Thursday, December 3, 2015

முத்துப்பேட்டையில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிதி மற்றும் நிவாரண பொருட்கள் சேகரிப்பு

முத்துபேட்டை நகர SDPI கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நகரத்தலைவர்  சேக் மைதீன் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் நெய்னா முகமது முன்னிலையில் நடைபெற்றது. தமிழகத்தில் கனமழையின் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ள சேதத்தால் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளுர்,கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கபட்டுள்ளன



அந்த மாவட்டங்களில் லட்சகணக்கான மக்கள் வீடிழந்து உடைமைகளை இழந்து சாலைகளிலும் சமூக நலக்கூடங்களிலும் தவித்து வருகின்றனர். குழந்தைகள்,முதியவர்கள்,பெண்கள்,என அனைத்து தரப்பு மக்களும் அத்தியாவசிய பொருட்கள், பால், மருந்து பொருட்கள் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
                

அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நமதூர் முத்துப்பேட்டையில் 04.12.15, & 05.12.15 ஆகிய இரண்டு நாட்கள் நிவாரண பொருட்கள்,மற்றும் உடைகளை சேகரிப்பது எனவும்,மேலும் முத்துபேட்டை நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அவசர கால உதவிகளை செய்திட 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதில் ,நகர செயலாளர் மாலிக் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு:
மாவட்ட பொது செயலாளர்: 9659337915
நகர தலைவர்: 8122362484
நகர செயலாளர்: 7402204742, 9789160103

No comments:

Post a Comment