Sunday, February 5, 2012

உலகம் போற்றும் உத்தமர்


கல்லையும் முள்ளையும்
கடவுளாய் கருதியோரை
நிலவைக் காட்டி
சலவை செய்த
நல்லொளி எங்கள் நாயகமே..!
காற்றில் திசைமாறி
கவிழும் கப்பலை
மாலுமியாய் இருந்து
மனிதகுலத்தை காப்பாற்றி
வாழவைத்த எங்கள்
வள்ளலே..!
திக்கு திசைதெரியாது
திரிந்திட்ட அனைவரையும்- ஒரே
அன்பு குடைக்குள் சேர்த்த
அருள்கொடை எங்கள்
அண்ணலே..!
பாலைவெயில் பாதம் சிவக்க
சாந்தியும் சமாதானமும்
சரித்திரம் எழுதி
சாதனை படைத்திட
இறைவன் அனுப்பிய எங்கள்
இறுதி நபியே..!
 
கல்லடியும் சொல்லடியால்
பகைத்தவர்கள்
பால்முகம் கண்டு பதைத்தனர்
ஓர் இறையை ஏற்றனர்
ஏகமனதோடு ஏற்கவைத்த
எங்கள் ஏந்தலே..!
ஒளி தெரியா மக்களை
இறைவனின் வழியில்
மார்க்க பாதையில்
மக்களை அழைத்து
மாபெரும் வெற்றி கண்டு
உலகமே போற்றுகின்ற எங்கள்
உத்தமரே..!
நாயகம் போதித்த
நன் மார்க்கம்
பொன்னெழுத்தால் பொரித்த
பூமியின் திருநாள்
இந்த உலகம் மகிழ
ஈகைபெருநாளை தந்த எங்கள்
இவ்வுலக பெருமானே..!


அருவிக் கவிஞர் ஆனந்தரவி
இணை ஆசிரியர்
குவைத் தமிழ்

No comments:

Post a Comment