Sunday, September 11, 2011

முத்துப்பேட்டையில் அமைதி காக்க வைத்த போலீஸ்

ஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் என்றபெயரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஹிந்துத்துவாதிகள் தமிழகத்தில் ஒருவகை பதட்டத்தை ஏற்ப்படுத்தி வருகின்றனர். இவர்கள் வேண்டும் என்றே கலவரம் செய்யும் நோக்கோடு நடத்தும் இந்த ஊர்வலத்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது.

தமிழகத்தில்
எல்லா பகுதிகளிலும் முடிந்துவிட்ட இந்த விநாயகர் ஊர்வலம் முத்துப்பேட்டையில் மட்டும் கடைசியாக நடைபெறுவது வழக்கம் அது போல் நேற்றும் நடைபெற்றது. கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பிரச்சனையும் நடைபெறாமல் நடந்த விநாயகர் ஊர்வலம் இந்த வருடமும் அமைதியாகவே நடைபெற்றது. இதற்க்கு முக்கிய காரணம் காவல் துறை, இந்த வருடம் பாதுகாப்பிற்காக திருச்சி, கரூர், சென்னை,நாகை, திருவாரூர், திருத்துறைப்பூண்டியிலிருந்து சுமார் 2000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 
 
இந்த ஊர்வலத்திற்காக  DIG,SP போன்ற உயர் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜாம்புவானோடையிலிருந்து ஆரம்பம் செய்து ஆசாத்நகர், பங்களா வாசல் வழியாக எடுத்து சென்று பாமனியாற்றில் கரைக்கப்படுவது வழக்கம். ஆசாத்நகர், பங்களா வாசல் இடம் வந்தால் போதும் இவர்கள் கோஷமும்,ஆட்டங்களும் அதிமாகும். ஆனால் நேற்று இரண்டு பக்கமும் போலீஸ் நடுவில் ஊர்வலக்காரர்கள் என்று வெகு விரைவாக அவர்களை அனுப்பினர். பங்களா வாசல் வந்தததும் நாங்கள் பழைய வழியாக தான் செல்வோம் (தெற்குத்தெரு)என ஒரு கும்பல் தடுப்பை தகர்க்க முற்ப்பட்டனர். ஆனால் அவர்களை போலீசார் அடித்து விரட்டினர்.

இதுபோன்று
ஒவ்வொரு வருடமும் போலீசிற்கும், பொதுமக்களுக்கும் பங்கம் விளைவிக்கும் இந்த விநாயகர் ஊர்வலம் எப்போது தடைபடும்..?

No comments:

Post a Comment