Tuesday, November 3, 2015

முத்துப்பேட்டை அருகே சுதந்திர போராட்ட தியாகி நேற்று காலமானார்!

                    முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை 
கிராமத்தை சேர்ந்தவர் தியாகி முத்துதேவர்(97), சுதந்திபோராட்ட தியாகியான இவர் இந்திய தேசியராணுவத்தில் நேதாஜி படை பிரிவில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர். ராணுவ பணிக்கு பிறகு ஜாம்புவானோடை தர்கா அஞ்சலகத்தில் 20-ஆண்டுகள் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றினார். பின்னர் ஹோமியோபதி டாக்டராகி மருத்துவம் பார்த்து வந்தார். முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் 5வருடம் ஹிந்தி பண்டிட்டாகவும் பணிபுரிந்துள்ளார். 
தற்பொழுது தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதார்ர்கள் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி 5- மகன்கள் 2-மகள்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment