Tuesday, January 3, 2012

பிஜப்பூரில் பாஜக அட்டூழியம்:முஸ்லிம் விரோத போக்குக்கு இ.யூ.மு.லீ கடும் கண்டனம்!



கர்நாடக மாநிலம் பிஜப்பூருக்கு அருகில் உள்ள சிந்தகி என்னும் நகரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் இரவு நேரத்தில் சில சமூக விரோதிகள் பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர்.
நேற்று முன்தினம் காலையில் அப்பகுதியில் அது மிகவும் பெரியதொரு கலவர சூழ்நிலைக்குக் காரணமாகியது. இதனைத் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் சாலை மறியல், காவல் நிலையம் தாக்குதல், தாசில்தாரை முற்றுகையிடுதல் போன்ற அராஜகங்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.


இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா விசாரணையில் ஈடுபட்டார். முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராக வெறியைத் தூண்டும் வகையில் இந்தச் சம்பவத்தை சில சமூக விரோதிகள் திட்டமிட்டு நடத்தியுள்ளனர். யாரோ செய்த அடாத செயலுக்கு அப்பாவி முஸ்லிம்கள் மீது பழிபோட்டு, வன்முறையைத் தூண்டி வரும் பாரதீய ஜனதாவுக்கு ஆகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  கர்நாடக அரசு இந்த வெறியாட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தனது அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment