Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts
Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts

Saturday, January 2, 2016

பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் முயற்சி! - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!


புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலகக் கூட்டம் கோழிக்கோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்ட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Thursday, December 10, 2015

புதிய கல்விக் கொள்கை : வேகமாக இறுகும் மறுகாலனியாக்கம்

அம்பேத்கார்-பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி. சென்னை, புதிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம்

apscடிசம்பர் 2015-ல் கட்டவிழ்த்து விடப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கை 2015 (NEP)-ன் வரைவு மீது கருத்து கூறுமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, 1992-ல் புதிய தாராளவாத கொள்கைகளை அமல்படுத்துவதற்கு முன்னோட்டமாக திருத்தியமைக்கப்பட்டது. அது போல, டிசம்பர் 2015-ல் நடைபெறவுள்ள WTO அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக உலக வர்த்தகக் கழகத்தின் – சேவை வர்த்தக பொது ஒப்பந்தத்தை (WTO-GATS) அமல்படுத்துவதற்கான தயாரிப்பே புதிய கல்விக் கொள்கை 2015.

ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் ஆமீர்கான்கள் வாழ முடியுமா ?

aamir-indian-express-award-function
சகிப்பின்மை குறித்து ஆமீர் கான் பேசிய இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது நிகழ்ச்சி
கிப்புத்தன்மை என்றால் என்ன? காக்கி டவுசர்கள் உலகிற்குப் பாடம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்து வரும் சில விசயங்களால் தான் அச்சப்படுவதாகவும் அதன் காரணமாக இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறினால் என்னவென்று மனைவி கிரண் ராவ் தன்னிடம் தெரிவித்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்று நடிகர் ஆமிர் கான் பேசியதே விவகாரத்தின் இந்த சகிப்புத்தன்மை அத்தியாத்திற்கான துவக்கம்.
கிரண் ராவ் ஒரு இந்து என்பதும், அவரது கருத்தால் ’அதிர்ச்சியடைந்த’ ஆமிர் கான் பிறப்பால் ஒரு முசுலீம் என்பதும் அனைவரும்
அறிந்தது தான். .
aamir-kiran-with-kid
கிரண் ராவ் மற்றும் அமீர் கான்

Saturday, November 28, 2015

இந்து ராஷ்டிரம்? கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…........


                                        

ருப்பைப் பதுக்கி வைத்திருக்கும் கள்ள வியாபாரிகளைவிட, மாட்டுக் கறி உணவு அருந்துபவர்களைத்தான் மிகப் பெரும் கொடியவர்களாக, சமூக விரோதிகளாகச் சித்திரிக்கின்றன மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும். பருப்பைப் பதுக்கி வைத்த கள்ள வியாபாரிகளுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட்ட செய்தி எதுவும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆனால், பசு மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதாக பழிபோடப்பட்ட 50 வயதான முகம்மது அக்லக் செங்கற்களால் அடித்தே கொல்லப்படுகிறார்; பசு மாட்டினைக் கொன்றதாகப் பழி போடப்பட்ட 24 வயதான ஜாஹித் அகமது பட் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்; மாடுகளை இறைச்சிக்காகக் கடத்திச் செல்வதாகப் பழி போடப்பட்ட 28 வயதான நோமன் அக்தர் அடித்துக் கொல்லப்படுகிறார்.

முகமது அக்லக்
உ.பி மாநிலம் தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கூலிகளால் சதித்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்ட முகமது அக்லக்
ஜம்மு காஷ்மீரிலுள்ள உதம்பூரைச் சேர்ந்த ஜாஹித் அகமதும், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நோமன் அக்தரும் தமக்கு முன்பின் அறிமுகமில்லாத இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்டனர். ஆனால், உ.பி. மாநிலம், தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லக், தனது சொந்த கிராமத்திலேயே, தனது வீட்டின் எதிரிலேயே, தனது மனைவி, தாய், மகள் ஆகியோரின் கண் முன்னாலேயே, அதே கிராமத்தைச் சேர்ந்த, அக்லக்கின் குடும்பத்தினருக்குத் தெரிந்த, அவர்களோடு பழகிவந்த ‘இந்து’க்களாலேயே அடித்துக் கொல்லப்படுகிறார். இந்த மதவெறி எந்த அளவிற்கு இரக்கமற்றது, கண்மூடித்தனமானது என்பதற்கு அக்லக்கின் படுகொலை இன்னொரு சான்று. அது மட்டுமின்றி, மேற்கு உ.பி.யை இந்து மதவெறியின் புதிய சோதனைச்சாலையாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் உருமாற்றியிருப்பதையும் அக்லக் படுகொலை எடுத்துக் காட்டுகிறது.

Monday, October 26, 2015

பா.ஜ.க மந்திரி வி.கே. சிங் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு .


ஹரியாணாவில் தலித் குழந்தைகள் எரித்து கொலை செய்ய‌ப்பட்ட சம்பவத்தை நாயுடன் ஒப்பிட்ட‌ மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் மீது கர்நாடக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Sunday, October 25, 2015

இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுக்கு மனம் திறந்த மடல்! – (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

அன்புடையீர்,இந்த மடல் உங்களின் சீரிய சிந்தனைக்கும்,நேரிய வழி பெறுவதற்கும் உதவட்டுமாக.

தந்தி டிவியா? RSS டிவியா?

தந்தி டிவி ஆதித்தனார் குரூப்புக்கு சொந்தமா? இல்லை RSS குரூப்புக்கு சொந்தமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Thursday, October 22, 2015

இந்தியா மத சார்பற்ற நாடுதானா

நேர்படப்பேசு (இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டிக்கு சிவசேனா எதிர்ப்பு... ) 20-10-2015 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேற்று 20.october இரவு 9 மணிக்கு நேர்பட பேசு விவாத நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதில் சிவசேனாவின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் கரியை பூசுவோம்... இதே அரங்கத்தில் உள்ள உங்கள் மீதும் கரியை பூசுவோம்" என பத்திரிகையாளர் ஞாநியை நோக்கி எச்சரிக்கை விடுத்தார்.

Monday, January 20, 2014

மத வெறியன் H .ராஜா மீது -கமிஷனர் அலுவகத்தில் SDPI புகார்- வீடியோ இணைப்பு !

இந்து தர்ம பாதுகாப்பு என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், திராவிடர் கழகம், ஹிந்துதுவாதிகளுக்கு எதிராக உள்ளவர், ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களையும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மதவெறியை தூண்டி விடும் விதமாகவும் பேசியுள்ளார். அவரது பேச்சு யூ டியூப் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



Wednesday, November 6, 2013

சமூக ஆர்வலர் கொலை: குஜராத் பாஜக எம்.பி. கைது


டெல்லி: குஜராத் மாநிலத்தில் சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. டினு போகா சோலங்கியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Monday, November 4, 2013

மேடை நாகரீகம் தெரியாத மோடி!

இன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும், பிரதமர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் காட்சியளித்தனர் - நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர் என்பது, ஆரோக்கியமான ஒன்றே!

முஸஃபர் நகர்: அகதிகள் முகாமிலும் கொடூரம் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம்!

வகுப்புக் கலவரத்திற்கு இரையாகி துயர் துடைப்பு முகாமில் தங்கியிருந்த இளம் பெண்ணை இரண்டு காமவெறி கொண்ட பாசிஸ்டுகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Saturday, November 2, 2013

ஹிட்லரைப் போலவே மோடியும் பாசிசவாதி: திவாரி தாக்கு

ஹிட்லரைப் போலவே நரேந்திர மோடியும் பாசிசவாதி என மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி விமர்சித்துள்ளார்.

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?: மோடிக்குச் சவால்!

புதுடெல்லி: "பொய்யிலேயே அரசியல் செய்யும் மோடி, நாட்டின் வளர்ச்சி பணிகள் முதல் எந்த ஒரு விசயத்திலும் நேரடியாக விவாதிக்க தயாரா?" மோடிக்கு மத்திய அமைச்சர் கபில் சிபல் சவால் விடுத்துள்ளார்.

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு மோடிக்குச் சவால் விடுத்தார். மேலூம் அவர் கூறியதாவது:
"நரேந்திர மோடி பேசும் மேடைகள் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து பல்வேறு பொய்களை அவர் பேசி வருகிறார். இவரது பேரணிக்கு 10 முதல் 15 கோடி வரை செலவிடப்படுகிறது. இது எங்கிருந்து வந்த பணம்? இது கள்ளப்பணமா? இது குறித்துவிசாரணை நடத்த உத்தரவிடப்படும்.
கறுப்பு பணத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மோடி பேரணியில் கறுப்பு பணம் புழங்குவதாக எனக்கு தகவல் கிடைக்கிறது. பிரதமர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் மோடி திரிகிறார். ஆனால், அதற்கான வெளிப்படைத்தன்மையிலும், பொறுப்பிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை.

இவரது திட்டமென்ன? நான் அவருக்குச் சவால் விடுகிறேன். எந்தவொரு விஷயமானாலும், எந்தவொரு கேள்விக்கும், பதிலுக்கும் நான் ரெடி! நீங்களே தேதியை, இடத்தைச் சொல்லுங்கள்! என்னுடன் நேரடி விவாதத்திற்குத் தயாரா?
ஆனால் அவர் இதனைச் செய்ய மாட்டார். இது வரை மோடி ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடத்தியதில்லை. இவர் என்னோடு எதனை விவாதிக்க போகிறார்? மோடியின் நிலை என்ன? பாதுகாப்பில் இவரது திட்டமென்ன? ஏதாவது வளர்ச்சி பணிகள் குறித்து பேசுகிறாரா? நாட்டின் எதிர்கால திட்டம் குறித்து ஏதாவது மோடி சொல்லட்டும். ஒரு தனி மனிதன் இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானித்து விட முடியாது. அவர் அனைத்து கூட்டங்களிலும் பொய்யான தகவலையே தெரிவிக்கிறார்".

70 பழங்குடி கிராமங்களின் மக்களை வெளியேற்றிவிட்டு படேலின் சிலையை எழுப்பும் மோடியின் சர்வாதிகாரம்: எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது!

புதுடெல்லி: சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரால் குஜராத்தில் ஒருமைப்பாட்டு சிலையை நிறுவும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி 70 பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்துள்ளார். மோடி அரசின் அராஜகத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்களை போலீஸ் கைதுச் செய்துள்ளது. பழங்குடி மக்களை கூட்டாக வெளியேற்றியதற்கு எதிராக அப்பகுதியில் எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. மேதா பட்கரின் தலைமையில் என்.ஏ.பி.எம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மக்கள் கூட்டாக வெளியேற்றப்படுவதற்கும், போலீஸ் பயங்கரவாதத்திற்கும் எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.

Friday, November 1, 2013

தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு பகிரங்க மடல்!

சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு,
ஜூனியர் விகடன் 30.10.13 இதழ் படித்தேன். “விதாண்டாவதத்தால் மோடியை வீழ்த்த முடியாது” என்ற தலைப்பில் வெளிவந்த பேட்டியில் ஆதாரமற்ற தகவல்களை, உண்மை போல் கூறியது கொஞ்சமும் அரசியல் நாகரிகமில்லாததாகும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, எவ்வளவோ கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்தீர்கள். ஆனால், மக்களிடம் அந்த பிம்பங்கள் எடுபடவில்லை.

Thursday, October 31, 2013

பாட்னா குண்டு வெடிப்பு : விடை தெரியாத வினாக்கள்

டந்த 27 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்ட போது அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் 6 பேர் உயிரிழந்ததோடு எழுபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Wednesday, October 30, 2013

PFI யை கண்டு தொடைநடுங்கும் டிரௌசர் பாண்டிகள் !!

பாப்புலர் ஃப்ரண்டின் தலைமையில் துணிச்சலான முயற்சிகளால் ஒடுக்கப்பட்ட , ஓரங்கட்டப்பட்ட மக்களை , வகுப்புவாத பாசிசத்திற்கு எதிராக திரட்டி போராடுவதை கண்டு RSS அச்சப்படுகிறது.


வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அனுமதிக்க முடியாது! RSS!

Oct 30/2013: வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். விடுத்துள்ள அறிக்கை அமைதியை விரும்பும் இந்திய மக்களுக்கு எதிரான சவால் ஆகும். 

1927-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான கலவரங்களின் மூலம் தன்னை வளர்ந்து வந்த RSS பயங்கரவாத இயக்கம் இந்த அறிக்கையின் மூலம் தனது உண்மையான முகத்தை உலகுக்கு காட்டியுள்ளது. 

Tuesday, October 29, 2013

குஜராத்தில் முஸ்லிம் மாணாக்கர்களை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுப்பு!

அஹமதாபாத்: குஜராத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முஸ்லிம்களை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ஹீரா மோமின் என்ற ஐந்து வயது முஸ்லிம் சிறுமியை அஹமதாபாத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்க சிறுமியின் பெற்றோர் விண்ணப்பித்தனர். ஆனால் இப்பள்ளி நிர்வாகம் "முஸ்லிம் மாணாக்கர்களுக்கு இப்பள்ளியில் இடமில்லை" என்று கூறி அச்சிறுமியை பள்ளிக்குள் சேர்க்க அனுமதி மறுத்து விட்டது.
இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு அச்சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி அப்பள்ளி மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்