Friday, March 11, 2011

குண்டுவீச்சில் 9 குழந்தைகள் பலி; ஒபாமா வருத்தம் தீர்வாகுமா?


ப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க நா[நே]ச நாட்டுப்படையினர், இரண்டு நாட்களுக்கு முன் நடத்திய குண்டு வீச்சில் அப்பாவி குழந்தைகள் 9 பேர் கொல்லப்பட்டனர். எனவே, இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க படையின் தளபதி லெப்டினன்ட் டேவிட்டும், அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, குழந்தைகள் பலியானதற்கு ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
 

ஒபாமாவின் இரங்கல் இறந்து போன குழந்தைகளை மீட்டுத் தந்துவிடுமா? என்ற அதிர்வலை எழாமல் இல்லை. மேலும், அமெரிக்க படையினரின் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜனநாயகத்தை  நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் நாடு பிடிக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஒபாமா மறுபரிசீலனை செய்வாரா? 

No comments:

Post a Comment