Thursday, December 19, 2013

முத்துப்பேட்டையில் விபத்தின் காரணமாக உணர்வுகள் இல்லா நிலையில் பரிதாபத்திற்குரிய வகையில் நபீல்.

டிசம்பர் 19: ஈர நெஞ்சம் உள்ளவர்கள் கவனத்திற்க்கு!! பிறர் நலனில் அதிக அக்கரையுள்ள கண்ணியவான்களே! இந்தப் பதிவை அதிகமாகப் பகிருங்கள்! நீங்கள் பகிர்வதன் மூலம் எங்கோ ஒரு இடத்தில் பிறருக்கு உதவக் காத்திருக்கும் மனிநேயமுள்ளவர்களுக்கு சென்றடைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது!! தயவு செய்து பகிருங்கள் பரப்புங்கள்!!


ஆதரவுக்கு ஆட்கள் இன்றி மருத்துவ மனையில் கிடக்கிறார் உணர்வின்றி கடந்த 20 நாட்களுக்கு முன் முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் ஆட்டோ ஒட்டி கொண்டு போகும் போது ஆட்டோ நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து விட்டார் முத்துப்பேட்டையை சார்ந்த “நபீல் அஹமது” என்பவர் கடந்த 20 தினங்களாக யாதொரு சிகிச்சையும் அளிக்காமல் தஞ்சை மருத்துவ மனையில் இடுப்புக்கு கீழ் செயல் இழந்த நிலையில் பார்பதற்கு ஆட்கள் இல்லாத வகையில் அவதியுறம் செய்தி கேட்டு இன்று நேரில் சென்று பார்த்து மருத்துவர்களை அணுகி எனது நண்பர் முன்னாள் டீன் டாக்டர் குணசேகரன் மற்றும் டக்டர் கணேசன் ஆகியவர்களிடம் விபரம் சொல்லி மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய பட்டுள்ளது ஆனாலும் கையில் காசு இல்லாமல் மிகவும் சிரமாமான நிலையில் இருப்பதை அறிந்து நண்பர்கள் வட்டாரத்தில் செல் மூலம் தொடர்பு கொண்டு 20,000 ஆயரம் நிதி திரட்ட பட்டுள்ளது உதவிக்கு ஆட்கள் இன்றி தவித்துடும் இந்த 25 வயது வாலிபனை காப்பாற்ற துவா செய்வதுடன் முடிந்தால் உதவி செயலாம் (என்னால் முடிந்த அதிக பச்ச உதவினை செய்து இருக்கிறேன்) அல்லது இதனை சேர் செய்யலாம்.
விபரங்களுக்கு செயலளர் ஆட்டோ ஸ்டான்ட் முத்துப்பேட்டை 04369 262789
முத்துப்பேட்டையில் விபத்தின் காரணமாக உணர்வுகள் இல்லா நிலையில் பரிதாபத்திற்குரிய வகையில் நபீல்.

No comments:

Post a Comment