Monday, July 4, 2011

சிறுவனை கொன்ற ராணுவ வீரன்! இதுதான் வீரமோ?

சென்னை தீவுத்திடல் அருகே கொடிமரச்சாலையில் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இது தடை செய்யப்பட்ட பகுதியாகும்.

அங்குள்ள மதில் சுவர் ஓரமாக நின்ற வாதாம் மரத்தில் ஏறி அதிலுள்ள காய்களை பறித்த அந்த பகுதியை சேர்ந்த தில்சன் (13) என்ற சிறுவன் மீது ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த சிறுவன்  தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்து போனான். - (Today News)


சிந்திக்கவும்: இந்திய அரசு பயங்கரவாதிகளின் அட்டூழியம் தாங்க முடியல! இந்த ராணுவ வீரனுக்கு மரத்தில் ஏறி வாதாம் காய் பறிக்கும் சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சூடும் அளவுக்கு புத்தி மழுங்கி விட்டது.

சென்னை  தீவுத்திடல் என்ன பாகிஸ்தான் பார்டரிலா இருக்கு. ஒரு உதாரணதிற்கு கள்ளன்தான் திருட வந்துட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள் உடனே துப்பாக்கியை எடுத்து சுட்டு கொல்வதா?

அவனும் மனிதன் தானே அவனை பிடித்து சட்டப்படி தண்டிப்பதுதானே நீதி. ராணுவ குடியிருப்பு என்றால் என்ன? இவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கு! அவர்கள் குடியிருப்பு மட்டும் பாதுகாக்கப்பட்ட பகுதியாம். ஒவ்வொரு குடிமக்களின் வரிபணத்தில் தானே சம்பளம் வாங்குகிறீர்கள். இந்த சிறுவனின் தந்தையும், குடும்பமும் தானே வரி கொடுக்கிறது.

நாட்டையும், நாட்டு மக்களையும் எங்கள் உயிரை கொடுத்தும் பாதுகாப்போம் என்று உறுதிமொழி கொடுத்துதானே வேலைக்கு வந்து மக்கள் வரிபணத்தில் தின்று உயிர் வாழ்கிறீர்கள். அப்படிபட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டாம் பாவிகளா! கொல்லாம இருந்தால் சரி.

உங்கள் ராணுவ குடியிருப்பு மட்டும் பாதுகாக்கப்பட்ட பகுதி! அப்படி என்றால்?மற்றைய மக்களின் உயிர்கள் என்ன கிள்ளு கீரைகளா? இந்திய போலீஸ்  மற்றும்  ராணுவம் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிட்டது. இவர்கள் மக்களை பாதுகாத்ததை விட அழித்ததே அதிகம் என்று சொல்லலாம்.

இவர்கள் ஈவு, இரக்கம் இல்லா கொடியவர்கள்! ஒரு பட்சிளம் குழந்தையை சுட்டு கொன்ற இவன் மனித நேயம் அற்ற கொடும்பாவி. சுடுவதற்கு முன்னால் அந்த மரத்தில் ஏறுவது யார் என்று அறிந்து கொள்ளும் அளவுக்கு நிதானம் இல்லாத இவனெல்லாம் எப்படி நாட்டை பத்துகாக்க போகிறான்.

என்ன உங்கள் குடியிருப்பில் வைரங்களையும்,  வைடூரியங்களையும் பதுக்கி வைத்துள்ளீர்களா? பின்ன என்னடா வேண்டி கிடக்கிறது உங்கள் குடியிருப்பை மட்டும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்க. சொந்த நாட்டில் அதுவும் ஒரு குடியிருப்பு பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாம்.உங்களையே உங்களுக்கு பாதுகாக்க துப்பில்லை, துணிவில்லை என்றால் நீங்கள் எப்படி நாட்டை பாதுகாக்க போறிங்கள்!
  


மரத்தில் ஏறிய சிறுவனை கண்டு பயந்து துப்பாகியால் சுடும் உங்களை நம்பி இந்த நாட்டை ஒப்படைத்தால் நாடு உருப்பட மாதிரிதான். இலங்கைக்கு அமைதி படை என்று போனீர்கள், அங்குள்ள மக்களுக்கு அமைதி கிடைக்க நடவடிக்கை எடுங்கடா என்று அனுப்பினால் அந்நாட்டு தமிழ் பெண்களை கற்பழித்த கொடியவர்கள்தானே நீங்கள்.
 
ராணுவ பயிற்சி எடுக்கிறேன் என்று சொல்லி நல்ல தின்று, குடித்து, தினவெடுத்த உன் உடம்புக்கு பொம்பளை கேட்கிறதோ, ஏன்டா உங்கள் அக்கா தங்கச்சி இவர்களும் பெண்தானே!அவர்களிடம் இப்படி நடக்க உனக்கு தோணாத போது அடுத்த வீட்டு பெண்களிடம் மட்டும் நடக்க தோணுதோ!
 
ஆடி மாதத்தில் வெறி பிடித்து அலையும் நாய்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். கரும் புலிகளின் (-) குடித்தால் கூட நீங்கள் திருந்த மாட்டீர்கள். அவர்கள் சுத்த வீரர்கள், பெண்மையை போற்றி தங்களோடு பணியாற்றிய சக போராளிகளை சகோதரிகள் ஆக்கி, சிங்கள பெண்களின் மானமும் காத்தவர்கள்.  உங்களை போல் பெண்பித்தர்கள் இல்லை.

நீ கொன்ற சிறுவனின் உயிரை திருப்பி தரமுடியுமா உன்னால்! அந்த சிறுவனை பெற்ற தாய், தந்தை உள்ளம் எப்படி பரிதவிக்கும் அதற்க்கு உன்னால் என்ன பதில் கொடுக்க முடியும் உன் உயிரை தவிர. இது மாதிரி அநியாயமா ஒரு உயிரை கொல்பவனை அதுபோல் திருப்பி அதே இடத்தில் சுட்டு கொல்வதே சரியான தண்டனையாக இருக்கும்.


No comments:

Post a Comment