கொல்கத்தா, நவ.2- அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும்போது நாடு தழுவிய முழு அடைப்புக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நவம்பர் 8-ம் தேதி ஒபாமா வரும் தினத்தில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக மாவோயிஸ்ட் மத்திய குழுவின் உறுப்பினர் கிஷன்ஜி கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் தொலைபேசி மூலம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
கிஷன்ஜி கூறியதாவது:
அமெரிக்க ஏகாதிபத்திய அரசிடம் நாட்டை விற்கும் முயற்சியில் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ஈடுபட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கையில் ஒரு முயற்சி தான் ஒபாமாவின் இந்தியப் பயணம்.
ஒபாமா வருகையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள போராட்டங்கள் வெறும் நாடகமே.
மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கம்யூனிஸ்ட் அமைப்புகளும் மக்களை வதைப்பதற்காக முதலாளித்துவ கலாசாரத்தில் நுழைந்துள்ளன.
இவ்வாறு கிஷன்ஜி கூறியுள்ளார்.
நன்றி:தினமனி
இவ்வாறு கிஷன்ஜி கூறியுள்ளார்.
நன்றி:தினமனி
neenga kudukkum news payanullathaga irukkirathu thanks...
ReplyDeletecomputer service: 8807489773