Monday, November 1, 2010

குஜராத்தைவிட்டு வெளியேறினார் தீவிரவாதி (M.P) அமித்ஷா


மும்பை, அக்.31: குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை குஜராத்திலிருந்து வெளியேறிவிட்டார். அவரை நவம்பர் 15-ம் தேதிவரை குஜராத்தைவிட்டு வேறு இடத்தில் இருக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 குஜராத்தில் உள்துறை அமைச்சராக இவர் இருந்தபோது ஷொராபுதீன் என்கவுண்டர் நடந்தது. அந்த வழக்கில் இவரையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். இந்நிலையில் இவர் ஜாமீன் கேட்டிருந்தார்.

 சாட்சியை கலைத்துவிடுவார் என்று கூறி அதை சிபிஐ வக்கீல் ஆட்சேபித்தார். இதையடுத்து இவரை நவம்பர் 15-ம் தேதிவரை குஜராத்தில் இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஞாயிற்றுககிழமை காலையிலேயோ குஜராத்திலிருந்து கிளம்பிவிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 எனவே, அவர் காலை விமானத்தில் மும்பைக்கு புறப்பட்டுவிட்டார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தினமணி  

No comments:

Post a Comment