Friday, December 10, 2010

காசா மீது இஸ்ரேல் தீவிரவாதிகள் விமான தாக்குதல்



ஜெருசலேம், டிச. 9: காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் விமானப் படை புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.
இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறிகையில், "மத்திய காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் கிடங்கையும் வடக்கு காசாவில் நெகவ் பகுதியில் உள்ள முகாம்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது' என்றார்.


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலின் எஷ்கோ பகுதி மீது ஹமாஸ் இயக்கம் பீரங்கி தாக்குதல் நடத்தியது ஹமாஸ். இதில் உள்ளூர்வாசி ஒருவர் காயம் அடைந்தார்.  முன்னதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் தலைவர் கபி அஷ்கனேஸி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் "காசாவுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. அண்மையில் எல்லையில் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இது தொடரும். கடந்த காலங்களில் பாதுகாப்பு படை எல்லையில் தீவிரமாக செயல்பட்டதைப் போல இப்போதும் செயல்பட தயாரக இருக்க வேண்டும்' என்றார்.


அவர் இவ்வாறு பேசிய சில மணிநேரங்களில் விமான தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment