Tuesday, November 10, 2015

த.மு.மு.க ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனம் மீது கொலைவெறி தாக்குதல்!

அதிரையில் விபத்துக்குள்ளானவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


அதிரை முத்துப்பேட்டை வழியில் உள்ள ஈ.சி.ஆர் சாலை மதுபானக்கடை அருகே  வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிரை த.மு.மு.க ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அதிரை த.மு.மு.க ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சஹாபுத்தீன் வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு சம்ப இடத்துக்கு விரைந்தார்.
சம்பவ இடத்தில் ஆம்புல்ன்ஸை விட்டு இரங்கிய ஓட்டுனர் சஹாபுத்தீன் மீதும் விபத்துக்குள்ளான வாலிபர் மீதும் மர்ம நபர்கள் சர்மாரியாக தாக்கினர்.
இதில் சஹாபுத்தீன் அவர்களுக்கு காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமுமுக ஆம்புலன்ஸ் அதிரை காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சந்தேகத்துக்குறிய நபரை போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி-அதிரை பிறை

No comments:

Post a Comment