Tuesday, December 8, 2015

அமீரகத்தில் மழை வெள்ள உதவி – இந்தியன் கல்ச்சுரல் சொசைடி வேண்டுகோள்

மழை வெள்ள பேரிடர் நிவாரணத்திற்கு அமீரகத்தில் வாழும் அனைவரும் தாரளமாக உதவிட வேண்டும் என்று இந்தியன் கல்சுரல் சொசைடி வேண்டுகோள் விடுத்துள்ளது.



வரலாறு காணாத அளவிற்கு சென்னை மற்றும் கடலூர் சுற்று பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளம் மக்களை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது இதற்க்கு உதவி கரம் நீட்டுவது நம் அனைவரின் மீது கடமை ஆகும்.

அரசும், அரசு சாரதா நிறுவனங்களும், தன்னார்வ தொண்டர்களும் இணைத்து கையறு நிலையில் இருந்த மக்களின் உயிர் காத்து உணவும் உடையும் கொடுத்து மாந்தம் காப்பற்றி இருப்பதை நாம் நன்றியுடம் பார்க்கிறோம்.


தமிழக அரசு தனக்கு கிடைத்த வெள்ள நிவாரண உதவிகளை இடை தரகர்களின் இடையூறு இல்லாமல் பதிக்க பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும். தொண்டு நிறுவனகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து அவர்கள் கொடுக்கும் நிவாரண உதவிகள் பாதிக்க பட்ட மக்களுக்கு கிடைத்திட செய்ய வேண்டும்.
மனிதாபிமான உதவிகளை பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்களுக்குள் செய்து கொண்டதை பார்க்கும் பொழுது மதவாதம் சொல்லி மக்களை பிரிக்க நினைக்கும் பிற்போக்கு மதவாத சக்திகளின் முயற்சி மக்களிடம் எடுபடாது என்று திட்டவட்டமாக தெரிகிறது. இனியேனும் அவர்கள் தங்கள் நிலை மாற்றி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமீரகத்தில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் இந்தியன் கல்சுரல் சொசைட்டியின் மாநில தலைவர் திருச்சி முபாரக் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு
இந்தியன் கல்சுரல் சொசைடி – அமீரகம்
தமிழ் மாநில பிரிவு முக நூல் பக்கத்தை லைக் செய்யவும்https://www.facebook.com/Indian-Cultural-Society-UAE-Tamil-Nadu-563601193774009/?fref=ts

No comments:

Post a Comment