Thursday, March 31, 2011

சென்னையில் மஸ்ஜிதைத் தகர்க்க முயற்சி! முஸ்லிம்கள் முறியடிப்பு!!

சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை
தேசவிரோத குண்டர்கள் சிலர் இன்று தகர்க்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று
குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

7 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த உமர் என்ற தொழிலதிபர் சென்னை
உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தனது கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு பகுதியை
முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக அன்பளிப்பாக அளித்தார். அன்றிலிருந்து அந்தப்
பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அங்கே தொழுது வந்தனர்.
இதற்கிடையில் அந்தக் கட்டடத்தின் அடித்தளமும், இரண்டாவது மாடியும், மூன்றாவது
மாடியும் சி.ஓ.எஸ். என்ற அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளன.
இந்த அறக்கட்டளையைச் சார்ந்தவர் தன் மனைவி வள்ளி என்பவரின் பெயரில் ஒரு நிதிக்
கம்பெனியை முதல் மாடியில் தொழுகை நடக்கும் இடத்தில் துவக்க திட்டமிட்டார்.அந்த
இடத்திற்குப் பதிலாக அடித்தளத்தில் ஒரு இடத்தை முஸ்லிம்கள் தொழுவதற்காகத்
தருவதாகச் சொன்னார்.
முஸ்லிம்கள் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வழக்கறிஞர்கள் போர்வையில் வந்த சில
குண்டர்கள் இன்று மஸ்ஜிதின் வாசலை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.
மஸ்ஜிதின் அடையாளங்களை அழிக்க முயற்சி செய்தனர். அருகிலுள்ள கடை வியாபாரிகள்
உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வந்த காவல்துறையினரோ அந்தக்
குண்டர்களுக்குப் பாதுகாப்பு தந்தனர்.
செய்தியைக் கேள்விப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்
சகோதரர்கள் உடனே சம்பவ இடத்தில் ஒன்று கூடினர். ஆனால் நிறைய முஸ்லிம்கள் அங்கே
கூடி நின்று குண்டர்கள் பட்டப் பகலில் மஸ்ஜிதின் அடையாளங்களைத்
தகர்த்துக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சுற்றி
காவல்துறையினரும் ஒன்றும் செய்யாமல் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரிலேயே இந்த
அக்கிரமங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன.
களத்தில் புகுந்த பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் உடனே அந்தக் குண்டர்களைத்
தடுத்து நிறுத்தி,காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாக சாலை மறியலில் முஸ்லிம்கள்
ஈடுபட்டனர். அதன்பின் ளுஹர் தொழுகையை சாலையின் நடுவிலேயே தொழுதனர்.பின்னர்
பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை மாவட்டச் செயலாளர் ஷாஹித் என்பவரும், தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆலம் என்பவரும் இந்தச் சமூக விரோதிகளுக்கெதிராக
காவல்துறையிடம் புகார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த அக்கிரமத்திற்குப் பொறுப்புடைய அத்தனை பேர் மீதும் குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்படும் வரை முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
*Popular Front - Chennai *

சட்டங்களின் சலுகைகள் முஸ்லிம்களுக்கு எட்டாக்கனியோ..?

ஒரு குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு
அவசிய நிமித்தமாக வெளியே வரும் நிலை
ஏற்பட்டால் வழங்கப்படுவதுதான் 'பரோல்' என்பதாகும். இந்த பரோல் விசயத்தில் கூட
அரசு முஸ்லிம்கள் விசயத்தில் பாராமுகமாக நடந்து வருகிறது.

ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜாகிர் உசேன் சென்னை
ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் கொலை வழக்கு தொடர்பாக 1999 ம் ஆண்டு
முதல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறேன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
என்னை தமிழக அரசாணைப்படி முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று
விண்ணப்பித்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் எனக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமண
கொண்டாட்டங்களுக்காக எனக்கு ஒரு மாதம் பரோல் தர வேண்டும் என்று உள்துறை
செயலாளர், டி.ஜி.பி., கோவை ஜெயில் சூப்பிரண்டு ஆகியோருக்கு எனது சகோதரர் கடந்த
1 ம் தேதி விண்ணப்பித்தார். எனக்கு பரோல் கொடுக்கும் பட்சத்தில்தான் திருமணம்
நடக்கும். இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.

இதற்கு சிறப்பு அரசுப் பிளீடர் கே.பாலசுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு
தெரிவித்தார். கொலை வழக்கில் சிக்கியுள்ள ஜாஹீரை வெளியே கொண்டு வருவதற்கு அதிக
போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இருக்கும். தேர்தல் நடக்கும் நேரத்தில்
அந்த பணிக்கு அதிக போலீசார் சென்றுவிடுவதால், ஒரு மாதத்துக்கு ஒரு கைதியை
பாதுகாப்பதற்கு போலீசாரும் கிடைக்க மாட்டார்கள்.சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காக
மட்டுமல்ல, அவர் ஈடுபட்டிருந்த குற்றத்தின் தன்மையையும் கருதும்போது அவருக்கு
ஒரு மாதம் பரோல் அளிப்பது நல்லதல்ல என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதத்தையும்
கேட்ட நீதிபதி பி.ஜோதிமணி,

ஜாகிர் உசேன் பரோல் கேட்பது தனது திருமணத்துக்காகத்தானே தவிர வேறெதற்கும் அல்ல.
எனவே 3 நாட்களுக்கு பரோல் அளித்து உத்தரவிடுகிறேன்.அவருக்கு தேவையான போலீஸ்
பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

ஜாஹிரின் ஒரு மாத கால பரோல் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிறப்பு அரசுப்
பிளீடர் கே.பாலசுப்பிரமணியன் கூறிய காரணத்தில் ஒன்று, ''ஜாஹீரை வெளியே கொண்டு
வருவதற்கு அதிக போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இருக்கும். தேர்தல்
நடக்கும் நேரத்தில் அந்த பணிக்கு அதிக போலீசார் சென்றுவிடுவதால், ஒரு
மாதத்துக்கு ஒரு கைதியை பாதுகாப்பதற்கு போலீசாரும் கிடைக்க மாட்டார்கள்
என்பதாகும்.

தமிழகத்தில் 1 ,04 ,783 காவலர்கள் பணியில் இருக்கும் நிலையில், ஜாஹிரின்
பாதுகாப்புக்கு போலிஸ் கிடைக்க மாட்டார்களாம். நல்ல வேடிக்கைதான் போங்க.
போலீஸ் கிடக்கவில்லை என்றால் அரசியவாதிகள் பின்னாடி பாதுகாப்புன்ற பேருல ஒரு
படை போலீஸ் அலையுதே; அதிலிருந்து ரெண்டு பேரை போடவேண்டியதுதானே! மேலும்,
ஜாஹிரின் குற்றத்தின் தன்மை குறித்தும் ப்ளீடர் பேசுகிறார். இதுபோன்ற கொலைக்
குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன்பாக பரோலில் வந்ததே இல்லையா? அல்லது
பிளீடருக்கு தெரியாதா? பிளீடரின் உப்புச்சப்பில்லாத காரணத்தின்
அடிப்படையில் ஒரு திருமணம் செய்யவுள்ளவருக்கு மூன்று நாள் பரோல் என்பது
மாபெரும் அநியாயமாகும்.

கடந்த காலங்களில், ஜாஹிரை விட கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு
வழங்கப்பட்ட பரோலை பார்வைக்கு வைக்கிறோம்;


- கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற
சாமியார் பிரேமானந்தாவுக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கிய நீதிமன்றம்.
- இதே பிரேமானந்தாவுக்கு சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்ள இவருக்கு 6
நாட்கள் பரோலில் விடுதலை.
- மதவெறியை தூண்டும் வகையில் தேர்தல் நேரத்தில் பேசிய வருண் காந்திக்கு 15
நாட்கள் பரோலில் விடுதலை செய்த உச்சநீதிமன்றம்.
- முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனனை சுட்டுக்கொன்ற வழக்கில் ஆயுள்
தண்டனை அனுபவித்து வரும் அவரது சகோதரர் பிரவீன் மகாஜன் 14 நாள் பரோலில் விடுதலை
செய்த மும்பை நீதிமன்றம்.

இவ்வாறு பட்டியல்கள் நீளும். ஏற்கனவே மதானிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுப்பதன்
மூலம் அநீதியை காட்டிவரும் நீதித்துறை, இப்போது இந்த வழக்கில் குறைந்த நாள்
பரோல் வழங்கி தனது அநீதியை தொடர்கிறது. என்ன செய்வது! சட்டத்தின்
சலுகைகள் முஸ்லிம்களுக்கு எப்போதுமே எட்டாக்கனிதானே!

Thursday, March 17, 2011

சாதிக் பாட்ச மரணம்! கொலையா தற்கொலையா!


2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ-யால் விசாரிக்கப்பட்ட ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் மர்ம மரணம்.
ஏ.எம்.சாதிக் பாட்சா சென்னையில் இன்று (16-3-2011) அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளி வந்துள்ளது. கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குநரும், ரியல் எஸ்டேட் தொழில் அதிபருமான சாதிக் பாட்சா ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர். 

கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்திற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளை அச்சுறுத்தி நிலங்களை அபகரிப்பது, சிறப்பு பொருளாதார மண்டலம், மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்துவது, அமைச்சரின் பினாமியாக செயல்படுவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சாதிக் பாட்சா மீது உள்ளன. 

பெரம்பலூர் கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் வீட்டிலும், கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்திலும் 2010 டிசம்பரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த பணம் சாதிக் பாட்சா மூலம் வெவ்வேறு தொழில்களில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் தெரிய வந்தன. 
இந்நிலையில் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது கேள்விக்குரியதாகும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள ராசாவின் பினாமியாக செயல்பட்ட சாதிக் பாட்சாவின் மர்ம மரணம் குறித்து மத்திய புலனாய்வுத்துறை தீவிர விசாரணையை உடனடியாக நடத்திட வேண்டுமென்றும்,
உண்மை விவரங்களை நாட்டுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்திட வேண்டுமென்றும், ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றவாளிகள் சாதிக் பாட்சாவின் மரணத்தை பயன்படுத்தி தப்பிக்க வழி வகுக்காது இருக்க சிபிஐ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


Wednesday, March 16, 2011

ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும்


சென்னை, மார்ச் 15- ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர்,  மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ரத்த-உறவுமுறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும்.  இவ்வுறையில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது.
விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ, அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், கடவுச் சீட்டின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவங்களை 30 ஏப்ரல் 2011-ற்குள் மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
தங்கள் வசம் பாஸ்போர்ட் இல்லாதவர்கள், முதலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திடமிருந்து பெற்ற ரசீதின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.31634038682-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் பன்னாட்டு கடவுச் சீட்டு இருப்பின் அதன் நகலை அல்லது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தால் மண்டல     பாஸ்போர்ட் அலுவலக ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும்.  
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 ஆகும்.
ஹஜ் 2008, 2009 மற்றும் 2010-ல், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தெரிவு செய்யும் திட்டத்தைத் தொடர்வது என மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.
ஹஜ் 2011-ல் இச்சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சக பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான உறை எண் விபரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். (புதிய விண்ணப்பதாரர்கள் எவரையும் சேர்க்கக்கூடாது).
இவ்விண்ணப்பதாரர்கள் குலுக்கல் இன்றி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற தகுதியைப் பெறுவார்கள். இவ்வாறு சிறப்பு வகையில் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் மற்றும் ஹஜ் 2011-ற்கு விண்ணப்பிக்கவேண்டும். 
விண்ணப்பங்களை பெறும் கடைசி நாள் வரையில், சிறப்பு வகை விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள இருக்கைகள் பொதுவகையில் அளிக்கப்பட்டு, அவ்விருக்கைகளுக்கு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்தி தேர்வு செய்யும்.  
மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக சிறப்பு வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் மாநில ஹஜ் குழு, சிறப்பு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குலுக்கலை நடத்தும்; பொது வகையில் புதியதாக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  
மத்திய ஹஜ் குழுவால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில், கணினி மூலமாக குலுக்கலை நடத்தி தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகளுக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவிக்கும். குலுக்கல் மூலமாக பயணிகள் தேர்வு செய்யப்படுவது முற்றிலும் தற்காலிகமானது.
குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் புகைப்படத்தை இணைத்து, அந்த பாஸ்போர்ட்டுடன் ரூ.31,000/- செலுத்தியதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து 15.6.2011-க்குள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.    
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 13, 2011

ஆன்லைன் வாக்காளர் பதிவுப்பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?



எனக்கு  கிடைத்த தகவல் தங்களுக்கு மிக்க பயனுறும் என்பதன் அடிப்படையில் இங்கு சமர்பிக்கிறேன்! கீழ்கண்ட லிங்கிற்கு சென்று நம் வாக்காளர் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள இயலுகிறது!

உங்கள் பெயர் பதிவுகளை சரிபார்க்க:---

http://www.elections.tn.gov.in/eroll/  

Friday, March 11, 2011

குண்டுவீச்சில் 9 குழந்தைகள் பலி; ஒபாமா வருத்தம் தீர்வாகுமா?


ப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க நா[நே]ச நாட்டுப்படையினர், இரண்டு நாட்களுக்கு முன் நடத்திய குண்டு வீச்சில் அப்பாவி குழந்தைகள் 9 பேர் கொல்லப்பட்டனர். எனவே, இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க படையின் தளபதி லெப்டினன்ட் டேவிட்டும், அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, குழந்தைகள் பலியானதற்கு ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
 

ஒபாமாவின் இரங்கல் இறந்து போன குழந்தைகளை மீட்டுத் தந்துவிடுமா? என்ற அதிர்வலை எழாமல் இல்லை. மேலும், அமெரிக்க படையினரின் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜனநாயகத்தை  நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் நாடு பிடிக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஒபாமா மறுபரிசீலனை செய்வாரா? 

Wednesday, March 9, 2011

அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி; அன்று சொன்னது அர்த்தமற்றது!

டவுளோடும் மக்களோடும் தான் கூட்டணி' என்று முழங்கி கடந்த தேர்தல் வரை தனிக்கடை போட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்பார்த்த 'வியாபாரம்' நடக்காததால், வழக்கமான அரசியல்வாதிகள்  போல் கொள்கையை தூக்கி மூட்டை கட்டிவிட்டு, போயஸை நோக்கி நடையைக் கட்டி நாற்பத்தியொரு தொகுதிகளை அள்ளிக்கொண்டு வந்துவிட்டார்.
கடந்த தேர்தல் வரை  விஜயகாந்த் கட்சிக்கு கணிசனமான வாக்கு கிடைத்ததற்கு அதிமுக மற்றும் திமுகவிற்கு எதிரான வாக்குகளும், மாற்றத்தை விரும்பும் சிலரின் வாக்குகளும் தான் காரணமாக  அமைந்தது. அதோடு சில இடைத்தேர்தலில் அண்ணாதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்ததும் விஜகாந்தின் வாக்கு வங்கி உயர காரணமாகியது. ஆனால் இப்போது விஜயகாந்த் தனது கொள்கையை விட்டு கூட்டணி கண்டுள்ளதால் அவருக்கு இருப்பதாக கூறப்படும் எட்டு சதவிகித வாக்கில் இறங்குமுகமே ஏற்படும் என்கின்றன்றனர் அரசியல் ஆய்வாளர்கள். மேலும் விஜயகாந்திற்கு அதிமுக ஒதுக்கியுள்ள சீட்டுக்கள் மிக மிக அதிகம் என்றும், பாமகவை கழகங்கள் மாறி மாறி வளர்த்து விட்டது  போல், விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா தன்னையறியாமலேயே அடித்தளம் அமைத்து தந்துவிட்டார் என்ற கருத்தும் அரசியல் அரங்கில் நிலவுகிறது.
அடுத்து அரசியல்வாதிகள் அணிமாறுவதும், அணி சேர்வதும் சகஜம்தான் என்றாலும், கூட்டணி வைத்து போட்டியிடுபவர்களை கடந்த காலங்களில்  கடுமையாக விமர்சித்தவர் விஜயகாந்த். அதிலும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இவரின் கடும் தாக்குதலுக்கு உள்ளானார். ராமதாஸ் பற்றி விஜயகாந்த் அன்று;
'அஞ்சு வருசத்துக்கு வேட்டிய[திமுக] துவைச்சுப் போடுறது; அஞ்சு வருசத்துக்கு சேலைய[அதிமுக] துவைச்சுப் போடுறது இதெல்லாம் ஒரு பொளப்பா'..?
கூட்டணி சேர்வது பற்றி விஜயகாந்தின் சூப்பர் விளக்கம் அன்று;
''திமுக, அதிமுக ரெண்டு கட்சிகளோட கொள்கை என்ன தெரியுமா? கூட்டுச்சேர்; கொள்ளையடி;பங்குபிரி என்பதுதான்'!
அப்ப விஜயகாந்த் அதிமுகவோட கூட்டுச்சேர்ந்தது இதுக்குத்தானான்னு நாம கேட்கல; அப்பாவி வாக்குவங்கி கேக்குறான். விஜயகாந்த் பதில் சொன்னா நல்லாருக்கும்!

Friday, March 4, 2011

வீண் விரயம் செய்யாதீர்கள்.

இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல்
அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான
உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக்
கொடுத்தான்.

அனைத்து வகை உயிரினங்களும் தன்னுடையத் தேவைக்குப் போதுமான அளவு உண்டுப்
புசித்து தன்னைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துகின்றன.

மனிதர்களாகிய நாமும் இறைவன் நமக்கு அளித்த பொருள் வளத்திலிருந்து போதுமான அளவு
உண்டுப் புசித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் ஸகாத் எனும் ஏழை நிதியை
பொருளீட்ட முடியாத வறிய நிலையிலுள்ளோருக்கு மனமுவந்து வழங்குவதுடன் எஞ்சி
இருக்கும் பொருளாதாராத்தை வீண் விரயம் செய்யக் கூடாது என்பதில் கவனத்துடன்
செயல்பட வேண்டும். வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன்
6:141.

*தேவைக்கு** **மீறி** **சமைப்பதும்**, **மிஞ்சுவதைக்** **கொட்டுவதும்.*

மனிதனுடைய உள்ளத்தில் இதுப் போதாது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று
சொத்து சேர்ப்பதிலிருந்து நாவுக்கு சுவையானத் தீணிப் போடுவது வரை எல்லா
நிலைகளிலும் எல்லை இல்லாத ஆசையை விதைத்து பொருளாதாரத்தை விரயமாக்கச் செய்வது
ஷைத்தானின் வேலையாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள்
மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்).
யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். திருக்குர்ஆன்
4:36

உள்ளத்திற்கு கடிவாளமிட்டு எந்த தேவைக்கும் குறிப்பிட்ட அளவை நிர்ணயித்தக்
கொண்டு போதுமென்ற சிந்தனையை யார் உருவாக்கிக் கொள்வாரோ அவரே இறைவனின்
திருப்பொருத்தத்திற்கு உகந்த அடியாராவார் இறைவனின் அடியானின் பக்கம் ஷைத்தான்
நெருங்க மாட்டான். ...உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (
மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்று கூறினான். திருக்குர்ஆன் 15:40

*இன்றுப்** **பார்க்கின்றோம்.*

எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகை உணவுகளை பணக்கார
வீடுகளில் தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல்
மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது.

யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வெறு

வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் கொட்டுவது என்பது வேறு.

இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் அதிகபட்சம் நடந்து
வருகிறது. சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் ( முஸ்லீமாக
இருந்தாலும், முஸ்லீமல்லாதோராக இருந்தாலும் ) சிறிதை சேர்த்து சமைக்கச்
சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம். அபூதர்ரே ! நீர் குழம்பு
சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக ! அதன் மூலம் உமது
அண்டை வீட்டாரை கவனிப்பீராக ! என்று கருணை நபி(ஸல்) அவர்கள் உபதேசம்
செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது
இதிலிருநது பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா ? என்று
கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு
ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்று நபி (ஸல்)அவர்கள் கூற
நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அவர்களது
வீட்டாரிடம் கூறினார்கள் ஆதார நூல்: திர்மிதீ

உணவு வகைகளும், அளவும் கூடுதலாக இருக்கிறதென்றுக் கருதி சமையலறையிலேயே சிறிதை
பக்கத்து வீட்டாருக்காக ஒதுக்குவதில்லை சமைப்பது அனைத்தும் டைனிங் ஹாலுக்குப்
போய் கைகளால் புறட்டப்பட்டு மிஞ்சுவது குப்பைக்குப் போய் விடுகிறது.

*விருந்துகளிலும்** **இதே** **நிலை.*

ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் பிரியானி உணவில் இறைச்சி இட்டு
சமைப்பார்கள். அதனுடன் வெங்காயம் தயிர் கலந்த ஊறுகாய் ஒன்று மட்டும் அதிகமாக
சேர்த்து கொள்வார்கள்.

அது சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில் முன்னேற்றம் அடைந்து
முட்டை சேர்க்கப்பட்டது,

இன்று அதுவும் முன்னேற்றம் அடைந்து அவைகளுடன் சிக்கன் ஃப்ரை, அல்லது சிக்கன்
சிக்ஸ்டி ஃபைவ் சேர்க்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் அதனுடன் காடை, கொக்கு ஃப்ரை ஐட்டங்களும் சேர்க்கப்படலாம்.

பெரும்பாலும் விருந்துகளுக்கு பிரபலங்கள் அழைக்கப்படுவதால் வெரைட்டிகளை
அதிகப்படுத்துகின்றனர் விருந்தினர் அதிலொன்றும், இதிலொன்றுமாக கை வைத்து விட்டு
அப்படியே விட்டு விடுகின்றனர் அவைகளும் பெருமளவில் குப்பைகளுக்கே செல்கின்றன.

*இஸ்லாம்** **தடை** **செய்கிறது.*

இவ்வாறு செய்வதை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது எந்தளவுக்கென்றால் சாப்பிட்டுக்
கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறுத் துண்டு உணவைக் கூட
எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச் சொல்கிறது இஸ்லாம் ...உங்களில் ஒருவர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து
விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும்
அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம் என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)
அவர்கள் அறிவுருத்தினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள். நூல்கள்:
முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி.

ஒரு சிறுத் துண்டைக் கூட ஷைத்தானுக்கு விட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகையில்
தட்டை, தட்டையாக கொண்டுப் போய் குப்பையில் தட்டலாமா ? சிந்தித்தால் சீர்
பெறலாம்

விருந்துகளுக்கு அழைக்கப்படுபவர்களில் ஏழைகளும் இருக்க வேண்டும் என்று ஏற்றத்
தாழ்வுகளைக் கலைந்து சமநிலைப படுத்திய இஸ்லாம் வலியுருத்துவதுடன் ஏழைகள்
அழைக்கப்படாத விருந்தே விருந்துகளில் வெறுக்கத்தக்கது என்றும் கண்டிக்கிறது
இஸ்லாம். வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு
ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக
அபூஹூரைi(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்

ஏழைகள் என்பவர்கள் எங்கிருந்தோ தேடிக் கண்டுப் பிடித்து அழைத்து வரப்படுபவர்கள்
அல்ல மாறாக ஒவ்வொரு பணக்காரர்களின் குடும்பத்திலும் ஏழைகள் இருக்கின்றனர்
அவர்களும் விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதிகபட்சம் உணவுகள் குப்பைக்குப்
போகாது.

ஆனால் விருந்துகளில் கலந்து கொள்ள வரும் பிரபலங்கள் இந்த ஏழைகளைக் கண்டால்
முகம் சுளிக்கலாம் என்றுக் கருதியேப் பெரும்பாலும் இரத்த உறவுகளாகிய ஏழைகள்
அழைப்பதில்ல. அழைத்தாலும் இவர்களுடன் அல்லாமல் வேரொறு ஹாலுக்கு
அனுப்பப்படுவார்கள் அதனால் அவர்களது உணவுகளை குப்பையில் கொட்ட வைத்து அல்லாஹ்
அவர்களை ஷைத்தானின் தோழர்களாக்கி விடுகின்றான்.

அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன்
தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய
அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.