Saturday, August 27, 2011

விலை போகும் நீதித்துறை! கொக்கரிக்கும் கொலைகாரர்!

சென்னை:  காஞ்சி வரதராஜ பெருமாள்கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் காஞ்சி ஜெயேந்திரர் தொலை பேசியில் பேசும் ஆடியோ சிடி வெளியாகியுள்ளது.  

நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளார்.






இந்நிலையில் இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயந்திரர், அவரது பெண் உதவியாளர், 2  இடைத் தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக்கொள்ளும் உரையாடல் அடங்கிய சி.டி. வெளியாகி உள்ளது. இதை ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்தும், பணம் பட்டு வாடா குறித்தும் பேசுவது போன்று உரையாடல் உள்ளது. இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுதலையாக ஏதோ ‘டீல்’ நடந்துள்ளதாகத் தெரிகிறது. அதில் பேசும் பெண் குரலுக்குச் சொந்தக்காரர் கெளரி என்பவர் ஆவார். இவர் ஜெயேந்திரரின் உதவியாளர் என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

இந்த மனு மீது வார இறுதியில் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இதன்மூலம் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார் ஜெயேந்திரர். இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் திமுக ஆட்சியின்போது இந்த வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து ஜெயேந்திரருக்கு ஆதரவாக பல்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்கவும்: சாமியார்கள் என்போர் கொலைகாரர்கள், கிரிமினல்கள், பெண் பித்தர்கள் என்பதைப் பலமுறை நாடு அறிந்திருந்தாலும் முக்கியமாக பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் இந்துத் தீவிரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் சாதுக்கள் தெருப்பொறுக்கிகளை விடவும் கேவலமாக நடந்து கொண்டதை நாடு கண்ட பொழுதும், சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி கைது செய்யப்பட்டு தொடர் விசாரணையில் பல பெண்களை மானபங்கப்படுத்திய தகவல் வெளியான பொழுதும் சாமியார் வேசத்தைப் போட்டுக் கொண்டு உலா வருபவர்கள் கிரிமினல்கள் என்பதை நாடு கண்டு கொண்டது.

சங்கர மட காம கேடிகளை.. அபச்சாரம் அபச்சாரம் காம கோடிகளை உலக குரு அதாவது ஜெகத்குரு நமது பெருமைக்குரிய காஞ்சி காமகோடி சங்கராச்சாரியாரின் தேவலீலைகள் உலகம் அறிந்ததே. அதில் சில முக்கியமான லீலைகளை பார்ப்போம்.

1. 1986 இல் சங்கரமடத்தை போட்டு விட்டு... வெங்கெட்(ட)ராமன் பெண்ணை இழுத்து கொண்டு 1 மாததிற்கு மேல் குடும்பம் நடத்தியதையும், ஓடி போன சங்கராசாரி, வெங்கெட்(ட)ராமன் பெண் ஆகிய இரண்டு ஓடுகாலிகளையும் சிபிஐ தேடி கண்டு பிடித்ததையும், வெங்கெட்(ட)ராமன் மனைவி தலைகாவிரிக்கு போய் தனது பெண்ணை சங்கராச்சாரியிடம் இருந்து இழுத்துக்கொண்டு வந்ததும் பெரிய சங்கராச்சாரியின் சங்கர புராணம்.





2. சின்ன சங்கராச்சாரி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், சங்கர மடம் நடத்தும் கல்லூரி விடுதிக்கு தினமும் இரவில் சென்று இரவு 1 மணி முதல்... காலை 5 மணி வரை...விடுதியில் இருந்த பல பெண்களை கெடுத்து சாதனை புரிந்ததும்,  நடிகை ஸ்வர்ணமால்யாவை வைத்திருந்ததும், அவள் கணவனிடம் இருந்து அவளை அபகரித்து வைத்து கொண்டதும், பிறன்மனை நோக்கி அசிங்கமான காரியம் செய்ததும் இது வெல்லாம் சின்ன சங்கராச்சாரியின் சங்கர புராணம்.

3. காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனை கூலிபடையை வைத்து கொலை செய்ததும், அதன் காரணமாக சிறையில் இருந்ததும், பின்னர் ஜாமீனில் வெளியே வந்து முக்கிய சாட்ச்சிகளை கலைத்ததும், இப்பொது நீதிபதிக்கு பணம் கொடுத்து கேசை முடிக்கப் பார்ப்பதுமாக இவரது புராணங்கள் தொடர்கிறது.

No comments:

Post a Comment