Showing posts with label அமெரிக்க. Show all posts
Showing posts with label அமெரிக்க. Show all posts

Thursday, December 10, 2015

புதிய கல்விக் கொள்கை : வேகமாக இறுகும் மறுகாலனியாக்கம்

அம்பேத்கார்-பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி. சென்னை, புதிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம்

apscடிசம்பர் 2015-ல் கட்டவிழ்த்து விடப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கை 2015 (NEP)-ன் வரைவு மீது கருத்து கூறுமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, 1992-ல் புதிய தாராளவாத கொள்கைகளை அமல்படுத்துவதற்கு முன்னோட்டமாக திருத்தியமைக்கப்பட்டது. அது போல, டிசம்பர் 2015-ல் நடைபெறவுள்ள WTO அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக உலக வர்த்தகக் கழகத்தின் – சேவை வர்த்தக பொது ஒப்பந்தத்தை (WTO-GATS) அமல்படுத்துவதற்கான தயாரிப்பே புதிய கல்விக் கொள்கை 2015.

Tuesday, October 27, 2015

சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி !

சிரியாவிலிருந்து அகதியாகத் தப்பியோடி வந்து, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி, அய்லான் என்ற இளம் சிறுவன் கரையோர மண்ணில் பிணமாகப் புதைந்து கிடந்த காட்சி, உலகெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Monday, November 4, 2013

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்!

அமெரிக்காவின் கூட்டணியைச் சார்ந்த உடகங்களும் அமெரிக்காவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பயன்படுத்திய வார்த்தை தான் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்.

Friday, July 8, 2011

அமெரிக்காவில் பரவிவரும் கண்களை குருடாக்கும் தாவரம்!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் மனித உடலில் எரிகாயங்கள் மற்றும் கண்களில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய தாவர வகையொன்று வேகமாகப் பரவி வருவதாக அம் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



‘ஜயன்ட் ஹொக்வீட்’ எனப்படும் இவ்வகை மரமானது சுமார் 12 அடி வரை வளரக் கூடியது. இம்மரத்தின் பூக்கள் குடைகள் போன்ற வடிவில் காணப்படும். இதன் பால் உடலில் பட்டு அவ்விடத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் படுமிடத்து மோசமான காயங்களை உண்டாக்கக் கூடியது.




மேலும் கண்களில் பட்டால் நிரந்தரமாக குருடாக்கக் கூடிய தன்மை கொண்டவை. நியூயோர்க் நகரில் மாத்திரம் சுமார் 944 இடங்களில் இத்தாவரமானது இனங்காணப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் இத்தாவரத்தை யாராவது இனங்கண்டால் உடனே அறிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதுடன் இதற்கென விசேட தொலைபேசி இலக்கங்களையும் வழங்கியுள்ளனர்.