Saturday, December 5, 2015

SDPI கட்சியின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணி...

SDPI கட்சியின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணி...
 03-12-2015 அன்று நடைபெற்ற SDPI கட்சியின் அவசர செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணி SDPI கட்சியின் திருவாருர் மாவட்ட பொதுச்செயலாளர் நெய்னா முகமது தலைமையில் நடைபெற்றது.






04-12-2015 காலை 11 மணியளவில் 30க்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் களப்பணியாற்ற தெற்கு தெரு பகுதியில் துவங்கியது. 
இறைவனின் மாபெரும் கிருபையினால் துவங்கியது முதலே தெற்கு தெரு பகுதி சகோதர,சகோதரிகள் வழங்கிய அரிசி,சனி,பருப்பு,
பிஸ்கட்டுகள் போன்ற உணவுப்பொருட்களும், உடைகளும் மலை போல் குவியத் துவங்கியது.இன்னும் மக்கள் தாராளமாக பொருளாதார உதவிகளையும் செய்தார்கள். 










இடையிடையே மழை பெய்த போதும் சகோதரர்கள் சற்றும் தளராமல் களப்பணியாற்றினார்கள்.(அல்லாஹ் இவர்களின் இந்த பணியை பொருந்திகொள்வானாக.)

மேலும் இந்த நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி ஆற்றங்கரைத் தெரு,பேட்டை ரோடு,ஹாஜா சந்து,குட்டியார் பள்ளி தெரு,நடுத்தெரு, முகைதீன் பள்ளி தெரு SPKM தோட்ட வளாகம்,புதுத்தெரு, கல்கேணித் தெரு ,பேங்க் தெரு,கிட்டங்கி தெரு,குத்பா பள்ளி தெரு,சின்ன கட்சி மரைக்காயர் தெரு போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் முதல் நாள்(0412-2015) சேகரிப்பு பணிகள் நடைபெற்று பொதுமக்கள் தாரளமாக தங்களால் முடிந்த பொருளாதார உதவி மற்றும் அரிசி, பருப்பு,பிஸ்கட் போன்ற உணவுபொருட்கள் மற்றும் மற்று துணி கூட இல்லாத மக்களுக்கா தங்களுடைய துணிகளையும் வழங்கினார்கள்.


 சேகரிக்கப்பட்ட பொருட்கள் பேட்டை ரோட்டில் உள்ள தற்காலிக நிவாரண பொருட்கள் சேகரிப்பு முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இடம் போதாத காரணத்தால் குட்டியார் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது .



 இன்ஷா அல்லாஹ் 05-12-2015 அன்று நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணி ஆசாத் நகர் மற்றும் நகரின் இதர பகுதிளில் நடைபெறும் நேற்று போல இன்றும் மக்கள் தொடர்ந்து அதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம் .
இப்படிக்கு,
செய்தி தொடர்பாளர்
SDPI கட்சி
முத்துப்பேட்டை நகரம்.

No comments:

Post a Comment