Showing posts with label காவி தீவிரவாதம். Show all posts
Showing posts with label காவி தீவிரவாதம். Show all posts

Friday, November 1, 2013

தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு பகிரங்க மடல்!

சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு,
ஜூனியர் விகடன் 30.10.13 இதழ் படித்தேன். “விதாண்டாவதத்தால் மோடியை வீழ்த்த முடியாது” என்ற தலைப்பில் வெளிவந்த பேட்டியில் ஆதாரமற்ற தகவல்களை, உண்மை போல் கூறியது கொஞ்சமும் அரசியல் நாகரிகமில்லாததாகும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, எவ்வளவோ கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்தீர்கள். ஆனால், மக்களிடம் அந்த பிம்பங்கள் எடுபடவில்லை.

Monday, October 28, 2013

குஜராத் இனப்படுகொலை: மோடிக்கு எதிரான மனுவில் இன்று தீர்ப்பு!

அஹ்மதாபாத்: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்.ஐ.டி.) அறிக்கைக்கு எதிராக கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த மனுவின் மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

காவி பயங்கரவாதிகளுக்குத் தண்டனை எப்போது?

மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா முதலிய பார்ப்பனர்கள் அதில் மட்டுமல்லாமல், அய்தராபாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர்தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை  திட்டமிட்டே அங்கே  நிகழ்த்திவிட்டு, முஸ்லீம்கள்மீது  பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!

Wednesday, October 23, 2013

மோடியின் நம்பர் 1 குஜராத்: ஒரு புள்ளிவிவர மோசடி!

“இந்தியாவில் குஜராத் என்று ஒரு மாநிலம் இருக்கிறது. அங்கு மோடி என்ற மாமனிதர் கடந்த 10 ஆண்டுகளாக முதலமைச்சராக உள்ளார். இப்போதெல்லாம் அந்த மாநிலத்தின் தெருக்களில் பாலாறும் தேனாறும்தான் ஓடுகின்றன.
இதை எல்லாம் சாத்தியமாக்கியது வெளிநாட்டு இந்தியர்களும், அன்னிய நிறுவனங்களும் குஜராத்தில் செய்த முதலீடுகள். மோடியின் குஜராத்தில் முதலீடு செய்ய அன்னிய முதலீட்டாளர்கள் இடையே நடக்கும் தள்ளுமுள்ளுகள் அகில உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன.

குஜராத்துக்கு 10 ஆண்டுகளாக சேவை செய்து தான் பட்ட கடனை அடைத்து முடித்து விட்ட மோடி இப்போது பாரதத்துக்கு தான் பட்ட கடனை அடைக்கத் தயாராகி வருகிறார். 2014 பொதுத் தேர்தலில் அவர் பாரதப் பிரதமராகப் போவதை எதிர்பார்த்து அன்னிய முதலீட்டாளர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் கொண்டு வந்து குவிக்க இருக்கும் அன்னிய நேரடி முதலீட்டினால் நாடெங்கிலும் ஓடப் போகும் செல்வச் செழிப்பை பிடித்து வைத்துக் கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள்!”
இந்துத்துவா ஊடகங்களாலும் உயர் நடுத்தர வர்க்க அம்பிகளாலும் நரேந்திர மோடி பற்றி இப்படி ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்படுகிறது. அதற்கு இரை போடும் விதமான புள்ளி விபரங்கள் குஜராத் அரசால் வெளியிடப்படுகின்றன.
அப்படி வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களில் ஒன்றை பிய்த்து மேய்ந்திருக்கிறது இந்து நாளிதழில் வெளியான கட்டுரை. ‘சுதேசி பொருளாதாரம்’ என்று சங்க பரிவாரங்கள் ஒரு புறம் ஜல்லி அடித்துக் கொண்டிருக்கும் போது ‘அன்னிய முதலீடுகள்தான் குஜராத் முன்னேறியதற்கான மூடுமந்திரம்’ என்றும் ‘அன்னிய முதலீடுகள் மூலம்தான் இந்தியா முன்னேறும்’ என்றும் மோடியின் துதிபாடிகளின் வாதங்கள் எவ்வளவு மோசடியானவை என்பது ஒரு புறமிருக்க, அந்த அன்னிய முதலீடுகள் குறித்த குஜராத் அரசு புள்ளிவிபரங்களின் நம்பகத் தன்மையை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்துகிறது.

அன்னிய முதலீடுகள் அதிகம் வந்தால் அந்த மாநிலம் அல்லது நாடு மிகப்பெரிய கொள்ளைக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது என்பதை மறுகாலனியாக்க ஆதரவாளர்கள் ஒத்துக் கொள்வதில்லை. சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் வளர்ச்சி என்றுதான் அவர்கள் திரிக்கிறார்கள். குஜராத்தின் வளர்ச்சி என்பது இத்தகையதுதான். அதிலும் அன்னிய முதலீடு குறித்து மோடியின் அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும்  பொய்கள் தனித்ததொரு விசேசம். அந்த பீலாவை உடைத்து நொறுக்குகிறது இந்தக் கட்டுரை.
குஜராத் அரசின் புள்ளிவிபரங்களின்படி பார்த்தால், 2003 முதல் 2011 வரை நடைபெற்ற ‘துடிப்பான குஜராத் – உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு’ களில் வாக்களிக்கப்பட்ட அன்னிய முதலீடுகளின் மதிப்பு $876 பில்லியன் (சுமார் ரூ 48.18 லட்சம் கோடி). அவற்றில் பெரும்பகுதி, 84 சதவீதம் (அதாவது சுமார் ரூ 38.54 லட்சம் கோடி) ஏற்கனவே வந்து சேர்ந்து விட்டன, அல்லது வந்து கொண்டிருக்கின்றன.
துண்டுச் சீட்டில் போட்டுப் பார்த்த கணக்குப்படி, வாக்களிக்கப்பட்ட முதலீடுகளில் 60 சதவீதம் வந்திருந்தால் கூட குஜராத் சீனா என்ற டிராகனை பின் தள்ளி முன்னேறியிருக்கிறது என்று பொருள். உலகிலேயே வளரும் நாடுகளில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் சீனாதான் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2003-2011 காலகட்டத்தின் போது சீனா ஈர்த்த மொத்த அன்னிய முதலீட்டின் மதிப்பு $600 பில்லியன் டாலர் (ரூ 33 லட்சம் கோடி).
இந்திய ரிசர்வ் வங்கியின் 2000 முதல் 2011 வரையிலான அன்னிய நேரடி முதலீடு குறித்த புள்ளிவிபரங்கள் ‘குஜராத் $7.2 பில்லியன் (சுமார் ரூ 39,600 கோடி) அளவிலான அன்னிய முதலீட்டை மட்டுமே பெற்றது’ என்று தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா $45.8 பில்லியன் (ரூ 2.4 லட்சம் கோடி), டெல்லி $26 பில்லியன் (சுமார் ரூ 1.5 லட்சம் கோடி) அன்னிய முதலீட்டை ஈர்த்திருந்தன. கர்நாடகாவும், தமிழ்நாடும் முறையே $8.3 பில்லியன் (ரூ 45,650 கோடி), $7.3 பில்லியன் (ரூ 40,150 கோடி)) அன்னிய முதலீடுகளுடன் குஜராத்தை விட முன்னிலை வகித்தன.

2012-13 நிதியாண்டில் ஜனவரி வரையிலான அன்னிய நேரடி முதலீட்டுக்கான புள்ளிவிபரங்களின்படி குஜராத், ரூ 2,470 கோடி மதிப்பிலான முதலீடுகளை பெற்று நாட்டின் மொத்த முதலீட்டில் 2.38 சதவீதத்துடன் மாநிலங்களிடையே ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ரூ 40,999 (2012-13) கோடி அன்னிய முதலீட்டுடன் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து டெல்லி, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் வருகின்றன. ரூ 1,934 அன்னிய முதலீட்டை பெற்ற மேற்கு வங்கத்தை விட குஜராத் சிறிதளவே முன்னணியில் இருக்கிறது.
குஜராத்துக்கு வரும் அன்னிய நேரடி முதலீட்டின் பங்கு சென்ற மூன்று நிதியாண்டுகளில் சரிந்து கொண்டிருக்கிறது. 2010-11-ல் ரூ 3,294 கோடி (நாட்டு மொத்தத்தில் 3.38 சதவீதம்), 2011-12-ல் ரூ 4,730 கோடி (நாட்டு மொத்தத்தில் 2.85 சதவீதம்), இப்போது ரூ 2,470 கோடி (நாட்டு மொத்தத்தில் 2.38 சதவீதம்). ‘உலகளாவிய பொருளாதார பின்னடைவை மீறி தொடர்ந்து முன்னேறுவதன் மூலம் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கான எஞ்சினாக விளங்குகிறது’ என்ற மாநில அரசின் பிராச்சாரததை இது பொய்ப்பிக்கிறது.
2012-13-ல் இந்தியாவுக்கான ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு 30 சதவீதம் குறைந்தாலும், குஜராத்தின் அன்னிய முதலீட்டு மதிப்பு சுமார் 50 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.
2013-ன் ‘துடிப்பான குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு’க்குப் பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிய புள்ளிவிபரங்களை கொடுக்க வேண்டாம் என்று குஜராத் அரசாங்கம் முடிவு செய்தது. “குஜராத் இந்தியாவின் நுழைவாயில் ஆகி விட்டது” என்று மட்டும் முதலமைச்சர் மோடி அறிவித்தார்.
- தர்ஷன் தேசாய்

Tuesday, October 22, 2013

அரசு பயங்கரவாத நடவடிக்கைகளின் சூத்திரதாரி வாக்குமூலம்!

OCT 22/2013: நான்கு போலி மோதல் கொலை வழக்குகளில் கைது செயப்பட்டு, பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் குஜராத் அரசின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, சபர்மதி சிறையிலிருந்து குஜராத் அரசிற்கு அனுப்பியிருக்கும் பதவி விலகல் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். 



சுயநலமும் அதிகாரவெறியும் கொண்ட கீழ்த்தரமான கிரிமினல் பேர்வழிதான் மோடி” என்பதை எடுத்துக்காட்டுவதாக அந்த கடிதம் அமைந்துள்ளது.  நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற பின், குஜராத் போலீஸில்  தனிக்காட்டு ராஜாவாக திகழ்ந்தவர் தான் இவர்.

மோடியின்  தொண்டனாக இருந்து சேவை செய்த இவர் குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனபடுகொலை மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு போலி என்கவுண்டர்கள் ஆகியவற்றை திட்டமிட்டு நடத்தியவர். தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் முஸ்லீம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு பயங்கரவாத நடவடிக்கைகளின் சூத்திரதாரியாக செயல்பட்டவர். இப்படிப்பட்ட இவர் தனது பதவி விலகல் கடிதத்தை சுய வாக்குமூலம் போல அளித்துள்ளார்.

‘‘குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு தொடங்கி 2006-ஆம் ஆண்டு வரையிலும் நடந்துள்ள ‘மோதல்’படுகொலைகள் அனைத்தும் மோடி அரசிற்குத் தெரிந்துதான் நடந்தன; மோடி அரசின் ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் அடிப்படையில்தான் இவைகள் நடத்தப்பட்டன என்று வன்சாரா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இவரை போன்றே மோடியின் கொலைபாதக செயல்களுக்கு உறுதுணையாக இருந்த குஜராத் அரசின் முன்னாள் துணை உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோடியின் தயவால் மூன்றே மாதத்தில் பிணையில் வந்து விட்டார். ஆனால் தான் மட்டும் ஏழு வருடங்களாகக் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் காலதாமதமாக இப்பொழுது உண்மைகளை உரைத்திருக்கிறார்.

Tuesday, September 25, 2012

இவர்கள் நாட்டின் பாதுகாவலர்களா? ஐ.எஸ்.ஐயின் கைகூலிகளா?


SEP 24: முஸ்லிம்கள், முஸ்லிம் இயக்கங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தி வேட்டையாடும் உளவுத்துறையின் அறிக்கைகளுக்கு பின்னால்  செயல்படுபவர்கள் மத்திய அரசு பீடங்களில் உள்ள RSS அனுதாபிகளே.

மத்திய இண்டலிஜன்ஸ் பீரோவான  ஐ.பியின் முன்னாள் இயக்குநர் அஜித்குமார் டோவல் தலைமையில் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது.  இந்த அமைப்பே முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரையை உண்டாக்கும் விசயங்களை திட்டமிட்டு செய்து வருகிறது.

இந்த அமைப்பு கன்னியாகுமரியில் இருந்து செயல்படும் விவேகானந்த கேந்திரத்தின் கீழ்வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுள் ஒருவரான ஏமகனாத் ரானடே என்பவர் தலைமையில் 1972 ல் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில்  டெல்லி உள்ள  சாணக்யா புரியில் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில்தான் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. 

மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன்  இந்திய இண்டலிஜன்ஸ் பீரோவான ஐ.பியின் முன்னாள் தலைவர்கள்,  உளவுத்துறையான ‘ரா’வின்  முன்னாள் தலைவர்கள், முன்னாள் ராணுவ காலால் படை தலைவர்கள், முன்னாள் விமானப்படை தலைவர்கள், முன்னாள் கப்பல் படை தலைவர்கள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர்கள்,  முன்னாள் இந்திய தூதர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் இந்த இயக்கத்தின் தலைமை பதவிகளில் உள்ளனர்.




இந்த அதிகாரிகளின் பதவி காலக்கட்டத்தில்தான் முஸ்லிம் இயக்கங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிரவாத தொடர்பு குற்றச்சாட்டை கூறும் உளவுத்துறையின் அறிக்கைகள் அதிகமாக வெளியாகினஆர்.எஸ்.எஸ். நடத்திய மலோகேன், அஜ்மீர், சம்ஜோதா ரயில், மக்கா மஸ்ஜித், ஆகிய குண்டு வெடிப்புகளை முஸ்லிம்கள் மீது திசை திருப்பி விட்டவர்களும் இவர்களே. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்டு சிறைகளில் அடைப்பட்டனர். 

இந்தியாவின் பல மாநிலங்களில் உண்மைக்கு புறம்பாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கும் இந்த வேலைகளைகன்னியாகுமரி சுவாமி விவேகானந்தா கேந்திரத்தின் கீழ் செயல்படும் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பே செய்து வந்தது. இதன் பின்னணியில்தான்அதிராம் பட்டினத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞ்சர் வெங்காய ஏற்றுமதி வியாபாரி அன்சாரியின் கைதும் அடங்கும். இதுவரை மற்றைய மாநிலங்களில் தங்கள் கைவரிசையை காட்டியவர்கள் இப்போது தமிழகம் வந்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவாத செயல்களுக்கு துணை புரியும் இந்த அமைப்பின்அறிக்கைகளை முதலில் வெளியிடுவது இவர்களின் கைகூலிகளான தினமலர், தினமணிபோன்ற பத்திரிக்கைகளே. த்திய அரசுக்கு எதிராக அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ் ஆகியோர் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்டதும் இந்த அமைப்புதான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளில் உளவுத்துறை என்பது நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சிக்கு துணை புரிவார்கள் ஆனால் நம்நாட்டு உளவுத்துறையோ நமக்கு சாபக்கேடாக அமைந்துவிட்டது

Saturday, September 24, 2011

தான் ஒரு தீவிரவாதி என்பதை மறைக்க உண்ணாவிரத நாடகம்! சங்கர் சிங் வகேலா !!


ஆமதாபாத் : மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று நாள் உண்ணாவிரதம் முடித்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா, மாதவடியா ஆகியோர், திரளான தொண்டர்களுடன், ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமம் அருகேயுள்ள நடைபாதையில் இவர் மோடியை விட இரண்டு மணி நேரம் அதிகமாக இருந்து உண்ணாவிரதம் இருந்து முடிதுள்ளார். 

அப்போது செய்தியாளர்களிடம் வகேலா கூறியதாவது; ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ள வசதிகளுடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். அவரது இமேஜை அதிகரித்துக் கொள்வதற்காக, தான் ஒரு தீவிரவாதி என்பதை மறைக்க இந்த உண்ணாவிரத நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்.

இப்போது, குஜராத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது. வானத்தில் உள்ள சொர்க்கம், குஜராத்தில் தரை இறங்கிவிட்டதா? குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இன்னும் அந்த வழக்கு முடியவே இல்லையே. உண்ணாவிரததின் மூலம் தன்னை நிரபராதி என காட்ட முயற்சிதுள்ளார்.

இந்த உண்ணாவிரதத்துக்காக, பொதுமக்களின் வரிப் பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் என்ன? மேலும் 3000 க்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று விட்டு இப்பொழுது இல்லை என்று மத சார்பு நாடகம் ஆடுகிறார். இவை அனைத்துமே ஏமாற்று வேலை.


குஜராத்துக்கு தொழி்ல் தொடங்க வரும் தொழிலதிபர்களை, நரேந்திர மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று கூறுமாறு  நிர்பந்திக்கப்படுவதாகவும், மோடி ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், மேலும் நான் தான்  உண்மையான் காந்தியவாதி, நான் எந்த அரசியளுக்க்காகவும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. மக்களின் நலனுக்காக மட்டுமே உண்ணாவிரதம் இருந்துள்ளேன்  என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்.

மேலும் ராம் விலாஸ் பஸ்வான்,லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் கூறும்போது; தன்னை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தரம் உயர்த்திக் கொள்வதற்காக, உண்ணாவிரதம் என்ற அரசியல் நாடகத்தை நரேந்திர மோடி அரங்கேற்றுகிறார். மதச்சார்பற்ற தலைவராக, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், தன் மேல் உள்ள மதச் சார்பு முத்திரையை, அவர் அழித்து விட முடியாது’ என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் இந்த உண்ணாவிரத்தை விமர்சித்துள்ளது. அதுபற்றி அக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் கூறும்போது, “நாட்டில் 78 சதம் மக்கள் தினசரி 20 ரூபாய்தான் சம்பாதிக்கிறார்கள். 80 சதம் மக்கள் தினசரி பட்டினியால் தவிக்கிறார்கள். ஒரு வேளை சாப்பிட்டு, மீதி நேரம் பட்டினியால் தவிக்கும் அவர்களைப் பற்றி விவாதிக்க யாரும் இல்லை” மேலும் தேவை இல்லாத ஒன்று  என்று மோடியின் உண்ணாவிரதத்தை விமர்ச்சித்துள்ளார்.

Monday, July 11, 2011

நெல்லையில் வெடிபொருட்கள் பறிமுதல்! ஹிந்துத்துவா சதியா?

அச்சன்புதூர்: தென்காசி அருகேயுள்ள அச்சன் புதூரில் காசிதர்மம் குளத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவ்வழியே சென்ற வாலிபரிடம் நடத்திய சோதனையில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், தென்காசி டி.எஸ்.பி. சீனிவாசன் ஆலோசனையின்படி அச்சன்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், ஜெயசந்திரன், வேலுச்சாமி மற்றும் போலீசார் காசிதர்மம் குளத்தின் கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது அவ்வழியே சென்ற வாலிபரிடம் இருந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்த போது, 10 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள், 10 ஜெலட்டின் குச்சிகள், 3 கட்டு சுருள் கம்பி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் வெடிபொருட்களை பறிமுதல் செய்து அதனை கொண்டு வந்த இ.சுப்பையாபுரத்தை சேர்ந்த ஞானதாஸ் (29) மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். 

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும், புதிய பேருந்து நிலையத்திலும் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் முஸ்லிம்கள் மீது பழிபோட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய சதித்திட்டம் வெட்ட வெளிச்சமானது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் 4 பேர் வெடிக்குண்டுகளுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



தென்காசி பகுதியில் ஏற்கனவே வகுப்பு வாத வெறியை கிளறிவிட்டு கலவரத்தை தூண்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பல முயற்சிகளை முன்பு மேற்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இந்நிலையில் தென்காசி அருகேயுள்ள அச்சன்புதூரில் ஞானதாஸ் என்ற வாலிபர் வெடிப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இவரிடம் போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இவருக்கும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்புபடை அதிகாரிகள் நெல்லை விரைகின்றனர்.

Saturday, July 9, 2011

பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை!

இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு நாயகன் பாபாராம்தேவ். காவியுடையில் காட்சி தரும் "யோகா மாஸ்டர்' பாபாராம்தேவ். இவரை பற்றி சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள். பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று வடமாநிலங்களில் இயக்கம் நடத்தியவர். 

இப்போது, வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோரையும் தூக்கில் போட வேண்டும் என்கிறார்.  காவி உடை தரிக்கும் இவரின் சொத்து மதிப்பு 5,000 கோடிரூபாய் என்றும், ஆண்டு வருமானம் 1,000 கோடி ரூபாய் என்றும் செய்திகள் கூறுகின்றன. 



உத்தரகாண்ட் மாநிலம் பதஞ்சலியில் மிகப் பெரிய யோக பீடம்; 300 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனை; 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள்; மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு; ஸ்காட்லாந்து நாட்டில் சொந்தமான தனித் தீவு என்று கொடிகட்டிப் பறக்கிறது இவரது சாம்ராஜ்யம்.

"பசுவதை'க்கு மரண தண்டனை கோரும்,  இவரது மருந்து நிறுவனத் தயாரிப்பில், விலங்குகளின் எலும்புகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்து, மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. பா.ஜ.க., பார்ப்பன இந்துத்துவ சக்திகள் புடை சூழ "ராம்லீலா' மைதானத்தில் இவர் "உண்ணாவிரத'த்தைத் நடத்தினார். ஊழல் அரக்கனாக – 10 தலை ராவணன் உருவத்தைஅமைத்து, "ராம ராஜ்ய' பெருமையைப் பறை சாற்றினார்கள்.



ஊழல் ஒழிப்பு பேரார்வம், திடீரென்று இவர்களிடம் பெருக்கெடுத்து ஓடியது ஏன்? காரணம் இருக்கிறது. அண்மைக்காலமாக காமன் வெல்த் விளையாட்டு ஊழல்; ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்; 2ஜி அலைக்கற்றை ஊழல் என்று ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி – மக்களிடையே ஊழல் எதிர்ப்பு உணர்வு உருவானது. பாரதிய ஜனதா, இந்த உணர்வுகளை அறுவடை செய்ய திட்டமிட்டது. 

அவர்களின் திட்டமெல்லாம் 1975 ஆம் ஆண்டை மீண்டும் கொண்டு வரலாம் என்பதுதான்.ஜெயப்பிரகாஷ் நாராயண், அப்போது – இந்திரா ஆட்சிக்கு எதிராக "முழுப் புரட்சி' இயக்கம்ஒன்றைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம், இந்துத்துவா சக்திகள் – ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அதே நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே அத்வானிகளின் துடிப்பு.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்துத்துவா சக்திகள், மீண்டும் மக்கள் மன்றத்தில் கால் பதிப்பதற்கு – அவர்களிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. மீண்டும் "அயோத்தி ராமனிடம்' அடைக்கலம் புகுந்தால், மக்கள் ஆதரவு இருக்கப் போவது இல்லை என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள். இது ஹிந்துத்துவா பா.ஜ.க. பரிவாரங்களின் திட்டமிட்ட சூழ்ச்சியே அல்லாமல் வேறில்லை.

Friday, July 8, 2011

குஜராத்தில் நல்லாட்சி ஹிந்துதுவாவின் திரிபுவாதம்!

இந்தியாவில் குஜராத்தில்தான் நல்லாட்சி நடக்கிறது என்று  சிலர்  கூறிவருகின்றனர். இவர்கள் மோடியின் பயங்கரவாத ஹிந்துத்துவா ஆட்சியை, சதி திட்டங்களை,  குற்றங்களை மறைக்க திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். 

முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த "குஜராத் ராஜபக்சே'யின் ஆட்சியில் – 17 ஆயிரம் கோடி ரூபாய் குளம் வெட்டும் ஊழல், 260 கோடி ரூபாய் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழல், 600 கோடி ரூபாய் மீன் வளர்ப்பு திட்ட ஊழல் என ஊழல்கள் அணிவகுத்து நிற்கின்றன. 



கிராமங்களில் வறுமையின் கோராத்தாண்டவம்; மக்கள் கிராமங்களை காலி செய்துவிட்டு நகரங்களை நோக்கி ஓடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்புகிற இடங்கள் தாராளமாக ஒதுக்கப்படுகின்றன.அவர்களுக்கு அங்கே 5 ஆண்டுகளுக்கு எந்த வரியும் கிடையாது. 

அன்று மன்னர்கள் ஆட்சியில், இப்படித்தான் ஊர்கள் "தானமாக' உயர்ஜாதி முதலாளிகளுக்கு (சதுர்வேதி மங்கலங்கள்) வழங்கப்பட்டன. அங்கே மன்னனின் எந்த வரி விதிப்பும் நடைமுறைக்கு வராது. அன்று சதுர்வேதி மங்கலங்கள். இன்று அதற்குப் பெயர் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

டாட்டாவின் "நா÷னா' கார் தயாரிப்புக்கு – உற்பத்தி செலவைவிட மோடி கூடுதல் மானியம் தருகிறார். நிலத்தைப் பறிகொடுத்த மக்கள், அரசிடமிருந்து இன்னும் இழப்பீட்டுத் தொகை கிடைக்க வில்லை என்று கதறுகிறார்கள். முஸ்லிம்கள் இனப்படுகொலை வழக்கில், மோடிக்கு "நீரோ மன்னர்' என்று பட்டம் சூட்டியது உச்ச நீதிமன்றம் (ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது, பிடில் வாசித்தவன் நீரோ).

இதே நரேந்திர மோடி குஜராத்தில் "லோக் அயுக்தா' என்ற ஊழல் மீட்புக் குழுவை அமைக்க மறுத்து விட்டார் என்பது அசாரேவுக்கு தெரியாது போலும். மக்கள் உயிர்வாழ அடிப்படை தேவையான தண்ணீர் பஞ்சம், சமையல் ஆயில் தட்டுபாடு இதுதான் குஜராத்தின் இப்போதைய நிலை.
இந்தியாவில் ஊழலில் முதலிடம் வகிக்கும் ஒரு மாநிலம்தான் குஜராத்.
மற்றபடி நம்பர் ஒன் மாநிலம் என்பது ஹிந்துதுவாவின் பொய் பிரச்சாரம்

குஜராத் இனப்படுகொலை ஆவணங்களை அழித்த மோடி அரசு!

அஹ்மதாபாத்: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை நடந்த கால அளவிலான ஆவணங்கள் அழிக்கப்பட்டது குறித்து நானாவதி கமிஷன் போலீசாரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

எந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டன என்பதுக்குறித்து தெளிவான அறிக்கையை அளிக்குமாறு குஜராத் இண்டலிஜன்ஸ் கூடுதல் டி.ஜி.பியிடம் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான மாநில உளவுத் துறையின் ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக பயங்கரவாதி மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் சரத் வக்கீல் நானாவதி கமிஷனிடம் தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் தலையிடக்கோரி இனப்படு கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பான ஜன் சங்க்ராம் மஞ்ச் நானாவதி கமிஷனை அணுகியிருந்தது. பத்து தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டுமென நானாவதி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Wednesday, July 6, 2011

அரசுக்கு சொந்தமான புதையலை கொள்ளையடிக்க திட்டமா?

ஜூலை 5- திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.

"நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது. அந்த கோயிலுக்காகவே அவர்களது ஆட்சி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் ஆபரணங்களும் கோயிலுக்கு திருவாங்கூர் மன்னர்களால் அளிக்கப்பட்டது தான்.

எனவே, அவை அனைத்தும் மன்னர் குடும்பத்தினருக்கே சொந்தமானது. எனினும், அந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோயிலிலேயே வைக்கப்பட வேண்டும்." என்று ஜயேந்திரர் கூறினார். பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி திறக்கப்பட்டது. இதில், இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகள், நகைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன.


விரைவில் மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதன் கதவு மற்றதை விட மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், அதில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் பெருமளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்கவும்: கொலை குற்றவாளி, பெண் பித்தர் சங்கராசாரியார் ரொம்ப காலங்களுக்கு பிறகு இப்படி திருவாய் மலர்ந்துள்ளார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது போல் தங்கள் பார்பன உயர்ஜாதியை சேர்ந்த திருவாங்கூர் மன்னரின் குடும்ப சொத்தாக இந்த புதையலை மாற்ற திட்டம் வகுத்து செயல்படுகிறார் சங்கராசாரி.

சங்கர மடத்தை தன் கைகளில் வைத்து கொண்டு பிராமணர்கள் மட்டும் அதன் சொத்துக்களை அனுபவித்து வருகிறார்களோ அது மாதிரி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதையலையும் பறிக்க நினைக்கின்றனர். அதானால்தான் இந்த சங்கராச்சாரி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார்.

"கண்டெடுக்கப்படும் புதையல்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம்" என்ற சட்டம் இதற்கும் பொருந்தும். ஆகவே இது அரசுக்கு சொந்தமானது தான் இதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இதை அமுக்க பார்க்கும் பார்ப்பன கழுகுகளிடம் இருந்து அரசு தன்வசப்படுத்தி மக்கள் பணிகளுக்கு செலவிட வேண்டும்.


Tuesday, July 5, 2011

பொய் சொல்லும் மோடி அரசு! காங்கிரஸ் கண்டனம்!

அஹ்மதாபாத்: :2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத வெறியர்கள் முஸ்லிம்களை கொடூரமாக கொன்றுகுவித்து மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தினர்.

இக்காலக் கட்டத்தின் ஆவணங்களை அழித்துவிட்டதாக மாநில அரசின் வழக்கறிஞர் நானாவதி கமிஷன் முன்பு தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.


ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்காலிகமானதும், முக்கியத்துவம் இல்லாததுமான ஆவணங்கள்தாம் அழிக்கப்பட்டன என குஜராத் மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, மாநில அரசு மற்றும் மூத்த அரசு வழக்கறிஞரின் முரண்பட்ட அறிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இச்சம்பவத்தில் குஜராத் அரசு மக்களிடம் பொய் கூறுகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை தொடர்பாக அரசு ஏராளமானவற்றை மறைத்துள்ளது என்பதற்கு இது ஆதாரமாகும். ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஒருபுறம் அரசு வழக்கறிஞர் கூறுகிறார். மறுபுறம் உள்துறை அமைச்சகம் இல்லை என கூறுகிறது. அவ்வாறெனில் அரசு முதலில் கூறியது பொய்யாக இருக்கவேண்டும்.

அல்லது இரண்டாவதாக கூறியது பொய்யாக இருக்கவேண்டும். ஆவணங்கள் அழிக்கப்படவில்லையெனில் அவை எங்குள்ளன?ஆவணங்கள் வழக்கின் சட்டநடவடிக்கைகளின் பகுதியாக அமைந்துள்ளனவா? இதனை நாடு அறிய விரும்புகிறது என சிங்வி தெரிவித்துள்ளார்.


Saturday, July 2, 2011

மும்பை இன பயங்கரவாதத்தின் மீது நடவடிக்கை!

JULY 02, மும்பை: சிவசேனை தலைவர் பயங்கரவாதி பால் தாக்கரேவின் சொத்துக்களை முடக்க பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்துத்துவா பயங்கரவாதி பால் தாக்கரே தனது கட்சியின் பத்திரிகையான “சாம்னாவில்’ 2008-ல் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்.

இந்த கட்டுரை பிகார் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக ராஜேஷ்குமார் சிங் என்ற வழக்கறிஞர் பிகார் மாநில ஆரா சப்டிவிஷனல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.


இந்த வழக்கில் ஆஜராகும்படி தாக்கரேவுக்கு பலமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. எனவே தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிபதி எஸ்.பி.எம்.திரிபாதி ஜூன் 27-ம் தேதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரௌட், தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்த நூற்றாண்டின் நகைச்சுவையாகும் என்று குறிப்பிட்டார்.

சிந்திக்கவும்:  பால்தாக்ரே சிவசேனை என்ற ஒரு பயங்கரவாத இயக்கத்தை நடத்தி வருகிறார். இது மராட்டியர் அல்லாத மற்ற மாநில மக்களுக்கு எதிரானது இயக்கம் மட்டும் அல்ல முஸ்லிம் மற்றும் சிறுபான்மை எதிர்ப்பு இயக்கமும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நடத்திய இன, மற்றும் மதக்கலவரங்கள் எண்ணில் அடங்காது. எந்த அரசும் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியே வந்தது. இந்நிலையில் பீகார் அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.




Friday, July 1, 2011

குஜராத் கலவரம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அழிப்பு


2002ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான குஜராத் மாநில புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி அழைப்பின் ஆவணங்கள், அதிகாரிகளின் நடவடிக்கைகள் பற்றிய பதிவேடுகள் மற்றும் வாகனப் பதிவெண் புத்தகங்கள் ஆகியவை 2007ஆம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் முழுவதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரங்களுக்குப் பிந்தைய சம்பவங்கள் தொடர்பாக நானாவதி கமிஷன் விசாரித்து வருகிறது. நானாவதி கமிஷனில் அரசு வழக்கறிஞராக உள்ள எஸ்.பி.வாகீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு விதிகளின்படி அந்த ஆவணங்கள் 5 ஆண்டுகள் கழித்து அழிக்கப்பட்டன என்றார்.

அரசு விதிகளின்படி தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள், வாகனப் பதிவு புத்தகங்கள் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் பற்றிய டைரி ஆகியவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அழிக்கப்பட்டுவிட்டன என்று வாகீல் கூறியுள்ளார்.

2002ஆம் ஆண்டின் புலனாய்வு போலீசின் ஆவணங்கள் 2007ஆம் ஆண்டு அழிக்கப்பட்டன. அவற்றைக் கேட்கும் ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட்டுக்கு அவை கிடைக்காது என்று தெரிந்திருக்கும் என்றும் வாகீல் கூறியுள்ளார்.

முன்னதாக ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியான 2002 ஆம் ஆண்டு கலவரங்கள் தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கும் புலனாய்வு பிரிவுக்கும் உத்தரவிடக் கோரி மே மாதம் நானாவதி கமிஷனில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட் விண்ணப்பித்திருந்தார்.

குஜராத் வன்முறைச் சம்பவங்களில் முதல்வர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பட் பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக இரு நபர் குழுவின் விசாரணையின்போது பட்டுக்கும் அரசு வழக்கறிஞர் வாகீலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பட் அவரது எல்லையைத் தாண்டிவிட்டார் என வாகீல் கூறினார்.

வர்ணாசிரமம், ஹிந்துத்துவா நமக்கு தந்த பரிசு! மேலவளவு!

JULY 01 மதுரை, மறக்க முடியுமா மேலவளவை. இங்குதான்வர்ணாசிரம ஹிந்து ஆதிக்க வெறியர்களால் ஆறு தலித் சகோதர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இந்த ஜாதி வெறியர்கள் எப்படி தோன்றினார்கள், இவர்களிடம் ஜாதி என்ற அந்த விஷ வித்தை விதைத்து எது என்று பார்த்தால் அதுதான் ஹிந்துதுவாவின் அடிப்படை கொள்கை சித்தாந்தமான வர்ணாசிரம கொள்கை.

இந்த கொள்கைதான் ஒரு சாதாரண மனிதனை ஜாதி வெறி கொண்டவனாக மாற்றி ஆறு அப்பாவி உயிர்களை கொன்று குவிக்க காரணமாக அமைந்தது அன்று என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் முருகேசன்.


இவர் மற்றும் துணைத்தலைவர் மூக்கன் மற்றும் இதே ஊரைச் சேர்நத ராஜா, செல்லத்துரை, பூபதி, சேவுகமூர்த்தி ஆகிய ஆறு பேரும் கடந்த 1997 ஜூன் 30ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அங்கு தீயில் எரிந்து குடிசை வீடுகளுக்கான நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் மீண்டும் ஊருக்குச் சென்ற போது ஆறு பேரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேலவளவில் மணி மண்டபம் கட்டப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் இங்கு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளது.



   

புருலியா ஆயுத மழை! இந்தியாவுக்கு டென்மார் கொடுத்த அடி!

JUNE 01, புதுடில்லி: "புருலியா ஆயுத வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கிம் டேவியை, இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது' என, டென்மார்க் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில், 1995ல் விமானத்தில் இருந்து, ஏராளமான ஆயுதங்கள் கீழே போடப்பட்டன. ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் என, ஏராளமான ஆயுதங்கள் வீசப்பட்டன.

இந்த ஆயுதங்கள் ஆனந்த மார்க்கம் என்ற ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்திற்கு போடப்பட்டது. இந்த ஆனந்த மார்க்கம் என்ற இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் துணை அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், டென்மார்க்கை சேர்ந்த கிம்டேவி என்பவருக்கு தொடர்பு இருப்பதை, சி.பி.ஐ., கண்டு பிடித்தது. அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சில நிபந்தனைகளின் பேரில், கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க டென்மார்க் அரசு முன்வந்தது.

கிம் டேவிக்கு தூக்கு தண்டனை விதிக்க கூடாது என்பது முக்கிய நிபந்தனை. டென்மார்க் அரசின் இந்த முடிவை எதிர்த்து, கிம் டேவி சார்பில் விசாரணை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த விசாரணை கோர்ட், கிம் டேவியை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என, தீர்ப்பளித்தது.

இதையடுத்து, டென்மார்க் ஐகோர்ட்டில் இந்த வழக்கு மேல் முறையீடுக்காக சென்றது. இதில், கிம் டேவியை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்ற விசாரணை கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்வதாக தெரிவித்த ஐகோர்ட், டென்மார்க் அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


ஐகோர்ட் உத்தரவில்,"இந்தியாவில் உள்ள சிறைகளின் நிலை மற்றும் மனித உரிமை பிரச்னை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிம் டேவி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அங்கு அவர், விசாரணை என்ற பெயரில் கொடுமைக்கு ஆளாகலாம்' என, உத்தரவிட்டது. இந்த தகவலை தெரிவித்த சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர், ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, டென்மார்க் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாக கூறினார்.


துரத்தும் சி.பி.ஐ.! ஓடும் சாமியார்!

JULY 01, ஊழல் எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு ஆதரவு பிரச்சாரத்தை செய்து வந்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா மாஸ்டர் ராம்தேவின் உதவியாளர் இப்போது சிக்கலில் மாட்டி உள்ளார்.

சாமியார் ராம்தேவ் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பத்து வருடங்களுக்கு முன் ஓட்டை சைக்கிளில் வலம் வந்தவர் இப்பொழுது ஹெலிகாப்டரில் வலம் வருகிறார்.

சமாமியார் ராம்தேவ் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருந்தது மற்றும் போலி மருந்து கம்பனிகள் நடத்தி வந்தது பற்றி    சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இவரது நெருங்கிய உதவியாளர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார்.

பாஸ்போர்ட் பெறுவதற்கு பொய் தகவல் கூறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், பாபா ராம்தேவுக்கு நெருக்கமான ஆச்சாரியா பால கிருஷ்ணனிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.


உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்த விசாரணை நடைபெற்றது. மேலும், பாலகிருஷ்ணனுக்கு ஹரித்துவார் நகராட்சி அலுவலகம் வழங்கிய இரண்டு பிறப்பு சான்றிதழ்களில் முரண்பாடு உள்ளது.

இது தொடர்பாக, ஹரித்துவார் நகராட்சிக்கு சென்று, பிறப்பு, இறப்பு பதிவேடுகளை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்களிடம் அனைத்து ஆவணங்களையும் ஹரித்துவார் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.


Thursday, June 30, 2011

குஜராத்:கர்ப்பிணி பெண் கற்பழித்து கொலை:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்-CBI

கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்தும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தி கோரத்தாண்டவம் ஆடினர்.



இந்த மிகக்கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் பல்கீஸ் பானு. கர்ப்பிணியான இவரை ஹிந்த்துவ பாசிச பயங்கரவாதிகள் கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து அவரது குடும்பத்தினரை கொடூரமாக கொலையும் செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஜஸ்வந்த் பாயி நாயீ, கோவிந்த பாயி நாயீ, ராதேஷம் ஷா என்ற லாலா வாகீல் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சி.பி.ஐ கோரியுள்ளது. இம்மனுவை மும்பை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த பயங்கரவாதிகளுக்கு 2008 ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

கூட்டுப்படுகொலையையும், பாலியல் வன்புணர்வையும் குற்றவாளிகள் திட்டமிட்டு செய்தார்கள் எனவும், கர்ப்பிணியான தன்னை விட்டுவிடுங்கள் என பல்கீஸ் பானுவின் கெஞ்சலை குற்றவாளிகள் காதுக்கொடுத்து கேட்கவில்லை எனவும் சி.பி.ஐ அம்மனுவில் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு எதிரான ஆதாரங்கள் பொருத்தமில்லாமல் இருப்பதாகவும், பல்கீஸ் பானுவின் வாக்குமூலத்தை மட்டுமே நீதிமன்றம் இவ்வழக்கில் பரிசீலித்துள்ளது என ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதங்களையெல்லாம் கேட்ட உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது

குண்டு வைக்க ரூ 50,000 நிதி அளித்த R.S.S தலைவர்!!!

சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஐந்து நபர்களை குற்றவாளிகளாக சேர்த்து தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரின் பெயர் விமர்சிக்கப்படுகிறது. பயங்கரவாத செயல்களை குறித்து சதித்திட்டம் தீட்ட சபரிடாமில் நடத்திய ரகசிய கூட்டத்தில் அஸிமானந்தா மற்றும் சுனில் ஜோஷியுடன் இந்திரேஷ் குமாரும் பங்கேற்றுள்ளார்.
சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை அஸிமானந்தா-சுனில்ஜோஷி கும்பலுக்கு இந்திரேஷ் குமார் அளித்தார் என்பதும் குற்றப்பத்திரிகையில் கூறப்படுகிறது.
 ஆனால் இவ்வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. 





குற்றவாளிகளின் வாக்கு மூலமும், சூழ்நிலை ஆதாரங்களும் இருந்த பிறகும் கூட இந்திரேஷ் குமாரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தவில்லை. முன்னர் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவரை சி.பி.ஐ விசாரணை செய்ததை என்.ஐ.ஏ புறக்கணித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் பங்கு வெளியான சூழலில் அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றும் கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியா முழுவதும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இந்திரேஷ் குமாரின் பங்கு வெளியான பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அரசின் பகிரங்கமான இரட்டை வேடமாகும். அதே சமயத்தில் இத்தகைய குண்டுவெடிப்புகளில் நிரபராதி என்று விசாரனையில் கண்டறியப்பட்ட டாக்டர் பரூக்கி, சபீர் பேட்டரிவாலா உட்பட பல முஸ்லிம்கள் இன்னும் சிறை கொட்டடியில் பிணை கூட வழங்கப்படாமல் வாடுவது எந்த வகையில் நீதி நியாயம் என்பதை அரசு தான் விளக்க வேண்டும். மேலும் நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியான RSS யின் இந்திரேஷ் குமார் போன்றவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டுள்ளதன் மூலம் நம் ஆட்சியாளர்களின், நாட்டின் பாதுகாப்பைக் குறித்தோ, நீதியை குறித்தோ உள்ள அக்கறை வெட்ட வெளிச்சமாகிறது.