Wednesday, December 8, 2010

வாரணாசி குண்டு வெடிப்பு : ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பா?


வாரணாசி, டிச. 7
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் செவ்வா யன்று மாலை குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள ஷீட்லா கட் பகுதியில் தினந்தோறும் நடைபெறும் சிறப்புமிக்க தீப ஆராதனை நிகழ்ச்சியைக் காண செவ்வாயன்று மாலை ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலை 5.40 மணியளவில் இந்த ஆராதனை நிகழ்ச்சி துவங்கும். செவ்வாய்க் கிழமையும் நிகழ்ச்சி துவங்கி நடந்து கொண்டிருந்த போது 6.25 மணியளவில், தீப ஆராதனை நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சற்று தொலைவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். சற்று தொலைவில் குண்டு வெடித்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து 150 மீட்டர் சுற்றளவிற்கு அதன் பாதிப்பு இருந்தது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 1 வெளி நாட்டவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதர விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்த்துதுவா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடத்த சில வருடங்களாக நடந்த தொடர் குண்டு விடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதி பிரச்சனையில் உச்ச நீதி மன்றத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கபடும் இந்த வேளையில் அதில் குழப்பத்தை ஏற்படுத்தவும், மீண்டும் அயோத்தியில் ராமர் கோவில் கேட்டுவோம் என்று கூறி ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த குண்டு நடத்தபட்டிருக்கலாம் என்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து பயங்கரவாத இயக்கங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கபட்டு வருவதாகவும் பெயர் வெளியிட விரும்பாத ஒரு உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
 
 

No comments:

Post a Comment