Friday, January 24, 2014

முத்துப்பேட்டையிலிருந்து 20 பஸ்கள் 40 வேன்களில் சிறை செல்லும் போராட்டத்திற்கு செல்கிறோம் -தவ்ஹீத் ஜமாத் அன்சாரி பேட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  வரும் 28 ஆம் தேதி சிறை செல்லும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது .இதற்காக தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டங்கள் மற்றும் தர்பியா முகாம்களை  தீவிரமாக நடத்தி வருகிறது .


ரபரபிற்கு சிறிதும் பஞ்சமில்லாத முத்துப்பேட்டையில் ,TNTJ வின் போராட்ட பணிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது .


போராட்ட பணிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக ,TNTJ வின் மாநில செயலாளர் அன்சாரி அவர்களை முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள குழுவின் சார்பாக சந்தித்தோம்.
சிறை செல்லும் போராட்ட பணிகளில் ஈடுப்பட்டிருந்த அவர் நமது இணையதளத்திற்கு பேட்டியளித்தார் .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முத்துப்பேட்டை கிளையின் சார்பாக திருச்சியில் நடைபெறும் சிறைசெல்லும் போராட்டத்திற்கு செல்வதற்காக  20 பஸ்கள் மற்றும் 40 வேன்களில் செல்ல இருப்பதாகவும்,இதற்காக ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார் .


கடந்த 2 மாதத்திற்கு முன்னதாகவே சுவர் விளம்பரங்கள் ,துண்டு பிரசுரங்கள் ,வால் போஸ்டர்கள் ,டிஜிட்டல் போர்டுகள் உள்ளிட்டவைகள் மூலம் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விளம்பர பணிகள் செய்துவந்ததாக கூறினார் .
இதற்காக தனித்தனியாக  குழுக்கள் பிரிக்கப்பட்டு முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று அழைப்பு பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார் .

 TNTJ வை சேர்ந்த பெண்கள்  கூப்பாடு செல்வது போல் நேரடியாக  முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி பெண்களிடம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ,அதில் பெரும்பான்மையான பெண்கள் 


 போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் , இது இஸ்லாமிய இயக்க வரலாற்றில் ,எந்த இயக்கமும் செய்திடாத ஒரு மகத்தான பனி என்றும் அன்சாரி  பெருமிதம் தெரிவித்தார் .
சென்னை ,திருச்சி ,கோவை ,காரைக்கால் பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் ,மும்பை மற்றும் மகாராஷ்டிராவிலும் இந்த சிறை செல்லும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்த உள்ளதாக தெரிவித்தார் .

இந்த சிறை செல்லும் போராட்டத்தில் 20 லட்சம் பேர் கலந்துகொள்ள இருப்பதாகவும் ,இதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அணிதிரள உள்ளதாகவும் கூறினார் .வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அதிமுக விற்கு ஆதரவு கொடுக்கபோவதாக செய்திகள் பரவி வருகிறதே என்ற கேள்விக்கு ,அதை நீங்கள் போராட்டத்திற்கு பிறகு தெரிந்து கொள்வீர்கள் என பதிலளித்தார் .

ஆசாத் நகரில் கட்டப்பட்டு வரும் தவ்ஹீத் மார்க்சிற்கு ,ஒரு சில விஷமிகள் எதிராக செயல்படுவதாகவும் ,எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறை இல்லங்கள் கட்டிக்கொள்ளலாம் என இந்திய சட்டம் சொல்வதாகவும் ,எனவே திட்டமிட்டபடி அதே இடத்தில் தவ்ஹீத் மார்க்ஸ் கட்டி எழுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார் .



சென்னை ,திருச்சி ,கோவை ,சென்னை ,திருச்சி ,கோவை ,காரைக்கால் பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் ,மும்பை மற்றும் மகாராஷ்டிராவிலும் இந்த சிறை செல்லும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்த உள்ளதாக தெரிவித்தார் .

இந்த சிறை செல்லும் போராட்டத்தில் 20 லட்சம் பேர் கலந்துகொள்ள இருப்பதாகவும் ,இதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அணிதிரள உள்ளதாகவும் கூறினார் .வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அதிமுக விற்கு ஆதரவு கொடுக்கபோவதாக செய்திகள் பரவி வருகிறதே என்ற கேள்விக்கு ,அதை நீங்கள் போராட்டத்திற்கு பிறகு தெரிந்து கொள்வீர்கள் என பதிலளித்தார் .

ஆசாத் நகரில் கட்டப்பட்டு வரும் தவ்ஹீத் மார்க்சிற்கு ,ஒரு சில விஷமிகள் எதிராக செயல்படுவதாகவும் ,எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறை இல்லங்கள் கட்டிக்கொள்ளலாம் என இந்திய சட்டம் சொல்வதாகவும் ,எனவே திட்டமிட்டபடி அதே இடத்தில் தவ்ஹீத் மார்க்ஸ் கட்டி எழுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார் .
நன்றி:mutupettaiexpress 
சந்திப்பு :ஜே :ஷேக் பரீத் 

No comments:

Post a Comment