Saturday, September 24, 2011

முஸ்லிம் என்பதற்காக பள்ளி மாணவனைத் தாக்கிய ஆஸி. இனவெறியர்கள்

சிட்னி: தான் ஒரு முஸ்லிம் என்பதற்காக உடன் பயிலும் சக மாணவர்கள் 20 பேர் தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்கினர் என்று சிட்னி பள்ளி மாணவன் ஹமித் மாமோசாய் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர் ஹமித் மாமோசாய் (15). அவரை அதே பள்ளியில் படிக்கும் 20 மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில்,

20 பேர் என்னைத் தாக்கினர். அடி நன்றாக அடி. அவனுக்கு இது தேவை தான். ஏய், தீவிரவாதி எங்கிருந்து வந்தாயோ அங்கேயே சென்றுவிடு. அங்கு போய் எதையாவது வெடிக்கச் செய் என்று அந்த மாணவர்கள் கூறினார்கள் என்றார்.

இந்த தாக்குதலில் ஹமித் சுயநினைவை இழந்தார். உடனே சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பெரிய காயம் ஏதும் இல்லை.

கடந்த 2 ஆண்டுகளாகவே எனது சகோதரனை இனத்தைக் கூறி திட்டி வந்துள்ளனர். இதனால் அவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளான் என்று ஹமிதின் சகோதரி நாஜியா தெரிவித்தார்.


அவன் பள்ளியில் இது குறித்து புகார் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. தலைமை ஆசிரியர் ஏன் இப்படி இருக்கிறார், அவர் ஏன் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்த முயற்சிப்பதில்லை. இந்த தாக்குதல் எதற்காக நடந்தது என்பது மற்ற பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஹமிதின் தாய் ஹஸ்னா தெரிவித்தார்.

ஒரு மாணவன் 20 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருவதாகவும் கல்வித் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஹமித் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கவுன்சிலிங் கொடுக்க பள்ளி ஏற்பாடு செய்துள்ளது. அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இன வெறி தாக்குதல்களை சகித்துக்கொள்ளாது. இதற்கு முன்னதாக மாணவர்களை இனத்தின் பெயரைக் கூறி திட்டியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போலீஸ் வழக்காகிவிட்டதால் இது குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

சென்னையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்ப்பு-216 பயணிகள் தப்பினர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை மிகப் பயங்கரமான விபத்து மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. ரன்வேயில் ஒரு விமானம் நின்று கொண்டிருந்தபோது இன்னொரு விமானத்தை தரையிறங்க அனுமதி கொடுத்ததால் இந்த விபரீதம் நேர இருந்தது. ஆனால் விமானியின் துரித செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சென்னையிலிருந்து இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று டெல்லிக்குப் புறப்பட்டது. ரன்வேயில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே விமானம் ரன்வேயிலேயே நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தில் 132 பயணிகள் இருந்தனர்.


இந்த நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் இறங்க அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த விமானம், ஜெட் ஏர்வேஸ் விமானம் நின்றிருந்த ரன்வேயில் தரையிறங்க எத்தனித்தது. அப்போது ரன்வேயில் ஒரு விமானம் நின்று கொண்டிரு்பபதைப் பார்த்த ஏர் இந்தியா விமானி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் விமானத்தை தரையிறக்காமல் அப்படியே மேலே ஏற்றி விட்டார். ஏர் இந்தியா விமானம் மட்டும் தரையிறங்கியிருந்தால் மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இரு விமானங்களிலும் சேர்த்து மொத்தம் 216 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். அத்தனை பேரும் ஏர் இந்தியா விமானியின் சாதுரியத்தால் உயிர் தப்பினர்.


பின்னர் சிறிது நேரம் ஏர் இந்தியா விமானம் வானில் வட்டமிட்டபடி இருந்தது. பின்னர் ஜெட் ஏர்வேஸ் விமானம் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது. அது பத்திரமாக தரையிறங்கிய பின்னரே விமான நிலையத்தில் அத்தனை பேருக்கும் போன உயிர் திரும்பி வந்தது.

இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

விசாரணைக்கு உத்தரவு

இரு விமானங்கள் மோதவிருந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு விமான நிலைய ஆணையக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

   


முஸ்லிம்கள் பயங்கரவாதத்தின் அனுதாபிகள்: FBI போதனை


அமெரிக்க உளவு பிரிவான FBI தனது உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கு போது அமெரிக்காவில் பிரதான, பெரும்பாலானமுஸ்லிம்கள் பெரும்பாலும் பயங்கரவாதத்தின் அனுதாபிகளாக இருகின்றார்கள் -main stream” American Muslims are likely to be terrorist sympathizers- இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் கொடூரமானவர்கள் “violent” .  போன்ற மிகவும் மோசமான முறையிலான பயிற்சி வழங்கும் முறை அம்பலமாகியுள்ளது.
அதில் அல்லாஹ்வின் தூதரையும் ”வழமைக்கு புறம்பான   நடத்தைகளை கொண்ட மத குழுவின் தலைவர்” – “cult leader” என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது என்று wired.com என்ற இணையத்தளம் தான் கைப்பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதேபோன்று  யுத்தம் நிரந்தரமானது என்றும் சமாதானம் தற்காலிகமானது என்று இஸ்லாம் கூறுவதாகவும் முஸ்லிம்கள் அதை விசுவாசிப்பதாகவும் “War is the rule and peace is only temporary” குறிபிடுகின்றது. மேலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் , யூதர்களைவிடவும் வன்முறை நிறைந்தவர்கள்.  இவை போன்ற முஸ்லிம்களை மிகவும் மோசமான விரோதிகளாக, பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பயிற்சியைத்தான் அமெரிக்க FBI தனது ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றமை அம்பலமாகியுள்ளது.
இஸ்லாமிய நடைமுறையான நன்கொடை வழங்குதல் யுத்ததிற்கு பணம் சேகரிக்கும் நடைமுறைதான் என்றும் அந்த பயிற்சி கோவை குறிபிடுகின்றது .
அமெரிக்காவில் முஸ்லிம்கள் பல ஒடுக்கு முறைகளை சந்திக்கின்றனர், பலர் போலியான குற்றசாட்டின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அமெரிக்காவின் உள்நாட்டு உளவு பிரிவான FBI க்கு தகவல் வழங்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர் , மறுப்பவர்கள் போலியான குற்றசாட்டுக்களில் வதை முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் மஸ்ஜித்துகள் பல அடக்கு முறைகளை எதிர்கொள்கின்றது , இரகசிய கமராக்கள் பொருத்தப்பட்டு அவை கண்காகிக்கபடுகின்றது.  மஸ்ஜிதுகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றது இன்னும் மஸ்ஜிதுகள் முற்றாக எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் கடத்தல், கைது, விசாரணை ,சித்திரவதை, கொலை போன்ற அமெரிக்க அரச பயங்கரவாத்தின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர் இவற்றை அமெரிக்காவின் மனித உரிமைக்கான அமைப்புகள் கூட பெரிதாக கண்டுகொள்ளவதில்லை. அமெரிக்காவில் பல மஸ்ஜிதுகள் எரிக்கப்பட்டுள்ளன. பல மஸ்ஜித் இமாம்கள் கைதாகி சிறைகளில் வதையுருகின்றனர். சில இமாமகள்  சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் வரிசையில்

கடந்த 2009 அக்டோபர் 28ஆம் திகதி அமெரிக்க உள்நாட்டு உளவு துறையான FBI யினால் லுக்மான் அமீன் அப்துல்லாஹ் என்ற டெட்ராயிடில் நகர மஸ்ஜித் இமாம் 21 தடவைகள் சுடப்பட்டு கொல்லபட்டார் என்பது சிறந்த உதாரணம். அரசுக்கெதிராக தாக்குதல் நடத்த மக்களை தூண்டிவிடுகிறார் என்ற போலியான குற்ற சாட்டு இவர்மீது சுமத்த பட்டிருந்தது. இவர் தேவையற்ற முறையில் சுட்டுகொள்ளபட்டார் என்பது பின்னர் வெளியாகியது.
இதேபோன்று அமெரிக்க இராணுவ புலனாய்வு இயந்திரங்களினால் வதைக்கபட்ட டாக்டர் ஆபியாவை அமெரிக்க நீதித்துறை 86 வருடங்கள் சிறையில் தள்ளியது இவரின் எந்தவொரு விடையத்திலும் கூட சர்வதேச அளவில் புகழ் பெற்ற அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பான அமஷ்டி இன்டர்நேஷனல் கூட வாயை திறக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.
அதேபோன்று தாரிக் மேஹன்னா என்ற டாக்டர்  இவர் 28 வயது நிரம்பிய இளம் முஸ்லிம் அமெரிக்க டாக்டர் இவர் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் உயர்கல்வி கற்று Phd பட்டம் பெற்ற ஒரு புத்திஜீவி இவரின் இஸ்லாமிய துடிப்பு , சமூக சேவை , மாற்று மத சமூகங்கள் மத்தியில் இவரின் சமாதான செயல்பாடுகள் போன்றவற்றால் மிகவும் அறியப்பட்டவர் இவரிடம் இருந்த சமூக தொடர்பாடல், முஸ்லிம் சமுகத்தில் இவருக்கு இருந்த செல்வாக்கு, முஸ்லிம் வாலிபர்களுடன் இவருக்கு இருந்த உறவு என்பன அமெரிக்காவின் கழுகு கண்களான FBI உளவு துறைக்கு தேவைபட்டது.
பல தடவைகள் தாரிக்கை அணுகிய FBI தமக்கு தகவல் வழங்கும் ஒருவனாக வேலை செய்யுமாறு கேட்டது முஸ்லிம் சமுகத்தின் இருக்கும் இஸ்லாமிய துடிப்புள்ள வாலிபர்கள் பற்றி தமக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டது அதற்கு தாரிர் திடமாக மறுத்துவிட்டார். இதன் காரணமாக இவரை கடந்த  2008 ஆம் ஆண்டு சிறையில் தள்ளியது இவர் நியாயமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 696 நாட்கள் என்பது குறிபிடத்தக்கது.
இவ்வாறான ஆயிரக்கணக்கான சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்த வண்ணமுள்ளது. மேலே சொன்னவை சில உதாரணங்கள் மட்டும்தான். இதற்கான பிரதான காரணம்தான் தற்போது வெளியாகியுள்ள FBI பயிற்சி முறை அமெரிக்க அரச பாதுகாப்பு தரப்பு அமெரிக்க முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாதிகளின் அனுதாபிகள் என்றும் போதிக்கின்றமை.
இந்த கீழ்த்தரமான பயிற்சி முறை அமெரிக்க பொது மக்களையும் முஸ்லிம்கள் மீது தூண்டிவிட காரணமாக அமைகின்றது என்பதை ஊகிக்க முடியும் , அமெரிக்க அரசாங்கம் அரச முஸ்லிம்களுக்கு எதிரான அரச பயங்கரவாத்தை ஊட்டி வளர்கின்றது என்பதுதான் தற்போது வெளியாகியுள்ள தகவல் சொல்லும் செய்தி. இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அமெரிக்காவின் உண்மை முகம் தெரிந்த சிலருக்கு  இதுவொன்றும்  புதிய செய்தியல்ல.

மேற்கத்திய நாடுகளை சாடிய ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் : அமெரிக்கா வெளிநடப்பு

ஐ.நா பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசிய ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத் மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடினார்.
அந்நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதைக் குறை கூறி அவர் அவ்வாறு சாடினார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் பொதுச் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஹிட்லர் செய்த கொடுமைகளை காரணமாக வைத்துக் கொண்டு இஸ்ரேலுக்கு மேற்கு நாடுகள் அசைக்க முடியாத ஆதரவு தந்து வருகின்றன. அதே நேரத்தில் அவை பாலஸ்தீன மக்களின் மீதான ஒடுக்குமுறைக்குத் துணை போகின்றன என்று முகமது அஹமதி நிஜாத் கூறினார்.
தன்னுடைய உரையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதல் சந்தேகத்திற்கிடமானது என்றும் இச்சம்பவத்துக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட ஒசாமா பின்லேடனை நீதியின் முன் நிறுத்தாமல் அவரைக் கொன்று கடலில் தூக்கி எறிந்தது ஏன் என்றும் முகமது அஹமதி நிஜாத் கேள்வி எழுப்பினார்.

தங்கள் ஆதாயம், ஏகாதிபத்தியம் ஆகிய இலக்குகளை நிலைநாட்ட மேற்கு நாடுகள் போலித்தனமாகவும் ஏமாற்றுவித்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. ராணுவத் தலையீடுகள் மூலம் பல்வேறு நாடுகளின் அடிப்படைக் கட்டுமானத்தை சீர்குலைப்பதுடன் அந்நாடுகளை பலவீனப்படுத்துகின்றன.
தங்களையே சார்ந்திருக்க வைப்பதன் மூலம் அந்நாடுகளின் வளங்களை மேற்கு நாடுகள் கொள்ளையடித்து வருகின்றன என நிஜாத் கண்டித்தார்.
நிஜாத் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்க பிரதிநிதி பாதியிலேயே எழுந்து வெளியே சென்றார். இதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனின் 27 நாட்டுப் பிரதிநிதிகளும் ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.
அவரது உரை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்கப் பிரதிநிதி மார்க் கோர்ன்பிளெப் தன்னுடைய மக்கள் பற்றிப் பேசுவதற்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை நிஜாத் கோட்டை விட்டு விட்டார். இழிவான சதிக் கோட்பாடுகளை ஐ.நா பொதுச் சபையில் அவர் அரங்கேற்றியிருக்கிறார் என்று கூறினார்.

தான் ஒரு தீவிரவாதி என்பதை மறைக்க உண்ணாவிரத நாடகம்! சங்கர் சிங் வகேலா !!


ஆமதாபாத் : மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று நாள் உண்ணாவிரதம் முடித்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா, மாதவடியா ஆகியோர், திரளான தொண்டர்களுடன், ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமம் அருகேயுள்ள நடைபாதையில் இவர் மோடியை விட இரண்டு மணி நேரம் அதிகமாக இருந்து உண்ணாவிரதம் இருந்து முடிதுள்ளார். 

அப்போது செய்தியாளர்களிடம் வகேலா கூறியதாவது; ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ள வசதிகளுடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். அவரது இமேஜை அதிகரித்துக் கொள்வதற்காக, தான் ஒரு தீவிரவாதி என்பதை மறைக்க இந்த உண்ணாவிரத நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்.

இப்போது, குஜராத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது. வானத்தில் உள்ள சொர்க்கம், குஜராத்தில் தரை இறங்கிவிட்டதா? குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இன்னும் அந்த வழக்கு முடியவே இல்லையே. உண்ணாவிரததின் மூலம் தன்னை நிரபராதி என காட்ட முயற்சிதுள்ளார்.

இந்த உண்ணாவிரதத்துக்காக, பொதுமக்களின் வரிப் பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் என்ன? மேலும் 3000 க்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று விட்டு இப்பொழுது இல்லை என்று மத சார்பு நாடகம் ஆடுகிறார். இவை அனைத்துமே ஏமாற்று வேலை.


குஜராத்துக்கு தொழி்ல் தொடங்க வரும் தொழிலதிபர்களை, நரேந்திர மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று கூறுமாறு  நிர்பந்திக்கப்படுவதாகவும், மோடி ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், மேலும் நான் தான்  உண்மையான் காந்தியவாதி, நான் எந்த அரசியளுக்க்காகவும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. மக்களின் நலனுக்காக மட்டுமே உண்ணாவிரதம் இருந்துள்ளேன்  என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்.

மேலும் ராம் விலாஸ் பஸ்வான்,லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் கூறும்போது; தன்னை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தரம் உயர்த்திக் கொள்வதற்காக, உண்ணாவிரதம் என்ற அரசியல் நாடகத்தை நரேந்திர மோடி அரங்கேற்றுகிறார். மதச்சார்பற்ற தலைவராக, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், தன் மேல் உள்ள மதச் சார்பு முத்திரையை, அவர் அழித்து விட முடியாது’ என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் இந்த உண்ணாவிரத்தை விமர்சித்துள்ளது. அதுபற்றி அக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் கூறும்போது, “நாட்டில் 78 சதம் மக்கள் தினசரி 20 ரூபாய்தான் சம்பாதிக்கிறார்கள். 80 சதம் மக்கள் தினசரி பட்டினியால் தவிக்கிறார்கள். ஒரு வேளை சாப்பிட்டு, மீதி நேரம் பட்டினியால் தவிக்கும் அவர்களைப் பற்றி விவாதிக்க யாரும் இல்லை” மேலும் தேவை இல்லாத ஒன்று  என்று மோடியின் உண்ணாவிரதத்தை விமர்ச்சித்துள்ளார்.

Sunday, September 11, 2011

முத்துப்பேட்டையில் அமைதி காக்க வைத்த போலீஸ்

ஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் என்றபெயரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஹிந்துத்துவாதிகள் தமிழகத்தில் ஒருவகை பதட்டத்தை ஏற்ப்படுத்தி வருகின்றனர். இவர்கள் வேண்டும் என்றே கலவரம் செய்யும் நோக்கோடு நடத்தும் இந்த ஊர்வலத்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது.

தமிழகத்தில்
எல்லா பகுதிகளிலும் முடிந்துவிட்ட இந்த விநாயகர் ஊர்வலம் முத்துப்பேட்டையில் மட்டும் கடைசியாக நடைபெறுவது வழக்கம் அது போல் நேற்றும் நடைபெற்றது. கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பிரச்சனையும் நடைபெறாமல் நடந்த விநாயகர் ஊர்வலம் இந்த வருடமும் அமைதியாகவே நடைபெற்றது. இதற்க்கு முக்கிய காரணம் காவல் துறை, இந்த வருடம் பாதுகாப்பிற்காக திருச்சி, கரூர், சென்னை,நாகை, திருவாரூர், திருத்துறைப்பூண்டியிலிருந்து சுமார் 2000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 
 
இந்த ஊர்வலத்திற்காக  DIG,SP போன்ற உயர் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜாம்புவானோடையிலிருந்து ஆரம்பம் செய்து ஆசாத்நகர், பங்களா வாசல் வழியாக எடுத்து சென்று பாமனியாற்றில் கரைக்கப்படுவது வழக்கம். ஆசாத்நகர், பங்களா வாசல் இடம் வந்தால் போதும் இவர்கள் கோஷமும்,ஆட்டங்களும் அதிமாகும். ஆனால் நேற்று இரண்டு பக்கமும் போலீஸ் நடுவில் ஊர்வலக்காரர்கள் என்று வெகு விரைவாக அவர்களை அனுப்பினர். பங்களா வாசல் வந்தததும் நாங்கள் பழைய வழியாக தான் செல்வோம் (தெற்குத்தெரு)என ஒரு கும்பல் தடுப்பை தகர்க்க முற்ப்பட்டனர். ஆனால் அவர்களை போலீசார் அடித்து விரட்டினர்.

இதுபோன்று
ஒவ்வொரு வருடமும் போலீசிற்கும், பொதுமக்களுக்கும் பங்கம் விளைவிக்கும் இந்த விநாயகர் ஊர்வலம் எப்போது தடைபடும்..?

டெல்லி குண்டுவெடிப்பு மிருகத்தனமானது – அப்சல் குரு

டெல்லி:கடந்த புதனன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு கோழைத்தனமானது மட்டும்மல்லாமல் மிருகத்தனமானது என்பதாக பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது டெல்லி சிறையில் வாடிவரும் அப்சல் குரு கூறியுள்ளார்.

எந்த ஒரு மதமும் அப்பாவிகளை கொலைச் செய்ய கூறுவதில்லை என்று கூறியுள்ள அப்சல், இதில் என் பெயரை சமந்தப்படுத்துவது என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



இது என் பெயரை கலங்கப்படுத்தவும், அரசியல் லாபதிற்கும் செய்யப்படுவதாக தன் வக்கீல் என்.டி.பஞ்சொளி மூலம் விடுத்துள்ள அறிக்கையில் அப்சல் கூறியுள்ளார்.

முன்னதாக, ஹுஜி அமைப்பின் பெயரில் வந்த இமெயிலில் அப்சலை விடுவிக்கும் முகமாக டெல்லி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிந்திக்கவும்.

தூக்கு தண்டனை கைதியாக இருந்தால்லும், அவர்கள்ளுடைய கருத்தையும், கேல்கவேண்டும் என்பதுதான் உலக நியதி.அது எல்லாம் அப்சல் குரு என்ற மனிதனிடம் மட்டும் மீற படுவதின் மர்மம்தான் என்ன?குற்றம் செய்த நபர் சொல்வதை நான் கேற்க முடியாது என்று சொன்னால் எதற்கு கோர்ட், எதற்கு நீதிபதி, நாட்டை உளவு துறை என்னும் பொய்யனிடம் ஒப்படைத்து விட்டு போங்கள்! மக்களின் வரி பணமாவது மிச்ச படட்டும்.

இது தான் ................................................இந்திய ஜன ...................................நாஆஆஆ ..........................யகமா?

Saturday, September 10, 2011

தமிழா! தமிழா! சிந்தி செயல்படு!! அடிமையல்ல நீ ?

தாழ்த்தப்பட்ட  மக்கள் வழிபடுவதற்கு என்று தனியாக தெய்வங்கள் உண்டு.

முன்பெல்லாம் இந்த விநாயகரை தாழ்த்த பட்டமக்கள் வழிபட அனுமதிக்க மாட்டார்கள்.ஏன் என்றால் அது, உயர் ஜாதிக்காரர் உடைய தெய்வம் என்று இருந்தது.

ஐயோபாவம்! இன்று எவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்த மக்களை பிரிதார்களோ? வழிபாடு செய்வதை தடுத்தார்களோ?


அந்த மக்களே இன்று விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் அந்த உயர் ஜாதி கார்களின் தெய்வமான அந்த பிள்ளையாரை ரோட்டில் போட்டும்,  ஆற்றில் போட்டும், மிதி மிதி என்று மிதிக்கும் போது, ஒன்று தெளிவாக தெரிகிறது!

வணங்கு வதற்கு அனுமதி இல்லை!, மிதிப்பதற்கு அனுமதி உண்டு! என்ன மதமோ? என்ன வழிபாடோ? என்னுடைய தாழ்த்தப்பட்ட மக்களே! (பார்ப்பனன் உனக்கு சூட்டிய பெயர்) இந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

எந்த தெய்வத்தின் பெயரால் உங்கள்ளையும் நம் முன்னோர்களையும் பிரிதார்களோ? எந்த தெய்வத்தை வழிபட உன்னையும், உன் முன்னோர்களையும் தடுத்தார்களோ? அந்த தெய்வம் இன்று நாடு ரோட்டில்! விடாதே! சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்! முடிந்தால் வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த மிதி விழாவை தினமும் கொண்டுவர முயற்சி செய் .மிதி வழிபாடு தொடர வாழ்த்துக்கள்.

இந்த தெய்வ வழிபாட்டை உனக்கு சொல்லி கொடுத்த மும்பை சிவசேனா தலைவனின் மனைவி இறந்த போது அவன் செய்த முதல் வேலை வீட்டில் இருந்த எல்லா பிள்ளையார் சிலைகளையும் எடுத்து வெளியில் எறிந்ததுதான்!இது தான் இவர்களின் தெய்வ வழிபாடு விளங்கிகொள்!

தமிழா! தமிழா! சிந்தி செயல்படு!? அடிமையல்ல நீ இந்த பரதேசிகளுக்கு !!

உண்மையை உணர்வோம்!

டெல்லி: மீண்டும் டெல்லி கோர்ட் வளாகத்தில் குண்டு வெடிப்பு அநியாமாக அப்பாவிகள் பலி. சிறிதுகாலம் அடங்கி இருந்த குண்டு வெடிப்பு தொடர்கிறது. காரணம் என்ன?

இதுவரை நடந்த எல்லா குண்டு வெடிப்புகளும் நடத்தியது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்று தெரிந்தும் அவர்களை இதுவரை கைது செய்யாமல் ஹசறேவுக்கு பின்னால் போனதன் விளைவு  அப்பாவிகள் மீண்டும் பலி.

குண்டு வெடித்தவுடன் ஒரு மதத்துடன் அதை உடனே இணைக்கும் நமது உளவுத்துறை, ஏன்  குற்றவாளிகளின் பக்கம் திரும்ப மறுக்கிறார்கள்?திரும்பியால் மாவீரன் கர்கறேயின் கதி  வந்துவிடும் என்ற பயத்தினால் என்றால் இவர்கள் ஏன்? இந்த வேலைக்கு வந்தார்கள்? சம்பளம் வாங்கிக்கொண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு சாதகமாக நடந்து நாட்டை சுடுகாடு ஆக்குவதற்காகவா!!


தைரியம் இல்லாத காங்கிரஸ் அரசே? இவர்களை பற்றி சரியாக சரியாக தெரிந்த திக் விஜய் சிங்கிடம் உள்துறையை கொடு! அப்போது தெரியும் இந்தியாவை அழிக்க நினைப்பவர்கள் யார் என்று? குண்டு வெடித்தால் முஸ்லிம் இயக்கம் தான் என்று ஒரு வரியில் பொய் சொல்வதற்கு எதற்கு உளவுத்துறை?எதற்கு பிரதமர்? 


எதற்கு கோர்ர்ட்? நம் நாட்டில் தான் உண்மையே பொய்யாக்குவதற்கும் பொய்யே உண்மை ஆக்குவதற்கும் பணம் வாங்கிகொண்டு வார்த்தை விபச்சாரம் செய்வதற்கு பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் நிறையவே உள்ளபோது தனியாக பொய்சொல்ல மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கிகொண்டு பொய் சொல்லுவதற்கு என்று தனியாக ஒரு துறை தேவையா?


ராஜகோபாலன் கொலை! நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!


மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி கடைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன. இதில் அன்றைய ஆளும் கட்சியினர் ஆதரவோடு தான் கடையை வைத்துள்ளோம் என்று கடை வைத்துள்ளவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து இந்து முன்னணி பிரமுகர் ராஜகோபாலன் தலைமையில் கடைகளை அப்புறப்படுத்துமாறு போராட்டம் நடத்தி, சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதனால் கோபப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் கூலிப்படையை தயார் செய்தது. அதிகாலையில் வீட்டில் செய்தி தாள் படித்துக்கொண்டிருந்த ராஜகோபலனை, பால் கொடுக்கப் போவதாக கூறி வீட்டினுள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தனர்.

சம்பவ இடத்திலேயே ராஜகோபாலன் பலியானர். அப்போது இந்தியாவின் துணை பிரதமராக இருந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பலர் மதுரைக்கு நேரில் வந்து ராஜகோபலன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் நடந்த 10.10.1994 அன்று முதல் 3 மாதம் பதட்டமாகவே இருந்தது மதுரை.  இந்த வழக்கு தொடர்பாக அன்றைய ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலரை போலீசார் விசாரணை செய்தனர். (நன்றி: நக்கீரன்)

சிந்திக்கவும்: ஹிந்து முன்னணி ராஜகோபாலன் கொல்லப்பட்டதும் அப்பாவி முஸ்லிம் இளஞசர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பார்ப்பன ஏடுகள் இந்த கொலையை செய்தது முஸ்லிம்கள் என்று பக்கம் பக்கமாக கவர் ஸ்டோரி போட்டார்கள். இந்த வழக்கில் ராஜ உசேன், சீனி நைனா முஹம்மது, மற்றும் பலர் சிறையில் பலவருடங்கள் அடைக்கப்பட்டார்கள். பல முஸ்லிம் இலஞசர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

இப்பொழுது உண்மை வெளிவருகிறது இது கோவில் நிலத்தில் கடை வைத்திருந்த ஆக்கிரமிப்பாளர்கள் செய்த கொலை என்று. அதற்குள் முஸ்லிம்கள், முஸ்லிம் இயக்கங்கள் என்று தினமணி, தினமலர் போன்ற ஏடுகள் எழுதி முஸ்லிம்களை குற்றப்பரம்பரை ஆக்கி வேடிக்கை பார்த்தார்கள். என்று மதவெறி ஒழிந்து மனித நேயம் மலருமோ!

ஈரானில் போதை மருந்து கடத்திய 184 பேருக்கு மரண தண்டனை!


தெஹ்ரான்:  ஈரான் நாட்டில் போதை மருந்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நான்கு  பேருக்கு செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  இவர்களுடன் சேர்த்து போதை மருந்து கடத்தியமைக்காக இந்த ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரணதண்டனைக்கு உள்ளானோரின் பெயர் விவரம் ஹமீத் கே, காசிம் பி, உசைன் ஜே, சியாமக் எம் என்று அரசு தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில்தான் அதிகம் பேருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு இது 179 ஆக இருந்தது. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் உண்மையல்ல இவற்றைவிட அதிகம் பேர் மரண தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்று மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட மரண தண்டனை அவசியம், எங்கள் நீதிமன்றங்களில் விரைவாகவும் விரிவாகவும் விசாரணை நடத்திய பிறகே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்று ஈரானிய அரசு விளக்கம் அளிக்கிறது.
கொலை, பாலியல் பலாத்காரம், ஆயுதம் தாங்கியவர்கள் நடத்தும் கொள்ளை, போதை மருந்து கடத்தல், கள்ளத் தொடர்பு ஆகிய குற்றங்கள் புரிந்தால் நீதிமன்றத்தால் நன்கு விசாரிக்கப்பட்டு பிறகே மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்கிறது ஈரான்.

சிறை'யூரப்பாவாக மாறப்போகும் எடியூரப்பா...?


ர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் கடவுள் பக்தியும் அதையும் தான்டி ஜோதிடத்திலும் மூட நம்பிக்கைகளிலும் அவருக்குள்ள பற்று அலாதியானது. கோயில்களுக்கு இவர் ஆட்சியில் இருந்தபோது தாரளமாக அள்ளி வழங்கியிருக்கிறார். இருந்தாலும் அவரது பதவியை அவரால் வணங்கப்பட்ட எந்த கடவுளாலும்[?] காப்பாற்ற  முடியவில்லை. இப்போது 'முன்னாள்' ஆகியிருக்கிறார்  எடியூரப்பா.
 
சுரங்க ஊழல் காரணமாக கர்நாடக அரசுக்கு ரூபாய் 15 ஆயிரத்து 85 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், முதலமைச்சர் எடியூரப்பாவின் குடும்ப அறக் கட்டளைக்கு முறைகேடாக ரூ.30 கோடி வழங்கப்பட்டதாகவும் லோக் அயுக்தா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது.
 
இந்நிலையில் காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலுக்கு, 6 மாதத்திற்கு முன்பு ரிஷபம் வாகனம் தங்கத்தில் செய்ய ரூபாய் 40 லட்சம் எடியூரப்பாவால் வழங்கப்பட்டது. இந்த பணம் சுரங்க ஊழலில் சம்பந்தப் பட்ட பணமா என சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று  செய்திகள் கூறுகின்றன.

 
சனிஸ்வரபகவான் கோவிலுக்கு மட்டுமன்றி, எடியூரப்பா கோயில்களுக்கு அள்ளி வழங்கிய  நன்கொடைகள் அனைத்தும் அவரது சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டதா? அல்லது அரசு மற்றும் ஊழல் நிதியிலிருந்து வழங்கப்பட்டதா என்பதை சட்டம் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். இப்போது எடியூரப்பா அள்ளி வழங்கிய பட்டியலை பார்ப்போம்;
  • பெங்களூர் அருகே இருக்கும் மாதா அமிர்தானந்தமாயி நிறுவனங்களுக்கு ரூ. 5 கோடி மற்றும் 15   ஏக்கர் நிலம்.
  • வொக்கலிக்கர்களின் அடிச்சுச்சங்கிரி என்ற தளத்திற்கு ரூ. 5 கோடி.
  • எடியூர் சித்த லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்திற்கு ரூ. 10 கோடி.
  • ஆந்திராவில் திருப்பதியில் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 5 கோடி.
  • கேராளவில் சபரிமலையில் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 5 கோடி.
  • திபெத்தில் மானசேராவர் செல்லும் புனித பயணிகளுக்கு ரூ. 3 கோடி.
  • குல்பர்காவில் தத்தாத்ரேய பீடத்திற்கு ரூ. 2 கோடி.
  • சிக்மகளூர் ரம்பாபுரி ஸ்ரீ சோமேஸ்வர மடத்திற்கு ரூ. 3 கோடி.
  • சிக்மகளூர் ஹரிஹரபுரா மடத்திற்கு ரூ. 1 கோடி.
  • 15 ம் நூற்றாண்டு துறவி கவிஞர் கனகதாசாவின் பிறந்த ஊரான காகிலேனேவிற்கு ரூ. 10 கோடி.
  • சிரவனபெலகோலா பாஹுபலி கோவில் வளாகத்திற்கு ரூ. 5 கோடி.
  • சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா பிறந்த குடலசங்கமாவில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ. 5 கோடி.
  • மந்த்ராலயா விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
  • காசி விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
  • ஹரித்வார் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
மேற்கண்ட பட்டியல் மொத்த தொகை 59 .75 கோடியாகும்.
[புள்ளி விவரங்கள் நன்றி; இந்தியாடுடே டிசம்பர் 2010 ]
 
இவை அனைத்தும் எந்த பணத்திலிருந்து எடியூரப்பாவால் வழங்கப்பட்டது என்பதை மத்திய அரசும்- சி.பி.ஐயும் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தால் உண்மை வெளிவரும். மேலும் கோடிகளை கொட்டியும் 'எடி'யின் நாற்காலி தப்பவில்லையே? அதோடு போனாலும் பரவாயில்லை. நிலமோசடி வழக்கில் எடியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியாகியுள்ளதால் எப்போது சிறைக்கதவு உள் வாங்குமோ என்ற கவலையில் வேறு இருக்கிறார் பரிதாபமான நிலைதான் எடியூரப்பாவுக்கு. 

Tuesday, September 6, 2011

வீதியில் விநாயகர்! பீதியில் மக்கள்!

SEP 06, : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் இதர இந்து அமைப்புகளின் சார்பில், சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த, ஆயிரத்து 341 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. திருவல்லிக்கேணியில், தடை செய்யப்பட்ட பகுதியில், ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்ட, 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிந்திக்கவும்: ஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் என்றபெயரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஹிந்துத்துவாதிகள் தமிழகத்தில் ஒருவகைய பதட்டத்தைஏற்ப்படுத்தி வருகின்றனர். இவர்கள் வேண்டும் என்றே கலவரம் செய்யும் நோக்கோடு நடத்தும் இந்த ஊர்வலத்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது.


போக்குவரத்து மற்றும் சுகாதார கேடு, பொது அமைதிக்கு பங்கம், அரசுக்கு பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் வீண் செலவு, கலவர பீதி என்று வடநாட்டு விநாயகரால் தமிழக மக்கள்படும் துயரம் எண்ணில் அடங்காதது. இது போதாதென்று இதர சமூதாய மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக ஊர்வலமாக போய் அவர்கள் மதத்தை பற்றியும், அவர்களை பற்றியும் மோசமான வார்த்தைகளை பேசி, அவர்களின் வழிபாட்டு தளங்களில் செருப்பு, மற்றும் கற்களை எரிந்துகலவரங்களை
உண்டாக்கி மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கிறார்கள்.

விநாயகர் வழிபாடு என்பது தமிழர்களின் வழிபாடு கிடையாது, இது ஆரிய வந்தேறி பிராமணர்களால் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. . ஒவ்வொரு வருடமும் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் இந்த காவி காலிகள் கலவரம் நடத்தாமல் இருந்ததில்லை. இப்படி விநாயகர் ஊர்வலம் என்றாலே கலவர பீதியில் தமிழகம் ஆழ்த்தப்படுவது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது.

Saturday, September 3, 2011

ராம் தேவுக்கெதிராக என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் வழக்கு


புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ். யோகாகுரு பாபா ராம் தேவுக்கெதிராகவும், அவரது ஹரித்துவார் ஆசிரமத்திற்கெதிராகவும் என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் வழக்கு தொடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றது தொடர்பாக அந்நியச் செலாவணிச் சட்ட மீறல் சம்பந்தப்பட்ட வழக்கு இது.
அமெரிக்கா, பிரிட்டன், நியூஸிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ராம்தேவ் சட்டவிரோதமாக பணம் பெறுவதை என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது. சமீபத்தில் மட்டும் ஏழு கோடி ரூபாயை பிரிட்டனிலிருந்து கைப்பற்றியுள்ளது.
ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடம், திவ்யா யோகா மந்திர் ஆகிய அறக்கட்டளைகளும் சட்டவிரோதமாக பணம் பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்காட்லாந்திலுள்ள லிட்டில் கம்ப்ரரே தீவிலுள்ள ராம்தேவின் உல்லாச பங்களா குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவையல்லாமல் இன்னபிற நாடுகளிலுள்ள ராம்தேவின் சொத்துகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ராம்தேவின் கட்டுப்பாட்டிலுள்ள 50 அறக்கட்டளைகளின் நடவடிக்கைகளும் விசாரணையிலிருந்து தப்பவில்லை.

ராம்தேவின் சட்டவிரோதமான கோடிக்கணக்கான ரூபாய் பணப்போக்குவரத்து குறித்து சமீபத்தில் ரிசர்வ் வங்கி என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஆனால் நான் சட்டவிரோதமாக ஒன்றும் செய்யவில்லை என்று ராம்தேவ் ஹரித்துவாரில் கூறினார்.
கடந்த 20 வருட பொதுவாழ்வில் தனக்கெதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தான் உரிய பதில்களைக் கூறி வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி


அங்காரா : காஸா முற்றுகையைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் காஸாவுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அதை பற்றி ஐ.நா குழு விசாரணை நடத்தியது. இன்று வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் இஸ்ரேல் அதீத பலத்தைத் தேவையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ,நாவின் அறிக்கையைத் தொடர்ந்து துருக்கி இஸ்ரேலின் தூதர், முக்கிய இஸ்ரேல் அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதோடு ராணுவ ஒப்பந்தங்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. இஸ்ரேல் முறைப்படி மன்னிப்பு கேட்காததாலும் இறந்தவர்களுக்கு இழப்பீடு தராததாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவு துறை அமைச்சர் அஹ்மத் தவுடோக்லு கூறினார்.
"இரண்டாம் செயலாளர் அந்தஸ்துக்கு மேலுள்ள அனைத்து இஸ்ரேல் அதிகாரிகளும் புதன்கிழமைக்குள் துருக்கியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்" என்றும் கூறினார். காஸா பகுதிக்குள் யாரும் செல்ல முடியாமல் மூடியுள்ள இஸ்ரேலின் செயலைச் சரியானது என கூறியுள்ள ஐ,நாவின் கூற்றைத் தாம் ஏற்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். "அதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் இப்பிரச்னை எழுப்பப்படும்" என்றும் கூறினார்.

ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளையில் குறைபாடு ஏற்பட்டதால் கடந்த இரு நாட்களில் 11 குழந்தைகள் பலியாகியுள்ளன.

புதன்கிழமை 4 குழந்தைகளும், வியாழக்கிழமை 7 குழந்தைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியாகியுள்ளன. இந்தக் குழந்தைகள் அனைவருமே 5 வயதுக்குட்பட்டவர்கள்.


பல்வேறு உடல் நல பிரச்சனைகள் காரணமாக குழந்தைகள் நல வார்டில் சேர்க்கப்பட்டிருந்த இவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் சிஸ்டம் சரியாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் ஆக்ஸிஜன் வழங்கும் 4 வென்டிலேட்டர்களில் 2 செயல்படவில்லை என்பதும், இந்த வார்டில் பணியில் இருக்க வேண்டிய 25 நர்சுகளில் 5 பேர் மட்டுமே பணியில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் மாதத்துக்கு 50 குழந்தைகள் வரை பலியாவதாக ஏற்கனவே புகார் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தானே,பன்வேல் குண்டுவெடிப்பு: 2 ஹிந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு 10 வருடம் கடுஞ்சிறை


தானே:2008-ல் தானேயிலும், பன்வேலிலும் நடந்த 3 குண்டுவெடிப்புகளின் வழக்கில் ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியுள்ளது.

ஹனுமந்த் கஸ்கரி, விக்ரம் வினய் பாவே ஆகியோர்தான் அந்தத் தண்டனை பெற்றவர்கள். இவர்கள் குற்றவாளிகள் என்று திங்கள்கிழமை நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்திய தண்டனைச் சட்டம், குண்டுவெடிப்பு சட்டம் ஆகிய சட்டங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  கொலை முயற்சி, கிரிமினல் சதியாலோசனை, சட்டவிரோத நடவடிக்கை ஆகிய கூடுதல் குற்றங்களிலிருந்து நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது.
இவர்கள் நடத்திய குண்டுவெடிப்புகளில் 8 பேருக்குப் படுகாயம் ஏற்பட்டது. இருவரும் தலா ரூ. 9500 தண்டனைத் தொகை கட்டவேண்டும்.

அன்னா உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் – கொதிக்கிறார் மணிப்பூர் இரும்புப் பெண்



இம்பால்:அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி விமர்சித்துள்ளார்.
அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரின் ஜன் லோக்பால் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.
அன்னாவின் உண்ணாவிரத போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வேளையில், மணிப்பூரில் ஒரு பெண் அந்த மாநில மக்களுக்காக கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் வெறும் திரவ உணவுடன் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பெண்ணின் பெயர் இரோம் சர்மிளா. மணிப்பூர் மக்களின் நலனுக்காக, ராணுவத்தின் அட்டகாசத்தை எதிர்த்து குரல் கொடுப்பதில் முன்னணியில் உள்ளவர் இவர். மணிப்பூரில் பிரிவினைவாதத்தை ஒழிக்க பாதுகாப்பு படைக்கு சிறப்பு அதிகாரங்கள் அளித்தது மத்திய அரசு.
இதுதொடர்பாக சட்டம் உள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தி, ராணுவ வீரர்கள் யாரும், சாதாரண மக்களை கைது செய்யலாம்; பிரிவினைவாதி என்று சொல்லி தண்டனை வாங்கி தரலாம். இதுபோலவே, பெண்களை செக்ஸ் ரீதியாக சித்ரவதை செய்வதும் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், இரோம் சர்மிளா, தொடர்ந்து போராடி வருகிறார். அவர் 3765-வது நாளாக பட்டினி கிடந்து வருகிறார். அவர் இப்போது நீதிமன்ற காவலில் உள்ளார். ஆண்டுக்கணக்கில் பாதுகாப்பு படையினர் அவரை காவலில் வைத்துள்ளனர்.
அவரை அன்னாவின் ஆதரவாளர்கள் சிலர் அணுகி, நீங்களும் அன்னாவின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால், சர்மிளாவால் போக முடியவில்லை.
அன்னாவின் உண்ணாவிரதத்தை பிரபலப்படுத்திய நிலையில், இவரின் 11 ஆண்டு கால பட்டினிப்போராட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த பரபரப்புக்கு இடையே, ஓசைப்படாமல் ஹரித்வாரில் நிகமானந்தா என்ற ஒரு 38 வயதான சாமியார், கங்கை தூய்மைக்காக 68 நாள் உண்ணாவிரதம் இருந்து சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். அவர் இறந்த பின்புதான் மீடியாக்களின் வெளிச்சமே அவர் பக்கம் திரும்பியது.
இதுபோல, அன்னாவின் உண்ணாவிரதத்துக்கு பின்புதான் மணிப்பூர் இரும்புப் பெண் 11 ஆண்டாக உண்ணாவிரதம் இருந்த விவரம் மீடியாக்களின் கவனத்துக்கு வந்துள்ளது.
அவரை அணுகி கேட்டபோது, மணிப்பூரில் உள்ள மக்களின் நிலை பற்றி வெளி மாநிலங்களில் பலருக்கும் தெரியவில்லை. பாதுகாப்புப் படையினர் நடத்தும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2004 ம் ஆண்டு வந்து சிறப்பு சட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை அவர் வாய்திறக்கவே இல்லை என்று இரோம் வருத்தப்பட்டார்.

அன்னாவின் போராட்டம் பற்றி கூறுகையில், அவர் போராட்டம் செயற்கை தனமானது. என்னையும் கூப்பிட்டனர். ஆனால், நீதிமன்ற காவலில் உள்ள நான் எப்படி போக முடியும்? அவர் இங்கு வந்து எங்களுடன் போராடினால் வரவேற்பேன் என்றும் இரோம் தெரிவித்தார்.

ஹரேன் பாண்டியா கொலை: சந்தேக முள் மீண்டும் மோடியை நோக்கி!


காந்திநகர்:குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 முஸ்லிம் இளைஞர்களை “இவர்கள் குற்றம் செய்ததை நிரூபிப்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து சந்தேகத்தின் முள் மீண்டும் மோடியை நோக்கித் திரும்பியுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்கவேண்டும் என்று 2007 டிசம்பரில் ஹரேன் பாண்டியாவின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது.

கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாண்டியாவின் உறவினர்கள் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
2003 மார்ச் 23ம் தேதி ஹரேன் பாண்டியா அஹமதாபாதில் லோ கார்டனில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதற்காக வெளியே வந்த பாண்டியாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலையைச் செய்தது முஸ்லிம்கள்தான் என்று அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து சிறையிலடைத்தது மோடி அரசு.
ஆனால் என் மகனைக் கொலை செய்தது மோடிதான் என்று பட்டவர்த்தனமாக அறிவித்தார் பாண்டியாவின் தந்தையும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் தீவிர உறுப்பினருமான விட்டல் பாய். கேசுபாய் பட்டேலின் ஆதரவாளரும், எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமாக இருந்த ஹேரேன் பாண்டியாவுக்கும், மோடிக்கும் ஒரு காலத்திலும் ஒத்துப்போனது கிடையாது.
2001 இறுதியில் முதல்வராகப் பொறுப்பேற்ற மோடிக்கு 2002 பிப்ரவரிக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதனால் அவர் எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியை விட்டுத் தருமாறு பாண்டியாவிடம் கேட்டார். ஆனால் பாண்டியா மறுத்து விட்டார். இதனால் இவ்விருவரின் பகைமை அதிகரித்தது.
2002ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் மோடிக்கும், உயர்நிலையில் இருப்பவர்களுக்கும் உள்ள பங்கு குறித்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் முன்பு பாண்டியா வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவர் மோடியின் ஆபத்தான எதிரியானார். இந்தச் சூழ்நிலையில்தான் பாண்டியா படுகொலை செய்யப்பட்டார்