தமுமுக சார்பாக கடந்த டிசம்பர் 6 ம் தேதி தஞ்சை மாவட்டம் மதுக்கூரிலிருந்து வாகனங்களில் தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்லிம்கள் சென்றபோது போஸ் என்கிற இந்து முண்ணனியை சேர்ந்தவனும் அவனது தம்பி வழக்கறிஞர் பிரபுவும் தங்களது வாகனத்தை ரோட்டின் நடுவே நிறுத்திக்கொண்டு எங்கள் ஊர் வழியாக முஸ்லிம்கள் செல்லக்கூடாது என மிரட்டியதோடு வாகனத்தின் மீது கற்களை வீசியும் தாக்கியுள்ளனர்.
இதனை கண்டித்து அன்றே சாலை மறியல் செய்த முஸ்லிம்களிடம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதாகவும் உறுதி அளித்ததின் பேரில் அமைதியாக முஸ்லிம்கள் கலைந்து சென்றனர்.

இதில் மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது, மாநில செயலாளர் கோவை செய்யது, தலைமை கழக உறுப்பினர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில மாணவரணி செயலாளர் மருத்துவர் முஹம்மது சர்வத்கான், கழக பேச்சாளர் திருச்சி ரபீக் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் நூற்றுக்கணக்கான தமுமுகவினர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment