Thursday, October 31, 2013

முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ரகளை-பத்திரிகையாளருக்கு சரமாரி அடி!

முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது அதன் அடிப்படையில் இன்று துவங்கிய மன்ற கூட்டத்தில் 1 வது வார்டு கவுன்சிலர் மாரிமுத்து முத்துப்பேட்டையில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க வலியுறுத்தி கொசு வலையும் மன்ற கூட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதனை புகைப்படம் எடுக்கவும், 






செய்திகள் சேகரிக்கவும் கூட்டம் நடக்கும் அரங்கத்திற்கு சென்ற பத்திரிக்கையாளர்கள் பிச்சுமணி (தினமலர்), முகைதீன் பிச்சை (தினகரன்), திருமுருகன் (புதிய தலைமுறை) ஆகியோரை பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் தடுத்து சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. காயமுற்ற பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் மீது வழக்கு பதியபட்டுள்ளது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்! -தவ்ஹீத் ஜமாத்

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அலுவலகம் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இதனை சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் தடை வித்தித்து உத்தரவு பிறப்பித்தார். இதனால் பணிகள் தடைபெற்று நின்றது.



இதனை கண்டிக்கும் வகையில் வரும் 5-11-2013 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.  

பாட்னா குண்டு வெடிப்பு : விடை தெரியாத வினாக்கள்

டந்த 27 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்ட போது அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் 6 பேர் உயிரிழந்ததோடு எழுபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சிறுநீரக கல்லைக்கரைக்கும் நன்னாரி..! சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு..!

நம் உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் ...படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன. 

இந்திய உளவுத்துறையும் & இந்தியன் முஜாஹிதீன் இயக்கமும்!

அக் 31/2013: பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பாட்னா கூட்டத்தில் தாக்குதல் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன என்று முன்பே பீகார் அரசுக்கு தகவல் தெரிவித்திருந்தோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.

திருச்சி தவ்பீக் சுல்தானா மர்ம மரணம் குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA எழுப்பிய பிரச்னையும் முதலமைச்சரின் பதிலும்.

திருச்சி தவ்பீக் சுல்தானா மர்ம மரணம் குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA எழுப்பிய பிரச்னையும் முதலமைச்சரின் பதிலும்...

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று (அக்டோபர் 29) முதல் துணை நிதி நிலை அறிக்கை மீதான கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது.

Wednesday, October 30, 2013

முத்துப்பேட்டையில் SDPI கட்சி பற்றி தவறான புரிதலுக்கு திருவாரூர் மாவட்ட பொதுசெயலாளர் நைனா முஹம்மது விளக்கம் !

(29/10/13) ஒரு இயக்கத்தினரால் நடத்தப்படும் பேஸ்புக் பக்கத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாவா பகுருதீன் தி.மு.க.வில் இணைந்ததால் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.


முத்துப்பேட்டை அருகே கடத்தபப்ட்ட 7.6 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை சுங்க இலாகா அலுவலகம் ஆசாத் நகர் பகுதியில் உள்ளது. இந்த கட்டிடத்தில் முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை மல்லிப்பட்டிணம் திருத்துறைப்பூண்டி பகுதி சுங்க இலாகா அலுவலகமும் இயங்கி வருகிறது. 

PFI யை கண்டு தொடைநடுங்கும் டிரௌசர் பாண்டிகள் !!

பாப்புலர் ஃப்ரண்டின் தலைமையில் துணிச்சலான முயற்சிகளால் ஒடுக்கப்பட்ட , ஓரங்கட்டப்பட்ட மக்களை , வகுப்புவாத பாசிசத்திற்கு எதிராக திரட்டி போராடுவதை கண்டு RSS அச்சப்படுகிறது.


பாட்னா குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவவாதிகள் குண்டு வைப்பார்கள் என்று ஐபி முன்னறிவிப்பு!

அஹ்மதாபாத்: பாட்னா குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன்கள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு நிலவில் இருக்க இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.


பேரணியில் ஹிந்துத்துவவாதிகள் குண்டு வைப்பார்கள் என்று ஐந்து மாதங்களுக்கு முன்பு ஐபி அளித்த முன்னறிவிப்பு இப்பொழுது விவாதமாகியிருக்கிறது. மோடியின் தேர்தல் பேரணியில் வீரியம் குறைந்த குண்டுகள் வெடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதாக இருந்தது ஐபியின் முன்னறிவிப்பு.

குஜராத்தில் நடந்த இடைதேர்தல் சம்பந்தமாக இந்த முன்னறிவிப்பு வந்தது என்றாலும் பாட்னாவில் இதே போன்று வீரியம் குறைந்த குண்டுகள் வெடித்திருப்பதனால் புலனாய்வு அதிகாரிகள் தங்கள் விசாரணையை அதனை நோக்கியும் திருப்பியுள்ளனர்.

ஒரு ஹிந்துத்துவ அமைப்புதான் குண்டுவெடிப்பை நிகழ்த்தும் என்றும், அது மோடியுடைய கூட்டத்தில் நடப்பதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது என்றும் ஐபி தெளிவான முன்னறிவிப்பு செய்திருந்தது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள்தான் இதன் பின்னால் இருக்கிறார்கள் என்று அந்த முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான அறிக்கை மே 21 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா உட்பட தேசிய நாளிதழ்களில் வெளியாகியிருந்தது. முஸ்லிம்களை கவர்வதற்காக மோடி எடுத்து வரும் முயற்சிகளைத் தடுப்பதற்காகவே இந்த ஹிந்துத்துவ அமைப்பு இதில் ஈடுபடுகிறது என்று ஐபி தெளிவாக்கியிருக்கிறது.


தான் ஹிந்துக்களுக்கு மட்டும் தலைவர் அல்ல என்று மோடி பாட்னா கூட்டத்திற்கு முன்புள்ள கூட்டத்தில் கூறியிருந்தார். அத்தோடு மோடி நடத்திய சத்பாவனா நிகழ்ச்சியும் கவனிக்கத்தக்கது. அதில் முஸ்லிம் தலைவர்கள் உட்பட சில முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
இந்த விஷயத்தில் மோடிக்கு ஒரு பாடம் கற்பிக்கவும், இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரமாக ஆக்க வேண்டும் என்பதை மோடிக்கு நினைவூட்டவுமே இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.

மக்கள் கொல்லப்படக்கூடாதென்றும், அதே சமயம் அவர்கள் பீதிவயப்பட வேண்டுமென்றும் கருதித்தான் வீரியம் குறைந்த குண்டுகளை வெடிக்கச் செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக ஐபி அறிக்கை கூறுகிறது. பாட்னாவில் வெடித்த அனைத்து குண்டுகளும் சக்தி குறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும் இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால் ஹிந்துத்துவ சக்திகள்தான் இருக்கும் என்று சூசகமாக குறிப்பிட்டிருந்தனர்.

மோடியின் நிகழ்ச்சிகளுக்கு அச்சுறுத்தல் உண்டென்று பீகார் அரசுக்கு ஐபி முன்னரே தகவல் அளித்திருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று கூறினார். ஆனால் இதுகுறித்த விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அனுமதிக்க முடியாது! RSS!

Oct 30/2013: வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். விடுத்துள்ள அறிக்கை அமைதியை விரும்பும் இந்திய மக்களுக்கு எதிரான சவால் ஆகும். 

1927-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான கலவரங்களின் மூலம் தன்னை வளர்ந்து வந்த RSS பயங்கரவாத இயக்கம் இந்த அறிக்கையின் மூலம் தனது உண்மையான முகத்தை உலகுக்கு காட்டியுள்ளது. 

Tuesday, October 29, 2013

டெங்கு காய்ச்சல் ; எப்படி பரவுகிறது ?வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தீர்ப்பது எப்படி

தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.முத்துப்பேட்டையில் அதிகமான குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதுப்பற்றி முத்துப்பேட்டை  மருத்துவர் K.சதாம்  ஹுசைன்  இந்நோய் வருவது எதனால் ?, எப்படி பரவுகிறது ?, இந்நோய் வராமல் தடுப்பது எப்படி?, நோய் வந்தால் தீர்ப்பது எப்படி என்பவற்றை நம்மிடம் விளக்கமாக பேசினார். 


முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தகராறு!!

முத்துப்பேட்டை, அக்டோபர் 29: முத்துப்பேட்டை நகரில் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களை பெரும்பாலான தனியார்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி புகார் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை நெய்யக்காரத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான். இவர் அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் அயூப்கான். இவர் அதிமுக வார்டு நிர்வாகியாக உள்ளார். அயூப்கான் பேரூராட்சி அலுவலகத்தில் சென்ற வாரம் அதே பகுதியைச் சேர்ந்த சேக்கமரைக்காயர் மகன் சாகிப் மரைக்காயர் பேரூராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பேரூராட்சி செயல் அலவலார் சித்தி விநாயகமூர்த்தியிடம் புகார் கொடுத்திருந்தார்.

தீவிரவாதி என்று குற்றம் சாட்டி போலீஸ் துன்புறுத்திய கஷ்மீர் இளைஞர்: நீதிமன்றம் விடுதலை!

குமுளி: ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி என்று குற்றம் சாட்டி போலீஸ் கைது செய்து துன்புறுத்திய கஷ்மீர் இளைஞரை, குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
போலி ஆவணம் உபயோகித்து சிம் கார்டு வாங்கினார் என்று குற்றம் சாட்டி கஷ்மீரைச் சார்ந்த இளைஞரையும், கடை உரிமையாளரையும் கேரள போலீஸ் கைது செய்தது.

பாட்னா குண்டுவெடிப்பு: பாரபட்சமற்ற விசாரணை தேவை! – பாப்புலர் ஃப்ரண்ட்

புதுடெல்லி: பாட்னாவில் நரேந்திர மோடி உரையாற்றவிருந்த காந்தி மைதானத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.


இச்சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட உண்மையான கரங்களை வெளிக்கொணர பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம். ஷெரீஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

குண்டுவெடிப்பை நிகழ்த்தியது எந்தக் குழுவாக இருந்தாலும் அவர்கள் நமது தேசம் மற்றும் மக்களின் நலனுக்காக பாடுபடக்கூடியவர்கள் அல்லர். மதசார்பற்ற சக்திகளின் தேர்தல் வெற்றி வாய்ப்பையும், பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் நலனையும் பலகீனப்படுத்துவதற்கே இத்தகைய நடவடிக்கைகள் உதவும்.


தற்போதை சம்பவம் பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் ஆதாயமாக அமையும். துரதிர்ஷ்டவசத்தால் விசாரணையின் விளக்கங்களுக்கு காத்திராமல் சில முக்கிய ஊடகங்கள் சொந்த முடிவுகளை எடுத்து விடுகின்றன. எவ்வித ஆதாரமுமில்லாமல் முஸஃபர் நகர் கலவரத்தை தொடர்புபடுத்த சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன.

இத்தகைய ஊகங்கள் நீதியின் அடிப்படையிலான விசாரணைக்கு உதவாது. மாறாக, சமூகத்தை இரு துருவமாக மாற்றவே உதவும்.

இவ்வாறு கே.எம். ஷெரீஃப் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் கருத்திற்கு ஆர்.எஸ்.எஸ்.ஆதரவு!

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய ராகுல்காந்தியின் பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

குஜராத்தில் முஸ்லிம் மாணாக்கர்களை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுப்பு!

அஹமதாபாத்: குஜராத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முஸ்லிம்களை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ஹீரா மோமின் என்ற ஐந்து வயது முஸ்லிம் சிறுமியை அஹமதாபாத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்க சிறுமியின் பெற்றோர் விண்ணப்பித்தனர். ஆனால் இப்பள்ளி நிர்வாகம் "முஸ்லிம் மாணாக்கர்களுக்கு இப்பள்ளியில் இடமில்லை" என்று கூறி அச்சிறுமியை பள்ளிக்குள் சேர்க்க அனுமதி மறுத்து விட்டது.
இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு அச்சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி அப்பள்ளி மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்

தமிழில் பேச தடை விதித்த பாஜக தலைவர்!

கோலார் தங்கவயல் : தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் கோலார் தங்கவயல் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழில் பேச பாஜக தலைவர் தடை விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மோடி கூட்டத்தில் குண்டு வெடிப்பு அரசியல் சதியா?

அக் 29: மோடிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படு கொலையில் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்.ஐ.டி.) அறிக்கைக்கு எதிராக கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த மனுவின் மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

Monday, October 28, 2013

கருணாநிதி பற்றி அவதூறு கார்டூன்: முத்துப்பேட்டையில் தி.மு.க. வினர் தினமல(ம்)ர் எரிப்பு போராட்டம் !

முத்துப்பேட்டை, அக்டோபர் 28: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் நேற்று தினமலர் நாலாம் பக்கத்தில் கருணாநிதியின் தவரான கார்டுன் வெளியிட்டதை கண்டித்து தி.மு.க.வினர் நூறு பேர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் தலைமையில் தினமலர் நாளிதழை தீயிட்டு கொழுத்தினார்கள்.


எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

கடந்த சனிக்கிழமை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
மிக நேர்த்தியாக 24 மணி நேரமும் பரபரப்புடன் இயங்கும் விமான நிலையங்களில் உலகின் எட்டாவது இடத்தை பிடித்து விளங்கும் டெல்லி விமான நிலையம் பார்க்க ரசிக்க சுற்றி வர என அனைத்து அம்சங்களோடும் அமைக்கப்பட்டிருக்கிறது.

மோடிக்கு வழி நடத்தும் திறன் இல்லை: நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க்: பெரும்பாலான இந்தியரிடம் பயம் மற்றும் விரோதத்தை விதைப்பதால் மோடியால் நாட்டை சிறப்பாக வழி நடத்த முடியாது என்று பிரபல அமெரிக்க ஏடான நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

முஸஃபர் நகர்: கிராமவாசிகள் உதவியுடன் வீடுகளை கட்டும் பாதிக்கப்பட்ட மக்கள்!

முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பா.ஜ.க.வும், காங்கிரசும் அரசியல் நாடகம் நடத்தி வரும் வேளையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்க்கையை புனரமைக்க அவர்களே தீர்மானித்துள்ளனர்.

குஜராத் இனப்படுகொலை: மோடிக்கு எதிரான மனுவில் இன்று தீர்ப்பு!

அஹ்மதாபாத்: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்.ஐ.டி.) அறிக்கைக்கு எதிராக கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த மனுவின் மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

காவி பயங்கரவாதிகளுக்குத் தண்டனை எப்போது?

மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா முதலிய பார்ப்பனர்கள் அதில் மட்டுமல்லாமல், அய்தராபாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர்தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை  திட்டமிட்டே அங்கே  நிகழ்த்திவிட்டு, முஸ்லீம்கள்மீது  பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!

ராகுல் சொன்னது உண்மை!

மத்தியப் பிரதேச தேர்தல் - பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி, பி.ஜே.பி. மீது ஒரு பொதுவான குற்றச்சாற்றை வீசியுள்ளார்.
குளிர் சாதனம் பொருத்தப்பட்டுள்ள அறை களில் சுகமாக வாழும் முதலாளிகளுக்கானது பிஜேபி என்பதுதான் அந்தக் குற்றச்சாற்று.

Saturday, October 26, 2013

முத்துப்பேட்டை "திரிசூல்" நாடகம் ஒன்றிணைந்த முஸ்லிம்கள்-அச்சத்தில் விஷமிகள்!

முத்துப்பேட்டை: கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துப்பேட்டை தர்கா அருகே ஜீவானந்தம் என்பவறின் நிலத்தில் திரிசூலத்தை நட்டுவிட்டு தானாக முளைத்ததாக கூறி அமைதியை சீர்குலைக்கும் விதமாக நாடகமாடியது தொடர்பாக முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா மற்றும் அணைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டம் நேற்று மாலை அரபு சாஹிப் பள்ளி மதரசாவில் நடைபெற்றது.




மோடி சொல்வது உண்மையா?

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும், இந்தியாவின் புதிய மீட்பராகவும் கட்சியாலும் ஊடகங்களாலும் முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி
தேசிய அரசியல் களத்தில் இதுவரை, ரிவாரி முதல் திருச்சி வரை நான்கு பிரம்மாண்டமான(?) பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார்.

மோடி மாயையில் சிக்கியுள்ள ம தி மு க வும் இதர சிறுகட்சிகளும்!

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவுகளாலும்  காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசின் அடுத்தடுத்த ஊழல்களாலும்,
எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் சிறந்த ஒரு மாற்றம் ஏற்படும் என்ற கருத்துருவாக்கம் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது.

சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி : 50% மானியம்!

சென்னை: வீட்டில் பொருத்தக்கூடிய வகையில் உள்ள சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி பெற விரும்புவோர், தமிழக அரசு அறிவித்துள்ள 20,000 ஆயிரம் ரூபாய் மானியத்தை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.     

ராகுலின் ஐ.எஸ்.ஐ. குற்றச்சாட்டு: முஸ்லிம் தலைவர்கள் கண்டனம்!

லக்னோ: முஸஃபர் நகர் கலவரத்தில் அனைத்தையும் இழந்து அனாதைகளாக அகதிகள் முகாம்களில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கும் முஸ்லிம்களை பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அணுகுகிறது என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பாக ஜும்மாவிர்க்கு பிறகு தீவிர உறுப்பினர் சேர்க்கை!

இந்தியா  முழுவதும்  SDPI கட்சி சார்பாக தீவிர உறுப்பினர் சேர்கை  பிரசாரம் நடைபெற்று வருகிறது,முத்துப்பேட்டையிலும் தீவிர உறுப்பினர்  சேர்கை கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.இதன்  ஒரு பகுதியாக நேற்று ஜும்மாவிற்கு  பிறகு உறுப்பினர் சேர்கை முத்துப்பேட்டையில் குட்டியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


Friday, October 25, 2013

முத்துப்பேட்டையில் கலவரம் செய்யும் எண்ணத்தோடு சுற்றி திரியும் விஷமிகள்.!!

அக்டோபர் 24: முத்துப்பேட்டையில் இருந்து தில்லைவிளாகம் நோக்கி மோட்டார்சைக்கிளில் பள்ளியமேட்டை சேர்ந்த ராஜீவ் (வயது22) என்பவரும், தில்லைவிளாகத்தை சேர்ந்த கணபதி (வயது26) என்பவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது போகும் வழியில் ஊர், பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த ஒரு வாலிபர் தில்லைவிளாகம் வரை அழைத்து செல்லும்படி கேட்டுள்ளார். 

சுதேசி மோடியின் விதேசி மேக்கப் செலவு தெரியுமா ?

நான் ஏழ்மையில் பிறந்தவன்வறுமை என்னவென்று தெரியும்?”என்று முழங்குகிறார் மோடிஆனால்,80% மக்கள் ஒரு நாளுக்கு ரூ20 க்கும் குறைவான பணத்தில் வாழும் இந்தியாவின் பிரதமராகத்துடிக்கும் மோடிஉடுத்தும் ஆடைகள் முதல்போட்டுக் கொள்ளும்கண்ணாடிஎழுத பயன்படுத்தும் பேனாகையில் கட்டும்கைக்கடிகாரம் வரை ஐரோப்பிய பிராண்டுகளையும்விலை உயர்ந்தமேட்டுக் குடி மக்களுக்கான ஆடைகளையும் பயன்படுத்துகிறார்.

காமன்வெல்த் மாநாடு: சட்டசபை தீர்மானம் வரவேற்கத்தக்கது! – எஸ்.டி.பி.ஐ

சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற  தமிழக சட்டசபையின்  தீர்மானம்  வரவேற்கதக்கது என்று எஸ்.டி.பி.ஐ. கூறியுள்ளது. இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மஃதனி கண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

பெங்களூர்: பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு அநியாயமாக பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள பி.டி.பி. கட்சித் தலைவர் அப்துந் நாசர் மஃதனியின் நீண்ட நாள் போராட்டத்தின் விளைவாக கண் சிகிச்சைக்காக உச்சநீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தது.

இலங்கை காமன் வெல்த் மாநாட்டை தடுத்து நிறுத்து! SDPI!

அக் 25/2013: ஈழத் தமிழர்களுக்கு எதிரான போருக்குப் பிறகு, சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் இவற்றிற்கு எதிராக  தற்போதும் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் இலங்கை சென்று ஆய்வு செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின்  தலைவர் நவநீதம் பிள்ளையும்  இதைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். 

Thursday, October 24, 2013

மஹராஷ்ட்ராவில் வறுமைக் கோட்டின் கீழ் 60 சதவீத முஸ்லிம்கள்!

மும்பை: மஹராஷ்ட்ரா மாநிலத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் முஸ்லிம்களில் 60 சதவீதம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக மாநிலஅரசு நியமித்த கமிட்டியின் அறிக்கை கூறுகிறது.

டெல்லியில் எஸ்.டி.பி.ஐ. போராட்டம்: காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி!

புதுடெல்லி: ஈழத் தமிழர்களுக்கு எதிரான போருக்குப் பிறகு, சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் இவற்றிற்கு எதிராக  தற்போதும் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் இலங்கை சென்று ஆய்வு செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின்  தலைவர்  நவநீதம் பிள்ளையும்  இதைப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான தொடர்புகள்....

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நமதூர் ஆம்புலன்ஸ் சேவைக்கான தொடர்பு மற்றும் நமது சுற்றவட்டார பகுதிகளின் தமுமுக ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான தொடர்புகள்....


மோடியைப் பிரதமராக்கி மீண்டும் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் வரவேண்டுமா? எச்சரிக்கை! எச்சரிக்கை!!

சென்னை, அக்.23- குஜராத்தில் பாடத் திட்டத்தில் மனுதர்மம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால், மனுதர்மப்படி ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்தான் வரும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை பெரியார் திடலில் நேற்று இரு பெரும் ஆபத்துகள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!! எனும் தலைப்பில், திராவிடர் கழகத்தின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

முத்துப்பேட்டை "திரி சூல்" விவகாரம்:அபு பக்கர் சித்திக் மற்றும் பாக்கர் அலி சந்திப்பு !

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா அருகில் ஜீவானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.அங்கு கடந்த 20.10.2013 
அன்று திரிசூலம் ஒன்றை ஊண்டிவிட்டு முத்துப்பேட்டையில் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்தனர்.

வல்லபாய் பட்டேல் ஏன் RSS இயக்கத்தை தடை செய்தார்?

அக் 24/2013: நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சர் 'இரும்பு மனிதர்' சர்தார் வல்லபபாய் படேலுக்குக் ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) இயக்கம் கொடுத்த வாக்குறுதியை அளித்தது.   

Wednesday, October 23, 2013

முத்துப்பேட்டை சித்தேரி குளம் தூர்வாரும் பணி-பொதுமக்களால் தடுத்து நிறுத்தபட்டது

முத்துப்பேட்டை, அக்டோபர் 22: முத்துப்பேட்டை சாலையில் உள்ள சித்தேரிகுளம் அப்பகுதி மக்களுக்கு மிகப் பயனுள்ளதாகவும் அப்பகுதி நீர் ஆதாரமாகவும் காணப்பட்டன. மேலும் பேரூராட்சி பகுதியில் பெரும்பாலான குளங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு குளங்கள் குட்டைகளாக மாறியும் அசுத்தமாக காட்சி அளிப்பதாலும் மக்கள் பயன்பதாட்டிற்கு ஆகாமல் போனது.

முத்துப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்பனை ஒருவர் கைது!

முத்துப்பேட்டை, அக்டோபர் 23: முத்துப்பேட்டை பகுதியில் வெளிமாநில லாட்டரி சிட்டுகள் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதனால் முத்துப்பேட்டை காவல் துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 


மோடியை வெளுத்து வாங்கும் தங்க சாமியார் !

ந்தியா ‘வல்லரசா’க வேண்டும் என்பதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும், உ.பி சாமியார் சோபன் சர்க்காருக்கும் இரு வேறு கருத்து இல்லை. அதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாடு சுமுகமாக முடித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

’சமயம்’ பார்த்து நுழைந்த ஆரியம்

தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் _ ஆழ்வேராய் இருந்து உழைத்தவர் தேவநேயப் பாவாணர். தமிழ்மொழி, திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் இருந்துள்ளது என வாதிட்டவர். 40க்கும் மேற்பட்ட சொல்லியல்பு களைக் கற்று சிறப்பான முறையில் சொல்லாராய்ச்சி செய்துள்ளார். தமிழறிவினாலும், பன்மொழியியல் அறிவினாலும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டவர்.

தமிழ்மொழி கெட்டதற்குக் காரணமே சமயம்தான். ஏனெனில், சமயத்துறையில்தான் முதன்முதலில் ஆரியர்கள் வடமொழிச் சொற்களைப் புகுத்தினர். வடமொழி தேவமொழி யென்றும், அதனை ஒலிமுறை பிறழாமல் ஓதும் ஆற்றல் பார்ப்பனருக்கு அதாவது பிராமணர்க்குத்தான் உண்டென்றும் கூறி, கோவில்களில் வழிபாடு செய்யும் அதிகாரத்தைத் தங்களுக்கே உரியதாக்கிக் கொண்டனர். இப்படிச் செய்தது கி.மு.1200 என்று சொல்லலாம்.
#####
பிராமணனை நாம் தமிழன் என்று ஏற்றுக் கொண்டாலும், அவன் அதை ஒத்துக்கொள்வதில்லையே! நம்மைவிட உயர்ந்தவன் _ மேலானவன் _ நம்மின் வேறானவன் என்றல்லவோ அவன் தன்னைக் கருதிக் கொண்டிருக்கிறான், சொல்லி வருகிறான்!
ஆப்பிரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் எப்படி அந்த நாட்டுப் பழங்குடி மக்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று, தங்கள் நிறவெறி காரணமாகக் கூறிவந்தார்களோ, அப்படியேதான் இந்த நாட்டிற்கு வந்த ஆரியர்களும் _ இக்கால பிராமணர்களும் பூதேவர் என்றும் பூசுரர் என்றும் தங்களை உயர்வாகவே சொல்லிவந்தார்கள்; சொல்லி வருகிறார்கள். எனவே, இதை ஒருவகை நிறவெறிக்கொள்கை அதாவது (Brahman Aparthied) என்று சொல்லலாம்.
தொடக்கத்திலிருந்தே ஆரியர்கள் தங்களை மற்றவர்களிலிருந்து பிரித்துக்காட்டியே வந்துள்ளனர். மலையாளத்தில், அந்நாட்டுக் குடிமக்களான நாயர்கள் வாழும் வீடுகளுக்குக் கரை என்று பெயர்; ஆனால் பிராமணர்களின் இருப்பிடங்களுக்கு மட்டும் இல்லம் என்று பெயர். இவ்வாறே ஆரியர்கள் தங்கியிருந்த ஊர்களுக்கு நம்மை என்று பொருள் தருகின்ற மங்கலம் என்னும் சொல்லைக் கொண்ட சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களை அமைத்துக் கொண்டதோடன்றி, ஏனைய தமிழ் மக்களிடம் கலந்து பழகாமல், தனித்தே வாழ்ந்து வந்துள்ளனர்.
வீடு கட்டுதற்கு உரிய மரங்களைத் தேர்ந்தெடுப்பது பற்றிக் கூறும் மனை நூலிலும்கூட, பிராமணர்களுக்கு உளுக்காத _ உறுதியான மரங்களும்; மற்றவர்களுக்கு எளிதில் உளுத்துப்போகக் கூடிய மற்ற மர வகைகளும், சொல்லப்படுகின்றன. அவ்வளவு ஏன்? செய்யுட்களில் சிறந்ததான _ வெண்பா பிராமணர்க்கு உரியது; ஏனைய செய்யுட்கள் மற்றவர்க்கு உரியன என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றனவே! இதுமட்டும் அன்று; தமிழர் குழுவிலே மிகவும் சிறந்தவராக _ உயர்ந்தவராகக் கருதப் பெற்ற முனிவர்களைக் குறிக்கும் அந்தணர் என்ற பெயரையும் நாளடைவில் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டார்கள்.
இதைக் கேட்கும்போது, ஆரியர்கள் எப்படி இத்தகைய தமிழ்ப் பெயர்களைத் தாங்கினர் என்ற அய்யம் உங்களுக்கு எழலாம். ஆனால், இந்த அய்யம் தேவையற்றது. ஏனெனில், தொடக்க காலத்தில் _ அஃதாவது கடைக்கழகக்காலம் வரையில்கூட _ ஆரியர்கள் தூய தமிழ்ப் பெயர்களையே தாங்கியிருந்தனர். ஒருசிலர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும் விளங்கினர். காலப்போக்கில்தான் அவர்கள் படிப்படியாகத் தமிழில் வடமொழிச் சொற்களைப் புகுத்தினர்; தமிழரிடையே வடவரின் கதைகளைப் பரப்பினர். சமயம் பார்த்து, மிக்க திறமையோடு இவற்றை அவர்கள் செய்து வந்துள்ளனர். முதன் முதலில் அவர்கள் வடமொழிச் சொற்களைப் புகுத்தியது, முன்னமே நான் கூறியபடி, சமயத்துறையில்தான். ஆனால், ஆரியத்தால் தமிழன் கெடுகிறான்.
ஆரியர்கள் தமிழரை எவ்வழியில் வெல்லலாம் என்று எண்ணிப் பார்த்தார்கள்.  ‘Vulnerable Poison’ என்பார்களே அதைப்போல, சமயத்துறையில் தலையிட்டால்தான், தமிழரை எளிதில் வெல்லலாம் என்று கண்டுகொண்டார்கள். தமிழருக்கு இயல்பாய் அமைந்த பழங்குடிப் பேதைமை, சமயப்பித்து (Religious fanaticism) கொடைமடம் (Indiscriminate munificence) ஆகிய தன்மைகளைத் தங்கள் முன்னேற்றத்திற்குக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
முதலில் அரசர்களைச் சார்ந்து, அவர்களை வயப்படுத்தினர். பின்னர் அவர்கள் உதவியால் படிப்படியாகப் பொதுமக்களை வயப்படுத்தினர். இவ்வாறாக, முதலில் சமயத்துறையில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டி, பிறகு அரசியலிலும் காலூன்றத் தொடங்கினர்.
ஆனால், இந்தச் சமயங்களில் எல்லாம் தமிழ்ப்புலவர்கள் வாளா இருந்துவிடவில்லை. அவ்வப்போது கடுமையான எதிர்ப்பு தெரிவித்தே இருக்கிறார்கள். ஆரியர் வருகையால் தமிழர்க்கு நேர்ந்த தீமைகளைக் கண்டு அஞ்சியே திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
என்றாலும், பொதுவாகத் தமிழர்கள் ஆரியர்களைத் தங்கள் பகைவராக என்றுமே கருதியதில்லை. அவர்கள் இந்த நாட்டிற்கு வந்த காலந்தொட்டு அவர்களைத் தங்கள் உடன்பிறந்தவர்களைப் போல அன்பாகவே நடத்தி வந்திருக்கின்றனர்.  அவர்களை அயலாராக எண்ணி வெறுக்கவோ, விலக்கவோ இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த மனப்பான்மையுடனேயே பழகி வந்துள்ளனர். இருந்தும்கூட, பிராமணர்கள் அவர்களைத் தங்களைச் சார்ந்தோராகக் கருதாமல் ஒதுங்கியே வாழ்ந்து வந்துள்ளனர். இதனாலேயே நாம் அவர்களைத் தமிழர்கள் என்று ஒத்துக் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும்கூட, எல்லாவகையிலும் தமிழின் சிறப்பை ஒழிக்க நினைக்கும் அவர்கள் இயல்பும், புறம் நட்டு அகம் வேர்க்கும் நச்சுத் தன்மையும் அவர்களை இன்னாரென்று நமக்கு எளிதில் புலப்படுத்தி விடுகின்றன! இஃது ஒருபுறம் இருக்க, மேனாட்டார் தமிழின் மேன்மையையும் தமிழரின் பழைய பெருமையையும் உணரமுடியாமல் இருப்பதற்கு, இன்றைய தமிழரின் தாழ்ந்த நிலையும் ஒரு காரணம் ஆகும். இவர்களைக் காணும் ஆங்கிலேயர்கள், இத்தகையவர்களின் முன்னோர்கள் எப்படிச் சிறந்த நாகரிகம் உடையவர்களாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று அய்யுறு நிலையில் இருந்த ஆப்பிரிக்கர்கள் உயர்ந்துள்ள அளவிற்குக்கூட நம் தமிழர்கள் உயரவில்லை எனலாம். இதற்குக் காரணம் ஆரியப் பார்ப்பனர்களே யாவர். இவர்கள் தமிழர்களின் உள்ளத்திலிருந்து பகுத்தறிவு, தன்மானம், நெஞ்சுரம் ஆகிய மாந்தன் வளர்ச்சிக்கு இன்றியமையாத மூன்று இயல்புகளையும் அறவே அகற்றி விட்டனர். இறைவனையும் விதியையும் காரணமாகக்காட்டி, தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடை செய்துவிட்டனர்.
இதனாலேயே தமிழர்களிற் சிலர் பிராமணர்களை அறவே வெறுக்க முற்பட்டு, அவர்களுடைய உணவுக்கடைகளையும் புறக்கணித்து வருகின்றனர். சித்த மருத்துவர் தகடூர் செல்லையா அவர்கள், எவ்வளவுதான் பசிக்கொடுமையால் வாடினாலும், பிராமணர்களின் உணவுக் கடைக்குப் போகவே மாட்டார். அது மட்டுமன்று; பிராமணர்களுக்கு மருத்துவம் செய்யவும் மறுத்துவிடுவார். இத்தகைய நெஞ்சுரம் எல்லாத் தமிழர்களுக்கும் வேண்டும்.
சிறிது ஆழ்ந்து நோக்குவோமானால், உண்மையில் பிராமணர்கள் நம்மைவிட எந்த வகையிலும் உயர்ந்தவர் அல்லர் என அறியலாம். எடுத்துக்காட்டாக, ஒன்று சொல்கிறேன். பிராமணர் தங்களை மற்ற குலத்தாரைவிட உயர்ந்தவராகக் கருதிக்கொண்டு மற்ற இனத்தாரிடம் எதுவும் வாங்கி உண்ணமாட்டார்கள்| தமிழரில் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட சைவ வேளாளர்கள் பொற்கலத்தில் ஏதேனும் உணவுவகையிட்டுக் கொடுப்பினும் வாங்க மறுத்துவிடுவர். ஆனால், அவர்களே வேளாளரினும் தாழ்ந்தவராகக் கருதப்பட்டுவந்த இடையப் பெண்கள் பழைய மட்கலத்தில் கொண்டுவந்த மோரை வாங்கி வானமிழ்தம் என்று கூறி, மகிழ்ச்சியாகக் குடிக்கின்றனர். இந்த முரண்பாட்டை என்னவென்று சொல்லுவது!
இப்படியெல்லாம் இருந்தும், பிராமணர்கள் தங்களை மேற்குலத்தாரென்று சொல்லிக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களைத் தாழ்த்தி வந்துள்ளனர்; வருகின்றனர். இதற்குக் காரணம் தமிழர்களின் ஏமாறும் தன்மையேயன்றி, வேறன்று. எட்டினால் முடி; எட்டாவிட்டால் அடி _ இதுதான் பிராமணர்களின் வாழ்க்கைக் குறிக்கோள்.
இங்குள்ள பிராமணர்கள் புலால் உணவுக் கடைக்குச் செல்வதில்லையென்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், வடநாட்டுப் பிராமணர்கள் புலால் உணவுக் கடைக்குச் சென்று, புலாலுணவு நீக்கி மரக்கறி உணவுமட்டும் உட்கொண்டு மீளுவர். தமிழ்நாட்டிலும்கூட, பிராமணர்கள் தங்கள் உணவுக் கடைகளில் எல்லாக் குலத்தாரையும், இனத்தாரையும் ஏற்றுக்கொள்கின்றனர், வாணிகம் என்ற முறையில். ஆனால் வீட்டில் மட்டும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் _ பல்கலைக்கழகக் கண்காணகராக இருந்தாலும், பேராசிரியராக இருந்தாலும், அவ்வளவு ஏன் _ இந்தியக் குடியரசின் தலைவராக இருந்தாலும்கூட, ஒரு சிலரை ஏற்பதில்லை. இந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று சொல்வது!
இதற்கெல்லாம் காரணம் நமது பகுத்தறிவின்மையே. இவ்வாறு நாம் ஆரியருக்கு அடிமைப்பட்டிருப்பதால்தான். ஆங்கிலேயர்கள் நம்மை, உயர்ந்ததொரு நாகரிகத்துக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் _ ஆரியர் வருவதற்கு முன்னமே சிறந்த பண்பாட்டோடு விளங்கியவர்கள் என்று ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றார்கள்; மறுக்கின்றார்கள்.
நூல்: மொழிச் சிந்தனைகள்