Saturday, February 4, 2012

நபிகள் நாயகம் பிறந்த தினம்: அரசு உத்தரவு!


இசுலாமியர்கள் புனிதராகப் போற்றும் முகம்மது நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் மதுபான விற்பனைக்குத் தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
"நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 2012 பிப்ரவரி 5ம் தேதி,


 தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்புகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபான விற்பனையும் செய்யக்கூடாது. விதிமுறை மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."
மேற்கண்டவாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment