Showing posts with label ஹிந்துத்துவா. Show all posts
Showing posts with label ஹிந்துத்துவா. Show all posts

Thursday, December 10, 2015

ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் ஆமீர்கான்கள் வாழ முடியுமா ?

aamir-indian-express-award-function
சகிப்பின்மை குறித்து ஆமீர் கான் பேசிய இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது நிகழ்ச்சி
கிப்புத்தன்மை என்றால் என்ன? காக்கி டவுசர்கள் உலகிற்குப் பாடம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்து வரும் சில விசயங்களால் தான் அச்சப்படுவதாகவும் அதன் காரணமாக இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறினால் என்னவென்று மனைவி கிரண் ராவ் தன்னிடம் தெரிவித்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்று நடிகர் ஆமிர் கான் பேசியதே விவகாரத்தின் இந்த சகிப்புத்தன்மை அத்தியாத்திற்கான துவக்கம்.
கிரண் ராவ் ஒரு இந்து என்பதும், அவரது கருத்தால் ’அதிர்ச்சியடைந்த’ ஆமிர் கான் பிறப்பால் ஒரு முசுலீம் என்பதும் அனைவரும்
அறிந்தது தான். .
aamir-kiran-with-kid
கிரண் ராவ் மற்றும் அமீர் கான்

Thursday, October 22, 2015

இந்தியா மத சார்பற்ற நாடுதானா

நேர்படப்பேசு (இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டிக்கு சிவசேனா எதிர்ப்பு... ) 20-10-2015 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேற்று 20.october இரவு 9 மணிக்கு நேர்பட பேசு விவாத நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதில் சிவசேனாவின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் கரியை பூசுவோம்... இதே அரங்கத்தில் உள்ள உங்கள் மீதும் கரியை பூசுவோம்" என பத்திரிகையாளர் ஞாநியை நோக்கி எச்சரிக்கை விடுத்தார்.

Saturday, January 25, 2014

தமிழ்நாட்டில் மத கலவரம்களுக்கு அடிகல் நாட்டும் பா ஜ க!

 கலவரங்களின் வழியே ஆட்சியைப் பிடிப்பது என்பது பா ஜ க வின் வழிமுறை. 
தேர்தல் நெருங்கும்போதெல்லாம் இந்து வெறியைத் தூண்டி விட்டுக் கலவரங்கள் நடத்தி அதன் வழியே அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் வழக்கம்..

Monday, January 20, 2014

மத வெறியன் H .ராஜா மீது -கமிஷனர் அலுவகத்தில் SDPI புகார்- வீடியோ இணைப்பு !

இந்து தர்ம பாதுகாப்பு என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், திராவிடர் கழகம், ஹிந்துதுவாதிகளுக்கு எதிராக உள்ளவர், ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களையும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மதவெறியை தூண்டி விடும் விதமாகவும் பேசியுள்ளார். அவரது பேச்சு யூ டியூப் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



Wednesday, November 6, 2013

கோத்ரா சம்பவத்தில் மோடி நழுவ முடியாது: வாஜ்பாய் உறவினர் கருணா சுக்லா

டெல்லி: குஜராத் கலவரத்துக்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தமக்கு பங்கில்லை என்று கையை கழுவிவிட முடியாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சகோதரி மகளான கருணா சுக்லா கூறியுள்ளார். 

படேலை மதவாதி என்று நேரு அழைத்தாராம்! – அத்வானி

புதுடெல்லி: இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலை ஜவஹர்லால் நேரு “மதவாதி” என்று அழைத்ததாக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறுகிறார்.

Tuesday, November 5, 2013

இதுதான் பார்ப்பனீயம்!

திருவாளர் சோ என்று ஒருவர் இருக்கிறார். நடுநிலைக்கே அவர்தான் குத்தகைதாரர் என்று பார்ப்பன ஊடகங்களால் முடிசூட்டப் பட்டவர். நம்ம சூத்திர முண்டங்கள் சிலதுகளும் இதனை வழிமொழிவதுண்டு. இரட்டைநாக்குப் பேர்வழியான இந்தப் புளுகுணி தன் இனத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்திப் பேசும்; எழுதும். பல நூறுமுறை இதன் பார்ப்பனக் குள்ளநரித்தனத்தை நாம் தோலுரித்திருக்கிறோம். 

Monday, November 4, 2013

முஸஃபர் நகர்: அகதிகள் முகாமிலும் கொடூரம் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம்!

வகுப்புக் கலவரத்திற்கு இரையாகி துயர் துடைப்பு முகாமில் தங்கியிருந்த இளம் பெண்ணை இரண்டு காமவெறி கொண்ட பாசிஸ்டுகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Saturday, November 2, 2013

ஹிட்லரைப் போலவே மோடியும் பாசிசவாதி: திவாரி தாக்கு

ஹிட்லரைப் போலவே நரேந்திர மோடியும் பாசிசவாதி என மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி விமர்சித்துள்ளார்.

70 பழங்குடி கிராமங்களின் மக்களை வெளியேற்றிவிட்டு படேலின் சிலையை எழுப்பும் மோடியின் சர்வாதிகாரம்: எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது!

புதுடெல்லி: சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரால் குஜராத்தில் ஒருமைப்பாட்டு சிலையை நிறுவும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி 70 பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்துள்ளார். மோடி அரசின் அராஜகத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்களை போலீஸ் கைதுச் செய்துள்ளது. பழங்குடி மக்களை கூட்டாக வெளியேற்றியதற்கு எதிராக அப்பகுதியில் எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. மேதா பட்கரின் தலைமையில் என்.ஏ.பி.எம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மக்கள் கூட்டாக வெளியேற்றப்படுவதற்கும், போலீஸ் பயங்கரவாதத்திற்கும் எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.

Friday, November 1, 2013

தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு பகிரங்க மடல்!

சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு,
ஜூனியர் விகடன் 30.10.13 இதழ் படித்தேன். “விதாண்டாவதத்தால் மோடியை வீழ்த்த முடியாது” என்ற தலைப்பில் வெளிவந்த பேட்டியில் ஆதாரமற்ற தகவல்களை, உண்மை போல் கூறியது கொஞ்சமும் அரசியல் நாகரிகமில்லாததாகும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, எவ்வளவோ கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்தீர்கள். ஆனால், மக்களிடம் அந்த பிம்பங்கள் எடுபடவில்லை.

Thursday, October 31, 2013

பாட்னா குண்டு வெடிப்பு : விடை தெரியாத வினாக்கள்

டந்த 27 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்ட போது அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் 6 பேர் உயிரிழந்ததோடு எழுபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Wednesday, October 30, 2013

வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அனுமதிக்க முடியாது! RSS!

Oct 30/2013: வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். விடுத்துள்ள அறிக்கை அமைதியை விரும்பும் இந்திய மக்களுக்கு எதிரான சவால் ஆகும். 

1927-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான கலவரங்களின் மூலம் தன்னை வளர்ந்து வந்த RSS பயங்கரவாத இயக்கம் இந்த அறிக்கையின் மூலம் தனது உண்மையான முகத்தை உலகுக்கு காட்டியுள்ளது. 

Tuesday, October 29, 2013

குஜராத்தில் முஸ்லிம் மாணாக்கர்களை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுப்பு!

அஹமதாபாத்: குஜராத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முஸ்லிம்களை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ஹீரா மோமின் என்ற ஐந்து வயது முஸ்லிம் சிறுமியை அஹமதாபாத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்க சிறுமியின் பெற்றோர் விண்ணப்பித்தனர். ஆனால் இப்பள்ளி நிர்வாகம் "முஸ்லிம் மாணாக்கர்களுக்கு இப்பள்ளியில் இடமில்லை" என்று கூறி அச்சிறுமியை பள்ளிக்குள் சேர்க்க அனுமதி மறுத்து விட்டது.
இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு அச்சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி அப்பள்ளி மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்

மோடி கூட்டத்தில் குண்டு வெடிப்பு அரசியல் சதியா?

அக் 29: மோடிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படு கொலையில் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்.ஐ.டி.) அறிக்கைக்கு எதிராக கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த மனுவின் மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

Monday, October 28, 2013

முஸஃபர் நகர்: கிராமவாசிகள் உதவியுடன் வீடுகளை கட்டும் பாதிக்கப்பட்ட மக்கள்!

முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பா.ஜ.க.வும், காங்கிரசும் அரசியல் நாடகம் நடத்தி வரும் வேளையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்க்கையை புனரமைக்க அவர்களே தீர்மானித்துள்ளனர்.

குஜராத் இனப்படுகொலை: மோடிக்கு எதிரான மனுவில் இன்று தீர்ப்பு!

அஹ்மதாபாத்: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்.ஐ.டி.) அறிக்கைக்கு எதிராக கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த மனுவின் மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

ராகுல் சொன்னது உண்மை!

மத்தியப் பிரதேச தேர்தல் - பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி, பி.ஜே.பி. மீது ஒரு பொதுவான குற்றச்சாற்றை வீசியுள்ளார்.
குளிர் சாதனம் பொருத்தப்பட்டுள்ள அறை களில் சுகமாக வாழும் முதலாளிகளுக்கானது பிஜேபி என்பதுதான் அந்தக் குற்றச்சாற்று.

Saturday, October 26, 2013

மோடி சொல்வது உண்மையா?

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும், இந்தியாவின் புதிய மீட்பராகவும் கட்சியாலும் ஊடகங்களாலும் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி
தேசிய அரசியல் களத்தில் இதுவரை, ரிவாரி முதல் திருச்சி வரை நான்கு பிரம்மாண்டமான(?) பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார்.

Thursday, October 24, 2013

மோடியைப் பிரதமராக்கி மீண்டும் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் வரவேண்டுமா? எச்சரிக்கை! எச்சரிக்கை!!

சென்னை, அக்.23- குஜராத்தில் பாடத் திட்டத்தில் மனுதர்மம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால், மனுதர்மப்படி ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்தான் வரும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை பெரியார் திடலில் நேற்று இரு பெரும் ஆபத்துகள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!! எனும் தலைப்பில், திராவிடர் கழகத்தின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது: