Thursday, June 30, 2011

குஜராத்:கர்ப்பிணி பெண் கற்பழித்து கொலை:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்-CBI

கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்தும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தி கோரத்தாண்டவம் ஆடினர்.



இந்த மிகக்கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் பல்கீஸ் பானு. கர்ப்பிணியான இவரை ஹிந்த்துவ பாசிச பயங்கரவாதிகள் கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து அவரது குடும்பத்தினரை கொடூரமாக கொலையும் செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஜஸ்வந்த் பாயி நாயீ, கோவிந்த பாயி நாயீ, ராதேஷம் ஷா என்ற லாலா வாகீல் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சி.பி.ஐ கோரியுள்ளது. இம்மனுவை மும்பை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த பயங்கரவாதிகளுக்கு 2008 ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

கூட்டுப்படுகொலையையும், பாலியல் வன்புணர்வையும் குற்றவாளிகள் திட்டமிட்டு செய்தார்கள் எனவும், கர்ப்பிணியான தன்னை விட்டுவிடுங்கள் என பல்கீஸ் பானுவின் கெஞ்சலை குற்றவாளிகள் காதுக்கொடுத்து கேட்கவில்லை எனவும் சி.பி.ஐ அம்மனுவில் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு எதிரான ஆதாரங்கள் பொருத்தமில்லாமல் இருப்பதாகவும், பல்கீஸ் பானுவின் வாக்குமூலத்தை மட்டுமே நீதிமன்றம் இவ்வழக்கில் பரிசீலித்துள்ளது என ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதங்களையெல்லாம் கேட்ட உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது

குண்டு வைக்க ரூ 50,000 நிதி அளித்த R.S.S தலைவர்!!!

சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஐந்து நபர்களை குற்றவாளிகளாக சேர்த்து தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரின் பெயர் விமர்சிக்கப்படுகிறது. பயங்கரவாத செயல்களை குறித்து சதித்திட்டம் தீட்ட சபரிடாமில் நடத்திய ரகசிய கூட்டத்தில் அஸிமானந்தா மற்றும் சுனில் ஜோஷியுடன் இந்திரேஷ் குமாரும் பங்கேற்றுள்ளார்.
சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை அஸிமானந்தா-சுனில்ஜோஷி கும்பலுக்கு இந்திரேஷ் குமார் அளித்தார் என்பதும் குற்றப்பத்திரிகையில் கூறப்படுகிறது.
 ஆனால் இவ்வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. 





குற்றவாளிகளின் வாக்கு மூலமும், சூழ்நிலை ஆதாரங்களும் இருந்த பிறகும் கூட இந்திரேஷ் குமாரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தவில்லை. முன்னர் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவரை சி.பி.ஐ விசாரணை செய்ததை என்.ஐ.ஏ புறக்கணித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் பங்கு வெளியான சூழலில் அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றும் கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியா முழுவதும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இந்திரேஷ் குமாரின் பங்கு வெளியான பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அரசின் பகிரங்கமான இரட்டை வேடமாகும். அதே சமயத்தில் இத்தகைய குண்டுவெடிப்புகளில் நிரபராதி என்று விசாரனையில் கண்டறியப்பட்ட டாக்டர் பரூக்கி, சபீர் பேட்டரிவாலா உட்பட பல முஸ்லிம்கள் இன்னும் சிறை கொட்டடியில் பிணை கூட வழங்கப்படாமல் வாடுவது எந்த வகையில் நீதி நியாயம் என்பதை அரசு தான் விளக்க வேண்டும். மேலும் நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியான RSS யின் இந்திரேஷ் குமார் போன்றவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டுள்ளதன் மூலம் நம் ஆட்சியாளர்களின், நாட்டின் பாதுகாப்பைக் குறித்தோ, நீதியை குறித்தோ உள்ள அக்கறை வெட்ட வெளிச்சமாகிறது.


ஓரினச்சேர்க்கை (Homosex) ‘எய்ட்ஸ்’ நோய் கடுமையாக பரவுகிறது!

JUNE 30, நியுயார்க் ஜுன் 30,  ‘ஓரினச்சேர்க்கை’ யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற்கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில்பலவற்றில் கொடுமையான எச்.ஐ. வி கிருமியால் வரும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால்ஓரினச்சேர்க்கையில்  ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாக பாதித்து பரவிக் கொண்டிருப்பது சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழும ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.



அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கையாளர்கள் எச் ஐ வி / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட ‘ஓரின சேர்க்கையாளர்கள்’ எய்ட்ஸ் நோய் தோற்றால் இறந்து போனதாக அஞ்சப்படுகிறது. 

அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சதவீதம் பேர் ‘ஓரினச்சேர்க்கை’ பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதே வேளை, இவ்வாறான ‘எய்ட்ஸ் மற்றும் பால்வினை’ நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் 35 வயதுக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது. இது போன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘ஓரினச்செர்க்கையால்’ எய்ட்ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது.

குறிப்பாக ‘ஓரினச்சேர்க்கையாளர்கள்’ குறிப்பிடத்தக்க அளவில் பெருகிவரும் லத்தின் அமெரிக்காவில், எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளவகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட்ஸ் நோய் தோற்று குறித்த இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதியஉண்மைகள் வெளிவந்துள்ளன.



முதலாவதாக, லத்தீன் அமெரிக்காவில் எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு பிரதான காரணமாக ‘ஓரினச்சேர்க்கை’ விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ‘எய்ட்ஸ் நோயால்’ தாக்கப்பட்டவர்களில் 40% பேர் ‘ஓரினச்சேர்க்கை’ மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதை விட மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், எய்ட்ஸ் பற்றிய சரியான அறிவுள்ள, உயர் கல்வி மற்றும் மருத்துவ துறையில் உள்ள ‘ஓரினச்செர்கையாலர்களிடையே’ நிலவும் ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று நிலவும் தவறான நம்பிக்கையாகும்.

இவ்வாறு ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று கருதும் ‘உயர் கல்வி, வேலை மற்றும் பொரளாதார’ பிரிவினரிடையே உள்ள ‘ஓரினச்சேர்க்கையில்’ ஈடுபடும் 35% பேருக்கு, எய்ட்ஸ் நோய் தோற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில், ‘ஓரினச்சேர்க்கை’ யில் ஈடுபடுவோரிடையே, எய்ட்ஸ், கிளமீடியா, கோனோரியா மற்றும் பிறப்புறுப்பு ஹெர்பிஸ் ஆகிய நோய் பதிப்பு கடந்த பத்து வருடங்களில் 100% க்கும் மேற்பட்ட அளவில் அதிகமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துத்துவாவின் கைகளில் இந்திய பத்திரிகை கவுன்சில்!

JUNE 30, புதுடில்லி: பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராக, "தினமலர்' வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி உட்பட 27 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.  இது மத்திய அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான தேர்வு. தினமலர் பத்திரிகை என்பது ஹிந்துத்துவா பத்திரிகை ஆகும். 



தினமலர் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, அதே நேரம் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு அதரவாக செய்திகளை வெளியிடுவதில் முதன்மை பெற்று வந்துள்ளது. 

ஒவ்வொரு சந்தர்பத்திலும் தினமலர் தன்னை ஒரு ஹிந்த்துதுவா ஆதரவு பத்திரிக்கை என்பதை வெளிப்படியாக காட்டிக்கொள்ள தயங்கியது இல்லை. இவர்களின் ஒருசார்பு எழுத்துக்கள் மூலமாக எத்தனையோ இன, மத கலவரங்களை ஏற்பப்ப்பட்டுள்ளன .

இவர்கள் முஸ்லிம்கள் சம்மந்தமான செய்திகளை உண்மைக்கு புறம்பாக திரித்து எழுதுவதில் வல்லவர்கள். கோவை, மற்றும் இன்னபிற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாகட்டும், தலித் மக்களுக்கு எதிரான கலவரமாகட்டும் இவர்கள் செய்திகளை திரித்து வெளிட்டே வந்தனர். இதன் காரணமாக இவர்கள் பலமுறை பத்திரிக்கை கவுன்சிலுக்கு இழுக்கப்பட்டவர்கள். 



இவர்கள் மேல் பத்திரிக்கை கவுன்சிலில் பலமுறை வழக்குகள் தொடுக்கப்பட்டு அதற்க்கு மறுப்புகள் வெளியிட்டுள்ளனர். இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு செய்திகளை தலைப்பு செய்தியாக்குவார்கள் அதேநேரம் இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அந்த செய்திக்கு மறுப்பு வெளியிடும் பொது அதை ஒரு மூலையில் சிறிய செய்தியாக போட்டு இருட்டடிப்பு செய்வார்கள். 

அதுமட்டுமல்ல இதுவரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக , கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஹிந்துத்துவா வெறியர்களால் நடத்தப்பட்ட மதக்கலவரங்களை திட்டமிட்டு மறைத்தும் இருட்டடிப்பு செய்தும் செய்தி வெளியிட்டு வந்துள்ளார்கள்.  இப்படி பட்ட பத்திரிக்கை தர்மத்தை பேணாத மேல்ஜாதி பார்ப்பன, வர்ணாசிரம வெறி கொண்ட இவர்களை பத்திரிக்கை கவுன்சிலில் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் பத்திரிக்கை துறையை ஹிந்துதுவாவின் கைகளில் கொடுக்கும் ஒரு சதியாகும் இதை நடுநிலையாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

Wednesday, June 29, 2011

மிருகங்களை ஹலால் முறையில் அறுக்க தடை – முஸ்லீம்கள், யூதர்கள் எதிர்ப்பு


அம்ஸ்டர்டம் : நெதர்லாந்தில் உயிரோடு ஹலால் முறையில் மிருகங்களை அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 டென்மார்க் பாராளுமன்றத்தில் நேற்று சிறு மிருகங்கள் உரிமைகள் கட்சி எனும் அமைப்பு மிருகங்களை உயிரோடு அறுக்க தடை செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தது. முஸ்லீம்கள் மிருகங்களை அறுக்கும் ஹலால் முறையும் யூதர்கள் அறுக்கும் கோஷர் முறையும் மிருகங்களை உயிரோடு உள்ள நிலையில் அறுப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கின் கீழ் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இம்மசோதா மேல் சபையில் நிறைவேறினால் இது சட்டமாக்கப்பட்டு விடும். ஆனால் டென்மார்க் நாட்டின் கிறிஸ்துவர்கள் மிருகங்கள் இறந்த பிறகு அறுப்பதுண்டு. இச்சட்டத்துக்கு நெதர்லாந்தின் 10 இலட்சம் முஸ்லீம்களும் 40,000 யூதர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த சிறு மிருகங்கள் உரிமைகள் கட்சி தலைவர் மேரிஅன்னே தீம் “எங்கே மனித அல்லது மிருக சித்ரவதை ஆரம்பிக்கிறதோ அங்கே மத சுதந்திரத்தின் எல்லை முடிந்து விடுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பர்தா குறித்த சட்டத்திருத்தம் தேவை: ஆஸ்திரேலியப் போலீஸôர் கருத்து


மெல்போர்ன், ஜூன் 28: பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆஸ்திரேலியப் போலீஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலிய போலீஸ் துணைக் கமிஷனர் கார்ல் ஓ கல்லகன், பர்தா, ஹெல்மெட் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளை உபயோகிப்பது குறித்தும் அவற்றை அணிபவர்களை சோதனை செய்வது குறித்தும் உரிய சட்டத்திருத்தம் தேவை என்று கருத்து கூறியுள்ளார்.

இப்போதுள்ள சட்டத்தின்படி முகத்தை மறைத்துள்ள பர்தா போன்ற உடைகளை நீக்கச் சொல்லி போலீஸôரால் சோதனை செய்ய முடியாததால், ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்தான் வாகனத்தை ஓட்டுகிறார் என்பதை உறுதி செய்யமுடியாது. ஆகவே இது குறித்து வாகனச்சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர காவல்துறை அமைச்சர் ராப் ஜான்சனிடம் பேசவுள்ளதாக கல்லகன் தெரிவித்தார்.
மேலும் இந்தச் சட்டத்திருத்தம் மூலம் எந்த வகையான முக மறைப்புகளையும் நீக்கி சோதனை செய்ய வலியுறுத்துவேன் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?.


ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!. 

யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.

உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.



முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.

யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.

காரணம் ஒன்றே ஒன்றுதான்!. அதுதான், அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால்!!. அதுமட்டுமல்ல!!. மேலும் அவர்களுக்கு சூழ்ச்சியே தாரகமந்திரமாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது!.

கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்!. பிரிவுகள்!!. ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள். ஆனால் குறிக்கோள்கள் ஒன்றாகவே உள்ளது!. கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரை விட முன்னேறி கொண்டிருகின்றனர்.

ஆனால்......!
ஒரே வேதத்தை கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது!. ஆனால் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நூற்றுகணக்கான ஜமாத்கள்!. இயக்கங்கள்!. பிரிவுகள்!. மற்றும் பிரிவினைகள்!. ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம்!!. கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருப்பதேன்?. 

தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பை கொண்ட கல்விநிலையத்தை தொடங்கி நடத்தியதுண்டா?.

ஆனால்......!
தி.க வின் கி.வீரமணி தொடங்கி, சங்கராச்சாரியார் வரை வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த முஸ்லிம் இயக்கமாவது அதை கண்டாவது சிந்தித்தோமா?.



அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.

ஆனால்......!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.

உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே!.

கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.

கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.

ஆனால்......!
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன!.

40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.

ஆனால்......!
முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்!.

அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.

உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

ஆனால்......!
ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.

ஆனால்......!
இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.

கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

ஆனால்.....!
1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!.

மேற்கண்ட அணைத்து புள்ளிவிவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேலை, அதை காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை!. மனம் இல்லை!. அக்கறை இல்லை!!!.

யூதர்களின் கண்டுபிடிப்புக்கள் உலகை மாற்றியதில் சில:
Micro Processing Chip.- Stanley Mezor (Jewish)
Nuclear Chain Reactor - Leo Sziland (Jewish)
Optical Fiber Cable - Peter Schultz (Jewish)
Traffic Lights - Charles Adler (Jewish)
Stainless Steel - Benno Strauss (Jewish)
Sound Movies - Isador Kisee (Jewish)
Telephone Microphone - Emile Berliner (Jewish)
Video Tape Recorder - Charles Ginsburg (Jewish)

யூதர்களால் நடத்தப்படும் சிறந்த தொழில் நிறுவனங்கள்.
Polo - Ralph Lauren (Jewish)
Coca Cola - Jewish
Levi's Jeans - Levi Strauss (Jewish)
Sawbuck's Howard Schultz (Jewish)
Google - Sergey Brin (Jewish)
Dell Computers - Michael Dell (Jewish)
Oracle - Larry Ellison (Jewish)
DKNY - Donna Karan (Jewish)
Baskin & Robbins - Irv Robbins (Jewish)
Dunkin Donuts - Bill Rosenberg (Jewish)
உலகத்தை மீடியா மூலம் ஆட்டிப்படைக்கும் யூத மீடியாக்கள்.
Wolf Blitzer - CNN (Jewish)
Barbara Walters - ABC News (Jewish)
Eugene Meyer - Washington Post (Jewish)
Henry Grunwald - Time Magazine (Jewish)
Katherine Graham -  Washington Post (Jewish)
Joseph Lelyeld - New York Times (Jewish)

எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்!. உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப்போதும் முன்னெடுத்து செல்லுங்கள். முன்னேற்ற கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயலமாட்டார்கள்!.

எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள்!. கல்வியறிவை பெருக்குங்கள்!. பெறுங்கள்!!. உலகில் தலை சிறந்து விளங்குங்கள்!. இது ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும், தமிழக முஸ்லிம்களே நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!!. ஏனெனில் நீங்களும் உலக முஸ்லிம்களில் அடங்குவீர்கள்!!.

ஆக்கம் அதிரை முஜீப்.

 

Tuesday, June 28, 2011

கிழிந்து போன இந்தியாவின் போலி மதச்சார்பின்மை!

JUNE 29, இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் “மதச்சார்பற்ற அரசு” எனும் சொல்லாட்சி இடம் பெற்றுவிட்டது. ஆனால் நடைமுறையில் என்ன? இந்திய அரசு மதச்சார்பற்றதாகத்தான் உள்ளதா? இந்திய அரசியல் வாழ்வு அப்படித்தான் உள்ளதா?

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத்தும் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலும் சோமநாதர் ஆலயத்தை அரசு செலவில் அமைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினார்கள். நேருகூட பெரும் எதிர்ப்பு காட்டவில்லை, காந்திஜிதான் எதிர்த்தார். ஆலயம் எழுப்ப வேண்டும் என்றால் இந்துக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் எழுப்ப வேண்டுமே தவிர அரசுப் பணத்தில் அல்ல என்றார்.


ஒரு தனிமனிதர் தன்னளவில் மத நம்பிக்கையாளராக இருப்பதற்கும், ஆட்சியாளர் என்ற முறையில் மதச்சார் பற்றவராக இருப்பதற்கும் இடையில் இருக்க வேண்டிய கண்டிப்பான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டினார். ஒர் ஆழ்ந்த மதநம்பிக்கையாளரான காந்திஜியிடமிருந்து வந்த எதிர்ப்பு மிகுந்த அர்த்தபாவமுடையது. இதற்கெல்லாம் சேர்த்துத்தான் அவரது உயிரைப் இந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பலி கொண்டது.

இந்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று சட்டப்புத்தகத்தில் இருந்தாலும் அது பெரும்பான்மை மதமாகிய இந்து மதச்சார்பு அரசாகவே உள்ளது என்பதற்கு அதன் வேறு பல செயல்பாடுகளும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. அரசு நிகழ்ச்சிகள் பலவும், குறிப்பாகத் திறப்பு விழாக்கள் பலவும் இந்து சாஸ்திர, அதாவது பிராமணிய முறைப்படியே நடைபெறுகின்றன. பல மதத்த- வரும் அல்லது மத நம்பிக்கையற்றவரும் கொடுத்த வரிப்பணத்தில் அரசுத் திட்டங்கள் உருவாக்கப்பட்;டவை என்கிற உணர்வே இல்லை.

அரசு அலுவலகங்களில் இந்து கோவில்கள் இருக்கின்றன, இந்து சாமி படங்கள் இருக்கின்றன. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சரஸ்வதி பூஜை நடத்தப்படுகிறது. ஒரு நூலகத்திற்குப் பொறுப்பாளராக ஒரு முஸ்லிம் இருந்தால் அவர் பாடு திண்டாட்டம்தான். அவர் ஏற்காத விக்கிரக ஆராதனை அவர் கண் முன்னாலேயே நடைபெறும். இதனினும் கொடுமை இது தவறு என்கிற உணர்வே அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களிடத்தில் இல்லாதது. அதிகாரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

இதுவெல்லாம் சிறுபான்மை மதத்தவர் உள்ளத்தில் தாங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் எனும் எண்ணத்தை உருவாக்குகிறது, அல்லது அரசு அலுவலகங்களில் இந்து மத விழாக்கள் கொண்டாடப்படுவது போலத் தங்கள் விழாக்களும் கொண்டாடப்பட வேண்டும் எனும் கோரிக்கையைக் கிளப்புகிறது. ஆனால் சிறுபான்மையினர் என்கிற காரணத்தாலேயே அது சாத்தியமில்லாமல் போகிறது.

“சகல மதங்களிடமும் அரசு சமத்துவம்” என்பது காரிய சாத்தியமில்லாதது என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. ஒரே வழி அரசு நிறுவனங்களிலிருந்து சகல மதங்களையும் ஒதுக்கி வைப்பதுதான். அரசு ஊழியர்கள் அவரவர் வீட்டில் தத்தம் மத அனுஃ;டானங்களைச் செய்ய வேண்டுமே தவிர அவர்கள் பணிபுரியும் இடங்களில் அல்ல.

இந்தியாவில் மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. இந்து காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது.

ஹிந்துதுவாவின் சூழ்ச்சியை முறியடிக்க வருகிறார் ராகுல் காந்தி!

JUNE 28, புதுடில்லி: "மத்திய அரசுக்கு நெருக்கடி தரும், போலிசாமியார் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள். அவர்களுக்கு எதிராக, ராகுலை முழு வீச்சில் களம் இறக்கிவிட வேண்டும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோர், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். இவர்களின் போராட்டத்தால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்துவதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசையும், காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.




வரும் ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாகவும், அன்னா ஹசாரே அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற தனிப்பட்ட நபர்கள், தங்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், அரசுக்கு இணையான, அதிகாரமிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தி, நெருக்கடி கொடுக்க முயற்சிக்கின்றனர்.

இவர்களின் போராட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., போன்ற ஹிந்து தீவிரவாத அமைப்புகளும், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உள்ளன. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதை, இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், தடுத்து நிறுத்தி விட முயற்சிக்கின்றனர். பா.ஜ., முகமூடியை அணிந்து கொண்டு, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் போராட்டங்களை, இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.இவர்களுக்கு எதிராக, தீவிரமாக செயல்படுவதற்கு, காங்., பொதுச் செயலர் ராகுலை களம் இறக்க வேண்டும்.


ராகுலுக்கு, மக்களிடையே உள்ள செல்வாக்கு, புகழ் ஆகியவற்றின் மூலமாக, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோரின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம். பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகியோருக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான நபர். அவர்களின் போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் ராகுலை தீவிர பிரசாரத்தில் களம் இறக்க வேண்டும்.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து மத்திய இணை அமைச்சரும், உ.பி., மாநில காங்., மூத்த தலைவருமான பெனி பிரசாத் வர்மா கூறுகையில், "அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோரின் முயற்சிகளை முறியடிக்க, ராகுல் தான் சரியான நபர். அவர்களுக்கு எதிராக, ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். இதற்கு கட்சி மேலிடம் அனுமதிக்க வேண்டும்' என்றார்.

இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்!

தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது.

ஆம்!  இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று ஆங்கிலம் அரபி ஜெர்மனி போன் எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துனையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.


மற்ற மொழிகளில் உள்ள இணையதளங்களையும் நம் தாய் மொழி தமிழில் யாருடைய துனையின்றியும் படித்துக் கொள்ளலாம். எனக்கு ஆங்கிலம் தெரியும், அரபி தெரியும் என்று யாரும் இனிமேல் பில்டப் கொடுக்க முடியாது.

நமக்கு தமில் தெரிந்திருந்தால் போதும் அது சகல மொழிகளும் தெரிந்ததற்கு சமம்http://translate.google.com/  என்று சொல்லப்படும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இன்று 5 இந்திய மொழிகளுக்கான (Bengali , Gujarati , Kannada , Tamil and Telugu)  மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.

எனினும் கூகுள் இதை மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று துள்ளியமான மொழிபெயர்ப்பாக (supported language)  இதை அறிமுகப்படுத்தவில்லை alpha languages என்று சொல்லப்படும் பரிசோதனை மொழி பெயர்ப்பாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இந்த தமிழ் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் முழுவதுமாக முடியவில்லை பரிசோதனையில் உள்ளது போகப் போகப் தமிழ் மொழி பெயர்ப்பின் தரம் மற்ற மொழி பெயர்ப்புகளை போன்று மிகத்துள்ளியமாக இருக்கும்.

தமிழக அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு மார்க்!


மிழகத்தில்  அதிமுக  ஆட்சி அமைத்தவுடன் அமைச்சர்கள் பொறுப்பேற்று, எம்.எல்.ஏ. பதவியேற்பு நடைபெறும் தருவாயில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மரியம்பிச்சை திருச்சி அருகே கார் விபத்தில் பலியானார்.      
 
இதையடுத்து   மரியம்பிச்சைக்கு ஒதுக்கப்பட்ட துறையினை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சரான சின்னையாவுக்கு வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா அமைச்சரவையில் முஸ்லிம்களின் பிரதித்துவம் இல்லை என்ற குறை ஆங்காங்கே முஸ்லிம் சமுதாயத்தில் எதிரொலித்தது. இந்நிலையில்,     
 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான் அவர்களை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. வரும் புதன்கிழமை சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார். இது ஓரளவுக்கு சந்தோஷமான செய்தி என்றாலும் முஸ்லிம்களின் சதவிகிதத்திற்கு ஏற்ற அளவில் இல்லை. எனவே இன்னும் இரண்டு முஸ்லிம் அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா நியமிக்கவேண்டும். புதிய அமைச்சரின் பணி சிறக்க, அவரால் முஸ்லிம் சமுதாயம் பலன் பெற பிரார்த்திக்கிறோம்.

 

Monday, June 20, 2011

துப்பாக்கி சூடு கர்ப்பிணி பெண், 6 மாத குழந்தை, 5 பேர் பலி!

ஜூன் 19 : பீகார், அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ்கஞ்சில்பொதுவழி சாலையை ஆக்கிரமிக்க முயன்றார் ஹிந்து பயங்கரவாத இயக்கமான பாரதிய ஜனதாவின் மாநில தலைவரின் மகன் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர் முஸ்லிம் கிராமவாசிகள்.

அவர்கள் மீது கடந்த ஜூன் 4-ஆம் தேதி பீகாரின் காவி பயங்கரவாத போலீஸ் நடத்திய அநியாயமான துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணி பெண், ஆறுமாத குழந்தை உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 

இதைப்பற்றி, பாலிவுட் திரைப்பட இயக்குநரும், சமூக ஆர்வலருமான மகேஷ்பட், சமூக சேவகர் ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பு பீகார் போலீஸின் கொடூர முகத்தை வெளிக்கொணர்ந்தது.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர் சுசில்குமார் மோடியின் மகன்நடத்தும் குளுகோஸ் தொழிற்சாலைக்காக பல வருடங்களாக நாங்கள் உபயோகிக்கும் சாலையை ஆக்கிரமிக்க முயன்றதை கண்டித்து போராட்டம் நடத்தினோம்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட மதில் சுவரை இடித்ததற்கு போராட்டம் நடந்த சென்றோம். அப்பொழுது பழிவாங்கும் விதமாக போலீஸ் கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியது. இதில் கர்ப்பிணியான பெண், ஆறுமாத குழந்தை உள்பட 5 பேரை போலீஸ் சுட்டுக்கொன்றதாக கிராம மக்கள் கூறினார்.

மேலும், கைக்குழந்தைகளுடன் குண்டடிப்பட்டு விழுந்த பெண்களையும், குழந்தைகளையும் லத்தியால் அடித்த போலீஸ் வீடுகளில்நுழைந்து கண்ணில் கண்டவற்றையெல்லாம் உடைத்தது என ஆமினா என்ற பெண் கூறினார்.

போலீசின் குண்டடிபட்டு கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உரக்க’கலிமா’ சொல்லிக் கொண்டிருந்த எனது மகனை ’கலிமா சொல்வதை நிறுத்து’ எனக்கூறி போலீசார்அடித்து உதைத்தார்கள் என ஆமினா காத்தூன் கூறும் பொழுது அவரது கண்கள் கண்ணீரை சொரிந்தன.

எல்லோரும் பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை கொண்டாடும் வேளையில் தான் நாங்கள் உண்மை நிலையைகண்டறிய பீகாரின் போர்ப்ஸ்கஞ்சிற்கு சென்றோம் என மகேஷ் பட் கூறுகிறார். சச்சார் கமிட்டியின்அறிக்கையில் கூறியபடி முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான சமூக சூழலில் வாழும் மாவட்டம் தான் போர்ப்ஸ்கஞ்ச் உள்படும் அராரியா மாவட்டம்.

இத்தகையதொரு சூழலில் வாழும் மக்களை இவ்வாறு கொன்றொழித்து விட்டா சிறுபான்மை நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்? மகேஷ் பட் கேட்கிறார். போலீஸ் வகுப்புவாதமயமாக்கப்படும் வேளையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மெளனம் சாதிப்பது மர்மமாக உள்ளது. நிதீஷ்குமாரை சந்திப்பதற்கு அவரை 26 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஒரு முறை கூட அவர் பதிலளிக்கவில்லை என மகேஷ் பட் கூறினார்.

கிராமவாசிகளின் உடலில் பாய்ந்த 14 தோட்டாக்களில் ஒன்றை தவிர மீதமுள்ள 13 தோட்டாக்களும் இடுப்புக்கு மேலே துளைத்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைப்பதற்கு அல்ல மாறாக கொலை செய்வதே பீகார் போலீஸின் நோக்கம் என ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.

போர்ப்ஸ்கஞ்சில் விசாரணை நடத்திய உண்மை கண்டறியும் குழு சேகரித்த தகவல்களை வெளியிடமகேஷ் பட்டும், ஷப்னம் ஹாஷ்மியும் இணைந்து டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர். கொல்லப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ஒருலட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என இருவரும் கோரிக்கை விடுத்தனர். சனிக்கிழமை காலை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியாகாந்தியை சந்தித்த இவர்கள் நாளை மனித உரிமை கமிஷனிடம் புகார் அளிப்பர்.

இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில், இந்த ‘நாய்களின் கிராமத்தை’ சிறையாக மாற்றுவோம் என பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் கூறிய மறுநாள் தான் கர்ப்பிணியையும், ஆறுமாத பிஞ்சு க்குழந்தையையும் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார். ஜூன் மூன்றாம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு மேற்கண்ட மிரட்டலை பீகார் துணை முதல்வர் விடுத்தார்.

சிந்திக்கவும்: இந்தியாவில் ஹிந்து பயங்கரவாதம் எப்படி கட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு முஸ்லீமும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. இன்னும் பிரியாணி ஆக்கி தின்று கொண்டு இருந்தால் ஈழத்தில் தமிழ் மக்களை எப்படி சிங்கள பயங்கரவாதிகள் ஒரு பாரிய இனப்படுகொலை மூலம் அழித்தார்களோ அதே நிலைதான் உங்களுக்கும்.

குஜராத், நெல்லி, பாகல்பூர், பீவாண்டி, இப்படி உங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை பார்த்தும் நீங்கள் திருந்தியதாக தெரியவில்லை. ஈழத்தின் போர்வீக குடிகளான தமிழ் மக்கள் அனாதைகளாக சொந்த நாட்டை அயல்நாடுகளில் அகதிகளாக வாழ்கிறார்களோ அது போல் நீங்களும் வாழவேண்டி வரும்.

இந்தியாவில் இருந்து ஹிந்து பயங்கரவாதத்தை துடைத்தெறிய பெரும்பான்மையான நல்ல இந்து மக்களோடும், இந்து தலைவர்களோடும் இணைந்து செயல்படாதவரை இதை வென்றெடுப்பது கடினம். இந்த ஹிந்து பயங்கரவாதிகளால் இந்தியா சிதறுண்டு போகும் காலம் வெகுதுலைவில் இல்லை என்றே நமக்கு எண்ணத்தோன்றுகிறது.

கழுதையா? குதிரையா?

JUNE 19, ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் சிலமாந்தூர் போலீஸ் நிலைய சரகத்தில் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள ஓடிகொண்டா சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை நடத்தினார்கள். அப்போது, காரின் உள்ளே ஒரு பையில் ரூ.35 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த கார் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கார் சத்யசாய் மத்திய அறக்கட்டளைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.


கார் டிரைவர் ஹரீஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சோதனையில் பிடிபட்ட பணமானது, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சத்யசாய்பாபாவின் தனிப்பட்ட அறையான யஜுர் மந்திரில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிந்திக்கவும்:
 சாய்பாபா என்பவர் மேஜிக் வித்தைகளை காட்டி பொதுமக்களை ஏமாற்றி சம்பாதித்த பணமும், நகைகளும் அவர் மரணத்திற்கு பின்னால் அவர் தனி அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

கடவுளின் அவதாரமாக தன்னை பெருவாரி இந்து மக்களிடம் காட்டிக்கொண்டு படித்த இந்து பண்டிதர்களிடம், மேதாவிகளிடம் கூட இவரின் கோமாளித்தனம், தெய்வீகமாய் எடுபட்டது.

சிலநேரங்களில் மனிதன் இறந்தபின்னால்தான் அவன் செய்த செயல்கள் குறித்த உண்மைகள் வெளியே வரும். "புழுதி அடங்கிய பிறகுதான் தான் தெரியும் சவாரி செய்தது கழுதையா, குதிரையா என்று" என்ற பழமொழி போல்.




பலஸ்தீனர்களின் வாழிடங்களைத் தகர்க்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை


ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் நிலங்களில் இருந்து பலஸ்தீனர்களை முற்றாகத் துடைத்தெறியும் ஸியோனிஸக் கொள்கையின் அடிப்படையில் கர்னாப், ஃபாரா, நெகெவ் ஆகிய மூன்று கிராமங்களில் இருந்த பலஸ்தீனர்களின் வாழிடங்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை புல்டோஸர்களால் இடித்து நிர்மூலமாக்கியுள்ளது.

இது குறித்துக் கருத்துரைத்த பிராந்தியக் கவுன்ஸில் தலைவர் இப்றாஹீம் அல் வகீலீ, "அரபுகளின் வாழிடங்களைத் தகர்த்து நிர்மூலமாக்குவதென்பது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபைக்கு மிகுந்த மகிழ்ச்சிதரும் ஒரு விடயமாகவே உள்ளது. மேற்படி மூன்று பலஸ்தீன் கிராமங்களில் உள்ள பலஸ்தீன் மக்களின் வீடுகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினால் வாரந்தோறும் இடிக்கப்பட்டே வருகின்றன" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.


"ஸியோனிஸ ஆக்கிரமிப்பு அதிகார சபையின் உள்ளக அமைச்சினால் அமுல்நடாத்தப்பட்டு வரும் கட்டடத் தகர்ப்பு நடவடிக்கை மூலம் இம்முறை அழிக்கப்படுவது வெறுமனே கட்டடங்கள் மட்டுமல்ல, பலஸ்தீனர்களின் வாழ்க்கையும் தான்" என்று குறிப்பிட்ட அவர், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை சரியாக பலஸ்தீன் மாணவர்கள் தமது இறுதித் தவணைப் பரீட்சைகளை எதிர்நோக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமது கட்டடத் தகர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் பலஸ்தீன் மாணவர்களை உளவியல் ரீதியான அழுத்தத்துக்குள்ளாக்கி, அவர்களைப் பரீட்சையில் தோல்வியடையச் செய்வதன் மூலம் கல்வியில் பின்னடைய வைப்பதே ஆக்கிரமிப்பாளர்களின் திட்டமாகும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

சிறுமியின் கண்களை கத்தியால் குத்தி கற்பழிப்பு!

JUNE 19,  உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் 14 வயது சிறுமி போலீஸ் நிலையத்தில் கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு மீண்டும் ஒரு கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கன்னூஜ் மாவட்டம் குர்புர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி. 14 வயதான அவளை அந்த கிராமத்தைச் சேர்ந்த குல்தீப், நிரஞ்சன் ஆகியோர் கற்பழிக்க முயன்றனர். இதை தடுக்க சிறுமி போராடினார்.


இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சிறுமியின் கண்களை கத்தியால் குத்தி கற்பழித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் அந்த சிறுமியின் இடது கண் பார்வை பறிபோனது. வலது கண் அதிகமாக சேதம் அடைந்து உள்ளது.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய மறுத்த சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

சிந்திக்கவும்: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும் நாடுகளில் இந்தியா இப்பொழுது 4 வது இடத்தில் இருக்கிறது போகிற போக்கை பார்த்தால் சீக்கிரம் முதலிடத்தை அடையும் என்று சொல்லலாம்.


அதுபோல் இந்த போலீஸ் துறை இவர்களை போலீஸ் என்று சொல்வதை விட கிரிமினல்கள் என்று சொல்லலாம் வேலியே பயிரை மேய்வது போல, இந்த கொடியவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் முதலில் கொண்டுவரவேண்டும்.

பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் வேறு எங்கும் இல்லை அதன் மொத்த உருவமே காவல்துறைதான். இந்த கயவர்கள் துறையை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவர மக்கள் போராடவேண்டும்.

இல்லையேல், வீரப்பன் போல ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும் இவர்களை அழித்தொழிக்க, பல்லாயிரக்கணக்கான நக்சல்பாரிகள் வேண்டும் இவர்கள் கொட்டத்தை அடக்க. அப்படியாவது இவர்கள் திருந்துகிரார்களா என்று பார்ப்போம்.

Sunday, June 19, 2011

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஆளுநர் பர்னாலா

சென்னை: தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தனது ஐந்து ஆண்டுப் பதவிக்காலத்தை இன்றுடன் நிறைவு செய்கிறார். அடுத்து விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படவுள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்தவர் பர்னாலா. 1990ம் ஆண்டு முதல் முறையாக தமிழக ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். ஆனால் திமுக ஆட்சிக்கு எதிராக செயல்பட வற்புறுத்தப்பட்டதால் இவர் மாற்றப்பட்டு பீகாருக்கு போனார். பின்னர் அரசியலில் மீண்டும் குதித்த பர்னாலா, எம்.பியாகி மத்திய அமைச்சராகவும் செயல்பட்டார்.

பின்னர் மீண்டும் ஆளுநர் பதவிக்குத் திரும்பினார். உத்தராஞ்சல் மாநிலம் உருவாக்கப்பட்டபோது அதன் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிறகு ஆந்திராவுக்கு வந்தார். இடையில் 2004ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மீண்டும் தமிழக ஆளுநரானார். 



பின்னர் 2006ம் ஆண்டு மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இன்று அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. கருணாநிதி முதல்வராக இருந்தபோதெல்லாம் ஆளுநராக இருந்தவர் என்ற பெருமை பர்னாலாவுக்கு உண்டு.

இன்றுடன் விடை பெறும் பர்னாலா மீண்டும் இப்பதவியில் தொடர வாய்ப்பில்லை என்று தெரிகிறது. புதிய ஆளுநர் விரைவில் அறிவிக்கப்படக் கூடும். இருப்பினும் இதுவரை அடுத்த ஆளுநர் யார் என்பதை மத்திய அரசு அறிவிக்காமல் உள்ளது.

புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை ஆந்திரா அல்லது கர்நாடக ஆளுநர்கள் வசம் தமிழக ஆளுநர் பதவி தற்காலிகமாக ஒப்படைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழார்வம் மிக்க பர்னாலா

ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் பர்னாலா தமிழ் ஆர்வம் மிக்கவர். தமிழில் பேசுவதை விரும்புபவர். தமிழைக் கற்றுக் கொண்டனர். தமிழகத்தின் மீது தனி அன்பு வைத்திருந்த பர்னாலா, தமிழகத்தில் பணியாற்றுவதில் மிகுந்த ஆர்வமும், விருப்பம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் அருண்ராய் தகவல்


ராமநாதபுரம்,ஜூன்.18
 
சிறுபான்மையின மாணவ&மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் ராய் தெரிவித்துள்ளார். 
தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய மற்றும் பாரசீக மதங்களை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நடப்பு ஆண்டு (2011 -12) பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
கல்வி உதவி தொகைகள் பெற முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீ தத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். 


கல்வி உதவி தொகை வேண்டி பூர்த்தி செய்யப்பட்ட புதுப்பித்தல் விண்ணப்பங்களை 4.7.2011க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை 11.7.2011க்குள்ளும் கல்வி நிலையங்களில் மாணவ-மாணவிகள் அளிக்க வேண்டும. இந்த கல்வி உதவி தொகை பெறுவதற்கு மாணவ-மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். 
கல்வி நிலையங்கள் மாணவ-மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய படிவத்தில் புதிய உதவி பெறுவதற்கான கேட்பு பட்டியலை 20.7.11க்குள்ளும், புதுப்பித்தலுக்கான கேட்பு பட்டியலை 15.7.11க்குள்ளும் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். எனவே சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த கல்வி உதவி தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் அருண்ராய் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
நன்றி;தினத்தந்தி


குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்


குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள்.

கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்!

கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப் பட்டவை.

குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ ''வெறுமையானது''. அதாவது எதையுமே கற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால் காணுவதும், காதுகளால் கேட்பதும், தொடு கையினால் உணருவதும், நாக்கினாலே ருசிக்கின்றதும் அவர்களது 'புதிய' மூளையில் பதிந்து மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
நியூரோன்களின் கோர்வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள். குழந்தையின் மூளை கற்றுக் கொள்வதற்கு வசதியான கருவியாகும். குறுகிய காலத்தில் குழந்தை எல்லாம் கற்றுக் கொள்ளும். தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே போகும். எதிலும் தேடல் ஆர்வம் என கல்வி வாழ்க்கை வரை இது நீளும். நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி,விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும்.


இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கி வந்து விளையாட வேண்டும்.

சிக்கலான நடப்புகளையும், சுற்றுச் சூழலையும் குழந்தைகள், தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்பு களை ஏற்படுத்திக் கொள்வர்.

அவர்கள் 12-18 மாத வயதை எய்தும் போது, கண்பார்வை. திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம் நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில் நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில் இருத்திக் கொள்வார்கள்.

அதே வேளையில் நாம் வெளிப் படுத்தும் சந்தேகங்களையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, ஏதோ ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும் போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக் காட்டி அதன் பெயரென்ன என்று குழந்தை கேட்கும் போது நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொண்டால், அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்பு படுத்தாமல் இலகுவாக மறந்து விடும்.

பிள்ளைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்று ஆண்டுகள் வேகமாக இருக்கும். குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும், அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும்



ஆரியப் பேய்களை அடித்தோட்ட வேண்டும்!

JUNE 19, மதுரை: ""திராவிட இனம் என்பதே இல்லை. திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர்,'' என, மதுரையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி குறிப்பிட்டார்.

மதுரைக் கல்லூரியில் ஆங்கில துறை பேராசிரியர் சுப்ரமோனி எழுதிய "பரமஹம்சா-த வேதாந்திக் டேல்' நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலை வெளியீட்டு சுப்ரமணியசாமி பேசியதாவது: அமெரிக்காவில் பொருளாதார மேம்பாடுக்கு உதவும் இந்துத்துவா கொள்கை என்ற தலைப்பில் என்னை பேச அழைத்தனர்.

அந்தளவுக்கு அமெரிக்காவில் இந்துத்துவா, சனாதன தர்மத்தை கை பிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியா ஆசிரமங்களில் அமெரிக்க சாதுக்கள் அதிகளவில் உள்ளனர். திராவிட இனம் என கருணாநிதி போன்றோர் பேசுகின்றனர். திராவிட இனம் என்பதே இல்லை.


திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர். தென்னிந்தியாவின் ஒரு பகுதி திராவிடம் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். ஆங்கிலேயர் திராவிடர், ஆரியர் என இன பாகுபாட்டை ஏற்படுத்தினர்.

சிந்திக்க; திராவிடன் என்று ஒர் இனமே இல்லையாம் , முதலில் கொஞ்சம் அறிவியல் உண்மைகளைப்பார்ப்போம். ஆரிய, திராவிட இனங்கள் இருப்பது உண்மை. Biology படித்தவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். மனித உடலில் உள்ள செல்களில் இரண்டு இடங்களில் டி.என்.ஏ. இருக்கிறது.

1 ) உட்கரு (Nucleus) 2 ) மைட்டோகாண்ட்ரியா. இதிலே உட்கரு டி.என்.ஏ. என்பது தாயிடமிருந்து பாதி குரோமோசோம்கள், தந்தையிடமிருந்து பாதி குரோமோசோம்கள் இணைந்து உருவாகிறது. மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. தாயிடமிருந்து மட்டுமே செல்கிறது. இந்தியாவின் பலதரப்பட்ட மக்களை ஆராய்ந்து எடுக்கப்பட்ட அறிவியல்பூர்வமான ஆய்வுகள் ஒரு விஷயத்தை தெளிவாக கூறுகின்றன.

தென்னிந்தியர்களுடைய ( பிராமணர் அல்லாதோர் ) உட்கரு டி.என்.ஏ. மற்றும் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. இரண்டுமே திராவிட ( தென்னிந்திய ) வகையை சார்ந்தவை. அதாவது அவர்களது தாய்வழி குரோமோசோம்களும் தந்தை வழி குரோமோசோம்களும் திராவிட வகையை சார்ந்தவை. மாறாக பிராமணர், வட இந்தியாவின் பெரும்பாலான மக்களுடைய செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. திராவிட வகையை சார்ந்தவை.

ஆனால் அவர்களுடைய உட்கரு டி.என்.ஏ.வில் தாய்வழி திராவிட வகை குரோமோசோம்களும், தந்தைவழி ஆரிய வகை குரோமோசோம்களும் உள்ளன. இதிலே ராஜபுத் போன்ற இனத்தாருடைய தந்தைவழி குரோமோசோம்கள் நார்டிக்- ஆரியர்களுடைய குரோமோசோம்களை ஒத்தும், பிராமணர்களுடைய தந்தை வழி குரோமோசோகள் மத்திய ஆசியா மற்றும் யூதர்களின் குரோமோசோம்களை ஒத்தும் காணப்படுகின்றன.


இப்போ இதனோடு சிந்துசமவெளி நாகரீகம் அழிக்கப்பட்டதையும், அந்த மக்களின் பெண்களை ஆரியர்கள் அபகரித்துக்கொண்டனர் என்று சொல்லப்படுவதையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை புரியும். இந்த ஆய்வை பிரிட்டிஷ்காரர்கள் செய்யவில்லை. பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் இதை பொத்தாம்பொதுவாக சொல்லிவிட முடியாது.

ஏன்னா இதை சொன்னது ஃபின்லாந்து நாட்டு அறிவியலமைப்பு. சொல்லப்பட்ட காலமும் சுதந்திரத்துக்கு முன்பு அல்ல பிரித்தாளும் சூழ்ச்சி என்று சொல்வதற்கு. இதை அவர்கள் 2000வது ஆண்டு வெளியிட்டனர். அப்போதிருந்த பா.ஜ.க. ஆட்சி இதை வெளியே பரவலாக தெரிந்துவிடாதபடி பார்த்துக்கொண்டது. இதை தவிர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஆய்விலும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய குதிரையின் படிமங்கள் கிடைக்கவில்லை.

ஆரியர்கள் தமது குதிரைப்படையின் காரணமாகத்தான் திராவிடர்களை தோற்கடித்தனர் என்பதும், 5000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சிந்துசமவெளி நாகரீகம் அழிக்கப்பட்டது என்பதையும் கவனிக்கவும். தவிர இந்த 5000 வருடத்துக்குட்பட்ட மன்னர்கள்தான் குதிரைப்படை வைத்திருந்தனர். இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என்னதான் விளக்கம் சொன்னாலும் ஏற்க விரும்பாத சிலருக்காக இந்த விளக்கம்.: ஆரியர்கள் திராவிடர்கள் என்று இரண்டு இனங்கள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை.

ஆணும், ஆணும் சேர்ந்து பிள்ளை பெற்றுக்கொள்ள முடியும், பூமியை பாயாக சுருட்டமுடியும், மனித இனம் உருவாகி 1 லட்சம் வருடங்களே ஆகியுள்ள நிலையில் 17 லட்சத்து 50 ஆயிரம் வருடத்துக்கு முன்னாடி ஒரு மனிதர் பாலம் கட்ட முடியும், பூமியும் வராகமும் சேர்ந்து மனிதக்குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும் என்று சிலர் நம்பும்போது ஆரியர், திராவிடர் என்று நம்புவது முற்றிலும் சரியே.

இது வரலாறு: ஆரிய திராவிடப் பகுப்புகள் ஆங்கிலேயரின் சூழ்ச்சியாம் ! ஆங்கிலேயர் ஆண்டது வெறும் 200 ஆண்டுகள் தான். ஆனால் வாழ்ந்த இடம் வறண்டுபோனதால் கைபர், போலன் கணவாய்கள் வழியாக ( நடக்க முடியாத பெண்களையும் குழந்தை முதியோரையும் அம்போவென விட்டுவிட்டு) இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள் நாடாளும் ஆசையில் தம்மை உயர்குலத்தோர் என்றும், கடவுளுக்கு நெருக்கமானவர்கள்.. என்றும் சொல்லிக்கொண்டு அரசர்களுக்கு ஆலோசகராக இருந்து ஆட்சிகளைக் கைப்பற்றியது வரலாற்றில் உள்ளது.

தென்னகத்தில் (கேரளம், தமிழ்நாடு என்று பிரிக்கப்படாத காலத்தில்) ஒற்றுமையாய் வாழ்ந்துவந்த திராவிட மக்களிடையே சாதி மதப் பாகுபாடுகளை ஏற்படுத்தி அவற்றின் பெயரால் அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆரியர்களின் கொட்டத்தை திப்புசுல்தான் ஒழித்தார் என்பதும் வரலாற்று உண்மை .

தென்னகத்தின் பூர்வகுடிகள் தான் திராவிடர்கள். அவர்கள் மதம் என்ற ஒன்றால் பிரித்தறியப்படவில்லை.  இப்போதும் செல்லமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் மோர்ப்பந்தல் அமைக்கும் மரைக்காயரையும், பிள்ளைக்கு உடல்நலமாக வேண்டும் என்று தர்ஹாவில் மந்திரித்து புனிதநீர் தெளித்துக்கொள்ளும் பிராமணர் அல்லாத மற்ற இந்துக்களையும் எனக்குத் தெரியும் .

ஆதி திராவிடர் பகுதியில் கட்டப்பட்ட கோவிலுக்கு குடமுழுக்கு செய்யமறுத்த குருக்களையும் எனக்குத் தெரியும். இப்போது சொல்லுங்கள் யார் திராவிடர் என்று ... "A debt should be paid off till the last penny; An enemy should be destroyed without a trace". இது ஆரிய மாமணி சாணக்கியனின் வாக்கு. இதைப்பின்பற்றும் இந்துத்துவாவினரின் ஊதுகுழல் தான் இந்த சுப்பிரமணிய சாமி. 

வரவிருக்கும் ஆபத்து; இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்கள் இப்படித்தான் வேரோடும் வேரடிமண்ணோடும் அழித்தொழிக்கப் படுகிறார்கள். ஆட்சியதிகாரத்தைக் கைக்கொள்ள நினைக்கும் இந்துத்துவாவின் எதிரி திராவிடர்களின் சமயப்பொறை தான் . ஆகவே திராவிடர்களை அழிக்கத் தலைப்படுகிறார்கள் , அதின் முதல்படிதான் சுப்பிரமணிய சாமியின் இந்தப் பேச்சு. இத்தகையோரின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு நாம் இரையாகிவிடக் கூடாது..

இல்லையெனில் இன்று, கணினிக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம், தமிழ் எழுத்துக்களும் பிராமியிலிருந்து வந்தவை என்று சொல்வதுபோல் நாளை சொல்வார்கள் திராவிடர்களை ஆளப் படைக்கப்பட்டவர்கள் ஆரியர்கள், மனிதர்களாக வாழும் முறை மனு சாஸ்திரம் என்று.

திராவிடம் என்பது ஒரு பகுதியெனில் அதில் பன்னெடுங்காலமாய் வாழ்வோர் திராவிடரல்லாமல் வேறு யார்? தமிழர்களே நாம் தான் திராவிடர்கள், இந்த ஆரியப் பேய்களை அடித்தோட்ட வேண்டும்.விசமக் கருத்துக்களைப் பரப்பும் சுப்பிரமணிய சாமி போன்றோருக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட வேண்டும்.




Saturday, June 18, 2011

முத்துப்பேட்டையில் இஸ்லாத்தை அறிவோம்-KNOW ISLAM பயிற்சி முகம்

முத்துப்பேட்டையில்  இஸ்லாத்தை அறிவோம் என்ற  தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா  சார்பில் பயிற்சி முகம் நேற்று (17.6.2011) கொய்யா மஹாலில் நடைபெற்றது. 


இதில் மாநில மற்றும் மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
நம்மை புனரமைப்போம்,குடும்பத்தை புனரமைப்போம்,சமுதாயத்தை புனரமைப்போம் என்ற தலைப்பில் பேச்சாளர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சி மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

காஸா முற்றுகை சர்வதேச சமூகத்தின் மெத்தனப் போக்கின் விளைவே


"கடந்த ஐந்து வருட காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் அமுல் நடத்தப்பட்டுவரும் காஸா மீதான சட்டவிரோத முற்றுகை குறித்து சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றன. இந்த மெத்தனப் போக்கினால், சர்வதேச சட்டத்துக்குப் புறம்பான இந்த முற்றுகையில் சர்வதேச சமூகமும் பங்குகொண்டுள்ளது என்றுதான் நாம் கருதவேண்டி இருக்கின்றது" என காஸா முற்றுகைக்கு எதிரான ஐரோப்பிய அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், "திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் நிவாரண உதவிப் பொருட்களை எடுத்துக்கொண்டு ஃப்ரீடம் ஃபுளோடில்லா – 2 காஸாவை நோக்கிப் பயணப்பட உள்ளது. இந்தப் பிரயாணத்தின் போது, நிவாரண உதவிக் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கோ பலருக்கோ ஏதேனும் இடர்ப்பாடுகள் நேர்ந்தாலும்கூட, அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஏனையோர் தமது பணியை முன்னெடுத்துச் செல்வர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் மனிதாபிமானமற்ற முறையில் காஸாவில் அமுல்நடத்தப்பட்டு வரும் சட்டவிரோத முற்றுகையின் ஐந்தாம் வருட நினைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில், "காஸா மக்கள் மீது அநீதியான முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் முற்றுகை, பலஸ்தீனர்களின் அன்றாட சுமுக வாழ்வை முற்றாகச் சீர்குலைத்து, அவர்களின் இருப்பையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், எரிபொருள், கட்டட நிர்மாணப் பொருட்கள், அடிப்படைப் பாவனைப் பொருட்கள் முதலான பெருவாரியான நுகர்வுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்காக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை மேற்படி ஐரோப்பிய அமைப்பு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் எதேச்சதிகார முற்றுகையின் விளைவால் காஸா மக்களிடையே போஷாக்கின்மை, சுகாதார சீர்கேடுகள், கல்விப் பின்னடைவு, வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி என்பன நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு, மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் ஸ்தம்பித நிலையை எட்டியுள்ளது" என காஸா முற்றுகைக்கு எதிரான ஐரோப்பிய அமைப்பு தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.