Friday, December 10, 2010

அயோத்தி: ஜன.28-ல் மறுபரிசீலனை மனுக்கள் மீது விசாரணை

லக்னோ, டிச.10- அயோத்தி நில வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறுபரிசீலனை மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.



நீதிபதிகள் எஸ்.யு. கான், சுதிர் அகர்வால், வி.கே. தீட்சித் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு அமர்வு நீதிமன்றம் இத்தீர்ப்பை இன்று வழங்கியது.


மேலும், அயோத்தி நில விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவை பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment