Showing posts with label பா.ஜ.க. Show all posts
Showing posts with label பா.ஜ.க. Show all posts

Thursday, December 10, 2015

புதிய கல்விக் கொள்கை : வேகமாக இறுகும் மறுகாலனியாக்கம்

அம்பேத்கார்-பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி. சென்னை, புதிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம்

apscடிசம்பர் 2015-ல் கட்டவிழ்த்து விடப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கை 2015 (NEP)-ன் வரைவு மீது கருத்து கூறுமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, 1992-ல் புதிய தாராளவாத கொள்கைகளை அமல்படுத்துவதற்கு முன்னோட்டமாக திருத்தியமைக்கப்பட்டது. அது போல, டிசம்பர் 2015-ல் நடைபெறவுள்ள WTO அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக உலக வர்த்தகக் கழகத்தின் – சேவை வர்த்தக பொது ஒப்பந்தத்தை (WTO-GATS) அமல்படுத்துவதற்கான தயாரிப்பே புதிய கல்விக் கொள்கை 2015.

ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் ஆமீர்கான்கள் வாழ முடியுமா ?

aamir-indian-express-award-function
சகிப்பின்மை குறித்து ஆமீர் கான் பேசிய இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது நிகழ்ச்சி
கிப்புத்தன்மை என்றால் என்ன? காக்கி டவுசர்கள் உலகிற்குப் பாடம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்து வரும் சில விசயங்களால் தான் அச்சப்படுவதாகவும் அதன் காரணமாக இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறினால் என்னவென்று மனைவி கிரண் ராவ் தன்னிடம் தெரிவித்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்று நடிகர் ஆமிர் கான் பேசியதே விவகாரத்தின் இந்த சகிப்புத்தன்மை அத்தியாத்திற்கான துவக்கம்.
கிரண் ராவ் ஒரு இந்து என்பதும், அவரது கருத்தால் ’அதிர்ச்சியடைந்த’ ஆமிர் கான் பிறப்பால் ஒரு முசுலீம் என்பதும் அனைவரும்
அறிந்தது தான். .
aamir-kiran-with-kid
கிரண் ராவ் மற்றும் அமீர் கான்

Sunday, November 29, 2015

முத்துப்பேட்டை கொலை வழக்கில் பாஜக மாவட்ட செயலாளர் கைது.

முத்துப்பேட்டை மதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாவட்ட செயலாளர் உட்பட 2 பேர் கைது.

Saturday, November 28, 2015

இந்து ராஷ்டிரம்? கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…........


                                        

ருப்பைப் பதுக்கி வைத்திருக்கும் கள்ள வியாபாரிகளைவிட, மாட்டுக் கறி உணவு அருந்துபவர்களைத்தான் மிகப் பெரும் கொடியவர்களாக, சமூக விரோதிகளாகச் சித்திரிக்கின்றன மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும். பருப்பைப் பதுக்கி வைத்த கள்ள வியாபாரிகளுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட்ட செய்தி எதுவும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆனால், பசு மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதாக பழிபோடப்பட்ட 50 வயதான முகம்மது அக்லக் செங்கற்களால் அடித்தே கொல்லப்படுகிறார்; பசு மாட்டினைக் கொன்றதாகப் பழி போடப்பட்ட 24 வயதான ஜாஹித் அகமது பட் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்; மாடுகளை இறைச்சிக்காகக் கடத்திச் செல்வதாகப் பழி போடப்பட்ட 28 வயதான நோமன் அக்தர் அடித்துக் கொல்லப்படுகிறார்.

முகமது அக்லக்
உ.பி மாநிலம் தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கூலிகளால் சதித்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்ட முகமது அக்லக்
ஜம்மு காஷ்மீரிலுள்ள உதம்பூரைச் சேர்ந்த ஜாஹித் அகமதும், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நோமன் அக்தரும் தமக்கு முன்பின் அறிமுகமில்லாத இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்டனர். ஆனால், உ.பி. மாநிலம், தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லக், தனது சொந்த கிராமத்திலேயே, தனது வீட்டின் எதிரிலேயே, தனது மனைவி, தாய், மகள் ஆகியோரின் கண் முன்னாலேயே, அதே கிராமத்தைச் சேர்ந்த, அக்லக்கின் குடும்பத்தினருக்குத் தெரிந்த, அவர்களோடு பழகிவந்த ‘இந்து’க்களாலேயே அடித்துக் கொல்லப்படுகிறார். இந்த மதவெறி எந்த அளவிற்கு இரக்கமற்றது, கண்மூடித்தனமானது என்பதற்கு அக்லக்கின் படுகொலை இன்னொரு சான்று. அது மட்டுமின்றி, மேற்கு உ.பி.யை இந்து மதவெறியின் புதிய சோதனைச்சாலையாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் உருமாற்றியிருப்பதையும் அக்லக் படுகொலை எடுத்துக் காட்டுகிறது.

Monday, November 9, 2015

பிகார் தேர்தல் முடிவு: வெறுப்பு அரசியலுக்கு கிடைத்த தோல்வி- எஸ்.டி.பி.ஐ அறிக்கை

பிகார் தேர்தல் முடிவு மத்தியில் ஆளும் பாஜக அரசின் வெறுப்பு அரசியலுக்கு கிடைத்த தோல்வி என்று எஸ்.டி.பி.ஐ கூறியுள்ளது.

Thursday, October 22, 2015

இந்தியா மத சார்பற்ற நாடுதானா

நேர்படப்பேசு (இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டிக்கு சிவசேனா எதிர்ப்பு... ) 20-10-2015 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேற்று 20.october இரவு 9 மணிக்கு நேர்பட பேசு விவாத நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதில் சிவசேனாவின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் கரியை பூசுவோம்... இதே அரங்கத்தில் உள்ள உங்கள் மீதும் கரியை பூசுவோம்" என பத்திரிகையாளர் ஞாநியை நோக்கி எச்சரிக்கை விடுத்தார்.

Saturday, January 25, 2014

தமிழ்நாட்டில் மத கலவரம்களுக்கு அடிகல் நாட்டும் பா ஜ க!

 கலவரங்களின் வழியே ஆட்சியைப் பிடிப்பது என்பது பா ஜ க வின் வழிமுறை. 
தேர்தல் நெருங்கும்போதெல்லாம் இந்து வெறியைத் தூண்டி விட்டுக் கலவரங்கள் நடத்தி அதன் வழியே அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் வழக்கம்..

Monday, January 20, 2014

மத வெறியன் H .ராஜா மீது -கமிஷனர் அலுவகத்தில் SDPI புகார்- வீடியோ இணைப்பு !

இந்து தர்ம பாதுகாப்பு என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், திராவிடர் கழகம், ஹிந்துதுவாதிகளுக்கு எதிராக உள்ளவர், ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களையும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மதவெறியை தூண்டி விடும் விதமாகவும் பேசியுள்ளார். அவரது பேச்சு யூ டியூப் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



Wednesday, November 6, 2013

சமூக ஆர்வலர் கொலை: குஜராத் பாஜக எம்.பி. கைது


டெல்லி: குஜராத் மாநிலத்தில் சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. டினு போகா சோலங்கியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Tuesday, October 29, 2013

தமிழில் பேச தடை விதித்த பாஜக தலைவர்!

கோலார் தங்கவயல் : தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் கோலார் தங்கவயல் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழில் பேச பாஜக தலைவர் தடை விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Monday, October 28, 2013

காவி பயங்கரவாதிகளுக்குத் தண்டனை எப்போது?

மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா முதலிய பார்ப்பனர்கள் அதில் மட்டுமல்லாமல், அய்தராபாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர்தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை  திட்டமிட்டே அங்கே  நிகழ்த்திவிட்டு, முஸ்லீம்கள்மீது  பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!

ராகுல் சொன்னது உண்மை!

மத்தியப் பிரதேச தேர்தல் - பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி, பி.ஜே.பி. மீது ஒரு பொதுவான குற்றச்சாற்றை வீசியுள்ளார்.
குளிர் சாதனம் பொருத்தப்பட்டுள்ள அறை களில் சுகமாக வாழும் முதலாளிகளுக்கானது பிஜேபி என்பதுதான் அந்தக் குற்றச்சாற்று.

Thursday, October 24, 2013

மோடியைப் பிரதமராக்கி மீண்டும் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் வரவேண்டுமா? எச்சரிக்கை! எச்சரிக்கை!!

சென்னை, அக்.23- குஜராத்தில் பாடத் திட்டத்தில் மனுதர்மம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால், மனுதர்மப்படி ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்தான் வரும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை பெரியார் திடலில் நேற்று இரு பெரும் ஆபத்துகள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!! எனும் தலைப்பில், திராவிடர் கழகத்தின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

Wednesday, October 23, 2013

மோடியை வெளுத்து வாங்கும் தங்க சாமியார் !

ந்தியா ‘வல்லரசா’க வேண்டும் என்பதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும், உ.பி சாமியார் சோபன் சர்க்காருக்கும் இரு வேறு கருத்து இல்லை. அதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாடு சுமுகமாக முடித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

’சமயம்’ பார்த்து நுழைந்த ஆரியம்

தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் _ ஆழ்வேராய் இருந்து உழைத்தவர் தேவநேயப் பாவாணர். தமிழ்மொழி, திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் இருந்துள்ளது என வாதிட்டவர். 40க்கும் மேற்பட்ட சொல்லியல்பு களைக் கற்று சிறப்பான முறையில் சொல்லாராய்ச்சி செய்துள்ளார். தமிழறிவினாலும், பன்மொழியியல் அறிவினாலும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டவர்.

தமிழ்மொழி கெட்டதற்குக் காரணமே சமயம்தான். ஏனெனில், சமயத்துறையில்தான் முதன்முதலில் ஆரியர்கள் வடமொழிச் சொற்களைப் புகுத்தினர். வடமொழி தேவமொழி யென்றும், அதனை ஒலிமுறை பிறழாமல் ஓதும் ஆற்றல் பார்ப்பனருக்கு அதாவது பிராமணர்க்குத்தான் உண்டென்றும் கூறி, கோவில்களில் வழிபாடு செய்யும் அதிகாரத்தைத் தங்களுக்கே உரியதாக்கிக் கொண்டனர். இப்படிச் செய்தது கி.மு.1200 என்று சொல்லலாம்.
#####
பிராமணனை நாம் தமிழன் என்று ஏற்றுக் கொண்டாலும், அவன் அதை ஒத்துக்கொள்வதில்லையே! நம்மைவிட உயர்ந்தவன் _ மேலானவன் _ நம்மின் வேறானவன் என்றல்லவோ அவன் தன்னைக் கருதிக் கொண்டிருக்கிறான், சொல்லி வருகிறான்!
ஆப்பிரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் எப்படி அந்த நாட்டுப் பழங்குடி மக்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று, தங்கள் நிறவெறி காரணமாகக் கூறிவந்தார்களோ, அப்படியேதான் இந்த நாட்டிற்கு வந்த ஆரியர்களும் _ இக்கால பிராமணர்களும் பூதேவர் என்றும் பூசுரர் என்றும் தங்களை உயர்வாகவே சொல்லிவந்தார்கள்; சொல்லி வருகிறார்கள். எனவே, இதை ஒருவகை நிறவெறிக்கொள்கை அதாவது (Brahman Aparthied) என்று சொல்லலாம்.
தொடக்கத்திலிருந்தே ஆரியர்கள் தங்களை மற்றவர்களிலிருந்து பிரித்துக்காட்டியே வந்துள்ளனர். மலையாளத்தில், அந்நாட்டுக் குடிமக்களான நாயர்கள் வாழும் வீடுகளுக்குக் கரை என்று பெயர்; ஆனால் பிராமணர்களின் இருப்பிடங்களுக்கு மட்டும் இல்லம் என்று பெயர். இவ்வாறே ஆரியர்கள் தங்கியிருந்த ஊர்களுக்கு நம்மை என்று பொருள் தருகின்ற மங்கலம் என்னும் சொல்லைக் கொண்ட சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களை அமைத்துக் கொண்டதோடன்றி, ஏனைய தமிழ் மக்களிடம் கலந்து பழகாமல், தனித்தே வாழ்ந்து வந்துள்ளனர்.
வீடு கட்டுதற்கு உரிய மரங்களைத் தேர்ந்தெடுப்பது பற்றிக் கூறும் மனை நூலிலும்கூட, பிராமணர்களுக்கு உளுக்காத _ உறுதியான மரங்களும்; மற்றவர்களுக்கு எளிதில் உளுத்துப்போகக் கூடிய மற்ற மர வகைகளும், சொல்லப்படுகின்றன. அவ்வளவு ஏன்? செய்யுட்களில் சிறந்ததான _ வெண்பா பிராமணர்க்கு உரியது; ஏனைய செய்யுட்கள் மற்றவர்க்கு உரியன என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றனவே! இதுமட்டும் அன்று; தமிழர் குழுவிலே மிகவும் சிறந்தவராக _ உயர்ந்தவராகக் கருதப் பெற்ற முனிவர்களைக் குறிக்கும் அந்தணர் என்ற பெயரையும் நாளடைவில் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டார்கள்.
இதைக் கேட்கும்போது, ஆரியர்கள் எப்படி இத்தகைய தமிழ்ப் பெயர்களைத் தாங்கினர் என்ற அய்யம் உங்களுக்கு எழலாம். ஆனால், இந்த அய்யம் தேவையற்றது. ஏனெனில், தொடக்க காலத்தில் _ அஃதாவது கடைக்கழகக்காலம் வரையில்கூட _ ஆரியர்கள் தூய தமிழ்ப் பெயர்களையே தாங்கியிருந்தனர். ஒருசிலர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும் விளங்கினர். காலப்போக்கில்தான் அவர்கள் படிப்படியாகத் தமிழில் வடமொழிச் சொற்களைப் புகுத்தினர்; தமிழரிடையே வடவரின் கதைகளைப் பரப்பினர். சமயம் பார்த்து, மிக்க திறமையோடு இவற்றை அவர்கள் செய்து வந்துள்ளனர். முதன் முதலில் அவர்கள் வடமொழிச் சொற்களைப் புகுத்தியது, முன்னமே நான் கூறியபடி, சமயத்துறையில்தான். ஆனால், ஆரியத்தால் தமிழன் கெடுகிறான்.
ஆரியர்கள் தமிழரை எவ்வழியில் வெல்லலாம் என்று எண்ணிப் பார்த்தார்கள்.  ‘Vulnerable Poison’ என்பார்களே அதைப்போல, சமயத்துறையில் தலையிட்டால்தான், தமிழரை எளிதில் வெல்லலாம் என்று கண்டுகொண்டார்கள். தமிழருக்கு இயல்பாய் அமைந்த பழங்குடிப் பேதைமை, சமயப்பித்து (Religious fanaticism) கொடைமடம் (Indiscriminate munificence) ஆகிய தன்மைகளைத் தங்கள் முன்னேற்றத்திற்குக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
முதலில் அரசர்களைச் சார்ந்து, அவர்களை வயப்படுத்தினர். பின்னர் அவர்கள் உதவியால் படிப்படியாகப் பொதுமக்களை வயப்படுத்தினர். இவ்வாறாக, முதலில் சமயத்துறையில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டி, பிறகு அரசியலிலும் காலூன்றத் தொடங்கினர்.
ஆனால், இந்தச் சமயங்களில் எல்லாம் தமிழ்ப்புலவர்கள் வாளா இருந்துவிடவில்லை. அவ்வப்போது கடுமையான எதிர்ப்பு தெரிவித்தே இருக்கிறார்கள். ஆரியர் வருகையால் தமிழர்க்கு நேர்ந்த தீமைகளைக் கண்டு அஞ்சியே திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
என்றாலும், பொதுவாகத் தமிழர்கள் ஆரியர்களைத் தங்கள் பகைவராக என்றுமே கருதியதில்லை. அவர்கள் இந்த நாட்டிற்கு வந்த காலந்தொட்டு அவர்களைத் தங்கள் உடன்பிறந்தவர்களைப் போல அன்பாகவே நடத்தி வந்திருக்கின்றனர்.  அவர்களை அயலாராக எண்ணி வெறுக்கவோ, விலக்கவோ இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த மனப்பான்மையுடனேயே பழகி வந்துள்ளனர். இருந்தும்கூட, பிராமணர்கள் அவர்களைத் தங்களைச் சார்ந்தோராகக் கருதாமல் ஒதுங்கியே வாழ்ந்து வந்துள்ளனர். இதனாலேயே நாம் அவர்களைத் தமிழர்கள் என்று ஒத்துக் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும்கூட, எல்லாவகையிலும் தமிழின் சிறப்பை ஒழிக்க நினைக்கும் அவர்கள் இயல்பும், புறம் நட்டு அகம் வேர்க்கும் நச்சுத் தன்மையும் அவர்களை இன்னாரென்று நமக்கு எளிதில் புலப்படுத்தி விடுகின்றன! இஃது ஒருபுறம் இருக்க, மேனாட்டார் தமிழின் மேன்மையையும் தமிழரின் பழைய பெருமையையும் உணரமுடியாமல் இருப்பதற்கு, இன்றைய தமிழரின் தாழ்ந்த நிலையும் ஒரு காரணம் ஆகும். இவர்களைக் காணும் ஆங்கிலேயர்கள், இத்தகையவர்களின் முன்னோர்கள் எப்படிச் சிறந்த நாகரிகம் உடையவர்களாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று அய்யுறு நிலையில் இருந்த ஆப்பிரிக்கர்கள் உயர்ந்துள்ள அளவிற்குக்கூட நம் தமிழர்கள் உயரவில்லை எனலாம். இதற்குக் காரணம் ஆரியப் பார்ப்பனர்களே யாவர். இவர்கள் தமிழர்களின் உள்ளத்திலிருந்து பகுத்தறிவு, தன்மானம், நெஞ்சுரம் ஆகிய மாந்தன் வளர்ச்சிக்கு இன்றியமையாத மூன்று இயல்புகளையும் அறவே அகற்றி விட்டனர். இறைவனையும் விதியையும் காரணமாகக்காட்டி, தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடை செய்துவிட்டனர்.
இதனாலேயே தமிழர்களிற் சிலர் பிராமணர்களை அறவே வெறுக்க முற்பட்டு, அவர்களுடைய உணவுக்கடைகளையும் புறக்கணித்து வருகின்றனர். சித்த மருத்துவர் தகடூர் செல்லையா அவர்கள், எவ்வளவுதான் பசிக்கொடுமையால் வாடினாலும், பிராமணர்களின் உணவுக் கடைக்குப் போகவே மாட்டார். அது மட்டுமன்று; பிராமணர்களுக்கு மருத்துவம் செய்யவும் மறுத்துவிடுவார். இத்தகைய நெஞ்சுரம் எல்லாத் தமிழர்களுக்கும் வேண்டும்.
சிறிது ஆழ்ந்து நோக்குவோமானால், உண்மையில் பிராமணர்கள் நம்மைவிட எந்த வகையிலும் உயர்ந்தவர் அல்லர் என அறியலாம். எடுத்துக்காட்டாக, ஒன்று சொல்கிறேன். பிராமணர் தங்களை மற்ற குலத்தாரைவிட உயர்ந்தவராகக் கருதிக்கொண்டு மற்ற இனத்தாரிடம் எதுவும் வாங்கி உண்ணமாட்டார்கள்| தமிழரில் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட சைவ வேளாளர்கள் பொற்கலத்தில் ஏதேனும் உணவுவகையிட்டுக் கொடுப்பினும் வாங்க மறுத்துவிடுவர். ஆனால், அவர்களே வேளாளரினும் தாழ்ந்தவராகக் கருதப்பட்டுவந்த இடையப் பெண்கள் பழைய மட்கலத்தில் கொண்டுவந்த மோரை வாங்கி வானமிழ்தம் என்று கூறி, மகிழ்ச்சியாகக் குடிக்கின்றனர். இந்த முரண்பாட்டை என்னவென்று சொல்லுவது!
இப்படியெல்லாம் இருந்தும், பிராமணர்கள் தங்களை மேற்குலத்தாரென்று சொல்லிக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களைத் தாழ்த்தி வந்துள்ளனர்; வருகின்றனர். இதற்குக் காரணம் தமிழர்களின் ஏமாறும் தன்மையேயன்றி, வேறன்று. எட்டினால் முடி; எட்டாவிட்டால் அடி _ இதுதான் பிராமணர்களின் வாழ்க்கைக் குறிக்கோள்.
இங்குள்ள பிராமணர்கள் புலால் உணவுக் கடைக்குச் செல்வதில்லையென்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், வடநாட்டுப் பிராமணர்கள் புலால் உணவுக் கடைக்குச் சென்று, புலாலுணவு நீக்கி மரக்கறி உணவுமட்டும் உட்கொண்டு மீளுவர். தமிழ்நாட்டிலும்கூட, பிராமணர்கள் தங்கள் உணவுக் கடைகளில் எல்லாக் குலத்தாரையும், இனத்தாரையும் ஏற்றுக்கொள்கின்றனர், வாணிகம் என்ற முறையில். ஆனால் வீட்டில் மட்டும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் _ பல்கலைக்கழகக் கண்காணகராக இருந்தாலும், பேராசிரியராக இருந்தாலும், அவ்வளவு ஏன் _ இந்தியக் குடியரசின் தலைவராக இருந்தாலும்கூட, ஒரு சிலரை ஏற்பதில்லை. இந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று சொல்வது!
இதற்கெல்லாம் காரணம் நமது பகுத்தறிவின்மையே. இவ்வாறு நாம் ஆரியருக்கு அடிமைப்பட்டிருப்பதால்தான். ஆங்கிலேயர்கள் நம்மை, உயர்ந்ததொரு நாகரிகத்துக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் _ ஆரியர் வருவதற்கு முன்னமே சிறந்த பண்பாட்டோடு விளங்கியவர்கள் என்று ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றார்கள்; மறுக்கின்றார்கள்.
நூல்: மொழிச் சிந்தனைகள்

உ.பி கலவரம் - சூத்திரதாரிகளும் பலன் அடைந்தவர்களும்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர் நகரில் நடைபெற்ற கலவரத்தில் இது வரை 48க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
10,000 நபர்கள் அகதி முகாம்களுக்கு குடியேறியுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அவ்வப்போது தளர்த்தப்பட்டாலும் எந்நேரமும் கலவரம் வெடிக்கும் சூழலே நிலவுகிறது.

இக்கலவரம் பற்றி கருத்து கூறிய உள்துறை அமைச்சர் ஷிண்டே முசாபர்நகர்கலவரத்தின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது என்று கூறினார். மேலும்  நாடாளுமன்ற தேர்தலுக்குள் பல்வேறு கலவரங்களை எதிர்பார்க்கலாம் என்றும் அச்சம் தெரிவித்திருந்தார். உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவும் இதே தொனியில் கருத்து கூறியிருந்தார்.
ஒரு இந்து பெண்ணை முஸ்லீம் வாலிபர் சீண்டியதால் அம்முஸ்லீம் வாலிபரை அப்பெண்ணின் சகோதரர்கள் கொன்றதாகவும் அதற்கு பதிலடியாக அச்சகோதரர்கள் கொல்லப்பட்டதே இக்கலவரத்தின் வித்தாக கூறப்படுகிறது. ஆனால் ஆகஸ்டு 27ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் இத்துணை நாட்கள் கழித்து 40 கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியதின் பின்னணி ஆராயப்பட வேண்டிய ஒன்று.

மூன்று கொலைகளோடு முடிந்திருக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு பிரச்னை ஒரு வகுப்பு கலவரமாக மாற்றப்படும் சூழலின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வந்தாலும் பாஜக மற்றும் சமாஜ்வாதியின் ஓட்டு அரசியலே பிரதானமாக கூறப்படுகிறது.
பீஹாரிலும் உத்தரபிரதேசத்திலும் முஸ்லீம்கள் லாலுவுக்கும், முலாயமுக்கும் ஒட்டு மொத்தமாக தங்கள ஆதரவை வழங்கினர். அதற்கு பிரதியுபகாரமாக முஸ்லீம்களின் பாதுகாப்புக்கு அவர்களின் ஆட்சியில் ஒப்பீட்டளவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதே பாணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்து முஸ்லீம் மோதலை கூர்மைப்படுத்துவதன் மூலம் சமாஜ்வாதியும், பாஜகவும் பலன் அடைய திட்டமிட்டுள்ளன என்றே பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
முல்லா முலாயம் என்று கூறப்படும் அளவு முஸ்லீம்களோடு நெருக்கமாக தன்னை காட்டி கொண்டாலும் இக்கலவரத்தை தடுக்க நினைத்திருந்தால் அகிலேஷ் அரசு தடுத்திருக்கலாம் என்று கோபப்படும் சிறுபான்மை அமைப்புகள் கீழ்காணும் கேள்விகளை எழுப்புகின்றனர்.
  1. ஆகஸ்டு 27 சம்பவம் நடைபெற்ற உடனே ஏன் மாநில அரசு இரு தரப்பு குற்றவாளிகளையும் சிறையில் அடைத்து உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை?
  2. ஆகஸ்டு 31 அன்று ஜாட்கள் மஹா பஞ்சாயத்தை கூட்டிய போது ஏன் அதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை?
  3. கூட்டம் கூட்ட தடை இருந்த நிலையில் செப்டம்பர் 7 அன்று ஜாட்களின் பஞ்சாயத்து நடக்க ஏன் அரசு அனுமதித்தது?
  4. இந்துக்கள் ஆயுதங்களோடு செல்லவும் கலவரத்தை தூண்டும் பேச்சுகள் பேசப்படவும் ஏன் அரசு அனுமதித்தது?
  5. கூட்டங்கள் கலவரத்தை தூண்டலாம் எனும் உளவுதுறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கை ஏன் கண்டு கொள்ளப்படவில்லை?
  6. சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் வழியாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதேன்?
  7. முஸ்லீம்களின் மீது தாக்குதல் நடைபெற்ற போது ஏன் முஸ்லீம் இளைஞர்கள் எக்காரணமுமில்லாமல் கைது செய்யப்பட்டார்கள்?
  8.  
முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது தங்களை இரட்சகராக காட்டி கொண்டால் முஸ்லீம்களின் ஓட்டுகள் தங்களுக்கு விழும் என்பதாலேயே அகிலேஷ் அரசு கலவரம் வருவதை கட்டுப்படுத்தவில்லை என்றும் ஒரு கட்டத்தில் அரசின் கையை மீறி கலவரம் சென்று விட்டதால் அரசு விழி பிதுங்கி நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் இக்கலவரத்தில் பலன் அடைந்தது சந்தேகமின்றி பாஜகவே. பாபர் மசூதி கலவர சமயத்தில் கூட ஜாட் இனத்தவர்கள் பாஜக பக்கம் சாயாமல் அஜித் சிங் மற்றும் சமாஜ்வாதி பக்கமே இருந்தனர். ஆனால் இக்கலவரத்தை வாய்ப்பாக பயன்படுத்தி போலி வீடியோக்களை வெளியிட்டு வன்முறையை தூண்டும் பேச்சுக்களை தூண்டி இந்துக்களின் பாதுகாவலர்களாய் தங்களை காட்டும் முயற்சியில் பாஜக  ஒரளவு வென்று விட்டது என்றே சொல்லலாம்.

உத்தரபிரதேசத்தில் இது வரை சமாஜ்வாதி வென்றதற்கு முக்கிய காரணமே ஜாட் மற்றும் முஸ்லீம் ஓட்டு வங்கியே. ஆனால் முஸ்லீம் ஒட்டு வங்கியை வலுப்படுத்துவதாக நினைத்து சமாஜ்வாதி செய்த முயற்சிகள் ஜாட் ஓட்டை பாஜக பக்கம் திருப்பி விட்டுள்ளது. இக்கலவரத்தால் இந்துக்களோடு தற்போது முஸ்லீம்களும் சமாஜ்வாதி அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர்.
சமாஜ்வாதி அரசின் கையாலாகாத்தனம் மற்றும் தவறான ஓட்டு வங்கி கணிப்பீடால் சமாஜ்வாதி மீதான ஜாட்களின் அதிருப்தியை பாஜகவும் முஸ்லீம்களின் அதிருப்தியை பகுஜன் சமாஜும் காங்கிரஸூம் பங்கு போட்டு கொள்ளும். இதை விட கவலையளிக்கும் விஷயம், பாபர் மசூதி இடிப்பின் போது கூட ஒற்றுமையாய் வாழ்ந்த ஜாட் மற்றும் முஸ்லீம் மக்களின் தற்போதைய நிலை. அகதிகள் முகாம்களிலும் அருகிலுள்ள மதராசாக்களிலும் தஞ்சம் புகுந்திருக்கும் 10,000 முஸ்லீம்களும் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பும் சூழல் இல்லாததது, உத்தரபிரதேசத்தின் சமூக சூழலை மோசமான காலகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்பது மட்டும் கசப்பான உண்மை.

மோடியின் நம்பர் 1 குஜராத்: ஒரு புள்ளிவிவர மோசடி!

“இந்தியாவில் குஜராத் என்று ஒரு மாநிலம் இருக்கிறது. அங்கு மோடி என்ற மாமனிதர் கடந்த 10 ஆண்டுகளாக முதலமைச்சராக உள்ளார். இப்போதெல்லாம் அந்த மாநிலத்தின் தெருக்களில் பாலாறும் தேனாறும்தான் ஓடுகின்றன.
இதை எல்லாம் சாத்தியமாக்கியது வெளிநாட்டு இந்தியர்களும், அன்னிய நிறுவனங்களும் குஜராத்தில் செய்த முதலீடுகள். மோடியின் குஜராத்தில் முதலீடு செய்ய அன்னிய முதலீட்டாளர்கள் இடையே நடக்கும் தள்ளுமுள்ளுகள் அகில உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன.

குஜராத்துக்கு 10 ஆண்டுகளாக சேவை செய்து தான் பட்ட கடனை அடைத்து முடித்து விட்ட மோடி இப்போது பாரதத்துக்கு தான் பட்ட கடனை அடைக்கத் தயாராகி வருகிறார். 2014 பொதுத் தேர்தலில் அவர் பாரதப் பிரதமராகப் போவதை எதிர்பார்த்து அன்னிய முதலீட்டாளர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் கொண்டு வந்து குவிக்க இருக்கும் அன்னிய நேரடி முதலீட்டினால் நாடெங்கிலும் ஓடப் போகும் செல்வச் செழிப்பை பிடித்து வைத்துக் கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள்!”
இந்துத்துவா ஊடகங்களாலும் உயர் நடுத்தர வர்க்க அம்பிகளாலும் நரேந்திர மோடி பற்றி இப்படி ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்படுகிறது. அதற்கு இரை போடும் விதமான புள்ளி விபரங்கள் குஜராத் அரசால் வெளியிடப்படுகின்றன.
அப்படி வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களில் ஒன்றை பிய்த்து மேய்ந்திருக்கிறது இந்து நாளிதழில் வெளியான கட்டுரை. ‘சுதேசி பொருளாதாரம்’ என்று சங்க பரிவாரங்கள் ஒரு புறம் ஜல்லி அடித்துக் கொண்டிருக்கும் போது ‘அன்னிய முதலீடுகள்தான் குஜராத் முன்னேறியதற்கான மூடுமந்திரம்’ என்றும் ‘அன்னிய முதலீடுகள் மூலம்தான் இந்தியா முன்னேறும்’ என்றும் மோடியின் துதிபாடிகளின் வாதங்கள் எவ்வளவு மோசடியானவை என்பது ஒரு புறமிருக்க, அந்த அன்னிய முதலீடுகள் குறித்த குஜராத் அரசு புள்ளிவிபரங்களின் நம்பகத் தன்மையை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்துகிறது.

அன்னிய முதலீடுகள் அதிகம் வந்தால் அந்த மாநிலம் அல்லது நாடு மிகப்பெரிய கொள்ளைக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது என்பதை மறுகாலனியாக்க ஆதரவாளர்கள் ஒத்துக் கொள்வதில்லை. சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் வளர்ச்சி என்றுதான் அவர்கள் திரிக்கிறார்கள். குஜராத்தின் வளர்ச்சி என்பது இத்தகையதுதான். அதிலும் அன்னிய முதலீடு குறித்து மோடியின் அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும்  பொய்கள் தனித்ததொரு விசேசம். அந்த பீலாவை உடைத்து நொறுக்குகிறது இந்தக் கட்டுரை.
குஜராத் அரசின் புள்ளிவிபரங்களின்படி பார்த்தால், 2003 முதல் 2011 வரை நடைபெற்ற ‘துடிப்பான குஜராத் – உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு’ களில் வாக்களிக்கப்பட்ட அன்னிய முதலீடுகளின் மதிப்பு $876 பில்லியன் (சுமார் ரூ 48.18 லட்சம் கோடி). அவற்றில் பெரும்பகுதி, 84 சதவீதம் (அதாவது சுமார் ரூ 38.54 லட்சம் கோடி) ஏற்கனவே வந்து சேர்ந்து விட்டன, அல்லது வந்து கொண்டிருக்கின்றன.
துண்டுச் சீட்டில் போட்டுப் பார்த்த கணக்குப்படி, வாக்களிக்கப்பட்ட முதலீடுகளில் 60 சதவீதம் வந்திருந்தால் கூட குஜராத் சீனா என்ற டிராகனை பின் தள்ளி முன்னேறியிருக்கிறது என்று பொருள். உலகிலேயே வளரும் நாடுகளில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் சீனாதான் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2003-2011 காலகட்டத்தின் போது சீனா ஈர்த்த மொத்த அன்னிய முதலீட்டின் மதிப்பு $600 பில்லியன் டாலர் (ரூ 33 லட்சம் கோடி).
இந்திய ரிசர்வ் வங்கியின் 2000 முதல் 2011 வரையிலான அன்னிய நேரடி முதலீடு குறித்த புள்ளிவிபரங்கள் ‘குஜராத் $7.2 பில்லியன் (சுமார் ரூ 39,600 கோடி) அளவிலான அன்னிய முதலீட்டை மட்டுமே பெற்றது’ என்று தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா $45.8 பில்லியன் (ரூ 2.4 லட்சம் கோடி), டெல்லி $26 பில்லியன் (சுமார் ரூ 1.5 லட்சம் கோடி) அன்னிய முதலீட்டை ஈர்த்திருந்தன. கர்நாடகாவும், தமிழ்நாடும் முறையே $8.3 பில்லியன் (ரூ 45,650 கோடி), $7.3 பில்லியன் (ரூ 40,150 கோடி)) அன்னிய முதலீடுகளுடன் குஜராத்தை விட முன்னிலை வகித்தன.

2012-13 நிதியாண்டில் ஜனவரி வரையிலான அன்னிய நேரடி முதலீட்டுக்கான புள்ளிவிபரங்களின்படி குஜராத், ரூ 2,470 கோடி மதிப்பிலான முதலீடுகளை பெற்று நாட்டின் மொத்த முதலீட்டில் 2.38 சதவீதத்துடன் மாநிலங்களிடையே ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ரூ 40,999 (2012-13) கோடி அன்னிய முதலீட்டுடன் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து டெல்லி, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் வருகின்றன. ரூ 1,934 அன்னிய முதலீட்டை பெற்ற மேற்கு வங்கத்தை விட குஜராத் சிறிதளவே முன்னணியில் இருக்கிறது.
குஜராத்துக்கு வரும் அன்னிய நேரடி முதலீட்டின் பங்கு சென்ற மூன்று நிதியாண்டுகளில் சரிந்து கொண்டிருக்கிறது. 2010-11-ல் ரூ 3,294 கோடி (நாட்டு மொத்தத்தில் 3.38 சதவீதம்), 2011-12-ல் ரூ 4,730 கோடி (நாட்டு மொத்தத்தில் 2.85 சதவீதம்), இப்போது ரூ 2,470 கோடி (நாட்டு மொத்தத்தில் 2.38 சதவீதம்). ‘உலகளாவிய பொருளாதார பின்னடைவை மீறி தொடர்ந்து முன்னேறுவதன் மூலம் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கான எஞ்சினாக விளங்குகிறது’ என்ற மாநில அரசின் பிராச்சாரததை இது பொய்ப்பிக்கிறது.
2012-13-ல் இந்தியாவுக்கான ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு 30 சதவீதம் குறைந்தாலும், குஜராத்தின் அன்னிய முதலீட்டு மதிப்பு சுமார் 50 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.
2013-ன் ‘துடிப்பான குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு’க்குப் பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிய புள்ளிவிபரங்களை கொடுக்க வேண்டாம் என்று குஜராத் அரசாங்கம் முடிவு செய்தது. “குஜராத் இந்தியாவின் நுழைவாயில் ஆகி விட்டது” என்று மட்டும் முதலமைச்சர் மோடி அறிவித்தார்.
- தர்ஷன் தேசாய்

Tuesday, October 22, 2013

நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !

பாசிசக் கொலைகாரன் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகத் தெரிவு செயப்பட்டிருக்கிறார். தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறுவதை விட, சதித்தனமான காய் நகர்த்தல்கள், மிரட்டல்கள், நிர்ப்பந்தங்கள் மூலம் தன்னைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையை உருவாக்கி, தன் சொந்தக் கட்சியினரைப் பணிய வைத்திருக்கிறார் என்று கூறுவதே பொருத்தமானது.


1980-களின் பிற்பகுதியில் பாரதிய ஜனதா தனது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கு, அதற்கு “ராமனின் தயவு” தேவைப்பட்டது. 1998-99-இல் பதவிக்கு வருவதற்கு 17 கட்சிகள் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் தயவு தேவைப்பட்டது. அன்று கூட்டணியின் பலத்தால் 25.6% வாக்குகளையும்  182 இடங்களையும் கைப்பற்றிய பா.ஜ.க.வின் வாக்கு எண்ணிக்கை 2009-இல் 18.8 சதவீதமாகவும், நாடாளுமன்ற எண்ணிக்கை 116 ஆகவும் வீழ்ச்சியடைந்தன.
தற்போது கூட்டணியில் இருப்பவர்கள் சிவசேனாவும், அகாலி தளமும் மட்டுமே. பாரதிய ஜனதா தனது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கு இனி ராமன் பயன்பட மாட்டான் என்பதும் கல்லின் மேல் எழுத்தாகி விட்டது. கூட்டணியும் இல்லை, இராமனும் இல்லை. மன்மோகன் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை அறுவடை செய்து கொள்வதற்கு, இந்த அரசுக்கு மாற்றான மீட்பனாக மோடியை முன்நிறுத்தியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

2002 படுகொலை தொடர்பான வழக்குகளில் மோடியின் அமைச்சர் கோத்னானி உள்ளிட்டோர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றிருந்த போதும், மோடியால் அரங்கேற்றப்பட்ட போலி மோதல் கொலைகளுக்காக 32 போலீசு அதிகாரிகள் சிறையில் இருந்த போதும், மோடியின் மீது குற்றவழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் உள்ளன என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமைகஸ் கியூரி, வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன் கருத்து தெரிவித்து, அந்த வழக்கு விசாரணையில் இருந்த போதும், இஷ்ரத் ஜகான் கொலை வழக்கினை முடக்குவதற்கும், சம்பந்தப்பட்டவர்களை விலை பேசுவதற்கும் மோடியின் தனி உதவியாளர், அமைச்சர்கள், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்டோர் சதித்திட்டம் தீட்டியதற்கான ஒலிப்பதிவு தற்போது அம்பலமாகியுள்ள போதும், இத்தனையும் தாண்டி தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றவாளி, தன்னை இந்த தேசத்தின் மீட்பனென்று பிரகடனப்படுத்திக் கொள்வதை நாம் காண்கிறோம். இது எப்படி சாத்தியமானது?
முஸ்லிம் படுகொலை குறித்த குற்றவுணர்வின்றி மீண்டும் மீண்டும் குஜராத் மோடியைத் தேர்ந்தெடுத்தது. அம்மாநிலத்தின் இந்துப் பெரும்பான்மையினர் இந்துத்துவக் கருத்தியலுக்கு அடிமையாக்கப்பட்டிருப்பது அதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. எனினும், அது மட்டுமே காரணமல்ல. தன்னுடைய கொலைக்குற்றத்தை நியாயப்படுத்துவதற்கு இந்துத்துவக் கருத்தியலை மட்டுமே நம்பி இருப்பது போதுமானதல்ல என்பதுடன், பொருத்தமானதும் அல்ல என்று புரிந்து கொண்ட மோடி, முஸ்லிம் படுகொலை குறித்த விமரிசனங்களை “குஜராத்துடைய கவுரவத்தின் மீதான தாக்குதல் என்றும், குஜராத் சாதித்திருக்கும் வளர்ச்சியின் மீதான தாக்குதல்” என்றும் திசை திருப்பினார்.

இப்போது இந்த விமரிசனங்களுக்கு மோடி மட்டுமே பதில் சோல்லிக் கொண்டிருக்கும் நிலை மாறி விட்டது; மாற்றியமைக்கப்பட்டு விட்டது. 90-களில் பாபர் மசூதிதான் ராம ஜென்மபூமி என்ற கருத்துக்காக ஒரு சராசரி இந்து எப்படி முட்டாள்தனமாகவும், மூர்க்கமாகவும் வாதாடினானோ, அதைப்போலவே, இன்று “மோடியே மீட்பன்” என்ற கருத்துக்காக இந்து நடுத்தர வர்க்கம் வாதாடுகிறது. ஆவியெழுப்புதல் கூட்டத்தில் ஆராதனைக்கு ஆட்பட்டவர்களைப் போலவும், ஐ.பி.எல். ஆட்ட மைதானத்தின் ரசிகர்களைப் போலவும் மோடி பக்தர்கள் அலறுகிறார்கள்.
இந்த மோடி பக்தர்கள் அல்லது இரசிகர்களை ஆட்டுவிக்கும் கருத்து “வளர்ச்சி”. தன்னுடைய கொலை முகத்தை மறைத்துக் கொள்வதற்கு மோடி அணிந்திருக்கும் முகமூடிதான் “வளர்ச்சி”.
“குற்றத்துக்கான தண்டனை என்ன?” என்ற கேள்விக்கு, “வளர்ச்சி” என்பதை பதிலாகத் தருகின்ற இதே அயோக்கியத்தனத்தைத்தான் நாம் ராஜபக்சேவிடமும் பார்க்கிறோம். 2009 தமிழினப் படுகொலைக் குற்றம் குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் ராஜபக்சேயிடமிருந்து வருகின்ற பதில், பொருளாதார மேம்பாடு, புதிய சாலைகள், ரயில் பாதைகள், புதிய வீடுகள் போன்றவைதான். இந்தப் பதிலை ஏற்றுக்கொள்ளாமல், இனப்படுகொலைக் குற்றத்துக்கு நீதி கேட்பவர்களை தேசத்துரோகியாகவும், இலங்கையின் கவுரவம் மற்றும் இறையாண்மையின் மீது தாக்குதல் தொடுப்பவர்களாகவும் சித்திரிக்கிறார் ராஜபக்சே.

பெரும்பான்மையின் பிரதிநிதியான தாங்கள், பெருந்தன்மையுடன் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரின் நலனையும் கணக்கில் கொண்டு திட்டம் தீட்டி செயல்படுவதாகவும், தங்களது பெருந்தன்மையை அங்கீகரிக்காமல், கடந்த கால விசயங்களையே மீண்டும் மீண்டும் கிளறுபவர்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள் என்று மோடியும் இராஜபக்சேவும் கூறுகிறார்கள்.அது மட்டுமல்ல,” சிறுபான்மை என்ற சொல்லே நமது அகராதியில் இனி கிடையாது. இந்த நாட்டில் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தார் போன்ற சிறுபான்மையினர் யாரும் கிடையாது. இந்த தேசத்தை நேசிப்பவர்கள், நேசிக்க மறுப்பவர்கள் என்று இரண்டு பிரிவினர் மட்டுமே உண்டு” என்கிறார் ராஜபக்சே. இந்தியர்கள் அனைவருக்கும் சம உரிமை என்பதுதான் தனது கொள்கையென்றும், சிறுபான்மையினருக்கான சலுகைகள், மொழி வழி மாநிலங்கள், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பவையெல்லாம் இந்தியாவைப் பிளவு படுத்தும் அரசியல் என்றும் (திருச்சி பொதுக்கூட்டத்தில்) பிரகடனம் செகிறார் மோடி.
இதன்பட, இந்து, இந்தி, இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஏற்காதவர்கள், அதாவது, சாதிய – இன – மத – வர்க்க – பாலின ஏற்றத்தாழ்வுகளை இயல்பானவை என்று ஒப்புக் கொள்ளாதவர்கள் தேசவிரோதிகள் ஆக்கப்பட்டு விடுகிறார்கள்.
மோடி கூறுகின்ற வளர்ச்சி யாருக்கானது என்பதை, உழைக்கும் வர்க்கம் அல்லது ஒடுக்கப்பட்ட சாதி என்ற முறையிலோ, இனம் அல்லது சிறுபான்மை மதம் என்ற முறையிலோ கேள்வி கேட்டால், அவ்வாறு கேள்வி எழுப்புவதை தேசவிரோத நடவடிக்கையாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் சித்தரிக்கிறது. வளர்ச்சி எனும் சித்தாந்த போதைக்கு ஆட்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கமோ, இவ்வாறு கேள்வி எழுப்புபவர்களை பத்தாம்பசலிகளாகவும் திறமைக்குப் பதிலாக சலுகையைக் கோருகின்ற புல்லுருவிகளாகவும் கருதுகிறது.

எனவேதான் குஜராத் படுகொலைக்காக மோடி தண்டிக்கப்பட வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கை, மோடியைப் பிரதமராக விடாமல் தடுப்பதற்கான சூழ்ச்சியாகவோ, தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரான முட்டுக்கட்டையாகவோ, முஸ்லிம்களைத் தாஜா செயும் இன்னொரு சலுகையாகவோ, இசுலாமிய பயங்கரவாதத்துக்கான ஆதரவாகவோ மோடி ரசிகர்களுக்குத் தோன்றுகிறது.
இன்று மோடியை முன்நிறுத்துகின்ற இந்தியத் தரகு முதலாளி வர்க்கமாக இருக்கட்டும், மோடியைத் தீவிரமாக ஆதரிக்கின்ற மேட்டுக்குடி வர்க்கத்தினர் மற்றும் ஊடகத்தினராகட்டும் அல்லது இதயம் இருக்க வேண்டிய இடத்தில் வயிற்றைப் பெற்றிருக்கும் தனியார்மயத்துக்குப் பிறந்த நடுத்தர வர்க்க அடிமைகளாகட்டும் இவர்கள் பலரது சிந்தனையிலும் வாழ்க்கையிலும் முதலாளித்துவமும் இந்துத்துவமும் இரண்டறக் கலந்துதான் நிலவுகின்றன.  இதன் காரணமாகத்தான் வளர்ச்சி என்ற சொல்லை இவர்கள் உச்சரிக்கும்போது, அது ஒரு சித்தாந்தத்துக்குரிய வீரியத்தைப் பெற்றுவிடுகிறது.
ஒழுக்கம், நீதி, அறம் ஆகியவற்றுக்குப் பொருந்தியதாக வளர்ச்சி இருக்க வேண்டும் என்று வாயளவில் சொல்லிக் கொள்கின்ற பாசாங்கு கூட இவர்களிடம் இல்லை. தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியையோ, நாட்டின் வளர்ச்சியையோ எந்த வழி சாதித்துக் கொடுக்கிறதோ அந்த வழி நீதியானது என்பதே இவர்களது அறக்கோட்பாடு.
இங்ஙனம் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், அதன் விளைவாக ஏற்படும் வெற்றி தோல்விகளையும் ஆட்டத்தின் விதியாக ஒப்புக்கொண்டு அடங்கிப் போகச் சொல்லுகின்ற முதலாளித்துவ சித்தாந்தமும், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வை இயல்பானதாக எடுத்துக்கொண்டு மனப்பூர்வமாக இசைந்து வாழச் சொல்லுகின்ற பார்ப்பனிய இந்துத்துவக் கொள்கையும் இரண்டறக் கலந்து விடுகின்றன.
“வளர்ச்சி – சிறந்த அரசாளுமை” என்ற இந்த மந்திரச் சோற்றொடர்கள் “மோடி மஸ்தானின்” சொந்தக் கண்டுபிடிப்புகளல்ல. இவை உலக வங்கியிடமிருந்து உருவப்பட்டவை. தனியார்மய -  தாராளமயக் கொள்கைகள் தம்மளவில் உன்னதமானவை, மாற்றீடு செய்ய முடியாதவையென்றும், அக்கொள்கைகளை ஊழலின்றியும் திறமையாகவும் அமல்படுத்தும் ஆற்றல் பெற்ற தலைவர்களோ அரசோ பல நாடுகளில் இல்லாமலிருப்பதுதான் வறுமைக்கும், வேலையின்மைக்கும் பிற சமூக பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும் உலக வங்கி கடை விரித்து வரும் புளுகுமூட்டை.

பத்தாண்டுகளுக்கு முன் இதே கருத்தின் அடிப்படையில்தான் ஆளும் வர்க்கங்கள் மன்மோகன் சிங்கை மீட்பனாகச் சித்தரித்தன. சிறந்த நிர்வாகி, பொருளாதார வல்லுநர், கறை படியாத கரம் என்றெல்லாம் கொண்டாடப்பட்ட மன்மோகன், தனியார்மயக் கொள்கைகள் தோற்றுவித்த பாதிப்புகளின் காரணமாகவும், அடுக்கடுக்கான ஊழல்கள் காரணமாகவும் இப்போது மக்கள் மத்தியில் மதிப்பிழந்து விட்டார். ஆளும் வர்க்கங்களிடமும் மதிப்பிழந்து விட்டார்.
பண்டைக் காலத்தில் சத்திரியன் என்ற பிறப்புச் சான்றிதழ் வழங்கி மன்னனாக பட்டம் சூட்டிவிடும் அதிகாரத்தைப் பெற்றிருந்த பார்ப்பானின் இடத்தில், இன்று கார்ப்பரேட் முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்கள் இருக்கின்றன. தாங்கள் விரும்புகின்ற வேகத்தில் தனியார்மய- தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் “அரசியல் உறுதி” அவரிடம் இல்லை என்பதால் மன்மோகனை அட்டைப்படத்தில் போட்டு “லாயக்கில்லாதவர்” (Under Performer) என்று எழுதி விட்டது அமெரிக்காவின் “டைம்” வார ஏடு. அதே “டைம்” ஏடு மோடி படத்தைப் போட்டு “மோடி என்றால் காரியத்தில் உறுதி” என்று கொண்டாடியிருக்கிறது.
எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை உறுதியாக அமல்படுத்தக்கூடிய ஒரு வலிமையான பாசிஸ்டையே ஆளும் வர்க்கங்கள்  இப்போது எதிர்பார்க்கின்றன. 2002-இல் ஈவிரக்கமற்ற முஸ்லிம் படுகொலையை தொலைக்காட்சி காமிராக்களுக்கு முன்பே நடத்திவிட்டு, அந்தப் படுகொலைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை என்பது உலகத்துக்கே தெரிந்த பின்னரும், மோடியின் அமைச்சர்களும், போலீசு உயரதிகாரிகளும் சிறையிலிடப்பட்ட பின்னரும், ஒரு வார்த்தை வருத்தம் கூட தெரிவிக்காமல் மோடி காட்டிவரும் உறுதி, ஆளும் வர்க்கங்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.
அரசாங்க விதிமுறைகள், வழிமுறைகள், உரிமங்கள், பல்வேறு இலாகாக்களின் ஒப்புதல்கள் போன்ற தொந்திரவுகளை மட்டுமல்ல, தன்னுடைய அமைச்சரவை என்ற தொந்திரவையும் கூட முற்றாக அப்புறப்படுத்தி விட்டு, மோடி என்ற சர்வாதிகாரியின் கண்ணசைவு மட்டும் போதும் என்ற ஒற்றைச் சாளர முறையில் முதலாளிகளின் கோரிக்கைகள் குஜராத்தில் நிறைவேற்றப்படும் வேகம் அவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.
மேற்கு வங்கத்திலிருந்து துரத்தப்பட்ட டாடாவை வரவேற்று, 2900 கோடி ரூபாய் முதல் போட்ட டாடாவுக்கு சுமார் 30,000 கோடி ரூபாக்கு சலுகைகளை வாரி வழங்கியதாகட்டும், மாருதி தொழிலாளர் போராட்டத்தை நாடே அனுதாபத்துடன் ஆதரித்தபோதும், சுசுகி முதலாளியின் மீது அனுதாபம் கொண்டு ஜப்பானுக்கே நேரில் சென்று, மாருதி நிறுவனத்தை குஜராத்துக்கு இழுத்து வந்ததாக இருக்கட்டும், நிர்மா, அதானி, மித்தல், அம்பானி போன்ற பல முதலாளிகளுக்கும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள நிலம், மானியங்கள், கடன்கள், வரி விலக்குகள் ஆகியவற்றை வாரி வழங்கியதாக இருக்கட்டும்  இத்தகைய நடவடிக்கைகள் அனைத்திலும் முதலாளி வர்க்கத்தின் நலனைத் தனது சோந்த நலனாகவே உணர்ந்து   செயல்பட்ட  மோடியின் துணிச்சல் அவர்களைப் பெரிதும் ஈர்த்திருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் “எகனாமிக் டைம்ஸ்” நாளேடு நடத்திய சர்வேயில் இந்தியாவின் 100 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களில் 74 பேர் மோடி பிரதமராக வர வேண்டுமென விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படி முதலாளி வர்க்கத்தால் ஆதரிக்கப்படுகின்ற ஒரு நபர் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வில் வளர்ச்சியைக் காட்ட முடியுமா என்ற சிறிய சந்தேகம் கூட மோடி பக்தர்களுக்கு எழுவதில்லை. கம்யூனிச எதிர்ப்பு என்ற ஊறுகாப் பானைக்குள் ஆண்டுக் கணக்காக ஊறப்போட்டு வளர்க்கப்பட்ட அமெரிக்க மக்களே, “முதலாளித்துவம் ஒழிக” என்று உலக முதலாளித்துவத்தின் கருவறையான வால் ஸ்ட்ரீட்டில் முழங்கிவரும் இந்தக் காலத்திலும் கூட, முதலாளிகளால் ஆதரிக்கப்படுவதை மதிப்புக்குரியதாகவும், கூடுதல் தகுதியாகவும் கருதுகிறார்கள் மோடி பக்தர்கள்.
சொல்லிக் கொள்ளப்படும் குஜராத்தின் வளர்ச்சி என்பதே ஒரு கட்டுக்கதை என்று நிரூபிக்கும் அரசாங்கப் புள்ளிவிவரங்களையும், ஆதாரங்களையும் முன்வைத்தாலும் அத்தகைய உண்மை விவரங்கள் இவர்கள் மீது எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
வரலாற்று விவரங்கள், தொல்லியல் ஆவுகளை வைத்துக்கொண்டு ராமன் கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்று முதலில் வாதாடுவது, அதனை அறிவியல் பூர்வமாக நிலைநாட்ட முடியாத போது, மறுத்து வாதிடுபவர்கள் மீது களங்கம் கற்பிப்பது, அதுவும் முடியாத போது, “எங்கள் மத நம்பிக்கையை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது” என்று தமது முட்டாள்தனத்தை தெனாவெட்டாகப் பிரகடனம் செய்வது என்ற வழிமுறைகளைத்தான் அத்வானி முதல் அடிமட்டத் தொண்டன் வரையிலான அனைவரும் அன்று அயோத்தி விவகாரத்தில் செய்தார்கள்.
அதையேதான் மோடி விவகாரத்திலும் செய்கிறார்கள். இணைய வெளியிலும், ஊடகத் துறையிலும் இவர்களால் ஏவி விடப்பட்டிருக்கும் அறிவுத்துறைக் காலாட்படை முன் எப்போதும் இல்லாத தைரியத்துடன் பார்ப்பன பாசிசக் கருத்துகளை நஞ்சாக கக்குகிறது. ஒரு கோயபல்சின் இடத்தில் இப்போது பல இலட்சம் கோயபல்சு குஞ்சுகள்!
பல்லாயிரக்கணக்கான மக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த ஒரு கிரிமினல், தன்னுடைய குற்றங்களை நியாயப்படுத்திக் கொள்ளவும், தனது பிம்பத்தை உயர்த்திக் கொள்ளவும் அடுக்கடுக்கான போலி மோதல் கொலைகளை அரங்கேற்றிய ஒரு வஞ்சகன், தான் அதிகார ஏணியில் மேலேறுவதற்காகத் தனது கூட்டாளிகளைக் காவு கொடுக்கவும் தயங்காத ஒரு கயவன், “நானே உங்களது மீட்பன்” என்று முழங்குகிறான்.
பாசிசத்தின் தலையை நசுக்கிக் கொல்ல விரும்புகிறவர்கள் நாட்களைத் தள்ளிப் போடவியலாது. இந்தக் கணமே களத்தில் இறங்க வேண்டும்.
சூரியன்

உருவம் மாறினாலும் தனது அஜண்டாவை மறைக்க இயலாத மோடி???


பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் என்ற பட்டத்தை சுமந்து இந்தியா முழுவதும் வலம்வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன் மீது படிந்துள்ள இனப்படுகொலை கறையை துடைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.




அனைத்து தரப்பு மக்களையும் குறிப்பாக முஸ்லிம்களை கவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். 25 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை கொண்ட முஸ்லிம்களின் வாக்குகளே இதற்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். உ.பி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தலித் மக்களுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை கொண்ட மக்கள் முஸ்லிம்களாக இருப்பதால் அவர்களின் வாக்குகளை கவர மோடி முடிவுசெய்து பல தந்திரங்களையும் மேற்கொண்டு வருகிறார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் இனப்படுகொலையின் இரத்தக் கறையை மூடி மறைக்க முஸ்லிம்கள் அணியும் ஆடைகளை மோடி தற்போது அணிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஷெர்வாணி அணிந்து மோடி பல மேடைகளில் தோன்றுகிறார். இருப்பினும் அவரால் தனது ஹிந்துத்துவா அஜண்டாவை மூடி மறைக்க இயலவில்லை.

ஒருபுறம் பலதரப்பட்ட மக்களை கவர முயற்சி மேற்கொள்ளும் மோடி ஈடுபடும்போது மறுபுறம் முஸ்லிம் எதிர்ப்பு கட்டுரைகள் இன்னமும் பா.ஜ.கவின் இணையதளங்களில் காணப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் மோடி அஹ்மதாபாத்தில் அழைப்புவிடுத்த முஸ்லிம்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்ட ஸக்காத் ஃபவுண்டேசன் தலைவர் டாக்டர் ஸய்யித் ஸஃபர் மஹ்மூத் இந்த கட்டுரைகளில் முஸ்லிம் விரோதப் போக்கை வெளிச்சம்போட்டு காட்டியிருந்தார்.




“ஹிந்துத்துவா எ க்ரேட் நேசனல் ஐடியாலஜி’, கிவ் அஸ் திஸ் டே அவர் சென்ஸ் ஆஃப் மிஷன்”, “செமிட்டிக் மோனோதிஸம்” ஆகிய கட்டுரைகளில் இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் துவேஷத்தை எடுத்தியம்பும் இக்கட்டுரைகள் குறித்து ஸஃபர் மஹ்மூத் எழுப்பிய கேள்விகளுக்கு மோடியால் பதில் அளிக்க முடியவில்லை. முஸ்லிம் தலைவர்கள் எழுப்பிய பிரச்சனைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மோடி கூறினார்.

ஆனால், தற்போது வரை அந்த கட்டுரைகள் குறித்து மோடி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதன்மூலம் முஸ்லிம்களை கவர மோடி பல வேடங்களைப் போட்டாலும், தனது ஹிந்துத்துவா அஜண்டாவை மூடி மறைக்க இயலாது என்பது தெளிவாகிறது எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்தான் மோடி!!!

நம்பிக்கைக்குரிய போலீஸ் அதிகாரிகளை போலி என்கவுன்டரில் சிக்கவைத்துவிட்டு, தனக்கு நெருக்கமான அமித் ஷாவை மோடி பாதுகாப்பதாக கூடுதல் தலைமைச் செயலாளருக்கு (உள்துறை) அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார் இடைநீக்கம் செய்யப்பட்ட குஜராத் அய்.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்ஸாரா.

6 ஆண்டுகளுக்கும் மேல் சிறை வாழ்க்கையை அனுபவித்து வரும் வன்ஸாரா மோடியின் நம்பிக்கைக்குரிய மேனாள் அதிகாரி. சி.பி.அய்.ஆல் புலனாய்வு செய்யப்பட்டு வரும் 2003_06 இடையேயான 4 போலி என்கவுன்டர், சோராபுதீன், பிரஜாபதி, இஷரத் ஜஹான், சாதிக் ஜமால் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர், தேசத்தின் பாதுகாப்பிற்காக தியாகம் செய்த அதிகாரிகளை ஷா கைவிட்டுவிட்டார் என்றும், முதலமைச்சரைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், போலீஸ் அதிகாரிகள் வெறும் களப் பணியாளர்கள்தான், அவர்கள் கொள்கை வகுப்பாளர்களான மோடி மற்றும் ஷாவின் உத்தரவுகளைச் செயல்படுத்துபவர்கள்தான் என்றும்  கூறியுள்ளார்.