Sunday, December 12, 2010

தி.மு.க. அணியில் பா.ம.க.




மேட்டூர், டிச. 11:  பாமகவினர் பங்கேற்ற அரசு விழாவில் பேசிய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், "கூடப்போகிறவர்கள் கூடி' இருக்கிறோம் என்றார். இதன் மூலம் திமுக அணியில் பாமக இடம் பெறும் என்பதை அவர் சூசகமாக தெரிவித்தார்.
மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், ஜலகண்டபுரம் பகுதிகளில் கலைஞர் கான்கிரீட் வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ஜி.கே. மணி, தாரமங்கலம் எம்எல்ஏ கண்ணன் உள்ளிட்ட அக்கட்சியினரின் உள்ளாட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ரகசிய ஆலோசனை:  முன்னதாக பாமகவினர், வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து திடீர் ஆலோனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில், அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, காவேரி, கண்ணையன், சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சண்முகம் ஆகியோர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் ரகசிய ஆலோசனை நடத்தினர்.

"அமைச்சரை சந்தித்ததில் அரசியல் எதுவும் இல்லை. கூட்டணி குறித்து முடிவு செய்யப்படவில்லை. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் வீணாகும் தண்ணீரை சேலம் மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் திருப்பி விட நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தோம்' என்றார்ஜி.கே.மணி.

No comments:

Post a Comment