Friday, December 10, 2010

சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை

நாகப்பட்டினம், டிச. 9: நாகை மாவட்டம், சீர்காழியில் சிறுவனைக் கொலை செய்து, சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்குத் தூக்குத் தண்டனை மற்றும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சீர்காழி வட்டத்துக்குள்பட்ட வைத்தீஸ்வரன்கோவிலைச் சேர்ந்த பாலு மகன் குமார் (31). கொத்தனார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு சீர்காழி அருகே அரசு ஊழியர் ஒருவர் வீட்டில் சுமார் ஒரு மாத காலம் கட்டுமான வேலைகளைச் செய்தார்.

வீட்டில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் ஒரு மாதத்துக்குப் பின்னர், 2002-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி காலை அந்த வீட்டுக்குச் சென்ற குமார்,     வீட்டிலிருந்த 10 வயதுச் சிறுவனையும், 12 வயது சிறுமியையும் ஜன்னல் கம்பியில் இணைத்துக் கட்டிவிட்டு, வீட்டில் இருந்த 13 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனிடையே, கட்டி வைக்கப்பட்டிருந்த சிறுவனும், சிறுமியும் தங்களை விடுவித்துக் கொண்டு தப்பிக்க முயன்றதைக் கண்ட குமார், அவர்கள் 2 பேரின் கழுத்தையும் அரிவாளால் அறுத்தார். பின்னர், 13 வயதுச் சிறுமியின் கழுத்தையும் அரிவாளால் அறுத்துவிட்டு, வீட்டிலிருந்த 15 பவுன் தங்க நகைகளைத் திருடிக் கொண்டு தலைமறைவானார்.

தாக்குதலில் அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கழுத்து அறுபட்டதால் பேச முடியாத நிலையிலிருந்த 2 சிறுமிகளும், வீட்டுக்கு வெளியே வந்து, உதவி கோரினர். உடன் அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் இருவரும் குணமடைந்தனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குமார், சுமார் 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார்.

இதனிடையே, வழக்கு சிபிசிஐடி போலீஸôருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸôர், 2008-ம் ஆண்டு குமாரைக் கைது செய்தனர்.




No comments:

Post a Comment