Monday, December 13, 2010

கர்கரேவுடன் பேசினேன்: திக்விஜய் சிங் திட்டவட்டம்

குவாஹட்டி, டிச.13: படுகொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கரேவுக்கு வலதுசாரிகளால் அச்சுறுத்தல் இருந்ததாக தெரிவித்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், மும்பை தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவருடன் தான் பேசியதாக உறுதிபடத் தெரிவித்தார்.



கர்கரேவுடன் நான் பேசவில்லை எனக் கூறுவது தவறு என்பதை நிரூபிக்க ஆவணங்களைப் பெற முயற்சித்து வருவதாக திக்விஜய் சிங் தெரிவித்தார்.

அந்த காலகட்டத்தில் கர்கரேவின் செல்போனுக்கு திக்விஜய் சிங்கிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரவில்லை என்பதை அவரின் செல்போன் பதிவுகள் தெரிவிப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.


இதையடுத்து திஜ்விஜய் சிங் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். முன்னர் கூறியவாறு கர்கரேவுடன் நான் பேசியிருந்தேன். இது முற்றிலும் உறுதி என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment