Saturday, January 14, 2012

போபால்:பாதிக்கப்பட்டவர்களுக்கு 134 கோடி ரூபாய் இழப்பீடு


புதுடெல்லி:போபால் விஷவாயு துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் பேருக்கு 134 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்குவதற்கான பரிந்துரையை சமர்ப்பிக்க இச்சம்பவம் தொடர்பான அமைச்சரவை குழு(GoM-Group of Ministers)
தீர்மானித்துள்ளது. போபால் விஷவாயு துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுநோய், சிறுநீரக நோய் ஆகிய நோய்களால் அவதியுறுகின்றனர்.


இழப்பீட்டு தொகையை விநியோகிக்க நேற்று கூடிய அமைச்சரவை கூட்டம் தீர்மானித்துள்ளதாக கூட்டத்திற்கு பிறகு மத்தியபிரதேச மாநில அமைச்சர் பாபுலால் கவுர் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆஸாத், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் உள்பட பல அமைச்சர்களும் கலந்துக்கொண்டனர்.
விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட 10045 பேருக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரவை குழு நிராகரித்தது. இதுக்குறித்து ம.பி.அமைச்சர் பாபுலால் கவுர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

No comments:

Post a Comment