Tuesday, September 25, 2012

இஸ்ரேல்: பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்!


"இர்குன்", "ஹகானா" யூத பயங்கரவாத குழுக்களால் 1948 ல் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் அண்மையில் 60 வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. 1946, ஜெருசலேம் நகரின் "கிங் டேவிட்" ஹோட்டேல் யூத பயங்கரவாத இயக்கமான இர்குனினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச ஊழியர்கள் உட்பட 90 பேர் மரணமடைந்தனர். அப்போது பாலஸ்தீனம் என்ற பெயரில் இருந்த பெருநிலம் பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமாகவிருந்தது. அரேபியர்கள் அதிகமாக வசித்த நாட்டில்புதிதாக யூத குடியேறிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்குவதைஅன்றைய காலனியாதிக்க பிரிட்டன் விரும்பவில்லை. பல அகதிக்கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பாலஸ்தீனத்தில் மேற்குறிப்பிட்ட யூத தீவிரவாத இயக்கங்கள்பிரிட்டிஷ் இலக்குகள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டனர். அப்போது பிரிட்டன் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. இஸ்ரேல் விடுதலைப் போராட்டம் என்பதுஒரு சில பயங்கரவாத இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் மட்டுமே என்பதும்பயங்கரவாதிகள் வெற்றிகரமாக இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிக் காட்டினர் என்பதும் இன்று பலருக்கு ஆச்சரியமடைய வைக்கும் செய்தி தான். அதுமட்டுமாமுன்னாள் இர்குன் பயங்கரவாத தலைவர் தான் பின்னர் இஸ்ரேலின் முதல் பிரதமர் "மேனகிம் பெகின்" !


 
இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டதும்மேலும் பல பயங்கரவாத தாக்குதல்கள்இம்முறை அரபு பொதுமக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. பல அரேபிய கிராமங்கள் இர்குன்மற்றும் ஸ்டேர்ன் கங் காடையர்களால் சுற்றிவளைக்கப்பட்டுநூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த வெறியாட்டம் பற்றிய செய்திகள் பிற அரபு கிராமங்களுக்கும் பரவவேஆயிரக்கணக்கான மக்கள்ஜோர்டானுக்கும்லெபனானுக்கும்எகிப்துக்கும் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அப்படி இடம்பெயர்ந்த அரேபியரின் வீடுகள்நிலங்கள்ஐரோப்பாவில் இருந்து வந்த யூத குடியேறிகளுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு இஸ்ரேல் என்ற தேசம்பாலஸ்தீனியர்களிடம் இருந்து திருடப்பட்ட நிலங்களின் மீது உருவானது. இதனால் தற்போதும் இஸ்ரேல் சுதந்திரதினம் கொண்டாடும் அதே காலத்தில்,பாலஸ்தீனர்கள் "தேசிய பேரழிவு" என்று துக்கதினமாக அனுஷ்டிக்கின்றனர்.
 
இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரண்டு தேசங்களின் உருவாக்கத்திற்கு ஐ.நா. மன்றம் அனுமதி வழங்கிய போதும்அயல்நாட்டு அரேபியர்களின் படையெடுப்பை இஸ்ரேலிய படைகள் முறியடித்ததை சாட்டாக வைத்துபாலஸ்தீன பிரதேசங்கள்இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. இன்று வரை தொடரும் இந்த ஆக்கிரமிப்பின் போதுமெல்ல மெல்ல அரபு நிலங்கள் அபகரிக்கப்படுவதும்அங்கே யூத குடியேற்றங்கள் உருவாவதும் 60 ஆண்டு கால தொடர்கதை. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட "அபார்ட் ஹைட்"(பிரித்து வைத்தல்) என்ற பாகுபாடுஇன்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிலவுகின்றது. உதாரணமாகஇரண்டு அரபு கிராமங்களுக்கு இடையில் ஒரு யூத கிராமம் உருவாகும். அங்கே அனைத்து வசதிகளுடனும் நவீன குடியிருப்புகள் கட்டப்பட்டுஎங்கிருந்தோ வரும் யூத குடும்பங்களுக்கு வழங்கப்படும். அங்கேயே பாடசாலைமருத்துவமனை போன்ற வசதிகளுடன்பிற இஸ்ரேலிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் என்பனசர்வதேச சட்டங்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் அரசாங்கமே கொடுக்கும். அதேநேரம் அரபு கிராமங்கள் கவனிப்பாரற்று பாழடைந்து செல்லும். பூர்வீக பாலஸ்தீன அரேபியர்கள்அயல் கிராம யூத விவசாயிகள் அடாத்தாக பறித்தெடுத்த நிலங்களில்அதாவது தமது சொந்த நிலங்களிலேயே கூலியாட்களாக வேலை செய்யும் பரிதாபம். குறைந்த ஊதியம் வழங்கி அவர்களின் உழைப்பை சுரண்டும்யூத கமக்காரர்கள் தமது உற்பத்திபொருட்களை ஏற்றுமதி செய்து அதீத லாபம் சம்பாதிக்கின்றனர். வேலையில்லா பிரச்சினை அதிகரித்தாலும்நகரங்களுக்கு வேலை தேடி செல்வதைஇஸ்ரேலிய படைகளின் வீதித்தடைகள் தடுக்கின்றன. மேலும் வரட்சி காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடுபாலஸ்தீன கிராமங்களை மட்டுமே வெகுவாக பாதிக்கின்றது.
 
மேற்குறிப்பிட்ட அவலநிலை தான் பல பாலஸ்தீன மக்களின் நிலை. அவர்களை பொறுத்தவரை தினசரி அவமானப்பட்டு வாழ்வதை விட சாவது மேல் என்ற நிலைமையேபல தற்கொலை போராளிகளையும் உருவாக்குகின்றது. மாறாக வெளியில் பிரச்சாரப்படுத்தப்படுவதை போல மூளைசலவை செய்யப்படுவதால் அல்ல. இந்த காரணிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாலேயேஇஸ்ரேல் கடந்த அறுபது வருட காலமாக முடிவுறாத யுத்தங்களுக்குள் தப்பிப்பிழைக்க வேண்டி உள்ளது.
 
மிக உன்னிப்பாக கவனித்தால்ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கம் இஸ்ரேல் என்ற வடிவில் 21 ம் நூற்றாண்டிலும் தொடர்வதை காணலாம். அதன் வரலாற்றை பார்த்தாலே புரியும். முதலாம் உலகயுத்த முடிவில்பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்த பாலஸ்தீனத்தில்மிகக் குறைந்த அளவு அரபு மொழி பேசும் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அதே காலகட்டத்தில் ரஷ்யாமற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கணிசமான அளவு யூத குடும்பங்கள் வந்து குடியேறி இருந்தன. அவர்கள் பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் இருந்து காணிகளை வாங்கி கூட்டுறவு முறையில் அமைந்த விவசாய கிராமங்களை உருவாக்கினர். அப்போது ரஷ்யாவிலும்கிழக்கு ஐரோப்பாவிலும் கம்யூனிச சித்தாந்தம் செல்வாக்கு செலுத்தியதால்இந்த யூதர்களும் தமது மாதிரி கிராமங்களை கம்யூனிச அடிப்படையிலேயே உருவாக்கினர். அதாவது அங்கே கூட்டுறவு பண்ணைகளில் வேலை செய்த அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். பண்ணை நிர்வாகிக்கும்தொழிலாளிக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட்டது. கிடைத்த லாபம் அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் வேலைக்கு போகும் நேரம்குழந்தைகள் போது காப்பகத்தில் பராமரிக்கப்பட்டனர். தற்போது இஸ்ரேலிய தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகுஇந்த பண்ணைகள் யாவும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விட்டன. இத்தகைய பொதுவுடைமை மாதிரிக்கிராமங்களில் வாழ்ந்த யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசம்அபகரிக்கப்பட்ட மாற்றான் மண்ணில் உருவாக வேண்டும் என்று நினைக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்தியவர்கள் மேற்கு ஐரோப்பிய யூதர்கள்.
இரண்டாம் உலக யுத்தம் முடிந்துஹிட்லர் யூத மகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த கதைகள் உலகம் முழுவதும் அனுதாபத்தை தோற்றுவித்த நேரம், "சியோனிஸ்டுகள்" எனப்படும் யூத தேசியவாதிகள்மேற்குலக நாடுகளின் உதவியுடன் போரில் தப்பிய யூத அகதிகளை கப்பல்களில் ஏற்றிக்கொண்டு பாலஸ்தீனம் நோக்கி சென்றனர். அவர்கள் கண்ணில் இஸ்ரேல் தேசம் பற்றிய கனவு இருந்தது. ஆனால் அவர்கள் சென்ற இடம் யாருமே வாழாத வெறும் கட்டாந்தரையாக இருக்கவில்லை. அங்கே காலம்காலமாக வாழ்ந்து வந்த அரபு பாலஸ்தீன மக்களை அடித்து விரட்டியிருக்கா விட்டால்அவர்களின் நிலங்களைப் பறித்து யூதர்களை குடியிருத்தியிருக்காவிட்டால்அன்று இஸ்ரேல் என்ற தேசம் சாத்தியமாகியிருக்க மாட்டாது. ஏற்கனவே எமக்கு தெரிந்த உதாரணம் வரலாற்றில் உள்ளது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு கப்பல்களில் சென்ற ஆங்கிலேயர்கள்அங்கே பூர்வீக செவ்விந்தியரின் நிலங்களை பறித்துஅங்கே ஆங்கிலேய காலனிகளை உருவாக்கிபின்னர் அவற்றை இணைத்து "அமெரிக்கா" என்ற தேசம் பிரகடனம் செய்தனர்.

கலக்கத்தில் பா.ஜ.க:1993-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க உரிமம் குறித்து விசாரணைக்கு உத்தரவு!


புதுடெல்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பாக காங்கிரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தை அமளி துமளியாக்கிய பாரதீய ஜனதா கட்சியின் இரட்டை வேடம் கலைய உள்ளது. 1993-ஆம் ஆண்டு முதல் நிலக்கரி சுரங்கத்திற்கு அளிக்கப்பட்ட உரிமங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் பா.ஜ.க கலக்கமடைந்துள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக மத்திய தலைமை தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை கடந்த மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏலமுறையில் சுரங்கங்கள் ஒதுக்கப்படாததால் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுக்குறித்து தலைமை ஊழல் தடுப்பு ஆணையர்(சி.வி.சி) சி.பி.ஐக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ விசாரணையை துவக்கியது.


இதுத்தொடர்பாக சி.பி.ஐ 7 வழக்குகளை பதிவுச் செய்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலம் துவங்கி 1993-2004-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தவேண்டும். அவர்கள் பின்பற்றிய முறையிலேயே ஐ.மு அரசும் ஒதுக்கீடு செய்ததா? தனியார் நிறுவனங்கள் எந்த அடிப்படையில் தேர்வுச் செய்யப்பட்டன? என்று 7 எம்.பிக்கள் கேள்வி விடுத்தனர். இதுத்தொடர்பாக அவர்கள் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலுக்கு மனு அளித்தனர். அதனை பரிசீலித்த ஜெய்ஸ்வால், மனுவை தலைமை ஊழல் தடுப்பு ஆணையருக்கு அனுப்பி வைத்தார். சி.பி.ஐ விசாரணையை பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ ஆட்சியில் இருந்து துவங்கும்படி கேட்டுக்கொண்டார்.
“நிலக்கரி சுரங்கங்கள் தேசியமய சட்டம் 1973-ஆம் ஆண்டின் படி, நிலக்கரி, மின்சாரம், இரும்பு, சிமெண்டு ஆகிய துறைகளில் தனியார் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் 1993-ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ ஆட்சி காலம் உள்பட 1993-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 39 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டன. ஆகவே அந்த காலக்கட்டத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளனவா? என்று சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என்று அமைச்சர் ஜெய்ஸ்வால் பரிந்துரைத்துள்ளார்.
அவரது பரிந்துரையை ஏற்று சி.வி.சி ஆணையர் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் குட்டு வெளியாகிவிடுமோ என்ற அச்சம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது. சி.வி.சி ஆணையரின் சி.பி.ஐ விசாரணைக்கான உத்தரவு பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 0 0 0 New

இவர்கள் நாட்டின் பாதுகாவலர்களா? ஐ.எஸ்.ஐயின் கைகூலிகளா?


SEP 24: முஸ்லிம்கள், முஸ்லிம் இயக்கங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தி வேட்டையாடும் உளவுத்துறையின் அறிக்கைகளுக்கு பின்னால்  செயல்படுபவர்கள் மத்திய அரசு பீடங்களில் உள்ள RSS அனுதாபிகளே.

மத்திய இண்டலிஜன்ஸ் பீரோவான  ஐ.பியின் முன்னாள் இயக்குநர் அஜித்குமார் டோவல் தலைமையில் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது.  இந்த அமைப்பே முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரையை உண்டாக்கும் விசயங்களை திட்டமிட்டு செய்து வருகிறது.

இந்த அமைப்பு கன்னியாகுமரியில் இருந்து செயல்படும் விவேகானந்த கேந்திரத்தின் கீழ்வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுள் ஒருவரான ஏமகனாத் ரானடே என்பவர் தலைமையில் 1972 ல் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில்  டெல்லி உள்ள  சாணக்யா புரியில் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில்தான் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. 

மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன்  இந்திய இண்டலிஜன்ஸ் பீரோவான ஐ.பியின் முன்னாள் தலைவர்கள்,  உளவுத்துறையான ‘ரா’வின்  முன்னாள் தலைவர்கள், முன்னாள் ராணுவ காலால் படை தலைவர்கள், முன்னாள் விமானப்படை தலைவர்கள், முன்னாள் கப்பல் படை தலைவர்கள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர்கள்,  முன்னாள் இந்திய தூதர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் இந்த இயக்கத்தின் தலைமை பதவிகளில் உள்ளனர்.




இந்த அதிகாரிகளின் பதவி காலக்கட்டத்தில்தான் முஸ்லிம் இயக்கங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிரவாத தொடர்பு குற்றச்சாட்டை கூறும் உளவுத்துறையின் அறிக்கைகள் அதிகமாக வெளியாகினஆர்.எஸ்.எஸ். நடத்திய மலோகேன், அஜ்மீர், சம்ஜோதா ரயில், மக்கா மஸ்ஜித், ஆகிய குண்டு வெடிப்புகளை முஸ்லிம்கள் மீது திசை திருப்பி விட்டவர்களும் இவர்களே. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்டு சிறைகளில் அடைப்பட்டனர். 

இந்தியாவின் பல மாநிலங்களில் உண்மைக்கு புறம்பாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கும் இந்த வேலைகளைகன்னியாகுமரி சுவாமி விவேகானந்தா கேந்திரத்தின் கீழ் செயல்படும் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பே செய்து வந்தது. இதன் பின்னணியில்தான்அதிராம் பட்டினத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞ்சர் வெங்காய ஏற்றுமதி வியாபாரி அன்சாரியின் கைதும் அடங்கும். இதுவரை மற்றைய மாநிலங்களில் தங்கள் கைவரிசையை காட்டியவர்கள் இப்போது தமிழகம் வந்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவாத செயல்களுக்கு துணை புரியும் இந்த அமைப்பின்அறிக்கைகளை முதலில் வெளியிடுவது இவர்களின் கைகூலிகளான தினமலர், தினமணிபோன்ற பத்திரிக்கைகளே. த்திய அரசுக்கு எதிராக அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ் ஆகியோர் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்டதும் இந்த அமைப்புதான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளில் உளவுத்துறை என்பது நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சிக்கு துணை புரிவார்கள் ஆனால் நம்நாட்டு உளவுத்துறையோ நமக்கு சாபக்கேடாக அமைந்துவிட்டது

Thursday, February 16, 2012

ஹிட்லரும் மோடியும் ஒன்றா?

ஆமாம்! நாங்கள் ஒட்டிப்பிறக்காத இரட்டையர்களே.  ஹிட்லரே எனது ரோல் மாடல். ஹிட்லரிடம் இருந்துதான் நான் பாசிசம் பயின்றேன். 

அவரிடம் இருந்துதான் வெறுப்பு தத்துவத்தை (HATE POLICY)  பயின்றேன்.  பெண்களையும், வயதானவர்களையும், சிறுவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் கொல்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டேன். 

சொந்த சமூகத்தின் மக்களை நாங்களே கொன்று விட்டுஅதை காரணமாக வைத்து கூட்டு படுகொலைகள் செய்வது எப்படி? அதை திட்ட மிட்டு மறைப்பது எப்படி? என்பதை எல்லாம் எனக்கு கற்று கொடுத்த ஆன்மீக குருவே ஹிட்லர்தான். 

காந்தியை கொன்ற கோட்சேயும் அவர் அங்கம் வகித்த ஆர்.எஸ்.எஸ். இயக்கமுமே என்கூட்டாளிகள். வரலாறு ஹிட்லரை தூற்றினாலும், கொலைகாரன், பயங்கரவாதி என்று சொன்னாலும் அவரே எங்களின் பேச்சு மூச்சு, சித்தாந்தம். வரலாறு அவரை மறந்தாலும் நாங்கள் அவரை மறக்கவில்லை.

ஜெர்மனியில் அவர் கடைபிடித்த கொள்கைகளையும், சித்தாந்தத்தையுமே நன் குஜராத்தில் கடை பிடிக்கிறேன். அவரை பின்பற்றியே நான் குஜராத் இன அழிப்பை நடத்தினேன். அவர் உலகை ஆட்சி செய்ய நாசி படை நடத்தினார். நான் இந்தியாவை பிடிக்க ஆர்.எஸ்.எஸ். பாசிச படைநடத்துகிறேன். காவல்துறை, உளவுத்துறை, நீதி துறை எல்லாம் என்கைகளில்.   

குஜராத் இனப்படுகொலை:2002 ஆண்டு  மோடி தலைமையில் நடத்தப்பட்ட இன படுகொலையில் சுமார் 5000 பேருக்கு அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.தெஹல்கா பத்திரிக்கை நடத்தி இரகசிய பத்திரிகை புலனாய்வுகளில் கொலைகளை செய்த காவி பயங்கரவாதிகள் தாம் செய்தவற்றை பெருமையுடன் அவர்கள் நிருபர்கள் என்று தெரியாமல் கக்கியவைகள் தெஹல்கா வெளியிட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்தோம், பின்னர் உயிருடன் எரித்தோம்’ என்றும், கிராமம் கிராமமாக சென்று ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை தொடரான கற்பழித்து பின்னர் மார்பகங்களை அறுத்து சித்திரவதை செய்து கொலைசெய்தோம் என்றும் மஸ்ஜிதுகளில் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை குவித்து கொலைசெய்து விட்டு பெட்ரோல் ஊற்றி  மஸ்ஜிதுகளுடன் எரித்தோம் என்றும் தமது வீர சாகசங்களை பெருமையுடன் கூறினர் காவி பயங்கரவாதிகள்.

தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் வீட்டுக்குள் தஞ்சமடைந்த முஸ்லிம் சிறுவர், சிறுமியர், பெண்கள் வயோதிபர் என்று 72 பேரை பயங்கரமான முறையில் இந்தியாவில் காவிபோலீஸ் படையின் உதவியுடன் வெட்டியும், குத்தியும் கொலை   கொலை செய்தனர் காவி பயங்கரவாதிகள். இவ்வினப் படுகொலைகளுக்கு நீதி வேண்டி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்  அதை உள்ளூர் கோர்ட்டே நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் குஜராத் கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, தன் இறுதிக்கட்ட அறிக்கையை உள்ளூர் கோர்ட்டில் சமர்ப்பித்தது. இவ்வழக்கில்,நரேந்திர மோடியை விசாரிக்கத் தேவையில்லை என, சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அளித்துள்ளது.  இந்தியாவை உலுக்கிய மாபெரும் இனப்படுகொலையை நடத்திய நரேந்திர மோடி அதில் இருந்து தப்பித்து கொண்டான். நீதி செத்தது இனி, முஸ்லிம்கள் உயிர் வாழ்வது எ

Tuesday, February 14, 2012

குண்டுவெடிப்பு வழக்கு:ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சவுகானின் கைது திருப்புமுனையாகும்


புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த கமால் சவுகானை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்திருப்பது இவ்வழக்கில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான சவுகானை நேற்று முன்தினம் இந்தூரில் வைத்து என்.ஐ.ஏ கைது செய்தது.
குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வரும் தலைமறைவு ஹிந்துத்துவா தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா ஆகியோரை கைது செய்ய சவுகானின் கைது உதவும் என கருதப்படுகிறது.
சுனில் ஜோஷி கொலை வழக்கிலும் சவுகானிடமிருந்து தகவல் கிடைக்கலாம் என கருதப்படுகிறது. 2007 பிப்ரவரி 28-ஆம் தேதி 68 பேர் பலியான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ரெயில் பெட்டியில் குண்டை நிறுவியவர்களில் சவுகானும் ஒருவர் என என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது. நேற்று க்ரேட்டர் நொய்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுகான் ஒரு நாள் ரிமாண்ட் செய்யப்பட்டார். பின்னர் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் சவுகான் ஆஜர்படுத்தப்படுவார்.


சுனில் ஜோஷி வழக்கு தொடர்பாக முதலில் என்.ஐ.ஏ சவுகானிடம் விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இதர ஹிந்துத்துவா தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோருடன் சவுகானுக்கு இருந்த தொடர்பு கண்டுபிடித்ததை தொடர்ந்து இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக கூறி சவுகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சவுகான் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதை தொடர்ந்து அவரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. இதர 3 நபர்களுடன் சேர்ந்து சவுகான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டை வைத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான வன்வாசி கல்யாண் ஆசிரமத்தின் குஜராத் பிரிவு தலைவர் நாபாகுமார் சர்க்கார் என்பவரிடம் தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்தியதில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் சதித்திட்டம் குறித்து கூடுதல் விபரங்கள் கிடைத்தன. குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் அனைவரும் நெடுங்காலமாக ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் என என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன.


2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனப் படுகொலையை போல இந்தியா முழுவதும் நடத்துவதுதான் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கொள்கை என்றும், அதற்கு சாத்தியமில்லாத சூழல் நிலவியதால் அதிருப்தியடைந்தவர்கள் குண்டுவெடிப்பை நிகழ்த்த துவங்கினார்கள் என்றும் என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷத் சோலங்கி தாங்க் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. சோலங்கி அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் சுனில் ஜோஷி கொலை வழக்கில் முக்கிய பங்கு வகித்த 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளில் சவுகானும் ஒருவர் என்பதை தேசிய புலனாய்வு ஏஜன்சி கூறுகிறது.

குஜராத்:சமூக ஆர்வலர்களுக்கு விசாரணை அறிக்கை நகலை அளிக்க முடியாது: எஸ்.ஐ.டி


அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையின் நகலை சமூக் ஆர்வலர்களுக்கு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
குல்பர்க் சொஸைட்டி கூட்டுப்படுகொலை தொடர்பாக எஸ்.ஐ.டி அறிக்கையின் மீதான விசாரணையின் போது மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் எம்.எஸ்.பட்டிடம் இதனை விசாரணை குழு தெரிவித்தது.
குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையின் அறிக்கையை கோரி சமூக ஆர்வலர்களான டீஸ்டா ஸெடல்வாட், முகுல் சின்ஹா ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். குல்பர்கா சொஸைட்டி வழக்கின் விசாரணை நடைபெறும் வேளையில் நீதிமன்றம் டீஸ்டா மற்றும் முகுல் சின்ஹா ஆகியோரின் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்தது.


குல்பர்க் சொஸைட்டி கூட்டுப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரிக்கும் விசாரணை அறிக்கையின் நகலை அளிக்கமுடியாது என்று எஸ்.ஐ.டி நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதேவேளையில், குல்பர்க் சொஸைட்டி கூட்டுப் படுகொலை வழக்கில் எஸ்.ஐ.டியின் அறிக்கை மீதான விசாரணை முடிவடைந்தது. நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கும்.
உண்மையான மனுதாரர்களுக்கு மட்டுமே நகலை அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எஸ்.ஐ.டிக்காக ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சி.ஜமுகர் கூறினார்.


டீஸ்டா உண்மையான மனுதாரர் அல்ல என்றும், அவர் பின்னர் கட்சிதாரராக இணைந்தார் என்றும் ஜமுகர் சுட்டிக்காட்டினார். ஸாகியா ஜாஃப்ரியும் தற்போது மனுதாரர் அல்ல என்றும், ஆகவே அவருக்கும் எஸ்.ஐ.டி அறிக்கையின் நகலை அளிக்க இயலாது என்று அவர் கூறினார்.
ஆனால்,அறிக்கையில் இறுதி தீர்ப்பு வரும் முன்பு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கட்சிதாரர்கள் அனைவருக்கும் அறிக்கையின் நகலை அளிக்கவேண்டும் என்று டீஸ்டாவின் வழக்கறிஞர் எஸ்.எம்.வோரா வாதிட்டார். எஸ்.ஐ.டி எல்லா ஆதாரங்களையும், ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தால் அவை மனுதாரர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
எஸ்.ஐ.டி அனைத்து ஆவணங்களையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றால் அது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும் என்று சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் வழக்கறிஞர் ஐ.எம்.முன்ஷி கூறினார்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் நற்சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 1000 பக்கங்களை கொண்ட அறிக்கையை எஸ்.ஐ.டி தயார் செய்துள்ளது. 2011 செப்டம்பர் மாதம் முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்தியா-ஈரா​ன் நட்புறவை சீர்குலைக்​க இஸ்ரேலே குண்டுவெடிப்பை நிகழ்த்தியு​ள்ளது – ஈரான் குற்றச்சாட்​டு


டெஹ்ரான்:புதுடெல்லியிலும், திப்லிஸிலும் தங்களது தூதரகங்கள் அருகே குண்டுவெடிப்புகளை இஸ்ரேலே நடத்திவிட்டு எங்களின் மீது பழிபோடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் தூதரகத்தின் கார் டெல்லியில் அதிதீவிர பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நேற்று(திங்கள்கிழமை) மதியம் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. இது விபத்தா? அல்லது குண்டுவெடிப்பா என்பது குறித்து இறுதி முடிவு வெளியாகவில்லை. ஆனால், இச்சம்பவத்தை தீவிரவாத தாக்குதல் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் ஈரானும், ஹிஸ்புல்லாஹ்வும் உள்ளது என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.


பிரதமர் மன்மோகன்சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லமான எண்.7, ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்து அதிக தூரம் இல்லாத துக்ளக் சாலையில் இஸ்ரேல் தூதரகத்தின் 109 சி.டி 35 எண்டயோட்டா இன்னோவா கார் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. வாகனத்தில் இருந்த இஸ்ரேல் தூதரக பெண் அதிகாரி தால் யஷோவா மற்றும் ஓட்டுநர் மனோஜ் சர்மா ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த இதர இரு நபர்கள் அருகில் நின்ற வாகனத்தில் இருந்தவர்கள் ஆவர். யஷோவாவிற்கு அறுவை சிகிட்சை செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள், இஸ்ரேலிய தூதரகத்தின் காரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். சிக்னலில் நிற்கும்போது வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்களை காரின் பின்னால் வைத்ததாக நேரடியாக பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் கடந்துசென்ற பிறகு சற்றுநேரம் கழித்து விபத்து நிகழ்ந்துள்ளது. கார் தீப்பிடித்த வேளையில் சிறிய குண்டுவெடிப்பு சத்தமும் கேட்டுள்ளது.
ஃபாரன்சிக் சயன்ஸ் லேபரேட்டரியில் இருந்து நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தினர். தேசிய பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். விரிவான விசாரணை நடந்துவருகிறது. நாட்டில் தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சி.என்.ஜி சிலிண்டர் பொருத்திய இஸ்ரேலிய தூதரக வாகனம்தான் விபத்தில் சிக்கியது. அருகில் உள்ள சி.என்.ஜி பம்பில் இருந்து எரிபொருளை நிரப்பிவிட்டு வெளியே வந்த வாகனம் சற்றுநேரத்தில் வெடித்துள்ளது. வெடிப்பொருட்கள்களின் சிதறல்களை கண்டுபிடித்ததாக போலீஸ் கூறியது. கூடுதல் விசாரணைக்கு பின்னரே குண்டுவெடிப்பின் காரணம் உறுதிச் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சக ஸ்பெஷல் செகரட்டரி கூறியுள்ளார்.
ஜார்ஜியாவிலும் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வைக்கப்பட்டிருந்தது. அதனை அதிகாரிகள் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். இதனிடையே உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேல் தூதரகங்களை அந்நாட்டு அரசு உஷார் படுத்தியுள்ளது.
குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சர் அவிக்டர் லிபர்மனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என லிபர்மனுக்கு உறுதி அளித்ததாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.


ஹிஸ்புல்லாஹ் தலைவர் இமாத் முக்னியை இஸ்ரேல் கொலைச் செய்த நான்காவது ஆண்டு நினைவு தினத்தில் இரண்டு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இத்துடன் குண்டுவெடிப்புகளை இணைக்க முயற்சிக்கிறது இஸ்ரேல். இச்சம்பவங்களின் பின்னணியில் ஈரானும், ஹிஸ்புல்லாஹ்வும் செயல்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் ஈரானுடன் உறவை வலுப்படுத்த இந்தியா எடுத்து வரும் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தவும் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் ஒட்டு குண்டு(ஸ்டிக்கிங் பாம்ப்) இதற்கு முன்பு இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் பயன்படுத்தாத புதிய முறையாகும் என போலீசார் கூறுகின்றனர். ஏற்கனவே ஈரானில் அணு விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டது ஸ்டிக்கிங் பாம்பை அவர்கள் சென்ற காரில் பொருத்தியதன் மூலமாகும். இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மெஹ்மான் பெரஸ்த் கூறுகையில்; ‘புதுடெல்லி, திப்லிஸி(ஜார்ஜியா) ஆகிய இடங்களில் உள்ள தங்களது தூதரகங்களில் இஸ்ரேலே தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு ஈரான் மீது பழிபோடுகிறது. ஈரானுடன் இந்தியா மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகள் வைத்திருக்கும் நட்புறவை சீர்குலைப்பதே இஸ்ரேலின் திட்டமாகும். இஸ்ரேல் இம்மாதிரியான தீவிரவாத தாக்குதல்கள் மூலம் ஈரானுடன் மனோரீதியான போரை துவக்கியுள்ளது’ என்று கூறியுள்ளார்.