Wednesday, January 22, 2014

முஸஃபர் நகர் பாலியல் பலாத்காரம்: 22 பேர் மீது ஜாமீன் இல்லா வாரண்ட்

முஸஃபர் நகர்: முஸஃபர் நகரில் நடந்த வகுப்புக் கலவரத்தின் போது 5 பெண்கள்கூட்டு பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 22 பேர்மீது முதன்மை நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் நரேந்தர் ஜாமீன் இல்லாத வாரண்டைபிறப்பித்துள்ளார்.குற்றம் சாட்டப்பட்டோர் தலைமறைவாக உள்ளனர்.





குற்றம்சாட்டப்பட்டோர் மீது கைது வாரண்டை பிறப்பிக்க கோரி வழக்குகளை விசாரிக்குசிறப்பு புலனாய்வு பிரிவு(எஸ்.ஐ.டி) நீதிமன்றத்தை அணுகியது.கடந்த செப்டம்பரில் 6 பாலியல் பலாத்காரங்கள் நடந்தன.இதில் 5 பாலியல்பலாத்காரங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஜாமீன் இல்லாத வாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆறாவது வழக்கில் ஐந்து பேர் மீது விசாரணைநடக்கிறது.தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை எஸ்.ஐ.டி அடையாளம்கண்டுள்ளது.பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்கள் சமர்ப்பித்த ரிட்மனுவை தொடர்ந்து உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும்நோட்டீஸ் அனுப்பியிருந்தது.இதனைத்தொடர்ந்து எஸ்.ஐ.டி குற்றம்சாட்டப்பட்டோர்  மீது கைது வாரண்டை பிறப்பிக்க நீதிமன்றத்தை அணுகியது.

No comments:

Post a Comment