பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், நீர்நிலைகளை காக்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ.28 முதல் டிசம்பர் 13 வரை குமரி முதல் சென்னை வரையிலான எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவரின் மக்களை சந்திப்போம் பிரச்சார பயணம் குமரி மாவட்டம் கன்னியாகுமரி களியக்காவிளையில் இருந்து தொடங்கியது.
Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Sunday, November 29, 2015
Saturday, November 28, 2015
இந்து ராஷ்டிரம்? கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…........
பருப்பைப் பதுக்கி வைத்திருக்கும் கள்ள வியாபாரிகளைவிட, மாட்டுக் கறி உணவு அருந்துபவர்களைத்தான் மிகப் பெரும் கொடியவர்களாக, சமூக விரோதிகளாகச் சித்திரிக்கின்றன மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும். பருப்பைப் பதுக்கி வைத்த கள்ள வியாபாரிகளுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட்ட செய்தி எதுவும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆனால், பசு மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதாக பழிபோடப்பட்ட 50 வயதான முகம்மது அக்லக் செங்கற்களால் அடித்தே கொல்லப்படுகிறார்; பசு மாட்டினைக் கொன்றதாகப் பழி போடப்பட்ட 24 வயதான ஜாஹித் அகமது பட் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்; மாடுகளை இறைச்சிக்காகக் கடத்திச் செல்வதாகப் பழி போடப்பட்ட 28 வயதான நோமன் அக்தர் அடித்துக் கொல்லப்படுகிறார்.
ஜம்மு காஷ்மீரிலுள்ள உதம்பூரைச் சேர்ந்த ஜாஹித் அகமதும், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நோமன் அக்தரும் தமக்கு முன்பின் அறிமுகமில்லாத இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்டனர். ஆனால், உ.பி. மாநிலம், தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லக், தனது சொந்த கிராமத்திலேயே, தனது வீட்டின் எதிரிலேயே, தனது மனைவி, தாய், மகள் ஆகியோரின் கண் முன்னாலேயே, அதே கிராமத்தைச் சேர்ந்த, அக்லக்கின் குடும்பத்தினருக்குத் தெரிந்த, அவர்களோடு பழகிவந்த ‘இந்து’க்களாலேயே அடித்துக் கொல்லப்படுகிறார். இந்த மதவெறி எந்த அளவிற்கு இரக்கமற்றது, கண்மூடித்தனமானது என்பதற்கு அக்லக்கின் படுகொலை இன்னொரு சான்று. அது மட்டுமின்றி, மேற்கு உ.பி.யை இந்து மதவெறியின் புதிய சோதனைச்சாலையாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் உருமாற்றியிருப்பதையும் அக்லக் படுகொலை எடுத்துக் காட்டுகிறது.
Thursday, November 26, 2015
முத்துப்பேட்டை தமுமுக: நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
முத்துப்பேட்டை நகர தமுமுக சார்பாக இன்று 26.11.2015 காலை 10 மணியளவில் ஆசாத் நகர் கடைவீதியில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
Saturday, November 14, 2015
முக்கிய அறிவிப்பு PASSPORT - ECNR
முக்கிய அறிவிப்பு PASSPORT ECNR பெறமுடியாதவர்களுக்கு ஓர் அரியவாய்ப்பு
நமது நாட்டில் பலர் (படிக்காவர்கள்) ECNR பெற முடியாமல் கஸ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.
தங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் , தாங்கள் பாஸ்போர்ட்க்கு தேவையான ஆவணங்களை எடுத்து சென்று அங்கு 18/- செலுத்தி ECNR க்காக ஒரு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தால் 15 -தினத்தில் ECNR பதிவுசெய்து
PASSPORT வீட்டுக்கு வந்து சேரும்.
இது தீபாவளிக்கு பின் 15 -தினங்களுக்கு மட்டுமே. உடனடியாக பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகவும்
தங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் , தாங்கள் பாஸ்போர்ட்க்கு தேவையான ஆவணங்களை எடுத்து சென்று அங்கு 18/- செலுத்தி ECNR க்காக ஒரு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தால் 15 -தினத்தில் ECNR பதிவுசெய்து
PASSPORT வீட்டுக்கு வந்து சேரும்.
இது தீபாவளிக்கு பின் 15 -தினங்களுக்கு மட்டுமே. உடனடியாக பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகவும்
Tuesday, November 10, 2015
தீரர் திப்புவின் பிறந்த தினம்-கர்நாடகாவில் பதற்றம்
பெங்களூர், நவ.10-
18-வது நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த மன்னரான திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை கொண்டாடுவதற்கு பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
Monday, November 9, 2015
பிகார் தேர்தல் இந்தியாவின் வெற்றி!
ஒரு மாநிலத் தேர்தல் முடிவை ஒரு பிரதமரின் தோல்வியாக எழுத மனம் ஒப்ப மறுக்கிறது. ஆனால், நரேந்திர மோடி பிரதமர் பதவியில் அமர்வதற்கு முன்பே இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நினைவில் கொண்டுவருவது முக்கியமானது. 2013 செப்டம்பர் 13-க்குப் பிறகான ஆறு சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகளுக்கும் மோடியையே காரணமாகக் காட்டினார்கள் பாஜகவினர். கொஞ்சம் யோசித்தால், அப்போது தொடங்கி சமீபத்திய டெல்லி தேர்தல் வரை அவர்கள் மக்களிடம் உருவாக்கிய ஒரு மாயை ஞாபகத்துக்கு வந்துவிடும். ஆம், மோடி அலை! மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகானும் சத்தீஸ்கரில் ரமன் சிங்கும் மூன்றாவது முறையாக ஜெயித்ததற்கும்கூடக் காரணம் மோடி அலை என்றால், இப்போது பிஹாரில் அடிக்கும் அனலிலிருந்து மட்டும் மோடியை எப்படி விடுவிக்க முடியும்?
Sunday, November 8, 2015
Saturday, November 7, 2015
Friday, November 6, 2015
Thursday, November 5, 2015
ராஜஸ்தான்: மதுவிலக்கு கோரிய சப்ரா மரணம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் மதுவிலக்கு கோரியும், லோக் ஆயுக்தாவை பலப்படுத்த கோரியும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த காந்தியவாதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான குருசரண் சப்ரா (Gurusharan Chhabra)
மதுவிலக்கு போராட்டத்திற்கு மற்றொரு களப்பலியாகியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பட்டினி போராட்டத்தை ஆரம்பித்த அவர் 04-11-2015 அன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 68.
மதுவிலக்கு போராட்டத்திற்கு மற்றொரு களப்பலியாகியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பட்டினி போராட்டத்தை ஆரம்பித்த அவர் 04-11-2015 அன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 68.
Tuesday, November 3, 2015
முத்துப்பேட்டை அருகே சுதந்திர போராட்ட தியாகி நேற்று காலமானார்!
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை
கிராமத்தை சேர்ந்தவர் தியாகி முத்துதேவர்(97), சுதந்திபோராட்ட தியாகியான இவர் இந்திய தேசியராணுவத்தில் நேதாஜி படை பிரிவில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர். ராணுவ பணிக்கு பிறகு ஜாம்புவானோடை தர்கா அஞ்சலகத்தில் 20-ஆண்டுகள் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றினார். பின்னர் ஹோமியோபதி டாக்டராகி மருத்துவம் பார்த்து வந்தார். முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் 5வருடம் ஹிந்தி பண்டிட்டாகவும் பணிபுரிந்துள்ளார்.
தற்பொழுது தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதார்ர்கள் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி 5- மகன்கள் 2-மகள்கள் உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)