Sunday, February 5, 2012

பா.ஜ.க தீவிரவாத அமைப்பு – மத்திய அமைச்சர்


புதுடெல்லி:பாரதீய ஜனதா கட்சி தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது என மத்திய எஃகுத்துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா கூறியுள்ளார்.
பிலிபிட்டில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடத்தும் வேளையில் அவர் இதனை தெரிவித்தார்.


அவர் மேலும் கூறியது:
ஹிந்து கட்சி என்பது போல அல்ல, மாறாக தீவிரவாத அமைப்பை போல பாரதீய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பிரக்யாசிங் தாக்கூர், அஸிமானாந்தா ஆகியோருடன் பா.ஜ.கவுக்கு இருக்கு நெருங்கிய உறவே இதற்கு ஆதாரமாகும்.
ஹிந்துக்கள்-முஸ்லிம்கள் இடையேயான நல்லிணக்கத்தை தகர்ப்பதற்கு பா.ஜ.க முயற்சிக்கிறது என்றார்.

No comments:

Post a Comment