புதுதில்லி: டிசம்பர் 21, பாப்புலர் ஃப்ரண்டின் சேர்மன் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது;
நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ள சங்கபரிவார ஃபாசிஸ்டுகள் மீது நடந்து வரும் விசாரணையை முடக்கவே பாரதிய ஜனதாகட்சியினர் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை குறிவைத்து வருகின்றனர்.
நாட்டில் நடந்த பல குண்டு வெடிப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சுனில் ஜோஷியின் படுகொலை ஆகியவற்றின் சூத்திரதாரியான ஆர்.எஸ்.எஸ்.ன் தேசியசெயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் உட்பட சங்கபரிவார் மீது நடத்தப்பட்டு வரும் விசாரணையின் வேகம் குறைந்து வருவதைப் பார்க்கும் போது பாரதியஜனதா செய்து வரும் சதித்திட்டம் வெற்றி பெற்று வருவதை நம்மால் உணரமுடிகின்றது.
நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளான மாலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர், சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு ஆகிய வற்றின் பின்னணியில்இருப்பது ஆர்.எஸ்.எஸ்.ன் மத்திய தலைமை என்பதை என்.ஐ.ஏ. மற்றும் இன்ன பிற விசாரணைக்குழுக்கள் நிரூபித்தன.
ஒரு குழு திட்டமிட்டு குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதையும் ஆர்.எஸ்.எஸ்.ன் தேசிய செயற்குழு உறுப்பினர் அந்தக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுசெயல்பட்டதையும் பட்டவர்த்தனமாக கண்டுபிடித்த பின்பும் அவரை இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஆச்சர்யமளிக்கின்றது. அதே போன்று இன்னும் 16வழக்குகளில் இவர்களுடைய தொடர்பு குறித்து விசாரணை குழுக்கள் விசாரிக்க வேண்டும். என்ற கோரிக்கையும் தற்போது கானல் நீராகி வருகின்றது.
ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின்புதான் பா.ஜ.க. மற்றும் அதனின் சக அமைப்புகள் செய்து வந்த குண்டு வெடிப்பு மற்றும் தகிடுதத்தங்கள்வெளி உலகிற்கு தெரியவந்தது. மேலும் இந்துத்துவா செய்து வந்த குண்டு வெடிப்புகளை தைரியமாக பகிரங்கப் படுத்தியவரும் இவரே! இவற்றையெல்லாம்மனதிற்கொண்டுதான் திருடனுக்கு தேள் கொட்டியது போன்று பா.ஜ.க.வினர் ப.சிதம்பரத்திற்கு எதிராக “சதி”களை அரங்கேற்றி வருகின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் சேர்மன் மேலும் குறிப்பிடும் போது ஊழலுக்கு எதிரானவர்கள், நேர்மையானவர் என்று போலி பிரச்சாரம் செய்து வரும் பா.ஜ.க மற்றும்ஆர்.எஸ்.எஸ்.ன் மதவாத வன்முறை செயல் திட்டத்தை மனதிற்கொண்டு இவர்கள் மீது மதச்சார்பற்ற கட்சிகள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்றுவேண்டுகோளும் விடுத்தார்.
No comments:
Post a Comment