக்கு பக்கத்தில் உள்ள புது ஆயக்குடி என்று சொல்லுவார். இவை
இரண்டும் காலப்போக்கில் பழனிபாபா என்று உருமாறியது. மறைந்த இந்திய பிரதபர்
இந்திரா காந்தி அவர்கள் தான் முதன்முதலில அஹமது அலியை பழனிபாபா என்று மிகுந்த
மரியாதையுடன் அழைத்தவர்*

***பழனிபாபா*

**பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது. புது
ஆயக்குடி. இக்கிராமமே பழனிபாபாவின் தாய்வழிப் பூர்வீக ஊர். தந்தையின் ஊர், நீலகிரி
மாவட்டம் குன்னூர். தந்தை பெயர் என்.எ.முஹம்மது அலி தாயார் பெயர் கதீஜா பீவி
குன்னூரில் காப்பி கொட்டை ராவுத்தர் என்று இவரது தந்தையை அழைப்பார்கள்.
பழனிபாபா பெற்றொருக்கு நான்கவது குழந்தையாக 14/11/1950ல் பிறந்தார். அஸ்ரப் அலி,
லியாகத் அலி, முபாரக் அலி ஆகிய சகோதரர்களும் ரெஜினா சுல்தான், ரூபினா சுல்தான்,
ஜரினா சுல்தான் ஆகிய 3 சகோதரிகள் உடன் பிறந்தவர்கள். மிகவும் அன்பான,
நேசமான, பொருளாதார
நிலையில் வசதியாக இருந்த குடும்பம்.

*ஆரம்பக் கல்வி*

பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பழனிபாபா குன்னூரில் உள்ள
செயின்ல் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் ஆரம்பக்கல்வியை தொடங்கினார். அடுத்து
மேல்நிலைக்கல்வியை புது ஆயக்குடியில் உள்ள ஐ.டி.ஒ (*I.D.O*)
மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.

**

*பட்டப்படிப்பு*

பழனியில் உள்ள பழனி ஆண்டவர் கலைக் கல்லுரியில் ஆங்கில இலக்கியம் பட்டம் பயின்று
முடித்தார். அதன் பிறகு டெல்லியில் 10 ஆண்டுகள் இருந்தப்போது முதுகலை மற்றும்
முனைவர் (Phd.,) பட்டம் பெற்றார்.

படிப்பில் பிடிப்பு, ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம், அறிவுக் கூர்மை உடைய
பாபா அவைகளையே தனது ஆயுதமாக பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.

****

*பொது வாழ்க்கை*

நைனா முஹம்மது என்பவர் தலைமையில் புது ஆயக்குடியில் முஸ்லிம் லீக் சார்பில்
நடந்த கூட்டம்தான் பழனிபாபாவின் முதல் பொதுக்கூட்டம் அதன் பின ஆயிரக்கணக்கான
மேடைகளில் அடைமழையென, புயலென, அழகான அற்புதமான புள்ளிவிபரங்களுடன் பேசி
இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திட்டார். அவரது பேச்சுக்கள் இஸ்லாமிய
இளைஞர்களின் தேசிய கீதமானது. பாபா தனது வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின்
எண்ணிக்கை *13201 *ஆகும். இறுதியாக அவர் பேசிய கூட்டம் நாகை
மாவட்டம்.திட்டச்சேரியில் நடைபெற்றப்
பொதுக்கூட்டமாகும்.

தனது துணிச்சலான பொது வாழ்க்கை நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சங்கடங்களை
ஏற்படுத்தும் என்பதால் குடும்ப வாழ்க்கையையும், பந்த பாசப்பினைப்பினைபுகளையும்
விட்டுவிலகி வாழ்ந்து வந்தார். அவரது *30* ஆண்டுக்கால வாழ்க்கை அவரைப் புரிந்து
கொண்டவர்களுடனும், நண்பர்களுடனுமே இருந்தது. தனக்கென ஒரு பாதையை
வகுத்துக்கொண்டார். தனக்கென ஒரு இல்லற வாழ்க்கை அமைத்துக் கொள்ளவில்லை அது
பற்றி தன் நண்பர்களுடன் பேசும் போது "பொது வாழ்க்கை, பிரச்சாரம் என்று ஊர் ஊராக
திரியரவன் கல்யாணத்தை வேறப் பண்ணிக்கிட்டு ஒரு பெண்னுடைய வாழ்க்கையையும்
நிம்மதியில்லாமல் ஆக்கனுமா?" என்று கூறுவார்.

ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம், அறிவுக்கூர்மை, இதனால்
எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கு நண்பராக இருந்து தமிழகத்தின் தலைமைச்
செயலகத்தை ஒரு கலக்கு கலக்கியவர். முதன் முறையாக எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக
முதல்வராகப் பதவி ஏற்ற சில காலங்களிலேயே சென்னைக் கோட்டைக்குள் நுழைய
பழனிபாபாவிற்கு தடை என அரசானை வெளியானது. "யார் இந்த பழனிபாபா?" என்று தமிழக
மக்கள் பார்க்கத் தொடங்கினர்.

எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் போட்ட தடை ஆணையில், "தாடி வைத்த, நடுத்தர
வயதுடைய, ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அஹமது அலி என்கின்ற பழனிபாபா அரசாங்க
அலுவலத்துக்குள் நுழைய தடை " என்று எழுதியிருந்தது. எம்.ஜி. இராமச்சந்திரன்
அவர்களின் தடை உத்தரவுக்கு டெல்லி உச்சநீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றார்
பாபா. தடைஆணைக்கே
தடைஆணைப் பெற்ற சாதனையைப் படைத்தவர் இந்தியாவில் பழனிபாபா ஒருவர் தான். இவ்வாறே
தடா வழக்கு பதிவு செய்யப்பட்டும். கைது செய்ய இயலாத சூழ்நிலையை இந்தியாவில்
ஏற்படுத்திய ஒரே மனிதரும் பழனிபாபா தான்!.

எம்.ஜி. இராமச்சந்திரன் அவரது ஆட்சிக் காலத்தில், 'பழனிபாபா பொது கூட்டங்களில்
பேசக்கூடாது' எனத் தடை உத்தரவு போட்டிருந்தார். இதற்கு பதிலடிக் கொடுக்கும்
வகையில் *கோபிச்செட்டிப்பாளையத்தில் எருமை மாடுகளை கட்டிவைத்து**, **மைக்
வைத்து புள்ளி விபரங்களுடன் தனது கருத்துகளை பேசிய பாபா*, "மக்கள் கிட்ட
பேசுறதும், உங்க கிட்ட பேசுறதும் ஒன்றுதான் " என்று காமண்ட் அடித்தார்.

இந்து பாஸிஸம், தமிழகத்தில் "*தேசியம்*" என்ற வடிவிலும், '*நாட்டுப்பற்று*' என்ற
போர்வையில் தலையெடுத்த போது அதற்கு பதில் சொல்லத் தளைப்பட்டார்.

இந்துத் தலைவர்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு *ஆங்கிலத்தில் அரசியல்
நிர்ணயச்சட்டம்**; **வரலாற்று நூல்கள்* ஆகியவற்றிலிருந்து ஆணித்தரமாக
மேற்கொள்காட்டி மறுப்பு தெரிவித்தார். இவருடைய பேச்சுக்கள் மக்களைக் கவர்ந்தன.

பழனிபாபாவின் பேச்சுக்களைக் காரணங்காட்டி அவரைப் பலமுறை கைது செய்தார்கள்..
அடிக்கடி கைது செய்தது பழனிபாபாவை ஒரு "*தீவிரவாதி*"யாகக் காட்டவே தவிர, அவர்
ஓரு குற்றவாளி என்பதால் அல்ல. காரணம் அவர் மீது தொடுக்கப்பட்ட எந்த வழக்கும்
நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்ட தே இல்லை!

ஆனால், பழனிபாபாவை "*தீவிரவாதி*"யாகக் காட்டும் உத்தியில் பார்ப்பன
பத்திரிக்கைகளும், காவல்துறையும் வெற்றி பெற்றது. வாக்குரிமையை முறையாக
பயன்படுத்த முன்வராத சமுதாயத்தில் பிறந்து, நீதிமன்றனகளை, சமுதாய எழுச்சிக்காக
முறையாக பயன்படுத்திக் கொண்டவர்தான் பழனிபாபா.

நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து, தனது பேச்சுரிமையை நிலைநாட்டியதால்தான்.
பழனிபாபாவால் இத்தனை காலம் மக்களுக்காக பொது மேடைகளில் பேச முடிந்தது.
இல்லையெனில், பழனிபாபாவை துவக்க காலத்திலேயே அரசாங்கம் முடக்கி போட்டிருக்கும்.

பல நேரங்களில் இந்து பாஸிஸவாதிகளின் நரகல் நடைப் பேச்சுகளுக்கு அதே தொனியில்
இவர் பதில் சொல்ல முற்பட்டதாலும், *இழப்புக்கு மேல் இழப்பு**, **இழிவுக்கு மேல்
அழிவு* என முஸ்லிம் சமுதாயம் மதவெறியர்களால் பாதிப்புக்கு உள்ளான போதும், *பாபா
தன் ஆதங்கத்தை அப்படியே வெளிக் காட்டினார்*. இந்து பாஸிஸ பேச்சாளர்கள் பேசும்
பேச்சுகளோடு ஒப்பிடும் போது பழனிபாபா பேச்சு ஒன்றுமில்லை என்றே சொல்லலாம்.

பழனிபாபாவின் ஆதங்கத்தைக் கிளறியப் பேச்சாளர்கள் ஒரு முறை கூட கைது
செய்யப்படவில்லை. குறைந்த பட்சம் அவர்கள் மீது குற்றம் கூடச் சுமத்தவில்லை.

**

*வழக்குகள்*

பழனிபாபா மீது 136 வழக்குகள், 125 முறை சிறைவாசம். பாபா மீது தேசிய
பாதுகாப்புச் சட்டமும், கருணாநிதி ஆட்சியில் 2 முறை போடப்பட்டது. தேசிய
பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதா (*1991 - 1995*)
ஆட்சிக்காலத்தில்
1 முறை தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேற்கண்ட அனைத்து
வழக்குகளிலும் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். மற்றொரு முறை ஜெயலலிதா (
*1991- 1995*)ஆட்சிக்காலத்தில் பழனிபாபா மீது தடா சட்டத்தில் வழக்கு
பதியப்பட்டது. அதில் பாபா உச்சநீதிமன்றம் வரைச் சென்று வழக்காடி நிரபராதி என
விடுதையானார்.

இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி திரு. ஆர்.வெங்கட்ராமன், துனை
ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும்
பதவி வகித்த காலத்தில் அரசு பணத்தில் (*240** கோடி ரூபாய்*) திருப்பதி
கோவிலுக்கும், காஞ்சி சங்கர மடத்துக்கும் அடிக்கடி சென்று வந்த மொத்த
செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி, சென்னை
உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து பலரது புருவத்தை உயர வைத்தார்.
அதன்பின் "சென்னை
உயர்நீதிமன்றம்" தள்ளுபடி செய்தது. பழனிபாபா மனம் தளராமல் டெல்லி உச்சநீதி
மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு சாதனை
சரித்திரமானது இவ்வழக்கு!.

**

*எழுத்துப்பணி*

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், ஹிந்துஸ்தானத்திற்கு ஹிந்துவுக்கு
ஆபத்து?<http://www.palanibaba.in/2009/04/blog-post_28.html>
என்ற இராம.கோபாலனுடைய நூலுக்கு மறுப்புரை நூலையும் எழுதினார். மறுப்புரை நூல்
பரபரப்பாக பேசப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்டது. மறுப்புரை நூலுக்காக
கருணாநிதி இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பழனிபாபாவை கைது
செய்தார். மறுப்புரை நூல் மீது இருந்த தடையை நீதிமன்றத்தில் முறையிட்டு, தடையை
நீக்க ஆணை பெற்றார். கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். பைபிள்
மற்றும் கிறிஸ்துவம் தொடர்பாக கிறிஸ்துவ பாதிரிமார்களோடு இவர் நடத்திய
விவாதம்,பாபாவின் பைபிள் பற்றிய ஆய்வு கிறிஸ்துவத்திலும்
(பைபிள்) பாபாவுக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. அதன் வெளிப்பாடே
"*பைபிள் ஆண்டவனால்
அருளப்பட்டதா?<http://www.palanibaba.in/2009/03/blog-post_14.html>
* என்ற நூல். பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் பாபா எழுதிய நூல் தான்Who Is
Law Abiding On The Issue Of Babri
Masjid?<http://www.palanibaba.in/2007/09/babri-masjid.html> நூலாகும்.
இவ்வாறு நூல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் தொடங்கினார்.

*பாபா நடத்திய** "**அல்முஜாஹித்**", "**முக்குல முரசு**", "**புனிதப்போராளி**",
*ஆகிய பத்திரிக்கைகள் மூலம். அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார்.
முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தனது பத்திரிக்கைகள் வாயிலாக
அம்பலப்படுத்தினார். பத்திரிக்கைகள், நூல்கள், மேடைபேச்சு, அரசியல் மற்றும்
சமூக விழிப்புணர்வு, இஸ்லாமிய பிரச்சாரம் என பல துறைகளிலும் சளைக்காமல்
பணியாற்றிய பல்துறை வித்தகர் அல்ஹாஜ் பழனிபாபா!.

**

*வெளிநாட்டு பயணம்*

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
சமூகத்தின் பிரச்சினைகளை பேசினார்.

1988ம் ஆண்டு அமெரிக்காவில் பைபிள் பற்றிய பல சர்ச்சைகளுக்கும் குர்ஆனின்
விஞ்ஞான விளக்கங்களும் என்ற தலைப்பில் பிலடெல்பியா மாகாணம் பெல்லொஷிப் பல்கலைக்
கழகத்தில் 13 மணி நேரம் தொடர் உரையாற்றி அமெரிக்க விஷயதாரிகளை வியப்புக்கு
உள்ளாக்கியவர். அந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான அயல்நாட்டினர் அமெரிக்கர் உட்பட
அல்லாஹ்வின் மார்க்கமாம் இஸ்லாத்தை அப்படியே துணிந்து ஏற்றனர். புருனே நாட்டின்
சுல்தான் பழனிபாபாவின் இனிய நண்பர்களில் ஒருவர்..

**

*இறுதிக் காலம்*

கடந்த சில வருடங்களாகவே தனது ஜிஹாத் கமிட்டியின் பிரச்சாரத்தை அமைதியாக அதே
சமயம் ஆக்கப்பூர்வமாக செய்து வந்தார்.

ஊர் ஊராக சென்று சமுதாய இளைஞர்களிடம் பேசி அவர்களைக் கவர்ந்து, வெளிநாட்டில்
வாழும் சமுதாய சொந்தகளிடம் கடிதத் தொடர்பு கொள்வதுடன் தனது ஆடியோ மற்றும்
வீடியோ கேசட்டுகளை அனுப்பி அவர்களின் ஆதரவையும், பொருளாதார உதவிகளையும் பெற்று
"ஜிஹாத்" கமிட்டி மூலம் பல *ஏழை எளிய சமுதாய மக்களுக்கெல்லாம் பண உதவிகள்
செய்து வந்தார்.*

தடா கைதிகளின் குடும்பத்தினர் முகவரிகளை எல்லாம் சேகரித்து, அவர்களுக்கு
மாதாமாதம் குடும்பச் செலவிற்கு பணம் (மணியாடர்) அனுப்பி உதவிவந்தார்.
இஸ்லாமியர்களின்
ஒருங்கிணைப்பிற்காக ஜமாத்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட ஜமாத்துகளை
ஒருங்கிணைத்தார். அதேபோல இஸ்லாமியர், தாழ்த்தப்பட்டோர், வன்னியர் ஒற்றுமையை
உருவாக்கிக் காண்பித்தவர் பழனிபாபா.இதனால் முஸ்லிம்களைப்போல் பிற
சமுதாயத்தினரிடமும் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது.இந்த மூன்று சமூகங்களும்
அரசியல் அதிகாரத்தில் ஆளும் ஜாதியாக இல்லாமல், ஆளப்படும் ஜாதி என்பதை
கண்டுணர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும்
எண்ணத்துடன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். தனது ஓய்வு நேரங்களை
புறாக்களோடும், இயற்கையோடும் கழித்தார்.

**

*மறைவு*

*1997** ஜனவரி **28**ந்* தேதி தனது சகோதரி மகன் ஹூசைனுடன் நோன்பு திறந்து
விட்டு அவரை *7:30* மணியளவில் வீட்டுக்கு அனுப்பியவுடன், பொள்ளாச்சி பேருந்து
நிலையத்திற்கு பின்னால் தனது நண்பர் தனபால் வீட்டிற்கு சென்றார். அவருடன்
பேசிக் கொண்டிருந்த பாபா பின்னர் சுமார் *9:30* மணிக்கு அங்கிருந்து வெளியே
வந்து, தனது ஜீப்பில் ஏறி அமர்ந்தார். அப்போது ஏதோ விசாரிக்க வந்தவன் போல் வந்த
ஒருவன், ஒரு கோடாரியால் பாபாவின் வயிற்றில் வெட்டினான். அசைய முடியாத நிலையில்
இருந்த பாபாவின் குடல் சரிந்ததும் கழுத்திலும், முகத்திலுமாக *13* வெட்டுகள்
விழுந்தன. அந்த இடத்திலேயே பாபா ஷஹித் ஆனார். இந்துத்துவாவின் அனைத்து
செயல்பாடுகளுக்கும் பிராமணர்களே காரணமாக இருந்ததை வெளிப்படுத்தியதால் பழனிபாபா
கொலை செய்யப்பட்டார். மறுநாள் *29-**ம்* தேதி புது ஆயக்குடிக்கு பாபாவின் ஜனாஸா
(உடல்) கொன்டுவரப்பட்டு அன்று மாலை 5:30 மணிக்கு ஐ.டி.ஒ. (*IDO*)
மேல்நிலைப்பள்ளி எதிரில் அடக்கம் செய்யப்பட்டது.

பாபா கோரமாகக் கொலைச் செய்யப்பட்ட அன்றும், அவர் ஒரு இந்து நண்பரின்
வீட்டிலிருந்தே புறப்பட்டிருக்கின்றார். இது அவர் ஓர் *யதார்த்தவாதி* என்பதையே
எடுத்துக் காட்டுகின்றது. இந்திய தேசத்தின் பிரதமரான இந்திரா காந்தியை, முன்
அனுமதி பெறாமல் நினைத்தவுடன் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த அல்ஹாஜ்
பழனிபாபா இஸ்லாமிய ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமைக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர்
எனலாம்.
**
**
http://www.palanibaba.in/2011/01/blog-post_4640.html

Friday, January 28, 2011

இந்திய முஸ்லிம்களின் அவல நிலையும் - அதற்கான தீர்வும்!!!

இந்தியநாடு சுதந்திரம் பெற்ற பின்பு இன்றுவரையுள்ள எந்த ஒரு அரசும் இந்திய
முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க எந்த ஒரு முயற்சியும்
மேற்கொண்டதில்லை என்பதே உண்மை. இந்திய பாகிஸ்தான் பரிவினையின்போது முஹம்மது அலி
ஜின்னா மாத்திரம் பிரிவினைக்கு ஆதரவு அளித்தபோது, மௌலானா அபுல்கலாம் ஆஸாத்,
ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் இந்திய
பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்களுடன் கைகோர்த்து
கொண்டார்கள். தனிமனிதராக நின்ற முஹம்மது அலி ஜின்னா, தான் நினைத்ததைச்
சாதித்துக் கொண்டார். ஆனால் இந்திய மக்களுடன் கைகோர்த்த மௌலானா அபுல்கலாம்
ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள்
உள்ளடங்கிய இந்திய முஸ்லிம் சமுதாயம் சாதித்தது என்ன என்பதை இன்றைக்கும் நாம்
கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களின்
எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது. முஹம்மது அலி ஜின்னாவின் பின்னால் சென்ற
மூன்றுகோடி முஸ்லிம்கள் தங்களது அடிப்படை உரிமைகளை(குறிப்பாக தங்களது வணக்க
வழிபாட்டு உரிமைகளைப்) பெற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பிரிவினையை
எதிர்த்து அல்லது பரிவினைக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவிலேயே வாழ்ந்து வரும்
எஞ்சியுள்ள முஸ்லிம்கள் மிரட்டப்படுவதோடு மட்டுமில்லாமல், மூன்றாம்தர
குடிமக்களாகவும் நடத்தப்படுகிறார்கள். மதச்சார்பின்மை காற்றோடு
பறக்கவிடப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 9
கோடிபேரை மக்கள் தொகையாக கொண்டிருந்த தலித் இயக்கம் டாக்டர் அம்பேத்கார் என்ற
தனி மனிதரின் தலைமையில் 150 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 7
கோடிபேரை மக்கள் தொகையாக் கொண்டிருந்த முஸ்லிம் இயக்கங்கள் ஒரு தொகுதியில் கூட
வெற்றிபெறாமல் தலைகுனிவைச் சந்தித்தது. முஸ்லிம்கள் மாத்திரம் ஒரே
தலைமையின்கீழ் ஒரு தனிக்கட்சியில் நின்று தேர்தலைச் சந்தித்து இருந்தால்
அநேகமான தொகுதிகளில் நாம் நிச்சயமாக வெற்றி பெற்றிருப்போம். ஆனால் மதச்சார்பற்ற
மற்ற கட்சிகளுக்கு கொடி தூக்கியதன் விளைவு கட்சிகள் வெற்றிபெற்றதேத் தவிர,
அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பதே உண்மை
நிலையாக இருந்தது.

இந்தியர்களுடன் தோளோடு தோள் நின்ற காஷ்மீரத்து சிங்கம் ஷேக்அப்துல்லா தேசிய
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வடகோடியாம் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு
தென்கோடியாம் தமிழகத்தில் உள்ள கோடைக்கானல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்றவர்கள் ராஜ பரம்பரையைத் துறந்து, இந்திய
ராணுவத்திற்காக தங்களை அர்பணித்துக் கொண்டார்கள். முஸ்லிம்கள்
புறக்கணிக்கப்பட்டு, சீக்கியர்கள் மற்றும் கூர்க்கா போன்றவர்களுக்கு மாத்திரம்
ராணுவத்தில் தனி மரியாதைச் செலுத்தப்பட்டது. அவர்களுக்கென்று ராணுவத்தில் தனி
பிரிவுகளே உருவாக்கப்பட்டன. கேரள முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று முத்திரைக்
குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டனர். மராத்திய மாநில முஸ்லிம்கள் குடிசைகளில்
தஞ்சம் புகுந்தனர். உத்திரபிரதேசம், பீகார் மற்றும் குஜராத் மாநில முஸ்லிம்கள்
அனைவரும் மதக்கலவரங்களால் மிரட்டப்பட்டு, முடமாக்கப்பட்டனர். இன்னும்
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தலைதூக்க முடியாத அளவுக்கு மிரட்டப்பட்ட
நிலையிலேயே தங்களது வாழ்வைத் தொடர்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள
மாநில முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. இதற்கு காரணம் கேரள மாநிலத்தில்
முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற
அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.

1984 ஆம் ஆண்டு பாரதப்பிரதமர் இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு டெல்லியில்
நடந்த கலவரத்தில் ஏரத்தாள 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். வெறும் 2கோடி
மட்டுமே மக்கள் தொகையினைக் கொண்ட சீக்கியர்களின் அரசியில் பிரிவான அகாலிதளம்
நீதிமன்றத்தில் போராடி கலவரத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அரசு வழங்கிய
நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொடுத்ததோடு மட்டுமின்றி முன்னாள் மத்திய அமைச்சரான
பி. சி. சுக்லா மற்றும் அவரது ஆதரவாளர்களையும் சிறையில் கம்பி எண்ண வைத்தது.
பீவண்டி, மீரட், பகல்பூர், மும்பை, லக்னோ, டெல்லி, குஜராத், கோயம்புத்தூர்
உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரங்களில்
ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள்
சூரையாடப்பட்டன. அரசு பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காதது
மட்டுமில்லாமல், மேற்கூறப்பட்ட இடங்களில் நடைபெற்ற கலவரங்களுக்கு
காரணமானவர்களில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவேயில்லை என்பதே உண்மை நிலை.

மகாத்மா காந்தி பிராமணர்களால் கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தி சீக்கியர்களால் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தி இலங்கையைச் சார்ந்த தமிழ்பேசும் இந்துக்களால் கொல்லப்பட்டார்.

அவர்களெல்லாம் இன்றைக்கு தேசாபிமானிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் எந்த
பாவமும் அறியாத எந்த குற்றமும் செய்யாத, இந்திய அரசியல் பிரிவுச் சட்டம் நமக்கு
வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டவர்களாகிய நாம் தேசிய
எதிரிகளாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளோம். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள்
நிலைமைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, பாகிஸ்தானோடு எந்;த சம்பந்தமும்
இல்லாத ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லிம்களை தண்டிக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால்
பாகிஸ்தான் செய்யும் செயல்பாட்டுக்கு இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எப்படி
பொறுப்பாவார்கள்?

*இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை *

இன்றைய இந்திய முஸ்லிம்கள் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக முற்றிலும்
வலுவிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கென இருந்த அடிப்படை
உரிமைகளைக் கூட கேட்டுப் பெறத் தகுதியில்லாத அளவுக்கு வலுவிழந்து போவதற்கு
முன்னால், முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அணியில் கீழ் ஒன்றுபடுவது இன்றைய
சூழ்நிலையில் மிக மிக அவசியம். மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் மதவாத
கட்சிகளின் வளர்ச்சியை முறியடிக்க வேண்டுமெனில், இந்திய முஸ்லிம்கள் அனைவரும்
ஒரு அணியின் கீழ் ஒன்றுபடுவது அவசியம். ஆனால் நாம் ஒன்றுபடுவதற்கு பதிலாக, சிறு
சிறு கூட்டங்களாக பிரிந்துபோய், சிதறுண்டு கிடக்கும் மதவாத கட்சிகள் ஒன்றுபட்டு
செயல்பட உதவிக்கொண்டிருக்கிறோம். இன்னும் காலம் கடந்து செல்லும் முன்பு
இந்தியாவின் இன்றைய சூழ்நிலையிலாவது முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியின் கீழ் ஒன்று
படுவோம்.

சிறுபான்மையினமான முஸ்லிம்களின் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக இந்தியாவில்
உள்ள அனைத்து அரசியில் கட்சிகளும் முஸ்லிம்களுக்கான நலன் தரும் திட்டங்களை
தேர்தல் கால வாக்குறுதிகளாக வழங்குகின்றன. ஆனால் தேர்தலில் முஸ்லிம்கள் அளித்த
வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற பின்பு, முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வேலையே
தொடர்ந்து செய்து வருகின்றன இந்திய அரசியில் கட்சிகள். தேர்தலுக்கு முன்பு
முஸ்லிம்களின் நலன் காக்கும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ சென்ற பிறகு
தங்களது சொந்த நலனுக்கு பயன்தரும் திட்டங்களுக்கு மாத்திரமே
தலைசாய்க்கிறார்கள். இவைகளையெல்லாம் சிந்தித்து கொண்டிருப்பதைவிட நமக்கென்று
ஒரு தனி அமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே சாலச்
சிறந்தது.

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிய அரசியல் அமைப்புகள்
பிற அரசியில் கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி முஸ்லிம் வாக்கு வங்கிகள் அதிகமாக
இருக்கின்ற ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. தொகுதிகளை ஒதுக்கும்
அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப்
போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில் முஸ்லிம்களுக்கு தொகுதிகளை
வழங்கும் இக்கட்சிகள் செய்யும் இச்செயல் முஸ்லிம்களுக்கு செய்யும் நன்மையான
காரியமா என்றால் இல்லை. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில்
வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதேத் தவிர, முஸ்லிம்களுக்கு
நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை.

எந்த அரசியில் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை அவர் முஸ்லிம்
என்கிற காரணத்தால் மாத்திரம் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து
வெற்றிபெறச் செய்வோம் எனில், சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் இதுபோன்ற
முஸ்லிம் உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம்
சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து அல்லது பதவியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ
என்கிற பயத்தின் காரணத்தால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத
சூழ்நிலை. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகளை சட்டசபைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ
தேர்ந்தெடுத்து அனுப்புவதால் உள்ள பயன்தான் என்ன? இதுபோன்ற முஸ்லிம்
அரசியில்வாதிகள் அவைகளில் பேச அனுமதிக்காத, தம்மை மதிக்காத அரசியல் கட்சிகளில்
ஏன் இருக்கிறார்கள்? இதுபோன்ற பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும்
ஒன்றே. அதில் எந்த வித்தியாசமும் இல்லை.

முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில்
கட்சிகளும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை வேட்பாளர்களாக நிறுத்தும். இவ்வாறு
முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் பயன் உண்டா
என்றால் இல்லை. முஸ்லிம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால் மாத்திரமே
இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்பதை அறிந்திருக்கும் அவர்கள் தங்களது
சுயநலம் கருதி இச்செயலை செய்கிறார்களேத் தவிர, வேறில்லை. முஸ்லிம்கள்
வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என
கண்கூடாகத்தெரியும் இது போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனவைரும் ஒன்றுகூடி ஒரு
பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது?

எனதருமை முஸ்லிம்களே! மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்திய முஸ்லிம்களை அடக்கி
ஒடுக்கி ஓரங்கட்டியதேத் தவிர, வேறு சாதித்தது என்ன? முஸ்லிம்கள் அடக்கப்பட்டு,
ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டாலும், சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்திய
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆதரவு யாருக்காக?
எதற்காக? என்பது இவ்வாறு ஆதரவு அளிப்பவர்களுக்கே வெளிச்சம். திறந்த மனதுடன்,
சார்பற்ற நிலையில் உங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்தி இந்திய முஸ்லிம்களின்
இன்றைய நிலை குறித்து சற்றே சிந்தனை செய்து பாருங்கள். இந்திய முஸ்லிம்களின்
பிரச்னைகளுக்கு உண்டான தீர்வு தெளிவாகக் தெரியவரும்.

1. இதற்கான தீர்வுதான் என்ன?

2. இந்த தவறான அச்சுறுத்தலுக்கான தீர்வுதான் என்ன?

3. நாம் இழந்த உரிமைகளை மீண்டும் திரும்பப் பெறுவது எப்படி?

இந்திய மக்கள் தொகையில் 30கோடி பேர் முஸ்லிம்களாக இருந்தாலும்,
நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெறும் 10க்கு மேல்
ஒருபோதும் இருந்ததில்லையே. ஏன்?

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு மாத்திரம் வாக்களிப்போம் எனில்,
நிச்சயமாக இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நமக்குள்ளேயே பல
பிரிவுகளாக பிரிந்து, இந்திய அரசியல் கட்சிகளில் பல கட்சிகளுக்கும்
வாக்களிப்பதால் நம்முடைய வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டு, நமக்குள்ளேயே
வலுவிழந்து போகிறோம். இதற்கு உதாரணமாக சீக்கியர்களை (ஒருசில தனி நபர்களைத்
தவிர) எடுத்துக் கொள்வோம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் மாத்திரம்
இருக்கும் சீக்கியர்கள், இந்திய அரசியலில் கோலோச்ச முடியும் என்றால் இந்திய
மக்கள் தொகையில் 25 சதவீதம் இருக்கும் நாம் ஏன் மற்றவர்களிடம் மண்டியிட
வேண்டும்? இது ஏனென்றால் நாம் நமக்குள்ளேயே ஒற்றமையின்றி பல பிரிவுகளாக
பிரிந்து, தலா 1 சதவீதம் வீதம் இந்திய அரசியல் கட்சிகள் 25க்கும்
வாக்களிப்பதால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவிகிதம் உள்ள நம்முடைய பலம் 1
சதவிகிதமாக வலுவிழந்து விடுகிறது. ஏதேனும் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று
ஆட்சிக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் நம்முடைய பலம் வெறும் 1 சதவிகிதமாகவே
பிரதிபலிக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25 சதவீதம் இருக்கும் நம்முடைய பலம்
ஆட்சி மன்றம் என்று வரும்போது வெறும் 1 சதவிகிதம் மட்டும்தான்
பிரதிபலிக்கப்படுகிறது என்பதை எண்ணி நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இந்நிலையைக் காணும் முழு உலகமும் நம்மைப் பார்த்து நகைப்பது நம் காதுகளில்
ரீங்காரமிடுகிறது. மதச்சார்பற்ற இந்திய அரசியல் கட்சிகளின் பிரித்தாளும்
சூட்சிக்கு முஸ்லிம்களாகிய நாம் பலிகிடாவாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை
சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம், தமிழகத்தில் உள்ள திமுக, திரிணாமுல்
காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் தங்களது ஆதரவு இன்றி
மத்தியில் எந்த ஒரு ஆட்சியும் அமைய முடியாது என்பதை தெளிவாகத் தெரிந்து
வைத்திருக்கின்றன. காங்கிரஸும், பிஜேபியும், மத்தியில் ஆட்சி அமைக்க
வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட மாநில கட்சிகளின் காலடியில் வந்து விழுந்து
கிடக்கின்றன. தெலுங்கு தேசம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம்
உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் முன்னால்
தங்களுக்குத் தேவையானவைகள் கொடுக்கப்பட வேண்டும், இல்லையெனில் ஆதரவு திரும்பப்
பெறப்படும் என்பதை நிபந்தனையாக வைத்து தாங்கள் நினைப்பதைச் சாதித்துக்
கொள்கின்றன. இதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு இருக்கும்
பிரதிநிதிகளின் எண்ணிக்கை. இதே நிலையை நாம் மேற்கொள்ள முடியுமா? நிச்சயமாக
முடியும். நமக்கென்று ஒரு தனி அமைப்பு கண்டு, அந்த அமைப்பின் மூலமாக மக்கள்
பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பினால் நாமும் நம்முடைய
முக்கிய பிரச்னைகளுக்கான தீர்;வுகளை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக
பாதுகாப்பு, சமநீதி, சட்ட உரிமை, இடஒதுக்கீடு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட
முஸ்லிம்களுக்கான நிவாரண உதவி போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

தமிழகத்தில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நடத்தப்பட்ட வகுப்பு
கலவரத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் இந்து தீவரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
அக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் எவருக்கும் இதுவரை அரசுத்
தரப்பிலிருந்து எந்த ஒரு உதவித் தொகையும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்கு
முன்னால் அதே கோவை மாநகரில் நடைபெற்ற வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட
இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் வீதம் அரசுத் தரப்பிலிருந்து உதவித்
தொகை வழங்கப்பட்டது. ஏன் இந்த பாரபட்சம்? நம்முடைய உரிமையை சட்டசபையில்
எடுத்துரைக்க சரியான பிரதிநிதித்துவம் நம்மிடையே இல்லாததே காரணம். ஆனால்
அதேசமயம் இந்து மக்களின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கையை சட்டசபையில்
எடுத்துரைத்தனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், அரசுக்கு
அளித்து வரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்ற எச்சரிக்கை வேறு. ஆட்சி
கவிந்துவிடும் என்று அச்சம் கொண்ட அரசு, இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1
இலட்சம் என உதவித் தொகை வழங்கியது.

இந்திய முஸ்லிம்களுக்கென தனியாக ஒரு அரசியல் அமைப்பு காண்பது இவ்வேளையில்
மிகவும் அவசியமாகிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின்
ஆதரவு இல்லையென்றால், மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முடியாது
என்கிற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாக்கப்பட முற்றிலும்
அவசியம் முஸ்லிம்களிடையே ஒற்றுமை. சமுதாய நலனை கருத்தில் கொண்டு நாம்
விடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கும் கட்சிக்கு மத்தியிலும்
மாநிலத்திலும் ஆட்சி அமைக்க நம்முடைய ஆதரவை வழங்கலாம். நமக்கென்று ஒரு தனி
அரசியல் அமைப்பு இருந்திருந்தால், இன்றைக்கு முஸ்லிம்களாகிய நாம் அனுபவிக்கும்;
இந்த சித்திவதைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. நாட்டை ஆள
வேண்டுமெனில் முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்ற நோக்கத்திற்காவது, ஆளும்
கட்சிகள் நம்மை சிறப்பாக நடத்தியிருக்கும்.

இழைக்கப்படும் கொடுமைகளையும், நடத்தப்படும் சித்திரவதைகளையும் தாங்கிக் கொள்ள
வேண்டிய அவசியம் என்ன? இதற்கான சரியான தீர்வு இல்லையா? அல்லது நேரான வழிகாட்ட
சரியான தலைமை இல்லையா? மத்திய மற்றும் மாநில அரசை எதிர்த்து நடத்தப்படும் கண்டன
ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் - கண்டன ஊர்வலங்களும்
செவிடன் காதில் ஊதிய சங்காக மாறும். எப்போதும்போல் முஸ்லிம்கள் அடக்கப்பட்டு,
ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்படுவர் என்பது நிச்சயம்.

*பிரச்னைகளுக்கான தீர்வும் அடுத்த கட்ட நடவடிக்கையும் *

நாம், நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும். அதற்குரிய சரியான வழிமுறை என்ன?
இக்கேள்விக்கான விடையை கண்டறிய பல நாட்களாக சிந்தித்து, ஆய்வு செய்து, அறிந்த
விதத்தில் கிடைத்த தீர்வுகள் இரண்டுதான்.

1. அறிவு

2. ஆயுதம்

ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி பெற்ற வரலாறு உலகில் ஒரு சில நாடுகளில்
சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தாலேயே அழிவார்கள்
என்பது நிச்சயம். இன்றைய சூழ்நிலையில் ஆயுதம் ஏந்தி போராடி கிடைக்க வேண்டிய
உரிமையைப் பெற்றுக் கொள்வது என்பது சாத்தியக்கூறானது அல்ல. ஆசியாவிலேயே அதிநவீன
ஆயுதங்களைக் கொண்டிருந்த சீக்கியர்கள், ஆயுதப் போராட்டத்தில் தோல்வியடைந்ததை
இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக அறிவு
என்னும் ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். பிளவுபட்டிருந்த சீக்கியர்கள் அனைவரும்
ஒன்றிணைந்தார்கள். தமக்கென ஒரு அரசியல் இயக்கம் கண்டார்கள். தமக்காக
சட்டசபையிலும், நாடாளு மன்றத்திலும் வாதாடக்கூடிய பிரதிநிதிகளைத்
தேர்ந்தெடுத்தார்கள். எல்லா பிரதான அரசியல் கட்சிகளையும் தங்கள் பின்னால்
ஓடிவரச் செய்தார்கள். ஆயுதங்களால் வெல்ல முடியாத காரியங்களை உயர்
மதிநுட்பத்தால் வெற்றி கொள்கிறார்கள்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் மதவாதம் பேசித் திரிந்த பால் தாக்கரே போன்றவர்கள் பல
பேர் கொல்லப்பட காரணமாக இருந்தாலும், மத்திய மாநில அரசுகள் பால் தாக்கரே மீது
கைவைக்க தயங்குகின்றன. காரணம் பால் தாக்கரே போன்றோர் அறிவு என்றும் ஆயுதம்
ஏந்தி மராத்திய மண்ணின் மைந்தர்களை ஒன்றிணைத்து, பல சட்டசபை மற்றும் நாடாளுமன்ற
பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டு, கோரிக்கைகள் மூலம் இவ்வுலகில் அவர்களுக்குத்
தேவையானதை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இந்திய முஸ்லிம்கள் அனவைரும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைவது. நமக்கென ஒரு தனி
அரசியல் அமைப்பு காண்பது. கண்ட அரசியல் அமைப்பின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு
நமக்கென நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் என பிரதிநிதிகளை
தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பது. இறைவனின் நாட்டத்தில் இந்திய முஸ்லிம்களின்
முயற்சியில் மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால்
இந்திய முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்.

*இந்தியாவில் முஸ்லிம்களின் பலம் *

மாநிலத்திற்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர் என்று கணக்கிட்டால் கூட இந்தியாவில்
உள்ள 30 மாநிலங்களில் 90 நாடாளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக
அனுப்பி வைக்க முடியும். இது பற்றி ஆழ்ந்து சிந்தித்து தலைமையேற்று
நடைமுறைப்படுத்தி நடத்திச் செல்ல யார் தயாராக இருக்கிறார்கள்?

*இந்திய முஸ்லிம்களுக்கு தமிழக முஸ்லிம்கள் வழிகாட்டட்டும் *

இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம்
வழிகாட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில்
மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும்
உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து
நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும்
ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு
வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.

*தமிழக முஸ்லிம்களின் பலம் *

தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத்
தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம்
வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம்
முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம்
வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த
சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம்
வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட
முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.
அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:

1. நன்னிலம்

2. கடலாடி

3. கேயம்புத்தூர் மேற்கு

4. மதுரை மத்தி

5. திருச்சி

6. சேலம்

7. அரவக்குறிச்சி

8. குடியாத்தம்

9. ராணிப்பேட்டை

10. ஆற்காடு

11. சென்னை துரைமுகம்

12. சேப்பாக்கம்

13. ஆயிரம் விளக்கு

14. திருவல்லிக்கேணி

15. எக்மோர்

16. சென்னை பூங்காநகர்

17. ராயபுரம்

18. திண்டுக்கல்

19. நத்தம்

20. பெரியகுளம்

21. பாளையங்கோட்டை

22. திருச்செந்தூர்.

இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான
முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும்
அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே
குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு
வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 45-55 சட்டமன்றத் தொகுதிகளிலும்,
4-6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக்
கூறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன்,
தமிழக அரசியலைப் பொறுத்தவரை நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும்
உருவாக்க முடியும்.

தமிழகத்தின் 6 மாநகராட்சிகளில் முஸ்லிம்களே மேயர்கள் என்பதையும் உறுதியாகக்
கொள்ளலாம். சென்னையைத் தவிர தமிழத்தில் மற்றுமுள்ள மாநகராட்சிகளில் ஒன்றரை
இலட்சம் வாக்குகள் பெறுபவரே மேயர். மதுரை, திருச்சி மற்றும் கோவை மாநகராட்சிகள்
3 இலட்சம் முஸ்லிம் வாக்களர்களைக் கொண்டவை. சேலம் மற்றும் நெல்லை
மாநகாராட்சிகள் இரண்டரை லட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.

சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது
வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக
சட்சடசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை
ஏற்படும். முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட
முடியாது என்கிற நிலையை தமிழக சட்டசபையிலும் உருவாக்கமுடியும். தமிழகத்தில்
மட்டுமில்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என இந்தியாவின்
பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும் இந்நிலையே உருவாகும். இதே
நிலை தொடருமெனில் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை
பெரும்பான்மை நிலைக்கு உயரும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 முதல் 800 பள்ளிவாயில்களை
ஒன்றிணைப்பது மிகவும் எளிதான காரியம். தமிழகத்தில் உள்ள 8000 பள்ளிவாயில்களைச்
சார்ந்த 1ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில்,
நாம் நினைக்கும் எதையும் சாதிப்பது எளிது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர
வேண்டும். இது நேர்த்தியான, அதேசமயம் யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாத
அமைதியான முடிவு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். தமிழகம்
மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும்
ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கு இதைத்தவிர ஒரு சரியான தீர்வு
இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் இன்றி
இந்த பூமியில் நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பது உறுதி.

இதுபோன்ற பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய
வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை
உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா? தேர்தல்
காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்
என வேண்டுகோள் வைக்கிறோமே. ஏன்? முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கே
வாக்களிக்கட்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பின்புள்ள நிலைமையை
ஆய்ந்தறிந்து, முஸ்லிம்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களுக்கு நம்முடைய ஆதரவை
வழங்கலாம். மானம் மற்றும் சுயமரியாதை ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள்
அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையை மீண்டும் மீண்டும் படியுங்கள். முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாத
எந்த ஒரு அரசியல் கட்சியையும் நம்பாதீர்கள். முஸ்லிம்களே! அனைவரும் ஒரே
குடையின் கீழ் ஒன்றிணைவோம். நமது ஒற்றுமையின் மூலம் நாம் விரும்பியவைகளை
உடனடியாகப் பெற முடியும். இந்த முடிவை சிந்தித்து செயல்படுத்துவது
முஸ்லிம்களாகிய நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும்
ஒன்றிணைவோம். நம் அன்றாட வாழ்க்கை எளிதாக அமையும். நாம் நமது அடிப்படை உரிமையான
இறைவழிபாட்டு உரிமைகளை தங்கு தடையின்றி தொடரலாம். நம் வருங்கால தலைமுறையும்
பாதுகாப்பான வாழ்வைத் தொடரும்.

தேர்தலில் நாம் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் எனில் நஷ்டம் நமக்குத்தான்.
ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஏராளமான
மாற்றங்களை கொண்டுவரும். அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மில் சிலர்
வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் ஏற்படும் நஷ்டம் நமக்கே!
மற்ற அரசியல் கட்சிகள் நம்மை எள்ளி நகையாடுவதுடன், அதிக பயனடைவது அவர்களே
என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனதருமை முஸ்லிம் சொந்தங்களே! நமக்கென ஒரு தனி
அரசியல் அமைப்பு காண்பதும், அந்த அமைப்பின் மூலம் நமக்காக பாடுபடக்கூடிய
முஸ்லிம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து
அனுப்புவதுமே இனி நம்முடைய தலையாய பணியாக இருக்க வேண்டும்.

நாளைய உலகம் நம் கையில் என்பதை தெளிவாக தெரிந்த நாம், மரணித்த பிணம் போல் நடமாட
வேண்டுமா?

நாம் நம்முடைய குறிக்கோளில் தெளிவாக இருப்போம். அனைத்து அரசியல் கட்சிகளையும்
நம் பின்னால் கைகட்டி நிற்க வைப்போம். அமைதியாக நாம் நம்முடைய குறிக்கோளை
எட்டுவோம். நமது உறுதிமொழி நம் வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமைக்கு
அடிப்படையாக அமையட்டும். எந்த காரணம் கொண்டும் முஸ்லிம்களின் ஒற்றுமை என்னும்
அடிப்படை குறிக்கோளை விட்டு நம் கவனம் சிதறாமல் இருக்கட்டும். *எல்லாம் வல்ல
அல்லாஹ் இதற்கு அருள் புரியட்டும்!*
**
**


என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
*அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.*

Thursday, January 27, 2011

காவிக் கொடியவர்களின் கையில் சிக்கிய தேசியக்கொடி!!!

பாலைவனத் தூு
இந்திய
இராணுவத்தின் அத்துமீறல்களை, படுகொலைகளை எதிர்த்து சுதந்திரத்திற்காக ஆண்கள்,
பெண்கள் மற்றும் சிறார்கள் அனைவரும் இரத்தம் சிந்தி போராடும் கஷ்மீரிகளின்
உணர்வுகளை புண்படுத்துவதற்காக திட்டமிட்டு பாசிச பா.ஜ.க சங்பரிவார தொண்டர்களை
திரட்டிக்கொண்டு ஸ்ரீநகர் சென்று குடியரசு தினத்தன்று (இன்று,26,ஜனவரி.2011)
தேசியக்கொடியை ஏற்றப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து கஷ்மீரில் பதட்டம்
நிலவுகிறது.

தேசப்பற்று, தேசியக்கொடி என்ற பெயரில் மீண்டும் சங்பரிவார் கும்பல்கள் இந்திய
சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை பெரும்பான்மை மக்களிடம் விதைக்க
ஆரம்பித்துள்ளது.

*கொடி பிடிக்க காரணமென்ன ?*
அஜ்மீர், மாலேகான் மற்றும் மக்கா மஸ்ஜித்களில் வெடிகுண்டு வைத்து பலரின்
உயிரிழப்புக்கு காரணமானது சங்பரிவார்தான் என்று பட்டவர்த்தனமாக அவர்களின்
முகமூடி கழற்றியெறியப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் இச்சூழ்நிலையில்
பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தேசப்பற்று என்ற மற்றொரு
முகமூடியணிந்து வந்திருக்கிறது சங்பரிவார்.

பா.ஜ.க தலைமையிலான அந்த மதவெறி சக்திகள் இன்று (26,ஜனவரி.2011) காஷ்மீர்
ஸ்ரீநகரில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்து
பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

காக்காய் பிடிப்பதில் வல்லர்களான 'காவி' வந்தேறிகள் ஆங்கில 'வந்தேறிகளோடு'
கைக்கோர்த்து பிரிட்டிஷ் ஆண்டைகளின் அடிமைகளாக செயல்பட்ட இவர்களால் 'மூவர்ண
தேசியக் கொடி' சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒருபொழுதும் பிடிக்கப்பட்டதே
இல்லை.

ஒட்டு மொத்த இந்தியாவே ஆங்கிலேய அரசை எதிர்த்த போது இவர்கள் மட்டும்
பிரிட்டிஷாருக்கு வக்காலத்து வாங்கி ஒத்து ஊதினர் என்பது வரலாறு.

இந்திய தேசியக் கொடியை கையிழேந்தும் அருகதை சங்பரிவாரத்திற்கு உள்ளதா? என்று
வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே காவிக் கொடியை தவிர வேறொன்றும் பிடிக்காத
கயவர்களுக்கு மூவர்ணக் கொடி அறவே பிடிக்காது.

சங்பரிவாரின் ஆங்கில ஊதுகுழலான ஆர்கனைசர் (ஜூலை 17, 1947) இதழில், சுதந்திர
இந்தியாவின் தேசியக் கொடியாக 'மூவர்ண கொடியை' தேர்ந்தெடுத்தது பற்றி மிகவும்
வருந்தியும் காவிக் கொடிதான் தேர்ந்தெடுக்கபட்டிருக்க வேண்டும் என்றும் முகப்பு
கட்டுரை வடித்தது.

ஆகஸ்ட் 14 (1947) அன்று எழுதிய மற்றொரு முகப்பு கட்டுரையில் 'மூவர்ணக் கொடியை'
பற்றி மிகவும் இழிவாக 'மூன்று என்ற எண்ணே அபசகுனமானது அதனால் மூன்று வர்ணங்களை
கொண்ட தேசியக்கொடி பாரதமாதாவிற்கு கேடு விளைவிக்கும்' என்று பூச்சாண்டி காட்டி
காவிக் கொடியை தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டுமென்று பலமுறை முயன்று தோற்றது.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு வெளியான கோல்வால்க்கரின் 'சிந்தனை கொத்துக்கள்'
என்ற நூலில்கூட தேசியக் கொடியை விமர்சித்து காவிக் கொடியை புகழ்ந்து,
இந்தியாவில் வசிக்கும் அனைவரும் ஒருநாள் காவிக்கொடி முன் தலைவணங்க வேண்டிய நிலை
உருவாகும் என்று எழுதியிருந்தது.

சங்பரிவாரம் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மூவர்ணக் கொடிக்கு இன்று வரை
இடமே கிடையாது. அதன் தலைமையகமான நாக்பூர் அலுவலகத்திலோ அல்லது அது 'ஷாகா'
பயிற்சி நடத்தும் மைதானங்களிலோ தேசியக் கொடியை பறக்கவிட்டதே இல்லை. ஆனால்
எப்பொழுதெல்லாம் இந்திய முஸ்லிம்களை சீண்டி மதக்கலவரம் உருவாக்க வேண்டும் என்று
நினைக்கிறதோ அப்பொழுது மட்டுமே சங்பரிவாரின் கண்களுக்கு மூவர்ண தேசியக்கொடி
தென்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜோசியத்தை பள்ளிக் கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும்
என்று முன்மொழிந்த முரளிமனோகர் ஜோஷீ தலைமையில் ஸ்ரீநகர் லால்சௌக்கிலும்,
உமாபாரதி தலைமையில் கர்நாடக ஈத்கா மைதானத்தில் தேசிய கொடியேற்றி கலவரம்
விளைவிக்க முயன்றனர்.

ஹிந்துக்களுக்கு மதவெறி ஊட்ட காவிக் கொடியையும் முஸ்லிம்களின் மீது தாக்குதல்
நடத்த மூவர்ணக் கொடியையும் சந்தர்பத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தி
வந்திருக்கிறது.

பாப்ரி பள்ளிவாசலை இடிப்பதற்காக அதன் மண்டபங்களின் மீது ஏறிய ஹிந்து
வன்முறைகும்பலின் கையில் 'காவி' கொடி இருந்ததை நாமெல்லாம் மறந்திருக்க
முடியாது.

ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றப்போகிற சாக்கிலே கலவரம் விளைவித்து மத
நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்க முயலும் காவி பச்சோந்திகள் சட்டத்தை சந்திக்க
திராணியில்லாது தாங்கள் செய்த 'காலித் தனத்துக்கு' மூவர்ணம் பூசி தப்பிக்க
முயற்சிக்கிறார்கள்.

அரசியல் ஆதாயம் தேடும் இவர்களின் ஈனச் செயலை இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை
கொண்டவர்கள் மக்களுக்கு தோலுரித்து காட்டவேண்டும்.
பிறைநதிபுரத்தான்
**


என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
*அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.*

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

*அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம் *

[image: அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்]
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும்
அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில்
பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும்
சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள்
வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல்
போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ்
எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச்
சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண்
ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு
வந்தால் சீதப்பேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர்,
இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில்
வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள்
செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால்
சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி
உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்
மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.


http://www.maalaimalar.com/2011/01/12104038/used-banana.html

Wednesday, January 26, 2011

Scholarship from TN Govt - முஸ்லிம்களுக்கு அரசின் கல்வி உதவி! தவற விடாதீர்!!

முஸ்லிம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்!
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான
2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .
இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
1 - 10 வகுப்பு வரை
தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது
பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு
தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல் நகல் (xerox)
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து
பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள
(prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை
பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க
தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal
form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட
நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்
11, 12 , ITI, டிப்ளமோ, ஆசிரியர் பயிற்சி, பட்ட படிப்பு, பட்ட
மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு (Ph.D)

தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு
தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து
பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து
அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள
(prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை
பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க
தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form)
(prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை
பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட
நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்
தொழிற்படிப்புகள் ( Engineering )
தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு
கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design
managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology
ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி
வழங்கப்படும்
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு
தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து
பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து
அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26
கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள
(MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க
தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி
செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட
நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் :
http://www.tn. gov.in/bcmbcmw/ welfschemes_ minorities. htm

துரோகம்:கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்ட ஃபலஸ்தீன் அரசு - அம்பலப்படுத்தும் அல்ஜஸீரா!!!

தோஹா,ஜன.25:முஸ்லிம்களின் புண்ணிய நகரமான பைத்துல் முகத்தஸ் என்றழைக்கப்படும்
மஸ்ஜிதுல் அக்ஸா நிலைப்பெற்றிருக்கும் கிழக்கு ஜெருசலத்தில் பெரும்பாலான
பகுதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஃபலஸ்தீன் அரசு ஒப்புக்கொண்டது என்ற தகவல்
வெளியாகியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையின் போது ஃபலஸ்தீன் அரசு இந்த
வாக்குறுதியை இஸ்ரேலுக்கு அளித்தது என அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி
கூறுகிறது.

ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் ஸஈப் எரகாத் அன்றைய இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்
சிபி லிவ்னி, அன்றைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் காண்டலிசா ரைஸ், முன்னாள்
ஃபலஸ்தீன் பிரதமர் அஹ்மத் க்வரியா ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தையின்
போதுதான் ஃபலஸ்தீன் மக்களின் விருப்பங்களுக்கு மாற்றமான முறையில் இஸ்ரேலுக்கு
அடிபணியும் விதமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி
வெளியிட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

"யூத வரலாற்றில் மிகப்பெரிய ஜெருசலத்தை உங்களுக்கு தருவதாக நாங்கள்
வாக்குறுதியளிக்கிறோம்"- இது எரகாத் லிவ்னியிடம் கூறிய வார்த்தைகள்.

1967-ஆம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேல் சட்டத்திற்கு புறம்பாக அபகரித்து பின்னர்
தொடர்ந்து குடியேற்றங்களை கட்டிவந்த ஜெருசலத்தில் ஒரு பகுதியைத் தவிர இதர
பகுதிகள் அனைத்தையும் இஸ்ரேலுக்கு தாரை வார்ப்பதாக இந்த ஒப்பந்தத்தில்
முடிவெடுக்கப்பட்டது.

ஜபல் அபூ கனீம் என்ற பகுதியை மட்டும்தான் ஃபலஸ்தீன் அரசு கோரியுள்ளது.

1948-49 போர்காலத்தில் அகதிகளை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வது தொடர்பானது இரண்டாவது
ஒப்பந்தம். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் ஃபலஸ்தீனர்கள் வீதம் 10 வருடங்களில் ஒரு
லட்சம் பேரை ஏற்றுக்கொள்கிறோம் என இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஆனால், போர்
காலக்கட்டத்தில் இஸ்ரேலிலிருந்து வெளியேறியவர்களும், அவர்களின் வாரிசுகளான
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் அகதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரையும்
ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஃபலஸ்தீன் பிரதிநிதிகள் கூறியபொழுதும் அதனை
ஏற்றுக்கொள்ள மறுக்கும்விதமாக ஒப்பந்தம் ஏற்பட்டது.

கடந்த 2000-ஆம் ஆண்டிற்கும், 2010 ஆம் ஆண்டிற்குமிடையே இஸ்ரேல், ஃபலஸ்தீன்,
அமெரிக்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் 16,076 ஆவணங்கள் அல்ஜஸீராவுக்கு
கிடைத்துள்ளன. நான்கு பகுதிகள் அடங்கிய இதன் ஒரு பகுதி மட்டும்தான் அல்ஜஸீரா
நேற்று முன்தினம் வெளியிட்டது. மீதமுள்ள பகுதிகள் வருகிற நாட்களில் வெளியாகும்.

ஆனால், அல்ஜஸீரா வெளியிட்ட ஆவணங்கள் குறித்து மறுப்பு தெரிவிக்கிறார் எரகாத்.
நாங்கள் ஒன்றையும் மறைக்கவில்லை எனவும், இதில் பெரும்பாலும்
இட்டுக்கட்டப்பட்டது எனவும் அவர் தெரிவிக்கிறார். இது ஃபலஸ்தீன் அரசுக்கெதிரான
சதித்திட்டம் என அஹ்மத் க்வரியா தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடன் நடத்திய அனைத்து
பேச்சுவார்த்தைகள் குறித்தும் அரபுலீக்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக
ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவிக்கிறார்.

2008 ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தை காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
மூலம் தோல்வியை சந்தித்தது. தாக்குதல் நடத்தும் விபரத்தை இஸ்ரேல் முன்னரே
மஹ்மூத் அப்பாசுக்கு தெரிவித்திருந்ததாகவும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை நடந்த விபரத்தை அன்றைய இஸ்ரேல் பிரதமர் எஹூத் ஒல்மர்ட்
உறுதிச்செய்துள்ளார்.

ஃபலஸ்தீன் மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அப்பாஸும் அவருடைய கூட்டாளிகளும்
இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதற்கான ஆதாரம்தான் இவை என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஸமி
அபூஸுஹ்ரி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Tuesday, January 25, 2011

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் குற்றங்களுக்கு பலிகடாவான முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கு தயாராகும் மத்திய அரசு!!!

*அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....*
**
**
*ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் குற்றங்களுக்கு பலிகடாவான முஸ்லிம்
சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கு தயாராகும் மத்திய அரசு!!!*
பாலைவனத் தூது
புதுடெல்லி,ஜன.24:இந்தியாவில் நடந்தேறிய பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் காரணம் என்பது நிரூபணமாகிவிட்ட சூழலில்
ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளின் குற்றங்களுக்கு
பலிகடாவாகி பல்வேறு கொடுமைகளையும், சித்திரவதைகளையும் அனுபவித்து சிறைக்
கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வுக்கான
நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் பயங்கரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு நிரபராதிகளாக நிரூபிக்கப்பட்ட
அனைத்து முஸ்லிம் இளைஞர்களுக்கும் தேவையான அனைத்து சட்டரீதியான,
பொருளாதரீதியிலான உதவிகள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அப்பாவிகளான முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்து, அவர்கள் மீதான
வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ போன்ற சமுதாய அமைப்புகள் மற்றும் சில
அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய மலேகான், அஜ்மீர் தர்கா, சம்ஜோதா
எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் ஆகிய குண்டுவெடிப்புகளில் நிரபராதிகளான
அப்பாவி முஸ்லிம்கள் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களில்
பெரும்பாலோருக்கு இதுவரை ஜாமீன் கூட கிடைக்கவில்லை. 50-க்கும் மேற்பட்ட
முஸ்லிம்கள் இத்தகைய குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக
அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கடுமையான சித்திரவதைக்கு
ஆளாக்கப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைமையில் சனாதன் சன்ஸ்தா, அபினவ் பாரத்
போன்ற பயங்கரவாத அமைப்புகள் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு
லஷ்கர்-இ-தய்யிபா, இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு(சிமி), ஹர்கதுல் ஜிஹாத் அல்
இஸ்லாமி போன்ற தடைச் செய்யப்பட்ட இயக்கங்கள் மீது குற்றம் சும்த்தப்பட்டன.
பின்னர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் செயல்பட்டது ஹிந்துத்துவா
அமைப்புகள்தான் என்பது ஹேமந்த் கர்காரே நடத்திய மலேகான் குண்டுவெடிப்பு
வழக்கிலும், தற்போது ராஜஸ்தான் ஏ.டி.எஸ், சி.பி.ஐ, என்.ஐ.ஏ போன்ற புலனாய்வு
ஏஜன்சிகள் நடத்திய விசாரணையிலும் தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி
அஸிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் இதனை ஒப்புக்கொண்டுள்ளான்.

இந்நிலையில் பொய்வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான அனைத்து முஸ்லிம்
இளைஞர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சி.பி.எம் கட்சி கோரிக்கை
விடுத்துள்ளது.

மேலும் கூடுதலான குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு
தொடர்பிருப்பது அஸிமானந்தாவின் வாக்குமூலத்தில் தெரியவந்ததாக சி.பி.எம்
பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதிய
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?

அண்மையில் Mobile Number Portability எனும் வசதி TRAI கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு
ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.

*STEP 1: *

முதலில் நீங்கள் UPC (Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு
PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல் (SMS) அனுப்ப வேண்டும்.

*STEP 2:*

இப்போது உங்களுக்கு 1901 எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த
எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.

*STEP 3:*

தங்கள் அருகாமையில் இருக்கும் எந்த ஒரு புதிய மொபைல் சேவை நிறுவன மையம் உள்ளதோ
(நீங்கள் விரும்பும் ஏதேனும் Ex: Airtel, Vodafone, Docomo, Reliance) அங்கு
செல்லவும்.

*STEP 4:*

அவர்கள் தரும் சேவை மாற்று படிவத்தில் பின் வரும் தகவல்களைக் கொடுக்கவும்.

தற்போதைய மொபைல் எண்.

தற்போதைய மொபைல் சேவை நிறுவனம்.

UPC code

*STEP 5:*

தங்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று, சுய கையோப்பமிட்ட புகைப்படம் மற்றும்
கடந்த மாதத்தின் பில் (If it is postpaid). போன்றவற்றையும் கொடுக்கவும்.

*STEP 6:*

அவர்கள் உங்களுக்கு புதிய SIM அட்டை கொடுப்பார்கள். சில நிறுவனம் இந்த புதிய
SIM cardக் கென கட்டணம் கேட்டாலும் கேட்பார்கள். (Rs. 50 to Rs. 100)

*STEP 7:*

உங்களின் புதிய நிறுவனம் பழைய நிறுவனத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி நீங்கள்
கட்சி மாறி விட்டதாக தகவல் கொடுப்பார்கள். நீங்கள் அந்த பழைய SIM கார்டை எந்தத்
தேதி வரை பயன்படுத்தலாம் எனும் தகவலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.

*STEP 8:*

அதே நாள் அல்லது அடுத்த நாள் இரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உங்களின் மொபைல்
சேவை 2 மணி நேரம் தூண்டிக்கப்படும்.

*STEP 9:*

இப்போது நீங்கள் உங்களின் புதிய மொபைல் நிறுவன வாடிக்கையாளராக மாறிவிட்டீர்கள்.

Monday, January 24, 2011

இஸ்லாமும் இந்து மதமும் ஓர் ஒப்பீடு

*இந்து மதம்*

சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப்
பெயர் "ஹிந்து" என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் வடமேற்கு இமயத்தின்
வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர் அழைக்கப்பட்டது எனக்
கூறுகின்றனர்.

முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை
இந்தியாவின் இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை.
இச்செய்தியை மதம் மற்றும் வேதங்கள் பற்றிய என்ஸைக்ளோபீடியா (Encyclopedia)
உறுதி செய்கிறது. ஜவஹர்லால் நேரு தம் நூலகிய டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் பக்கம்
74, 75ல் ஒரு மதம் சாராத ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும்
வார்த்தை இது எனக் குறிப்பிடுகிறார்.

ஹிந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக
ஆகிவிட்டது. சுருக்கமாக இந்தியாவில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த குறிப்பிட்ட
சமுதாயத்தைக் குறிப்பிடும் வார்த்தையே பூகோள ரீதியாக சரியானது.

*ஹிந்துத்துவம் என்றால் என்ன?
*
ஹிந்துத்துவம் என்பது ''ஹிந்து" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஹிந்து என்ற
பெயரை ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் 19ம் நூற்றாண்டில் ஒரு மத நம்பிக்கை
விசுவாசம் கொண்ட மக்களை அழைக்கப் பயன்படுத்தினர். புதிய என்ஸைக்ளோபீடியா
பிரிட்டானிகாவில் 20:581ல் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் (1830) முஸ்லிம்களல்லாத,
கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் நீங்கலாக, உள்ள பிற மக்களை ஹிந்து என
அழைத்தனர்.

மதநம்பிக்கை எண்ணம் ஆகியவற்றின் கூட்டே ஹிந்துத்துவா என நாம் கருதுவது தவறு.
ஏனெனில் ஒரே கலாச்சாரம் மதநம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டமைப்புக்கு எதிராக
இந்த ஹிந்துத்துவம் உள்ளது. இதற்கு என எந்த ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான
வரையரையோ என்று எதுவும் சொந்தமாக இல்லை.

எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள் உள்ளன.
இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லை, வரம்புமில்லை. எனவே இந்து என
தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு எதையும் வணக்க வழிபாடுகள்
புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால்
போதும்.

ஹிந்து அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம் ஒரு சாதாரண தர்மங்களைக் கூறுவது,
என்றென்றும் நிலைத்து நிற்கும் மதம் அல்லது வேத தர்மங்களைக் கூறுவது எனக்
கூறுகின்றனர். ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து மதத்தைப் பின்பற்றுவோர்
''வேதாந்திகள்" ஆவர்.

*இஸ்லாம்-ஒர் அறிமுகம்*

''ஸலாம்" எனும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததுதான் இஸ்லாம். ஸலாம் என்றால்
சாந்தி, அமைதி எனப் பொருள். படைத்த வல்ல இறையோனுக்கு கட்டுப்படுதல் என்று
மற்றொரு பொருளும் உண்டு. முஸ்லிம் என்றால் யார்? யார் அல்லாஹ்வுக்கு
கட்டுப்படுகின்றாரோ அவரே முஸ்லிம்.

*இஸ்லாத்தைப் பற்றித் தவறாகப் புரிந்தோர்*

இஸ்லாம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. அதனை நிறுவியர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என பெரும்பாலோர் புரிந்து வைத்துள்ளனர். உண்மையில்
இஸ்லாம் மனித சமுதாயம் படைக்கப்பட்ட நாளிலிருந்து பூஉலகில் உள்ளது. முஹம்மது
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார். இஸ்லாத்தின் நிறுவனர் முஹமது
நபி(ஸல்) அல்ல. மாறாக இறைவனின் இறுதி நபியும் முத்திரை நபியுமாவார்.

*இந்து* *மத விசுவாசத்தின் தூண்கள்*

இந்து மத விசுவாசத்தின் வரையறைகள் என ஒன்றுமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல
இந்துத்துவத்தின் ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையறைகளோ என்று எதுவுமில்லை.
ஒரு இந்துவாக இருந்தால் இன்னின்ன கட்டாய கடமைகளை, வணக்க வழிபாடுகளை இவ்வாறு
புரிந்தால்தான் ஒரு இந்துவாக முடியும் என்ற ஒரு கட்டுக்கோப்பான பொதுவான
நம்பிக்கை எதுவுமில்லை. ஒரு ஹிந்து தனக்கு திருப்தி அளிக்கும் செயலை
சுதந்திரமாக செய்யலாம். அது அவருக்கு தடுக்கப்பட்டதாகவோ அனுமதிக்கப் பட்தாகவோ,
கட்டாயம் செய்யவேண்டியது. அவ்வாறு செய்யத் தவறினால் அவர் ஒரு இந்துவல்லாதவராகப்
போய்விடுவார் என்ற கெடுபிடியோ எதுவும் இல்லை. ஒருவரை இந்து அல்லாதவர் என்று கூற
மத சடங்கு ஏதேனும் அவர் செய்யாமல் புறக்கனித்துவிட்டார், அதனால் இவர் இந்து
அல்லாதவராக ஆகிவிட்டார் என கூற வியலாது. இருப்பினும் இந்துக்களிடம்
பெரும்பாலும் சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன. அதனை 100 சதவீதம் இந்துக்களும்
ஏற்றுக் கொள்வதில்லை. அதனைப் பின்னர் விவரிப்போம்.

*இந்துத்துவத்தில் கடவுள் கொள்கை*

ஆரியர்களின் மதமே இந்துத்துவம். பொதுவாக ஒரு இந்துவிடம் உங்களின் கடவுள்கள்
எத்தனை? (உங்கள் விசுவாச அடிப்படையில்) என்று வினவினால் சிலர் 3 என்பர், சிலர்
33 என்பர். சிலர் ஆயிரம் என்பர் இன்னும் சிலர் 33 கோடி என்பர். கற்றறிந்த இந்து
ஆன்மீகத் தலைவரிடம் (வேதங்களை, புராணங்களை) இதுபற்றி வினவினால் கடவுள் ஒருவனே
அவரே வணக்க வழிபாடுகளுக்குறியவன் எனப் பதிலளிப்பார்.

*இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கம் உள்ள வேறுபாடுகள்*

இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God's எனக்
கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக்
கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் 's ஆகும்.
இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க
வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன்,
பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான்.
அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான். ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியது,
மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என
ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது
என்பதையும் ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் 's) 's
நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து
மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம்
இதனையே வலியுறுத்துகிறது.

(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான)
ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர
வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை
விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக்
கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்;
''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று
நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

*கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்*

*பகவத் கீதை 7:20*

மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின்
20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி
வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".

*சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.*
**
*உபநிஷங்கள்:*

உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப் பாருங்கள்:

*1. சந்தோக்ய உபநிஷம்

*சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது
காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.

''ஏகம் எவதித்யம்" - ''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"

உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல்
பாகம், பக்கம் 447, 448.

உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி
செய்கிறது

குர்ஆன் கூறுகிறது: (நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன்
112:1

*2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
*
''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" - அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு
அதிபதி யாருமில்லை

''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம்
கரணதி பதியே" - அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர்
எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு
இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம்
745)

குர்ஆன் கூறுகிறது: அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
(குர்ஆன் 112:3)

*3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
*
நதஸ்ய பரதிமா அஸ்தி - அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.

னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத், நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய
நாம மஹத் யஸாஹ் - அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும்
மிகப்பெரிது.

குர்ஆன் கூறுகிறது: அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4),
..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்)
செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

*4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
*
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம் - அவனின்
தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி - அவனை இதயத்தால்
உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

குர்ஆன் கூறுகிறது: பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய
(எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான
ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

*வேதங்களில் இறைக்கோட்பாடு
*
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித
வேதங்களாகும்.

*யஜூர் வேதம் (32:3)
*
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது
வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி
மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே
வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற,
பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய
ஜீவன். 40:8 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை
வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள்
மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம்
சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப்
வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

*அதர்வண வேதம்*

(20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3) 'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா
பெரியவன்

*குர்ஆன்* கூறுகிறது: ...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)

*ரிக் வேதம்* (1:164:46)

மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு
அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல
பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை, சிறப்பை
உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில்
ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.

குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர்
கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை
உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3- ன் கூற்றுப்படி
''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும்,
4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.

*ரிக் வேதம்* (2:2:3) - விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின்
தன்மையைக் கூறுகிறது.

இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர்
கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில்
சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.

குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு
முரணானது.

*ரிக் வேதம்* (8:1:1) - ''மா சிதான்யதியா ஷன்ஸதா" - அவனையன்றி யாரையும்
வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன். (ரிக் வேத சம்ஹிதி
9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

*ரிக் வேதம்* (5:81:1) - படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன். (ரிக்வேத
6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

*குர்ஆன்* கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

*ரிக் வேதம்* (3:34:1) - கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக்
கூறுகிறது.

*குர்ஆன்* கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

*யஜூர்* வேதத்தின் (40:160) - எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப்
போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத
சம்ஹிதி-
ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)

*குர்ஆன்* கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ
எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர்
வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)

*ரிக்* வேதம் (6:45:16) - ''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு
எல்லாபுகழும்.

*இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்
*
''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே,
இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!

ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக்
கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.

*மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS)

இஸ்லாத்தில் மலக்குகள்

*மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால்
படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும்
செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவை.
பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால்
பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.

உதாரணம்:

ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு

மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு

*இந்து மதத்தில் மலக்குகள்
*
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக்
காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக
வழிபடுவதுமுண்டு.

நன்றி: நமக்குள் இஸ்லாம் குழுமம்

----------------

Saturday, January 22, 2011

நீரிழிவு நோய்(DIABETES) அறிந்துகொள்வோம்...

*அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....*
**
*நீரிழிவு நோய்(DIABETES) அறிந்துகொள்வோம்...*


நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ்
கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற
ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreass) என்னும்
சுரப்பி உள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு
குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில்
இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு
அதிகமாகிறது.இது தான் சர்க்கரை நோய், நீரிழிவு நோய், Diabetes என்றெல்லாம்
அழைக்கப்படுகிறது

இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரை இதயம், சிறுநீரகங்கள், கண்கள்,
மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில்
மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்கு
ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை
கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால்
பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

*நீரிழிவின் வகைகள்*

- டைப் 1 டயாபிடிஸ் (Type 1 diabetes)
- டைப் 2 டாயாபிடிஸ் (Type 2 diabetes)
- ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes)

*டைப் I **நீரழிவு நோய்** *


இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ்
(இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு
செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச்
சார்ந்தவர்கள். எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள்
கணையத்தின் (pancreas) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது.
நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை
இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது. இவ்வகை
நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும்,
இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது
திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின்
முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு
சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.

டைப் I நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்

- பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது
- அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற
பிரச்சனைகள் உண்டாகும்.
- இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல
- இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.
- உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம்
இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.

*டைப் II **நீரழிவு நோய்** *

இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக்
கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால்
தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு
நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள்.
தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை
முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.

இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒரு நோயாகும்.
குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக
நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள்
ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும்
ஏற்படலாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே
நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து
எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில்
அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால்
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும்
பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள
தேவைப்படுகிறது.
டைப் II நீரழிவு நோயின் குணாதிசியங்கள்

- பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்
- அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்
- பொதுவாக இது பரம்பரை நோய்
- பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல்
பருமனாகவும் இருப்பார்கள்.

இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும்
இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

*ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்*

கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால்
பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக
சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை
ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின்
தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு
கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று
பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று
குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும்
போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள்
பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது
நல்லது.

*உணவு:* உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும்.
மாவுச்சத்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறது. கோதுமையில்
நார்பொருள் (fibre content) இருப்பதால், சக்கரை இரத்தத்தில் ஒரே சீராக
சேருகிறது. காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை
தேர்ந்தெடுப்பது நல்லது. பூமிக்கு கீழே விளைவதை தவிர்க்கவேண்டும் (உருளைக்
கிழங்கு, கேரட், பீட்ரூட்). பழங்களில் சப்போட்டா, பழாப்பழம், சீத்தா போன்றவற்றை
தவிர்க்க வேண்டும்.

*உடற்பயிற்சி:* உடற்பயிற்சி என்பது தினம் 30-45 நிமிட சுறுசுறுப்பாக நடப்பது.
முடிந்தவர்களுக்கு 30 நிமிட ஓட்டம் (சீரான ஓட்டம்). இருதய நோய் உள்ளவர்கள்
கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

*சிகிச்சை: *இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும். சரியான
மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவர் ஆலோசனைப் படி இரத்த
பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை செய்தல், மருந்துக்களை
உட்கொள்தல் வேண்டும் . கண் மருத்துவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்
பரிசோதனை செய்ய வேண்டும். சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி
செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல் போன்றவற்றை "சுய கட்டுப்பாடுடன்"
கடைப்பிடித்தால் நீரழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை
நடத்தலாம்.
——————————————————————————————————–

*சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் **தெரியுமா?*

தினமும் ஒரு முறை அல்லது இரு முறை வெந்தயத்தூள் சாப்பிட வேண்டும்.
சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம். காய
வைத்த வெந்தயத்தை பொடியாக்கி கொள்ளுங்கள். காய்ச்சி ஆறிய தண்ணீரில் பொடியை
போட்டு கலக்கி, தினமும் குடித்துவந்தால் சர்க்கரை வியாதிக்கு டாடா காட்டி
விடலாம். வெந்தயத்தை நன்கு பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை3
தேக்கரண்டி அளவு எடுத்து அரை டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து களிபோல்
ஆக்கி காலை, இரவு வெறும் வயிற்றில் உண்டு வர மூன்று வாரத்தில் நீரீழிவு
நோய்கட்டுப்படும். இதனுடன் தொடர்ந்து நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை மூன்று
வாரம் சாப்பிட்டு வந்து பின் மாத்திரை களை நிறுத்திவிட்டு வந்தயப் பொடியை
உட்கொண்டும், நீரிழிவு நோய்க்கான யோகாசனங்களையும் செய்து வர நீரிழிவு நோய்
கட்டுப்படு்ம்.
வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதைசாப்பிடுவதால் பசி
மந்தப்படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியை மந்தப்படுத்தி உணவை
கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.
இன்சுலினுக்கு இணையான பாகற்காய் பாகற்காயில், இன்சுலின்போன்ற ஒரு
பொருள்சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு
பிடித்துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய்
பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினைகுறைத்துக் கொள்ளலாம்.
வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம். வாரம் 2 நாள் – 3
நாள்பாகற்காய் சாறு, சூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக்
கட்டுக்குள்வைத்திருக்கலாம்.

ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும் சேமிப்புப்
பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது.ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள
சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும்திறனை அதிகரிக்கின்றது
சாப்பிட வேண்டிய காய்கறிகள் : கத்தரீக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்த
வரங்காய், வெண் பூசணி, வெள்ளை முள்ளங்கி, முருங்கைக்காய், புடலங்காய்,
பலாக்காய், பாகற்காய், வெங்காயம், காலிபி;ளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு,
வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய்போன்றவை.

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்து
பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி
சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு
வருவது சிறப்பு.
*சாப்பிடக்கூடாத காய்கறிகள் : *வாழைக்காய், உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட்,
கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரைப் பூசணி, கிழங்கு வகைகள்,
பீன்ஸ்..ஃசர்க்கரை நோயாளிகள்,பச்சைக்காய்கறிகளையே முழுவதும் உண்டால்,
மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும.

*சாப்பிட **வேண்டிய பழங்கள் :*ஆப்பிள், வாழை,ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி,
வெள்ளரீப்பழம், கொய்யாப்பழம்.
**

*சாப்பிடக்கூடாத **பழங்கள்* : பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள்,
பெரீய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள், பெரீய ஆப்பிள், பெரீய
மாம்பழம், பெரீய கொய்யாப்பழம், சப்போட்டா.

*அருந்த வேண்டிய பானங்கள்* : சர்க்கரையில்லாத காபி, டீ,பால், சர்க்கரை
சேர்க்காத எலுமிச்சைஜூஸ், தக்காளி சூப், சோடா. .

*சாப்பிடக்கூடாத பானங்கள் :* சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன்,
மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம்,
முந்திரி, கடலை,கேக் முதலியவை.

இன்சுலின் வழக்கத்துக்கு மாறாக நிறம் மாறி இருந்தால் பயன்படுத்தவேண்டாம்.

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. இதனால் சர்க்கரை
வியாதிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பச்சையாக வெங்காயத்தை
சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம்
அளவுக்கு எடுத்து தயிரீல் பச்சடியாகதயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது
கேழ்வரகு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.

நன்றி:- சாதிக் அலி குளச்சல்
**
**


என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

பட்டர் சிக்கன் மற்றும் தந்தூரிகளாக உருமாறும் செத்த கோழிகள்!!!

*பட்டர் சிக்கன் மற்றும் தந்தூரிகளாக உருமாறும் செத்த கோழிகள்!!!*

டெல்லியில் செத்த கோழிகளை வாங்கி பிளாட்பார கடைகள் உணவு தயாரிக்கின்றனர் என
தகவல் வெளிவந்துள்ளது. இது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ பிரியர்கள் சூடு பறக்க சிக்கன் சூப், சில்லி
சிக்கன் என விதவிதமாக பிளாட்பார கடைகளில் வாங்கி உண்பார்கள். டெல்லியிலும்
தெருவோர கடைகளில் அசைவ உணவுகளின் விற்பனை மிகவும் அமோகமாக இருக்கும்.
டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் மார்க்கெட் பகுதியில், 3 கிலோ எடையுள்ள உயிர்கோழி
ரூ.420 மற்றும் அதற்கு மேல் விற்கப்படுகிறது. இதற்காக, இரவு முழுவதும் ஏராளமான
லாரிகளிலிருந்து, பிராய்லர் கோழிகள் இறக்கப்படும்.
போக்குவரத்தின் போது, ஒவ்வொரு லாரிகளிலும் இருந்து சராசரியாக 15 முதல் 20
கோழிகள் வரை உயிர் இழக்கின்றது. இந்த கோழிகள் குப்பையில் எறியப்படுவதில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோழிகளை கிலோ ரூ.15 வீதம், 3கிலோ எடையுள்ள கோழிகளை ரூ.50க்கு வாங்குவதற்கு
மார்க்கெட்டில் ஒரு கூட்டமே காத்திருக்கிறது. இவர்கள் எல்லாரும் பகர்கஞ்ச்,
கரோல் பாக் பகுதிகளில் ஓட்டல், தெருவோர கடைகள் நடத்துபவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
லாரி டிரைவர்கள், கிளீனர்களிடம் செத்த கோழிகளை இவர்கள் பேரம் பேசி வாங்குவதை
தினமும் அதிகாலையில் பார்க்கலாம்.
இது குறித்து ஓட்டல் வியாபாரி ஒருவர் கூறுகையில், "உணவு பொருட்கள் விலை
அதிகரித்து கொண்டே போகிறது. அதற்கு ஏற்றாற்போல் நாங்கள் விலையை ஏற்றினால்,
வியாபாரம் படுத்துவிடும்".
ஒரு பிளேட் சிக்கன் 30 ரூபாய். கோழிக்கறியை கிலோ ரூ.140க்கு வாங்கி எப்படி
வியாபாரம் முடியும். மலிவு விலைக்கு கோழிகளை வாங்கினால் மட்டுமே நல்ல முறையில்
வியாபாரம் நடக்கும் என்று கூறினார்.
மொஹம்மட் நவாஸ் மொஹம்மட் ஸமீர்
**


என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

Thursday, January 20, 2011

வேலை வாய்ப்பு

இலவச கணினி (COMPUTER) பயிற்சி

சிறுபான்மை மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி ;
MS Office with C ,C++, MS Office with Tally, 10 -வது பாஸ்/பெயில் ஆன
10500 பேருக்கு
Tamilnadu Minorities Economic DevelopmentCorporation, and
807, Anna Salai,
5th Floor,
Chennai 600 002.
www.tamco.in
Backward Classes and Minorities Welfare Department
தொலைபேசி எண்:04365 -251562 ல் பெறலாம்.


தென்னக ரயில்வேயில் (SOUTHERN RAILWAY) வேலைவாய்ப்பு:

விண்ணபிக்க கடைசி தேதி : 28/02/2011
மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணைப்பை காணவும்:
employment notification, Application Format, Annexures can also
be seen on the official website of South Central Railway
www.scr.indianrailways.gov.in.

திருவாரூர் மத்திய பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு
VACANCIES FOR NON-TEACHING POSITIONS
Notification No: CUTN – 3 (2) – 1/2011

The Central University of Tamil Nadu, an Institution established by an Act of
Parliament, invites applications for the following Non-Teaching posts:
1) Finance Officer
2) Deputy Registrar
3) Assistant Registrar
4) Hindi Officer
5) Section Officer
6) Assistant
7) Upper Division Clerk (UDC)
8) Lower Division Clerk (LDC)
9) Private Secretary to VC / Registrar
10) Personal Assistant
11) Technical Assistant
12) Lab Assistant
13) Assistant Librarian
14) Junior Professional Assistant
15) Library Attendant
16) Lab Attendant. Those who had applied for
any of these positions in response to our earlier advertisement in the year 2009
need not apply again, but they can update their bio-data.
For further details and application procedure, visit our website:
www.tiruvarur.tn.nic.in and see the link, "Vacancies for Non-Teaching
Posts"
Last date for receipt of application is 28.01.2011.

Wednesday, January 19, 2011

அஸிமானந்தாவின் மனமாற்றத்திற்கு காரணமான அப்துல் கலீம் ஜாமீனில் விடுதலை!!!

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புத்
தொடர்பாக தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்டு போலீசாரால் பொய்வழக்கில்
சிக்கவைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களில் அப்துல் கலீமும் ஒருவர்.

மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் வழக்கை மறுவிசாரணைக்கு
உட்படுத்தியதில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானது.

இதனைத் தொடர்ந்து இக்குண்டுவெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளி அஸிமானந்தா
கடந்த வருடம் நவம்பர் மாதம் சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்டார். இதனைத்
தொடர்ந்து அஸிமானந்தா ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குண்டா சிறையில்
அடைக்கப்பட்டார்.

எதிர்பாராத விதமாக அச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த இதே வழக்கில் கைதுச்
செய்யப்பட்ட அப்துல் கலீம், அஸிமானந்தாவுக்கு சேவைபுரிய நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அப்துல் கலீமின் நன்னடத்தை மற்றும் போலி வழக்கில் அவர்
சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டது உள்ளிட்ட
சம்பவங்களை அறிந்துக்கொண்ட அஸிமானந்தா மனம் மாறி சி.பி.ஐ நீதிமன்றத்தில்
குண்டுவெடிப்புகளில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலத்தை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பல்வேறு அமைப்புகள் போலி வழக்கில் கைதுச்
செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக
விடுதலைச் செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெறவும் மத்திய,
சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை வலியுறுத்தின.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 17-ஆம் தேதி) அப்துல் கலீமுக்கு ரங்கா ரெட்டி
நீதிமன்றம் ரூ.20 ஆயிரம் பிணைத் தொகையை ஈடாக வைத்து அப்துல் கலீமுக்கு ஜாமீன்
வழங்கியது.

கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான
அப்துல்கலீம் மருத்துவக்கல்லூரி மாணவராவார். குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச்
செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 18 மாதங்களாக அவர் தனது படிப்பை தொடர முடியாத
சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல் கலீம் போலீசாரால் ஒரு ரகசியமான பண்ணை
வீட்டில் வைத்து சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் பொய் வழக்கில் கைதுச்
செய்யப்பட்டார். ஒன்றரை வருடங்கள் கழித்து விடுதலையான அப்துல்கலீம் மீண்டும்
செல்ஃபோனை சிறையிலிருந்த ஷேக் அப்துல் காதர் என்பவருக்கு அளித்ததாக
குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்டார்.

ஜாமீனில் வெளிவந்த அப்துல் கலீம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில்
கூறியதாவது: "நான் பல மாதங்களாக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச்
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை என்னுடன் சிறையிலிருந்த ஒருவர்
அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார். உடனே அவர் என்னை சந்தித்து பேசவேண்டும் என
தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர்தான் அவரைப் பற்றி எனக்கு தெரியவந்தது. அவர் நான் தங்கியிருந்த
அறைக்கு அருகில்தான் தங்கவைக்கப்பட்டிருந்தார். அஸிமானந்தா வேறு பெரிய
நபர்களின் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என நான் கருதுகிறேன். நான்
அவரிடம், என்னை போலீசார் கைதுச் செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கியது மற்றும்
இரண்டுமுறை நார்கோடிக் அனாலிசிஸ்(உண்மைக் கண்டறியும் சோதனை) சோதனைக்கு
உட்படுத்தியது ஆகியவற்றைத் தெரிவித்தேன். மேலும் நான் அவருக்கு தண்ணீர்
பிடித்துக் கொடுப்பது உள்பட சில சேவைகளை புரிந்தேன். மேலும் அவர் சொல்வதை
அமைதியாக கேட்டேன். இவையெல்லாம் அவருடைய மனதை தொட்டது. இதனால் அவருக்கு ஒரு
தாக்கம் ஏற்பட்டது." இவ்வாறு அப்துல் கலீம் தெரிவித்தார்.

இடுகையிட்டது பாலைவனத் தூது

செய்தி:twocircles.net

கேரளாவில் மஸ்ஜிதை கட்டும் ஹிந்து சமுதாய வர்த்தகர்!!!

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...*
**
*அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....*
**
*கேரளாவில் மஸ்ஜிதை கட்டும் ஹிந்து சமுதாய வர்த்தகர்!!!*
தோஹா,ஜன.18:சமுதாய நல்லிணக்கம் அதிகரிப்பதற்காக கத்தரை தலைமையிடமாக் கொண்டு
செயல்படும் ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்த வர்த்தகரான சி.கே.மேனன் கேரள மாநிலம்
கோழிக்கோட்டில் மஸ்ஜித் ஒன்றை கட்டவிருக்கிறார்.

1200 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஹிந்து மதத்தைச் சார்ந்த நபர் கேரளாவில்
முஸ்லிம்கள் இறைவனுக்கு வணக்கங்களை நிறைவேற்றும் மஸ்ஜிதை கட்டவிருக்கிறார் என
சி.கே.மேனன் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்.

இரண்டு மாதத்திற்குள் மஸ்ஜித் கட்டும் பணி பூர்த்தியாகும். 400க்கும்
அதிகமானோர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் மஸ்ஜித் கட்டப்படும். இதற்கு
முன்பு எட்டாம் நூற்றாண்டில் சேர மன்னன் ராம வர்மா குலசேகரன் கட்டிய சேரமான
மஸ்ஜித் தான் இதற்கு முன்பு ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்தவரால் கட்டப்பட்டது என
சி.கே.மேனன் குறிப்பிடுகிறார்.

கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெஹ்ஸாத்
க்ரூப் ஆஃப் கம்பெனியின் சேர்மன் மற்றும் மேனஜிங் டைரக்டராக செயல்பட்டு
வருகிறார் சி.கே.மேனன்.

மஸ்ஜிதை கட்டுவதற்குரிய அனுமதியை முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் சமுதாய
தலைவர்களிடமிருந்து பெறப்பட்டதாகவும் சி.கே.மேனன் தெரிவிக்கிறார். இதுத்
தொடர்பாக முஸ்லிம் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் ஆகியோரிடமிருந்து கடிதங்கள்
கிடைத்துள்ளன. அவர்கள் இதில் திருப்தியை தெரிவித்துள்ளனர்.

மஸ்ஜிதின் கட்டுமானப்பணி பூர்த்தியானால் அடுத்ததாக கிறிஸ்தவ சர்ச் ஒன்றைக்
கட்டப்போவதாக சி.கே.மேனன் அறிவித்துள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டிற்கான பிரவாசி பாரதீய விருதும், 2007 ஆம் ஆண்டில் சமூக
சேவைக்கான பத்மஸ்ரீ விருதும் சி.கே.மேனனுக்கு கிடைத்துள்ளது
குறிப்பிடத்தக்கதாகும்.

Tuesday, January 18, 2011

அருணாசலப் பிரதேசம் சர்ச்சைக்குரிய பகுதியே: சீனா பிடிவாதம்

பெய்ஜிங், ஜன. 17: அருணாசரப்பிரதேசம் சர்ச்சைக்குரிய பகுதிதான். சீனாவின் இந்த கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
அருணாசலப்பிரதேசம் தென் திபெத் என்றும் சீனா கூறியுள்ளது.
 கடந்த வாரம் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு விளையாட்டு வீரர்களுக்கு சீன அரசு தனித் தாளில் அச்சடிக்கப்பட்ட விசாவை வழங்கியது. இது தொடர்பாக இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.

 இந்த விவகாரம் எழும்பிய சில தினங்களில் அருணாசலப் பிரதேசம் தொடர்பான தமது கொள்கை எப்போதும் போலத்தான்.அதில் எந்த மாற்றமும் இல்லை என்கிற முடிவை சீனா அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலுவலக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
 கிழக்கு பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதி உள்ளிட்ட சீன-இந்திய எல்லை பிரச்னையில் சீனாவின் கொள்கை எப்போதும் ஒன்றுதான். இதை இந்திய தரப்பும் நன்கறியும். இந்த நிலை மாறாது. இந்திய-சீன எல்லையில் உள்ள கிழக்குப்பகுதியில் அருணாசலப்பகுதியும் அடங்கும். எல்லை பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா-சீனா நடத்திவரும் பேச்சுவார்த்தையில் இதுவும் அடங்கி உள்ளது. இதுவரை இருதரப்பும் 14 தடவை பேச்சு நடத்தி எந்த வித தீர்வையும் எட்டவில்லை.
 பியூஜியான் மாகாணத்தில் நடக்கும் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த வாரத்தில் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 விளையாட்டு வீரர்களுக்கு சீனா, தனி தாளில் அச்சடிக்கப்பட்ட விசாவை வழங்கியது.

 இந்த செயல் இந்திய தரப்பை ஆத்திரத்தில் ஆழ்த்தியது. தனது எதிர்ப்பை இந்தியா பதிவு செய்தது. இந்நிலையில் தமது நிலையை சீனா தெளிவுபடுத்தியுள்ளது.
 விளையாட்டு போட்டியில் பங்கேற்க அருணாசலப் பிரதேச விளையாட்டு வீரர்கள் விமான நிலையம் சென்றபோது அந்த இருவரையும் குடியேற்றத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். தனித்தாளில் அச்சடிக்கப்பட்ட விசாவை சீனா வழங்கியதே இதற்கு காரணம். இவ்வாறு வழங்கப்படும் விசாவை இந்தியா அங்கீகரிக்காது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
 இதனிடையே,எல்லைப் பிரச்னை தீராத நிலையில் இத்தகைய விசா வழங்குவதை அனுமதித்தால்தான் அந்த பகுதி மக்கள் சீனா செல்லமுடியும். இதுதான் நடைமுறை ரீதியில் சாத்தியமானது என்பதால் இந்த ஏற்பாட்டை ஏற்க வேண்டும் என சர்வதேச சீன ஆய்வு நிறுவன ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1992-ம் ஆண்டிற்கு பிறகு நடந்த அனைத்துக் குண்டுவெடிப்புகளையும் விசாரிப்பதற்கு சுதந்திர புலானாய்வு ஏஜன்சியை நியமிக்க PFI வலியுறுத்தல்!!!

கோழிக்கோடு,ஜன.17:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1992 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் மறுபடியும் விசாரிப்பதற்கான பொறுப்பை சுதந்திரமாக செயல்படும் புலனாய்வு ஏஜன்சியிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்.


சமீபத்திய தீவிரவாதம் தொடர்பான நிகழ்வுகள் குறித்து வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட தற்பொழுது நடந்துவரும் விசாரணை, குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டுள்ள சூத்திரதாரிகளை வெளிக் கொணரும் வகையில் போதுமானதாக இல்லை. காரணம், போலீஸ் மற்றும் அதிகார வர்க்கத்தில் நிலவும் மதரீதியான பாரபட்சமாகும்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய உண்மையான குற்றவாளிகள் சங்க்பரிவார்கள்தான் என்ற உண்மை வெளிவந்த சூழலில் மத்திய அரசு மற்றும் மஹாராஷ்ட்ரா, ஆந்திரா மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் அரசுகளும் தீவிரவாத வழக்குகளில் பொய் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பயங்கரவாதச் செயல்கள் குறித்து புதிதாக வெளியான தகவல்கள் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவிலான பிரச்சாரத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாத செயல்பாடுகளை பகிரங்கப்படுத்தும்.

ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச் செய்வதன்மூலம் அவ்வியக்கத்தின் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழித்துவிட முடியாது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கருதுகிறது.

கடந்த காலங்களில் 3 முறை இவ்வியக்கம் தடைச் செய்யப்பட்ட பிறகும் அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் பா.ஜ.க உள்பட பல்வேறு இயக்கங்களில் செயல்படும் பொழுது இம்முயற்சி வீணானதாகும்.



சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டும். மேலும் இந்த கருப்புச் சட்டத்தில் கைதாகி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டாக்டர் பினாயக் சென்னை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டும்.

கேரள மாநிலத்தில் கைதுச் செய்யப்பட்ட டாக்டர் ரெனீஃபிற்கு ஜாமீன் வழங்கிய அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிச் செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் இத்தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்களையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் வரவேற்கிறது.

கேரள மாநில உயர்நீதிமன்றம் டாக்டர் ரெனீஃபிற்கு ஜாமீன் வழங்கிய நிலையில் கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு ரெனீஃப் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர் எனக் குற்றஞ்சாட்டி ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குடிமக்களுடைய உரிமைகளின் பாதுகாவலனாகவும், சிறுபான்மை மக்களின் ஆபத் பாந்தவனாகவும் வேடமிட்டுக் கொண்டிருந்தது. ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இந்த சமூக அமைப்பை அடக்கி ஒடுக்கிவிட நடந்த முயற்சிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது சித்திரவதைகளை கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் அதன் உண்மையான நிறம் வெட்டவெளிச்சமானது.

ஜனநாயக உரிமைகளை நசுக்கும் விதமாக அரசு நிர்வாகமும், போலீசும் நடந்துக்கொண்ட பொழுது அமைதியை விரும்பும் இவ்வியக்கத்தின் அரசியல் சட்டரீதியான உரிமைகளை பாதுகாக்கும் விதமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம், பாப்புலர் ஃப்ரண்டின் மீது சுமத்தப்படும் தீவிரவாத குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரமுமில்லை எனக் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம் மேலும் தெரிவிக்கையில், ஒருவர் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருக்கும் காரணத்தினால், ஏன் அந்த இயக்கம் தீவிரவாத இயக்கமாக இருந்தபோதிலும் கூட அந்த குறிப்பிட்ட தீவிரவாதச் செயலில் ஈடுபடாதவரை அவர் மீது குற்றஞ்சுமத்த முடியாது. இத்தீர்ப்பு பொய் வழக்குகளில் கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு நம்பிக்கையின் வெளிச்சத்தைத் தருகிறது.

டெல்லியில் அல்நூர் மஸ்ஜிதை இடித்த டெல்லி வளர்ச்சி ஆணையத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இடித்த இடத்தில் மீண்டும் மஸ்ஜிதை கட்டிகொடுக்க வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
 

Monday, January 17, 2011

நெரிசலில் சிக்காமல் தப்பிக்க ஓடி வந்த பக்தர்களை விரட்டியடித்த மலையாள வியாபாரிகள்

தேனி: சபரிமலை அருகே புல்மேடு பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அதில் சிக்காமல் தப்பித்துக் கொள்ள ஓடி வந்த பக்தர்களை கம்புகளால் விரட்டியடித்துள்ளனர் கொடுமைக்கார மலையாள வியாபாரிகள்.

புல்மேடு பகுதியில் நடந்த கோர சம்பவத்தில் 109 அய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆனால் அதை விட சோகமான சம்பவமும் அப்பகுதியில் நடந்துள்ளது. அது தற்போது தெரிய வந்துள்ளது.

ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்நதே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பும், காயமும் ஏற்பட்டுள்ளது.



அந்த சமயத்தில் அப்பகுதியில் இருந்த கடைகளுக்குள் புகுந்து உயிர் தப்ப பக்தர்கள் பலர் ஓடி வந்தனர். ஆனால் அங்கிருந்த மலையாள வியாபாரிகள் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் ஓடி வந்த பக்தர்களை தடிகளாலும், கம்புகளாலும் அடித்து விரட்டி வெளியேற்றியுள்ளனர். இதனால் தஞ்சம் புக வந்த அப்பாவி பக்தர்கள் மீண்டும் நெரிசலுக்குள் போய் சிக்க நேரிட்டதாம்.

அப்பாவி பக்தர்களை நம்பி பிழைப்பு நடத்தும் இந்த மலையாள வியாபாரிகள், காசு பார்த்தால் போதும், எவன் எக்கேடு கெட்டால் என்ன என்ற எண்ணத்துடன் இரும்பு நெஞ்சுடன் நடந்து கொண்ட சம்பவம் பதை பதைக்க வைப்பதாக உள்ளது. ஒருவன் உயிருக்குப் போராடுகிற சமயத்தில் கூட அவனுக்கு உதவும் மனது இவர்களுக்கு இல்லாமல் போனதை என்னவென்று சொல்வது?.