Saturday, January 28, 2012

இஸ்ரேல் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்த இந்தியா கோரிக்கை


ஐ.நா:சட்டவிரோத குடியிருப்புக்களை கட்டும் பணியை தொடர்வதன் மூலம் மேற்காசியாவில் அமைதிக்கான முயற்சிகளுக்கு இஸ்ரேல் குந்தகம் விளைவிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.


அமைதிக்கான முயற்சிகள் பலன் அளிக்க வேண்டுமென்றால் இஸ்ரேல் சட்டவிரோத குடியுருப்பு கட்டும் பணியை நிறுத்தவேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலில் மேற்காசியாவில் அமைதிக்கான நடவடிக்கைகள் குறித்த விவாதத்தின்போது ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹர்தீஃப் சிங் பூரி இக்கோரிக்கையை விடுத்தார். இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்தும் குடியிருப்பு கட்டுமானங்களை அங்கீகரிக்க இயலாது என்றும் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment