Friday, February 3, 2012

ஜெயலலிதா Vs விஜயகாந்த் – சந்தில் சிந்து பாடும் பாஜக!


தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சித்தலைவரான முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்கட்சித்தலைவரான விஜயகாந்த்தும் நேருக்குநேர் வாதப் பிரதிவாதம் செய்து மோதிக்கொண்ட செய்தி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.



தகுதியற்ற தேமுதிகவினருடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகின்றேன், வேதனைப்படுகின்றேன் என்று ஜெயலலிதா சொல்லியிருப்பதை, “நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி” என்று கூறியுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன்.

"விஜயகாந்த் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள விமர்சனம் நூற்றுக்கு நூறு உண்மை. இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்த ஒன்றுதான். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கவில்லை என்றால் தேமுதிக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சட்டப் பேரவைக்குள் போயிருக்க முடியாது. இப்போதுதான் ஒரு கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது கூட்டணி சம்பந்தமாக கருத்து சொல்கிறேன்." என்று செய்தியாளர்களிடம் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment