Saturday, November 7, 2015

முத்துப்பேட்டை:கேம்பஸ் ஃப்ரண்ட் கொடியேற்று நிகழ்ச்சி

மாணவர்களின் எழச்சியே!                                       தேசத்தின் வளர்ச்சி!! 




என்ற கொள்கை முழக்கத்தோடு புரட்சியாளர் தினத்தில் மற்றொரு புரட்சியாயை
இந்தியாவில் உருவானது தான் தேசிய மாணவ இயக்கம்மான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
கடந்த 6 வருடங்களில் 13 மாநிலத்தில் கால் பதித்து வீரியமாய் செயல்பட்டு வருகிறது.அதனுடைய 7ம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது அதன் ஒரு பகுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் முத்துப்பேட்டை நகரம் சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி இன்று நடைபெற்றது .

இதில் பழைய பேருந்து நிலையம் அருகே மாநில குழ உறுப்பினர் தமீம் அன்சாரி அவர்கள் கொடி ஏற்றி மாணவர்களிடையே சிறிய உரையாற்றினார் ,



சரிபாவாய்ஸ் முகம் அருகே நகர தலைவர் தலீம் அவர்களும்,  பிரிலியண்ட் பள்ளி அருகே நகர செயலாளர் ரியாஸ் அவர்களும், ஆசாத்நகர் அருகே அரசு மேல்நிலை பள்ளி பொறுப்பாளர் முகமது அவர்களும்  கொடி ஏற்றினர் இறுதியாக  பிரிலியண்ட் பள்ளி பொறுப்பாளர் A.நபில் அகமது  அவர்கள் நன்றி கூறினார்.இந்நிகழ்வில் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர் .

No comments:

Post a Comment