Friday, November 15, 2013

இந்தியன் முஜாஹிதீனுக்கு நிதியுதவி அளிப்பது பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்ஸின் நீண்ட கால உறுப்பினர் சங்கர் சிங் வகேலாவின் அதிர்ச்சி தகவல்!

அஹ்மதாபாத்: இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்புக்கு நிதியுதவி அளிப்பது பா.ஜ.க என்று குஜராத் எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்.
இந்தியன் முஜாஹிதீனின் செயல்பாடு பா.ஜ.கவின் செயல்பாட்டிற்கு இணையானது என்று செய்தியாளர்களிடம் வகேலா தெரிவித்தார்.

மோடி பிரதமராக முடியுமா?கார்பொரேட்கள் ஊதும் மோடி பலூன் பறக்குமா?

ர்.எஸ்.எஸ்சும் கார்பொரேட்களும் இன்று கூட்டாக நின்று மோடியை முன்நிறுத்துவதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது. இந்திய ஜனநாயகமும் தேர்தலும் குடியரசுத் தலைவர் (Executive Presidential Form) வழிப்பட்டதல்ல.
இங்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கிய கேள்வியல்ல. ஆனால் கார்பொரேட்களும் ஆர்.எஸ்.எஸ்சும் இந்தத் தேர்தலை ஒரு குடியரசுத் தலைவர் வழிப்பட்ட ஜனநாயகத் தேர்தலைப் போல நடத்த முற்பட்டுள்ளன. மோடியா இல்லை ராகுலா என்கிற கேள்வியை மட்டுமே முன் வைத்துப் பிரச்சாரம் மேற்கொள்கின்றன. காங்கிரஸ் கூட அப்படி ராகுலை முன்னிறுத்தவில்லை.

நெருங்குகிறது காற்றழுத்த தாழ்வு நிலை: நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர ஏற்பாடு

காற்றழுத்த தாழ்வு நிலை, சனிக்கிழமை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பாக்கப்படுவதால், நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.  

Wednesday, November 6, 2013

கோத்ரா சம்பவத்தில் மோடி நழுவ முடியாது: வாஜ்பாய் உறவினர் கருணா சுக்லா

டெல்லி: குஜராத் கலவரத்துக்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தமக்கு பங்கில்லை என்று கையை கழுவிவிட முடியாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சகோதரி மகளான கருணா சுக்லா கூறியுள்ளார். 

சமூக ஆர்வலர் கொலை: குஜராத் பாஜக எம்.பி. கைது


டெல்லி: குஜராத் மாநிலத்தில் சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. டினு போகா சோலங்கியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முத்துப்பேட்டையில் நேற்று 79 மில்லி மீட்டர் மழை!


 திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாகப் பரவலாக மழை பெய்துவருகிறது. புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக திங்கள்கிழமை இரவு விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 5 மணியிலிருந்து சுமார் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பலத்த மழை பெய்தது.



மத்திய பிரதேச மாநிலத்தில் தீவிரமாக நடைபெறும் முஸ்லிம் வேட்டை!

புதுடெல்லி: மத்திய பிரதேச போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை அதிகமாக தீவிரவாத வழக்குகளில் கைது செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

படேலை மதவாதி என்று நேரு அழைத்தாராம்! – அத்வானி

புதுடெல்லி: இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலை ஜவஹர்லால் நேரு “மதவாதி” என்று அழைத்ததாக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறுகிறார்.

Tuesday, November 5, 2013

முத்துப்பேட்டையில் மழை-சில புகைப்படங்கள்

முத்துப்பேட்டையில் இன்று மாலை 3 மணி அளவில் பலத்த மழை பெய்தது .இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

இதோ சில புகைப்படங்கள்  உங்களுக்காக.

photo byAzeez Ahamed

சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் இன்னும் 2 நாள்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து TNTJ ஆர்பாட்டம்-கலந்துகொண்டவர்கள் கைது

முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தை கட்ட விடாமல் தடை விதித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாவட்டம் அறிவித்தது

வறுமையில் முதலிடம் மோடியின் குஜராத்

நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. 


இதுதான் பார்ப்பனீயம்!

திருவாளர் சோ என்று ஒருவர் இருக்கிறார். நடுநிலைக்கே அவர்தான் குத்தகைதாரர் என்று பார்ப்பன ஊடகங்களால் முடிசூட்டப் பட்டவர். நம்ம சூத்திர முண்டங்கள் சிலதுகளும் இதனை வழிமொழிவதுண்டு. இரட்டைநாக்குப் பேர்வழியான இந்தப் புளுகுணி தன் இனத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்திப் பேசும்; எழுதும். பல நூறுமுறை இதன் பார்ப்பனக் குள்ளநரித்தனத்தை நாம் தோலுரித்திருக்கிறோம். 

முத்துப்பேட்டையில் 16.60 மி.மீ. மழை

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் 

முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 17 மில்லி மீட்டர் மழை பதிவானது. 

photo by yunus khan

செவ்வாய் கிரகத்துக்கு பிற்பகல் புறப்படுகிறது "மங்கள்யான்'

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்படுகிறது.

Monday, November 4, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னையில் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

முத்துப்பேட்டையில் பரவலாக மழை-ஒரு நாள் மழைக்கே ஓடிப்போன சாலைகள்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது எனினும் முத்துப்பேட்டையில் பருவமழை கடந்த இரண்டு நாளாக விட்டு விட்டு பெய்துவருகிறது.
 photo by Yunus Khan

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்!

அமெரிக்காவின் கூட்டணியைச் சார்ந்த உடகங்களும் அமெரிக்காவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பயன்படுத்திய வார்த்தை தான் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்.

மேடை நாகரீகம் தெரியாத மோடி!

இன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும், பிரதமர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் காட்சியளித்தனர் - நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர் என்பது, ஆரோக்கியமான ஒன்றே!

முஸஃபர் நகரில் முஸ்லிம்களை படுகொலை செய்தது பி.ஏ.சி. படையினரா? – அரசு விசாரணை!

முஸஃபர் நகர் ஹுஸைன் பூரில் சில தினங்களுக்கு முன்னால் கொல்லப்பட்ட 3 முஸ்லிம் இளைஞர்கள் மீது பி.ஏ.சி. என அழைக்கப்படும் ப்ரொவின்ஷியல் ஆர்ம்ட் கன்ஸ்டாபுலரி (Provincial Armed Constabulary – PAC) என்ற பாதுகாப்புப் படையினர் சுட்டனரா என்பது குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது.

முஸஃபர் நகர்: அகதிகள் முகாமிலும் கொடூரம் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம்!

வகுப்புக் கலவரத்திற்கு இரையாகி துயர் துடைப்பு முகாமில் தங்கியிருந்த இளம் பெண்ணை இரண்டு காமவெறி கொண்ட பாசிஸ்டுகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Saturday, November 2, 2013

ஹிட்லரைப் போலவே மோடியும் பாசிசவாதி: திவாரி தாக்கு

ஹிட்லரைப் போலவே நரேந்திர மோடியும் பாசிசவாதி என மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி விமர்சித்துள்ளார்.

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?: மோடிக்குச் சவால்!

புதுடெல்லி: "பொய்யிலேயே அரசியல் செய்யும் மோடி, நாட்டின் வளர்ச்சி பணிகள் முதல் எந்த ஒரு விசயத்திலும் நேரடியாக விவாதிக்க தயாரா?" மோடிக்கு மத்திய அமைச்சர் கபில் சிபல் சவால் விடுத்துள்ளார்.

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு மோடிக்குச் சவால் விடுத்தார். மேலூம் அவர் கூறியதாவது:
"நரேந்திர மோடி பேசும் மேடைகள் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து பல்வேறு பொய்களை அவர் பேசி வருகிறார். இவரது பேரணிக்கு 10 முதல் 15 கோடி வரை செலவிடப்படுகிறது. இது எங்கிருந்து வந்த பணம்? இது கள்ளப்பணமா? இது குறித்துவிசாரணை நடத்த உத்தரவிடப்படும்.
கறுப்பு பணத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மோடி பேரணியில் கறுப்பு பணம் புழங்குவதாக எனக்கு தகவல் கிடைக்கிறது. பிரதமர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் மோடி திரிகிறார். ஆனால், அதற்கான வெளிப்படைத்தன்மையிலும், பொறுப்பிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை.

இவரது திட்டமென்ன? நான் அவருக்குச் சவால் விடுகிறேன். எந்தவொரு விஷயமானாலும், எந்தவொரு கேள்விக்கும், பதிலுக்கும் நான் ரெடி! நீங்களே தேதியை, இடத்தைச் சொல்லுங்கள்! என்னுடன் நேரடி விவாதத்திற்குத் தயாரா?
ஆனால் அவர் இதனைச் செய்ய மாட்டார். இது வரை மோடி ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடத்தியதில்லை. இவர் என்னோடு எதனை விவாதிக்க போகிறார்? மோடியின் நிலை என்ன? பாதுகாப்பில் இவரது திட்டமென்ன? ஏதாவது வளர்ச்சி பணிகள் குறித்து பேசுகிறாரா? நாட்டின் எதிர்கால திட்டம் குறித்து ஏதாவது மோடி சொல்லட்டும். ஒரு தனி மனிதன் இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானித்து விட முடியாது. அவர் அனைத்து கூட்டங்களிலும் பொய்யான தகவலையே தெரிவிக்கிறார்".

முத்துப்பேட்டையில் தீபாவளி கொண்டாட்டம்!

முத்துப்பேட்டையில் தீபாவளி பண்டிகை உற்சாமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முஸஃபர் நகர் கலவரம்: 8 பேர் கைது, 15 பேர் மீது வழக்கு!

முஸஃபர் நகர்: உத்தரப் பிரதேசத்தின் முஸஃபர்நகரில் அண்மையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

70 பழங்குடி கிராமங்களின் மக்களை வெளியேற்றிவிட்டு படேலின் சிலையை எழுப்பும் மோடியின் சர்வாதிகாரம்: எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது!

புதுடெல்லி: சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரால் குஜராத்தில் ஒருமைப்பாட்டு சிலையை நிறுவும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி 70 பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்துள்ளார். மோடி அரசின் அராஜகத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்களை போலீஸ் கைதுச் செய்துள்ளது. பழங்குடி மக்களை கூட்டாக வெளியேற்றியதற்கு எதிராக அப்பகுதியில் எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. மேதா பட்கரின் தலைமையில் என்.ஏ.பி.எம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மக்கள் கூட்டாக வெளியேற்றப்படுவதற்கும், போலீஸ் பயங்கரவாதத்திற்கும் எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.

திருவாரூரில் மனித நேய மக்கள் கட்சி ஆர்பாட்டம்.


இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பிரதமர் உட்பட யாரும் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி நடத்தும்



”மாபெரும் ரயில் மறியல் பேராட்டம்”

இடம்: திருவாரூர் ரயில் நிலையம்
நாள்: 7.11.2013 | மதியம் 2 மணி

கண்டன உரை:
எம்.தமிமுன் அன்சாரி
(மமக பொதுச் செயலாளர்)

அன்புடன் அழைகிறது
மனிதநேய மக்கள் கட்சி, திருவாரூர் மாவட்டம்

Friday, November 1, 2013

தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு பகிரங்க மடல்!

சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு,
ஜூனியர் விகடன் 30.10.13 இதழ் படித்தேன். “விதாண்டாவதத்தால் மோடியை வீழ்த்த முடியாது” என்ற தலைப்பில் வெளிவந்த பேட்டியில் ஆதாரமற்ற தகவல்களை, உண்மை போல் கூறியது கொஞ்சமும் அரசியல் நாகரிகமில்லாததாகும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, எவ்வளவோ கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்தீர்கள். ஆனால், மக்களிடம் அந்த பிம்பங்கள் எடுபடவில்லை.

13 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை: பா.ஜ.கவுக்கு ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏவும் இல்லை!

புதுடெல்லி: இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை. முஸ்லிம் வாக்குகளுக்காக தந்திரங்களை கையாளும் காங்கிரசுக்கும், மோடியின் பா.ஜ.கவுக்கு வித்தியாசம் இல்லை.பா.ஜ.கவில் ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ  கூட இல்லாதது அக்கட்சியின் முஸ்லிம் விரோத போக்கிற்கு சிறந்த உதாரணமாகும். ஆனால், முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம் என்று நாடுமுழுவதும் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலும் நிலை மிக மோசமாக உள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய எந்த தகவல்களையும் ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வில்லை என IB மற்றும் NIA மறுப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு தீவிரவாத இயக்கம் என சித்தரித்து எந்த தகவல்களையும், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வில்லை என்று புலனாய்வு அமைப்புகளான IB (Intelligence Bureau)மற்றும் NIA (NationalInvestigation Agency) மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரஸ் கவுன்சில் (Press Council of India - PCI) அனுப்பிய நோட்டிசுக்கு பதில் அளித்துள்ள புலனாய்வு அமைப்புகள், பாப்புலர் ஃப்ரண்டை தீவிரவாத இயக்கமென சில பத்திரிக்கைகள் கூறுவது போல் எந்த ஒரு தகவலும் தங்களிடம் இல்லை என பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முத்துப்பேட்டை அருகே சாலை விபத்து !

முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் கோவில் அருகே உமா தேவி மினி பேருந்து மற்றும் நிலா சீ புட்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.


பேருந்து  ஓட்டுனர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பேருந்தில் முன் பகுதி விபத்தினால் சேதம் அடைந்தது.இதனால் பேருந்து JCB இயந்திரம் கொண்டு மீட்கப்பட்டது  இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.

NEWS :முத்துப்பேட்டை  டுடே