Saturday, December 7, 2013

மதுக்கூரில் காவிகள் வெறிச்செயல்-இந்து முன்னணி தீவிரவாதிகள் அராஜகம்

மதுக்கூர் தமுமுக வாகனத்தின் மீது கொடூர தாக்குதல் : பெண்கள் இருந்த வாகனத்தின் கண்ணாடி உடைப்பு - இந்து முன்னணி தீவிரவாதிகள் அராஜகம், மாவட்டம் முழுவதும் பரபரப்பு.....!! 



தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ள மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிராம்பட்டினம் கிளையின் சார்பாக 17 வேன்களில் 400 க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு சென்றனர்.





அதே போல் தமுமுக, மமக மதுக்கூர் கிளையின் சார்பாக ஒரு வேனில் பெண்கள் உட்பட மொத்தம் 5 வேன்களில் தஞ்சைக்கு புறப்பட்டுச்சென்றனர். மதுக்கூர் வாகனங்கள் பாப்பாநாடு அருகே கடந்து செல்ல முற்படும் போது வாகனத்தை இடைமறித்த இந்து முன்னணி தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். இதில் வாகனத்தின் கண்ணாடிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இதைக்கண்டித்து மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு ஆகிய இரு இடங்களிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. தஞ்சையில் நடைபெற உள்ள மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வாகனத்தில் சென்ற அதிரை நகர தமுமுக / மமக வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மணிக்குண்டு மக்கள் வெள்ளத்தில் ஸதம்பித்தது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. குற்றவாளியை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டோர் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

தகவலறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவார் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போலீசார் பாதுகாப்போடு தஞ்சைக்கு புறப்பட்டுச்சென்றனர். இதனால் இந்த பகுதி முழுதும் சில மணி நேரங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

No comments:

Post a Comment