Thursday, March 17, 2011

சாதிக் பாட்ச மரணம்! கொலையா தற்கொலையா!


2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ-யால் விசாரிக்கப்பட்ட ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் மர்ம மரணம்.
ஏ.எம்.சாதிக் பாட்சா சென்னையில் இன்று (16-3-2011) அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளி வந்துள்ளது. கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குநரும், ரியல் எஸ்டேட் தொழில் அதிபருமான சாதிக் பாட்சா ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர். 

கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்திற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளை அச்சுறுத்தி நிலங்களை அபகரிப்பது, சிறப்பு பொருளாதார மண்டலம், மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்துவது, அமைச்சரின் பினாமியாக செயல்படுவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சாதிக் பாட்சா மீது உள்ளன. 

பெரம்பலூர் கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் வீட்டிலும், கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்திலும் 2010 டிசம்பரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த பணம் சாதிக் பாட்சா மூலம் வெவ்வேறு தொழில்களில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் தெரிய வந்தன. 
இந்நிலையில் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது கேள்விக்குரியதாகும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள ராசாவின் பினாமியாக செயல்பட்ட சாதிக் பாட்சாவின் மர்ம மரணம் குறித்து மத்திய புலனாய்வுத்துறை தீவிர விசாரணையை உடனடியாக நடத்திட வேண்டுமென்றும்,
உண்மை விவரங்களை நாட்டுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்திட வேண்டுமென்றும், ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றவாளிகள் சாதிக் பாட்சாவின் மரணத்தை பயன்படுத்தி தப்பிக்க வழி வகுக்காது இருக்க சிபிஐ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment