Sunday, December 13, 2015

நடிகர் சிம்பு, அனிருத் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

கோவை: அருவருக்கத்தக்க பாடலைப் பாடியதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


அருவருப்பான வார்த்தைகளை கொண்டு பாடப்பட்ட பீப் சாங் எனப்படும் பாடல் தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், பல்வேறு சமூக நல அமைப்புகளும் அப்பாடலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.
இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் சிலம்பரசன் “பாடலை பிடிக்காவிட்டால் கேட்காதீர்கள்” என்று பதிலளித்துள்ளார். இது போராடும் அமைப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வட்டத்தில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்தப் பாடலை பாடிய நடிகர் சிலம்பரசன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது கோவை காவல்நிலையத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment