Monday, August 29, 2011

தூக்குமேடை தயார்! மருத்துவப் பரிசோதனையும் முடிந்தது


வேலூர்: வேலூர் சிறையில் தூக்குத்தண்டனை கைதிகளை தூக்கிலிடுவதற்கென்று என்று தனியாக பணியாளர்கள் எவரும் இல்லை. இறுதியாக 1983ம் வருடம் மனைவி,மற்றும் குழந்தையை கொன்ற குற்றத்திற்காக சென்னையை சேர்ந்த சேட்டு என்ற சந்துரு தூக்கிலிடப்பட்டார். அப்போது தண்டனையை நிறைவேற்ற சென்னையில் இருந்து ஒரு காவலர் வேலூர் வந்து தூக்கிலிடும் பணியை நிறைவேற்றினார்.
இதற்கு பின்னர் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டனை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் தற்போது சிறை அதிகாரிகள் தூக்கு மேடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் ஜெயிலில் உள்ள தூக்கு மேடையில் ஒரே நேரத்தில் 2 பேரை மட்டுமே தூக்கு போடும் வசதி உள்ளது. தற்போது தூக்கு தண்டனை கைதிகள் 3 பேர் உள்ளதால் ஒரு கைதியை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் மணிலா கயிறுகள் 4 ஜோடிகள் உள்ளது. இதன் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து தயார்படுத்தி வருகின்றனர்.  இன்று காலை சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் வழக்கம் போல் காலை உணவு சாப்பிட்டனர். பின்னர் 3 பேரையும் சிறை மருத்துவ அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது 3 பேரும் நலமாக இருப்பது தெரியவந்தது.
தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு வந்ததை தொடர்ந்து வேலூர் ஆண்கள் ஜெயிலில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஜெயிலை சுற்றி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ரோந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment