Saturday, September 10, 2011

சிறை'யூரப்பாவாக மாறப்போகும் எடியூரப்பா...?


ர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் கடவுள் பக்தியும் அதையும் தான்டி ஜோதிடத்திலும் மூட நம்பிக்கைகளிலும் அவருக்குள்ள பற்று அலாதியானது. கோயில்களுக்கு இவர் ஆட்சியில் இருந்தபோது தாரளமாக அள்ளி வழங்கியிருக்கிறார். இருந்தாலும் அவரது பதவியை அவரால் வணங்கப்பட்ட எந்த கடவுளாலும்[?] காப்பாற்ற  முடியவில்லை. இப்போது 'முன்னாள்' ஆகியிருக்கிறார்  எடியூரப்பா.
 
சுரங்க ஊழல் காரணமாக கர்நாடக அரசுக்கு ரூபாய் 15 ஆயிரத்து 85 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், முதலமைச்சர் எடியூரப்பாவின் குடும்ப அறக் கட்டளைக்கு முறைகேடாக ரூ.30 கோடி வழங்கப்பட்டதாகவும் லோக் அயுக்தா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது.
 
இந்நிலையில் காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலுக்கு, 6 மாதத்திற்கு முன்பு ரிஷபம் வாகனம் தங்கத்தில் செய்ய ரூபாய் 40 லட்சம் எடியூரப்பாவால் வழங்கப்பட்டது. இந்த பணம் சுரங்க ஊழலில் சம்பந்தப் பட்ட பணமா என சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று  செய்திகள் கூறுகின்றன.

 
சனிஸ்வரபகவான் கோவிலுக்கு மட்டுமன்றி, எடியூரப்பா கோயில்களுக்கு அள்ளி வழங்கிய  நன்கொடைகள் அனைத்தும் அவரது சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டதா? அல்லது அரசு மற்றும் ஊழல் நிதியிலிருந்து வழங்கப்பட்டதா என்பதை சட்டம் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். இப்போது எடியூரப்பா அள்ளி வழங்கிய பட்டியலை பார்ப்போம்;
  • பெங்களூர் அருகே இருக்கும் மாதா அமிர்தானந்தமாயி நிறுவனங்களுக்கு ரூ. 5 கோடி மற்றும் 15   ஏக்கர் நிலம்.
  • வொக்கலிக்கர்களின் அடிச்சுச்சங்கிரி என்ற தளத்திற்கு ரூ. 5 கோடி.
  • எடியூர் சித்த லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்திற்கு ரூ. 10 கோடி.
  • ஆந்திராவில் திருப்பதியில் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 5 கோடி.
  • கேராளவில் சபரிமலையில் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 5 கோடி.
  • திபெத்தில் மானசேராவர் செல்லும் புனித பயணிகளுக்கு ரூ. 3 கோடி.
  • குல்பர்காவில் தத்தாத்ரேய பீடத்திற்கு ரூ. 2 கோடி.
  • சிக்மகளூர் ரம்பாபுரி ஸ்ரீ சோமேஸ்வர மடத்திற்கு ரூ. 3 கோடி.
  • சிக்மகளூர் ஹரிஹரபுரா மடத்திற்கு ரூ. 1 கோடி.
  • 15 ம் நூற்றாண்டு துறவி கவிஞர் கனகதாசாவின் பிறந்த ஊரான காகிலேனேவிற்கு ரூ. 10 கோடி.
  • சிரவனபெலகோலா பாஹுபலி கோவில் வளாகத்திற்கு ரூ. 5 கோடி.
  • சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா பிறந்த குடலசங்கமாவில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ. 5 கோடி.
  • மந்த்ராலயா விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
  • காசி விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
  • ஹரித்வார் விருந்தினர் இல்லத்திற்கு ரூ. 25 லட்சம்.
மேற்கண்ட பட்டியல் மொத்த தொகை 59 .75 கோடியாகும்.
[புள்ளி விவரங்கள் நன்றி; இந்தியாடுடே டிசம்பர் 2010 ]
 
இவை அனைத்தும் எந்த பணத்திலிருந்து எடியூரப்பாவால் வழங்கப்பட்டது என்பதை மத்திய அரசும்- சி.பி.ஐயும் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தால் உண்மை வெளிவரும். மேலும் கோடிகளை கொட்டியும் 'எடி'யின் நாற்காலி தப்பவில்லையே? அதோடு போனாலும் பரவாயில்லை. நிலமோசடி வழக்கில் எடியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியாகியுள்ளதால் எப்போது சிறைக்கதவு உள் வாங்குமோ என்ற கவலையில் வேறு இருக்கிறார் பரிதாபமான நிலைதான் எடியூரப்பாவுக்கு. 

No comments:

Post a Comment